Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவு கிடைக்கின்ற போது சிலவற்றை வெளிப்படையாக கேட்க முடியாமல் உள்ளது: கண்ணீர் சிந்தும் பாதிக்கப்பட்ட மக்கள்

Featured Replies

உணவு கிடைக்கின்ற போது சிலவற்றை வெளிப்படையாக கேட்க முடியாமல் உள்ளது: கண்ணீர் சிந்தும் பாதிக்கப்பட்ட மக்கள்

 

வீடு, சொத்து, சுகம், பிறப்­புச்­சான்­றிதழ் என அனைத்­தையும் இழந்து நடு வீதியில் அக­தி­க­ளாக நிற்­கிறோம். நாங்க கன­வுல கூட நினைக்­கல இப்­படி ஒரு துய­ரத்தை அனு­ப­விப்போம் என்று. கடந்த ஆறு நாட்­க­ளாக ஒரே உடுப்­போட இருக்­கிறோம். சில பொருட்­களை வெளிப்­ப­டை­யாக வாய் திறந்து கேட்க முடி­யாத துர்ப்­பாக்­கிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளோம். கூலித்தொழில் செய்து கஷ்­டப்­பட்டு குருவி போன்று கொஞ்சம் கொஞ்­ச­மாக சேர்த்து வைத்த அனைத்தும் இன்று இல்­லாமல் போய்­விட்­டது என வெள்ளத்தால் பாதிக்­கப்­பட்டு வீதி­க­ளிலும் விகா­ரை­க­ளிலும் முகாம்­க­ளிலும் தங்­கி­யி­ருக்கும் மக்கள் கண்ணீர் மல்க தெரி­வித்­தனர். நாட்டில் கடந்த சில நாட்­க­ளாக ஏற்­பட்ட சீரற்­ற­கால நிலை கார­ண­மாக இது­வரை 84 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 3 இலட்­சத்து 40 ஆயி­ரத்து 150 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதில் குறிப்­பாக கொழும்பில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 47 ஆயி­ரத்து 666 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 5 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். பாதிக்­கப்­பட்ட மக்கள் கொழும்பின் பிர­தான வீதி­களின் இரு­ம­ருங்­கிலும் விகா­ரை­க­ளிலும் பாட­சா­லை­க­ளிலும் என 84 இடங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். கொழும்பில் நிலவி வந்த சீரற்ற கால­நிலை கடந்த மூன்று நாட்­களில் வழ­மைக்கு திரும்­பி­யுள்ள போதும் மக்­களின் வடுக்கள் இன்­னமும் மாற­வில்லை. வீடுகள் இன்­னமும் 6 அடி நீர்­மட்­டத்­துக்குள் மூழ்­கி­யுள்­ளன.

வீடு, சொத்து, சுகம் என அனைத்­தையும் இழந்த இம் மக்கள் இன்று நடு வீதிக்கு தள்­ளி­வி­டப்­பட்­டுள்­ள­னர். இந்த இயற்கை அனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் குறை­களை கேட்­ட­றி­வ­தற்­காக நாம், கொலன்­னாவ மீதொட்­டு­முல்ல, சேதவத்த, வெல்­லம்­பிட்­டி, லன்­சி­வத்த, பெரண்­டியா வத்த, நவகம்­புர மற்றும் களனி உள்­ளிட்ட கொழும்பின் பல பகு­தி­க­ளுக்கு விஜயம் செய்­தி­ருந்தோம். களனி கங்­கையின் நீர்­மட்டம் படிப்­ப­டி­யாக குறை­வ­டைந்­துள்­ளது. கடந்த இரு நாட்­க­ளாக கொழும்பில் கடு­மை­யான வெயில் காணப்­ப­டு­கின்­றது. எனினும் வெள்ளநீரால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் இன்­னமும் 6 அடிக்­குமேல் தண்ணீர் நிற்­ப­தோடு குறித்தப் பகு­தி­களில் கழிவு நீர் கலந்து கரு­நி­றத்­துடன் காணப்­ப­டு­வ­தோடு கடு­மை­யான துர்­நாற்­றமும் வீசு­கின்­றது.

பாதிக்­கப்­பட்ட மக்கள் கருத்து தெரி­விக்­கையில்,

என்­னு­டைய பெயர் நியாஸ். மீதொட்­டு­முல்ல பகு­தியில் சுமார் பல்­லா­யிரக்கணக்­கான மக்கள் இருக்­கின்றோம். கடந்த சில நாட்­களாக பெய்த மழை எங்­க­ளுக்கு பெரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. இது­வ­ரையில் அர­சாங்­கத்­துல இருந்து வந்து எங்­க­ளுக்கு எந்­த­வொரு உத­வியும் செய்­யல. உணவு கிடைப்­ப­துல எந்த பிரச்­சி­னையும் இல்ல. எங்­கட பெண்கள் எல்லாம் இன்று வீதிக்கு தள்­ளப்­பட்டு இருக்­காங்க. எங்­கட பெண்கள் ரொம்ப கஷ்­டத்தை எதிர்­கொள்­ளு­றாங்க. நாங்க எப்­ப­டியும் இருந்­துட்டு போயி­ருவோம். ஆனால் இந்த பெண்கள் படும் துயரத்தை வார்த்­தை­யால சொல்ல முடி­யாது. எங்­கட வீடு மட்டும் இல்ல பிறப்புச் சான்­றிதழ் விவாகப் பத்­திரம் பொருட்கள் என அனைத்தும் இல்­லாமல் போய்­விட்­டன. தண்­ணீ­ரால சேத­மான எங்­கட வீடுகள் மீள திருத்தி அமைக்க அர­சாங்கம் உதவி செய்ய வேண்டும். நாங்க எதிர்­பார்க்­கல இப்­படி எல்­லாத்­தையும் இழப்போம் என்று. இந்த வான்­க­த­வு­கள திறக்­கப்­போ­றாங்­கனு முன்­னாடி சொல்­லி­யி­ருந்தா உடுத்த உடுப்­பு­கள சரி எடுத்­து­கிட்டு வெளியாகி இருப்போம். ஆனால் போட்ட உடுப்­போட இன்­னமும் இருக்­கிறோம். இது ஒரு அனர்த்தம். நாங்கள் யார் மீதும் குற்றம் சுமத்த விருப்பம் இல்ல. இருந்­தாலும் அர­சாங்கம் எங்­க­ளுக்கு பதில் ஒன்ற சொல்ல வேண்டும் என கவ­லை­யுடன் தெரி­வித்தார்.

dsf.jpg

சரீபா என்ற பெண் கருத்து தெரி­விக்­கையில். சுமார் 25 வரு­டங்­க­ளுக்கு மேலாக நான் இங்கு இருக்­கின்றேன். இது­வ­ரைக்கும் இந்­த­மா­திரி ஒரு நிலைமை எங்­க­ளுக்கு ஏற்­பட்­டது இல்ல. நான் ஆப்பம் சுட்டு கொஞ்சம் கொஞ்­ச­மாக சேர்த்து வைத்­த பணத்­துல தான் இந்த வீட்ட கட்டி பொருட்­கள வாங்­குனேன். ஆனால் இன்­றைக்கு எல்லாம் ஒன்றும் இல்­லாம போயி­ருச்சு என்று கண்­க­லங்­கு­கின்றார்..! என்­னால கூட கதைக்க முடி­யல. அர­சாங்கம் தான் எங்­க­ளுக்கு நல்ல தீர்வை பெற்­று­த­ரனும்.

காந்தி என்ற சிங்­கள பெண்­மணி கருத்து தெரி­விக்­கையில், நான் பஸ் டிப்­போ­வுக்கு பக்­கத்­துல தான் இருக்­கின்றேன். எனது வீடு முற்­றாக நீரில் மூழ்­கி­யிருச்சு. பொருட்கள் எல்­லாமே இல்­லாமல் போய்­விட்­டது என தழுதழுத்த குரலில் கதைக்க ஆரம்­பித்த அவர் தன்னை அறி­யா­மலே அழு­கிறார். கண்­ணீரை துடைத்­து­கொண்டு மீண்டும் கதைக்க ஆரம்­பிக்­கின்றார்.

தண்ணீர் கறுப்பு நிற­மாக இருக்­கின்­றது. பக்­கத்­துல இருக்க இந்த குப்பை கொட்டும் இடத்­துல இருந்து வந்த தண்­ணீர்தான் எங்­கட வீட்­டுக்­குள்ள இருக்கு. பொருட்­களை எல்லாம் மீள எடுக்க முடி­யாது. சரி­யான துர்­நாற்றம் அடிக்­கின்­றது. அந்த கிரு­மி­நா­சி­னிகள் நிறைந்த வீட்­டுக்­குள்ள போய் எவ்­வாறு தங்க முடியும். கொஞ்சம் கொஞ்­ச­மாக சேர்த்த எல்­லாமே அழிந்து போய் விட்­டது. நாங்க தேங்காய் துரு­வியில் இருந்து எல்­லாமே புதி­தாக எடுக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலைக்கு தள்­ளப்­பட்டு இருக்­கிறோம்.

ww.jpg

வசந்தி சந்­தி­யானி ஜெய­வர்­தன என்ற பெண் கருத்து தெரி­விக்­கையில், பாய், படுக்கை என எல்லாம் இழந்து விட்டோம். இப்­போது சாப்­பி­டு­வ­தற்கு ஒரு பீங்கான் கூட எங்­க­ளிடம் இல்லை. எங்­க­ளது குறைய தீர்க்க யார் வரு­வார்கள் என்று எதிர்­பார்த்து இருக்­கின்றோம். நான் நோயாளி. இந்த தண்­ணீர பார்க்கும் போது உங்­க­ளுக்கு தெரி­கி­றது எவ்­வ­ளவு துர்­நாற்றம் அடிக்­கின்­றது என்று. இத­னால எங்­க­ளுக்கு நோய் தான் அதி­க­ரிக்­கின்­றது. எங்­க­ளுக்கு சாப்­பாடு மூன்று நேரமும் கிடைக்­கி­ன்­றது. ஆனால் படுப்­ப­தற்கு பாய், தலை­யணை மற்றும் மருந்து பொருட்கள் தான் கூடு­த­லாக தேவைப்­ப­டு­கின்­றது. நாங்க இப்ப நடு வீதில நிற்­கிறோம். எங்­க­ளால தொழி­லுக்கும் செல்ல முடி­யாமல் உள்­ளது. எங்­க­ளு­டைய வாழ்க்­கையே கேள்­விக்­கு­றி­யா­கி­விட்­டது என நொந்­து­கொள்­கிறார்.

சேதவத்தை பகு­தியைச் சேர்ந்த விம­ல­சேன கருத்து தெரிவிக்கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக கொண்டு வரப்­படும் நிவா­ரண பொருட்­களை இடை­ந­டுவே மறித்து பாதிக்­கப்­ப­டாத நபர் எடுத்து செல்­கி­றார்கள். இது தொடர்பில் நகர சபை அவ­தானம் செலுத்த வேண்டும் என்­கிறார்.

sfda.jpg

சரிபா என்ற பெண் கூறுகையில் தண்ணீர் வழிந்­தோ­டிய பின்னர் எங்­கட வீட்டை கழு­வுவ­தற்கு டெட்டோல், சவர்க்­காரம் இது­ போன்றவற்­றையும் தந்து உதவ வேண்டும். இந்த தண்­ணீர்ல நிறைய கிரு­மிகள் இருக்­கின்­றன என்­கிறார்.

தண்­ணீரால் நிறைந்­தி­ருக்கும் தனது வீட்டை பார்த்­த­வாறு இருந்த ரசேனி வின்­துனி என்ற பாட­சாலை மாணவி கூறும் போது, நான் தரம் 7இல் கல்­வி­கற்­கிறேன். எங்க வீடு முற்­றாக நீர்ல மூழ்­கி­விட்­டது. எனது பாட­சாலை புத்­தகம், சப்­பாத்து என எல்­லாமே ஒன்றும் இல்­லாமல் போய்­விட்­டது. நான் இப்ப பாட­சா­லைக்கு போக­கூட வழி­யில்­லாமல் இருக்­கின்றேன். இந்த துய­ரத்­துல இருந்து எப்ப மீளப்­போ­கின்றோம் என்று எங்­க­ளுக்கு தெரி­யல என்றார்.

மிகவும் பரி­தாப நிலையில் காணப்­பட்ட சுவர்னா என்ற வயோ­திப பெண் தனக்கு ஏற்­பட்ட நிலை­மையை விளக்கும் போது நான் தூங்­கி­கொண்­டி­ருந்த போது விடி­யற்­காலை 3 மணி­யி­ருக்கும். திடீ­ரென காலில் தண்ணீர் படு­வது போல இருந்­தது. உடனே எழும்பி பார்த்த போது வீட்­டுக்குள் வெள்ளம். நான் ஒரு சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்ட நோயாளி. எனக்கு காலிலும் வருத்தம் உள்­ளது. என்னால் எனது பொருட்­களை பாது­காக்க முடி­யாமல் போய்­­விட்­டது. நான் எல்­லா­வற்­றையும் இழந்து விட்டேன். இன்று நடுவீதியில் உடுத்த உடை­யின்றி அநா­தை­யாக நிற்­கிறேன். எனது காலில் உள்ள வருத்தம் மேலும் கூடி­யுள்­ளது. என்னால் இந்த துய­ரத்தை தாங்­கி­க்கொள்ள முடி­யாமல் இருக்­கின்­றது என கூறி­ய­வாறு அழுதார். கன்­னத்தில் கையை வைத்­து­கொண்டு ஆழ்ந்த யோச­னையில் இருந்த ஜரீ­னாவை நாம் அணு­கிய போது, கண்ணீர் சிந்­து­கின்றார். அழுத வண்ணம் இதற்கு முன்னர் இவ்­வாறு ஒரு மழை பெய்­தது இல்ல. இப்­படி ஒரு வெள்ளம் ஏற்­படும் என நாங்க கன­வு­லையும் நினைக்­கல. மீதொட்­டு­முல்ல பகு­தியில் 20 வரு­டத்­துக்கு மேல இருக்­கிறேன். இப்­படி ஒரு வெள்ளம் வீடு­க­ளுக்­குள்ள வந்­ததே இல்ல. இப்ப ஆறு நாட்கள் ஆகின்றது. வீட்­டுல இருந்து வெளியே­றிய போது உடுத்­தி­ருந்த உடுப்­போட தான் இன்­னமும் இருக்­கின்றோம். அழு­கின்றார்...! எங்­க­ளுக்கு சாப்­பாடு கிடைக்­குது. சில பொருட்­கள எங்­க­ளாள வெளிப்­ப­டை­யாக கேட்க முடி­யாது. ஏன் என்றால் பெண்கள் வெட்கப் படு­வார்கள். இவை­கள வாயால கேட்­டு­கொள்ள முடி­யாது. என்ன செய்­வது என அழு­து­கொண்டே தனது பேச்சை நிறுத்­தினார். தண்ணீர் வழிந்­தோ­டிய பின்னர் தனது வீட்டை கழு­விக்­கொண்­டி­ருந்த நபர் ஒருவர் கருத்து தெரி­விக்­கையில், தண்­ணீ­ரால மூழ்கிய எங்­கட வீட இப்­பதான் கழு­வி­கிட்டு இருக்­கின்றோம். வீட்­டுக்­குள்ள ஒரே நாற்றம். சுமார் நான்கு மணித்­தி­யா­ல­மாக கழு­வி­கிட்டு இருக்­கிறோம். ஆனாலும் நாற்றம் போகல. வீட்­டுக்­குள்ள அட்டை மற்றும் சில கிரு­மி­கள் இருந்­தன. இதை சுத்­தப்­ப­டுத்த முடி­யாமல் உள்­ளது என்றார்.

தண்ணீர் நிறைந்து காணப்­பட்ட ஒரு பகு­தியில் அங்கு இங்கும் ஏதோ ஒன்றை தொலைத்­தவர் போல தேடிக்­கொண்­டி­ருந்த வயோ­திப பெண் ஒரு­வரை நாம் அணுகி எதனை தேடு­கின்­றீர்கள் என கேட்ட போது, நான் எனது கோழி­களை தேடி­கொண்­டிருக்­கின்றேன். செல்லப் பிரா­ணிகள் போல இரண்டு கோழியையும் சேவல் ஒன்றையும் வளர்த்தேன். இவைகள் எனது உயிர். கழுத்­த­ளவு தண்ணீர் இருந்த போதும் கோழி இரண்­டையும் தூக்­கி­கொண்டு வந்து விட்டேன். ஆனால் எனது சேவலை காண­வில்லை. எனது உசுரு மாதிரி அந்த சேவல். இப்ப எங்க இருக்கோ தெரி­யல என்­கிறார் 60 வய­து­டைய அய்சா. வெள்ளத்தால் பாதிக்­கப்­பட்டு அப­ய­சிங்­க­ராம விகா­ரையில் தங்­கி­யி­ருக்கும் கொலன்­னாவ நாக­முல்ல பகு­தியைச் சேர்ந்த அந்­தோ­னி­யம்மா தனக்கு ஏற்­பட்ட நிலையை விளக்­கியபோது, எங்­கட வீடு முற்­றாக நீரில் மூழ்­கி­விட்­டது. துர்­நாற்றம் அடிக்கும் இந்த தண்­ணீர்ல பாதிக்­கப்­பட்ட எந்­த­வொரு பொரு­ளையும் மீள கழுவி எடுப்­பது பொய்­யான விடயம். அனைத்­தையும் இழந்து அக­தி­க­ளாக இருக்கும் எங்­க­ளுக்கு அர­சாங்கம் நல்ல­தொரு தீர்வை பெற்றுத் தர­வேண்டும். அதை விடுத்து எம்மை பார்த்து விட்டு செல்­வதால் ஒன்­றுமே நடக்­கப்­போ­வ­தில்லை. இந்த தண்ணீர் வற்ற இன்னும் ஒரு கிழ­மை­யாகும் என்றார்.

gf.jpg

உணவு வேண்டாம் உடை தாருங்கள்

வெள்ளம் ஏற்­பட்­டுள்ள குறித் பிர­தே­சத்து மக்­க­ளுக்கு அன்­றாட உணவு சுத்­த­மாக குடிநீர் என்­பன கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. இருந்த போதிலும் வெள்ள நீர் குடி­யி­ருப்­பு­களை சூழ்ந்­துக்­கொண்­டி­ருக்கும் போது உயிரை காப்­பாற்­றினால் போதும் என ஓடிய மக்கள் தங்­க­ளுக்­கான மாற்­று­டை­களை பற்­றியோ அல்­லது உடை­மை­களை பற்­றியோ சிந்­தித்­தி­ருக்க வாய்ப்­பில்லை. இந்­நி­லையில் அர­சாங்­கமும் பல தொண்டு நிறு­வ­னங்­களும் தங்­க­ளுக்­கான நிவா­ரண உத­வி­களை வழங்கி வரு­கின்­றன. இருந்த போதிலும் அவர்கள் அனை­வரும் உணவை மட்­டுமே கொடுத்து விட்டு செல்­கின்­றனர். இதனால் ஒரு வாரத்­துக்கு மேலாக மாற்­றுடை இல்­லாமல் தவித்து வரு­வ­தாக மக்கள் கூறினர். எனவே நிவ­ரண உத­வி­களை வழங்க முன்­வ­ருவோர் தங்­க­ளுக்­கான உடை­களை கொடுத்­து­த­வு­மாறு கேட்­டுக்­கொண்­டனர்.

தொற்று நோய் அபாயம்

வெள்ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பிர­தே­சங்கள் அனைத்தும் கழி­வுநீர் தேங்­கி­யுள்ள பிர­தே­ச­மாக துர்­நாற்­றத்­துடன் காணப்­ப­டு­கின்­றது. சிறு­வர்கள், முதி­யோர்கள், கர்ப்­பிணி தாய்­மார்கள் உள்­ளிட்டோர் தங்­க­ளுக்கு நோய்கள் பர­வுமோ என்ற அச்­சத்­துடன் மருத்­துவ உத­வி­களை எதிர்ப்­பார்­த்­தி­ருந்­தனர். மேலும் தற்­போது நீர் வடிந்து செல்­கின்­ற­மை­யினால் சிறு நீர்­நி­லை­களில் நுளம்பு பெருக்கம் அதி­க­ரித்­துள்­ளது. இதனால் டெங்கு, வயிற்­றுப்­போக்கு உள்­ளிட்ட நோய்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான அதி­க­ளவி­லான சந்­தர்ப்­பங்கள் காணப்­ப­டு­கின்­றன.

http://www.virakesari.lk/article/6705

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.