Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு

Featured Replies

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு

 

நாட்டில் ஏற்­பட்ட சீரற்ற கால­நி­லை­யினால் பாதிக்கப்­பட்ட மக்­களின் தொகை 2 இலட்­சத்து 88 ஆயி­ரத்து 768ஆக குறை­வ­டைந்­துள்­ளது. அத்துடன் 41ஆயி­ரத்து 460 குடும்­பங்­களை சேர்ந்த ஒரு இலட்­சத்து 85 ஆயி­ரத்து 933 பேர்கள் இன்னும் தற்­கா­லிக முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மேலும் நாட­ளா­விய ரீதியில் அனர்த்­தங்­களில் சிக்கி உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 93ஆக அதி­க­ரித்­துள்­ள­து என்று அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. கடந்த ஒரு­வார கால­மாக நாட்டில் நில­விய சீரற்ற கால­நி­லையின் கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் பல்­வேறு பாதிப்­புகள் ஏற்­பட்­டி­ருந்­தன. இந்த நிலை­மைகள் தொடர்பில் தக­வல்கள் வெளி­யிடும் வகையில் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நேற்று முக்­கிய ஊடக சந்­திப்­பொன்று நடை­பெற்­றது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட துறைசார்ந்த அதிகாரிகள் மேற்கண்டவாறு கூறினர்.

அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்

சீரற்ற கால­நி­லை­யினால் ஏற்­பட்ட வெள்ளம் மற்றும் மண்­ச­ரி­வினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் தொகை இந்­த­வாரம் வெகு­வாக குறை­வ­டைந்­துள்­ளது. குறிப்­பாக முதல் மூன்று நாட்கள் முடிவில் பாதிக்­கப்­பட்­டோரின் தொகை 3 இலட்­சத்து 70 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மாக இருந்த நிலையில் இப்­போது அது 2 இலட்­சத்து 88 ஆயி­ரத்து 768 குறை­வ­டைந்­துள்­ளது. இப்­போது 71 ஆயிரம் குடும்­பங்­களை சேர்ந்த 288768 நபர்கள் நாட­ளா­விய ரீதியில் பாதிக்கப் பட்­டுள்­ளனர். 1 இலட்­சத்­துக்கு அண்­மித்த தொகை­யி­லான மக்கள் தமது இருப்­பி­டங்­க­ளுக்கு திரும்­பி­யுள்­ளனர். வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தற்­கா­லி­க­மாக அமைத்துக் கொடுக்­கப்­பட்ட முகாம்­களின் எண்­ணிக்­கையும் வெகு­வாக குறை­வ­டைந்­துள்­ளது. இப்­போது நாட­ளா­விய ரீதியில் 1 இலட்­சத்து 85 ஆயி­ரத்து 933 நபர்கள் தற்­கா­லிக முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

எனினும் இந்த அனர்த்­தத்தில் சிக்கி உயி­ரி­ழந்த பொது­மக்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. தற்­போ­தைய நிலை­மையில் அனைத்து பகு­தி­க­ளிலும் அனர்த்­தத்தில் சிக்கி உயி­ரி­ழந்த பொது­மக்­களின் எண்­ணிக்கை 93 ஆகும். கேகா­லையில் அர­நா­யக பகு­தியை தவிர்ந்த ஏனைய பகு­தி­களில் மீட்பு நட­வ­டிக்­கைகள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. அர­நா­யக மண்­ச­ரிவில் சிக்­கி­யுள்ள பொது­மக்­களை மீட்கும் நட­வ­டிக்கை மாத்­திரம் இன்னும் இடம்­பெற்று வரு­கின்­றது.

கால­நிலை

மேலும் தற்­போ­தி­ருக்கும் நிலை­மையில் கால­நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கடந்த ஒரு­வா­ர­கா­ல­மாக நாட்டில் நில­விய மோச­மான கால­நி­லையில் இருந்து விடு­பட்டு இப்­போது சாத­க­மான நிலை­மைக்கு திரும்­பி­யுள்­ளது. எனினும் மலை­யகம், சப்­ர­க­முவ, ஊவா மற்றும் வட­மத்­திய மாகா­ணத்தில் மழை­வீழ்ச்சி பதி­யப்­பட்­டுள்­ளது. இந்த நிலை­மைகள் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் அமை­யாது.

வடி­கா­ல­மைப்பு

அதேபோல் அதிக மழை­வீழ்ச்சி கார­ண­மாக கொழும்பு மற்றும் கொழும்பை அண்­மித்த பகு­தி­களில் வெள்ளம் பெருக்­கெ­டுத்த நிலையில் தற்­போது வெள்ள நீர் வழிந்­தோடும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக களனி பிர­தே­சத்தில் வெள்­ள­நீர் குறை­வ­டைந்­துள்­ளது. எனினும் சில பகு­தி­களில் நீர் தேங்­கி­யுள்­ள­தனால் அவற்றை வெளி­யேற்றும் நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

கல்­விசார் உத­விகள்.

மேலும் ஏற்­பட்­டுள்ள மோச­மான நிலை­மையில் பல பாகங்­க­ளிலும் கல்வி சார் நட­வ­டிக்­கை­களை பாதிக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக குரு­நாகல் மாவட்­டத்தில் பல பகு­தி­க­ளிலும் கொழும்பில் சில பகு­தி­க­ளிலும் பாட­சாலை நட­வ­டிக்­கை­கள் முடங்­கி­யுள்­ளன. அதேபோல் பல பாட­சா­லைகள் சேத­ம­டைந்­துள்­ளன. மாண­வர்­களின் சீரு­டைகள், புத்­த­கங்கள் என்­பன சேத­ம­டைந்­துள்­ளன. எனவே மண்­ச­ரிவு மற்றும் வெள்­ளத்தில் பாதிக்­கப்­பட்ட மாண­வர்­க­ளுக்­கான அனைத்து நிவா­ர­ணப்­ப­ணி­க­ளும் அர­சாங்­கத்தின் மூல­மாக செய்­து­கொ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இல­வச பாட­சாலை சீரு­டைகள், புத்­த­கங்கள் உட­ன­டி­யாக பாதிக்­கப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ள­துடன் பாதிக்­கப்­பட்­டுள்ள பாட­சா­லை­களை புன­ர­மைக்கும் நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

சட்டம் மற்றும் ஒழுங்கு.

அதேபோல் வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது வீடு­க­ளையும் சொத்­துக்­க­ளையும் விட்­டு­விட்டு இடம்­பெ­யர்ந்­துள்ள நிலையில் அவர்­களின் சொத்­துக்கள் கள­வா­டப்­படும் நிலைமை உள்­ள­தாக மக்கள் தெரி­வித்­து­வ­ரு­கின்­றனர். எனினும் இந்த விடயம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்­ளத்­தே­வை­யில்லை. மக்­களின் சொத்­து­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை பொலிஸ் மற்றும் இரா­ணுவம் மேற்­கொண்டு வரு­கின்­றது. அதேபோல் முகாம்­களின் உள்ள மக்­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­யையும் பொலிசார் மேற்­கொண்டு வரு­கின்­றனர். முகாமில் இருக்கும் இறுதி நபர் தனது இருப்­பி­டத்­துக்கு செல்லும் வரையில் பொது­மக்­க­ளுக்­கான பூரண பாது­காப்பை பாதுகாப்பு வழங்கும்.

z_p01-namal.jpg

நிதி விவ­காரம்.

மேலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்கும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது. அனர்த்­தத்தில் இது­வ­ரையில் நான்­கா­யிரம் வீடுகள் முற்­றா­கவும் 3ஆயிரம் வீடுகள் பகுதி அள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன. எனவே முற்­றாக சேத­ம­டைந்த வீடு­க­ளுக்கு 25இலட்சம் ரூபாய் பெறு­ம­தியும் பகுதி அளவில் பாதிக்­கப்­பட்ட வீடு­க­ளுக்கு 1 இலட்­சத்தில் இருந்து சேதா­ரத்­திற்கு ஏற்ற வகையில் பணம் வழங்­கப்­படும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நாட­ளா­விய ர்தியில் இருந்தும் சர்­வ­தேச ரீதியில் இருந்தும் பல்­வேறு நிவா­ர­ணங்கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.

அதேபோல் அர­சாங்கம் பதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு 145 மில்­லியன் ரூபாய் தொகையை ஒதுக்­கி­யுள்­ளது. அதேபோல் சர்­வ­தேச நாடுகள் நிதி­யு­தவி செய்ய விரும்பும் பட்­சத்தில் அதற்­கான வச­தி­க­ளையும் மத்­திய வங்கி செய்து கொடுத்துள்ளது. சர்வதேச நாடுகளை சேர்ந்த நபர்கள் தாம் விரும்பும் பணத்தை அவர்களின் நாட்டு பணமாகவே செலுத்தும் வகையில் ஐந்து வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தருவதாக தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்ற உதவிகளையும், மீட்புப்பணிகளையும் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒருவாரகாலமாக நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது முப்படைகளை கொண்டே சசல நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறான நிலையில் தொடர்ந்தும் பாதுகாப்பு தரப்பின் மூலமாக சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/6744

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.