Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருப்புப் பண விவரத்தை வெளியிடாவிட்டால் கடும் விளைவுகளை எதிர் நோக்க வேண்டி வரும்: - அருண் ஜேட்லி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவில் கருப்புப் பணம் வைத்திருப்போர், கணக்கில் காட்டப்படாத தங்களது சொத்து விவரங்களை தெரிவிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எச்சரிக்கை விடுத்தார்.இந்தியாவில் கணக்கில் காட்டாத சொத்துகளை வைத்திருப்போர், 45 சதவீத வரி, அபாரதம் ஆகியவற்றைச் செலுத்தி நடவடிக்கையில் விலக்கு பெறுவதற்கான 4 மாத கால அவகாசம், வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது.இந்நிலையில், அன்னிய முதலீடுகளைக் கவர்வதற்காக, அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அருண் ஜேட்லி, டோக்கியோவில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:

இந்தியாவில் கருப்புப் பணம் வைத்திருப்போர், கணக்கில் காட்டப்படாத தங்களது சொத்து விவரங்களை தெரிவிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எச்சரிக்கை விடுத்தார்.இந்தியாவில் கணக்கில் காட்டாத சொத்துகளை வைத்திருப்போர், 45 சதவீத வரி, அபாரதம் ஆகியவற்றைச் செலுத்தி நடவடிக்கையில் விலக்கு பெறுவதற்கான 4 மாத கால அவகாசம், வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது.இந்நிலையில், அன்னிய முதலீடுகளைக் கவர்வதற்காக, அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அருண் ஜேட்லி, டோக்கியோவில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:

   

இந்தியாவில் கணக்கில் காட்டாத சொத்துகளை வைத்திருப்போர், தங்களது சொத்து விவரங்களைத் தெரிவிக்காவிட்டால், அவர்களைப் பற்றிய விவரங்கள் வேறு வழிகளில் பகிரங்கப்படுத்தப்படும். அதனால், அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.மத்திய அரசு கடந்த முறை அளித்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாதவர்களின் பெயர்கள், "பனாமா ஆவணங்கள்' போன்ற ஆவணங்கள் வழியாக வெளிவந்துவிட்டன. அவர்கள் தற்போது உறக்கமின்றி தவித்து வருகின்றனர் என்றார் அவர்.விமர்சனத்துக்கு கண்டனம்: இதனிடையே, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மீதான விமர்சனத்துக்கு அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்தார். அரசின் திட்டங்கள் குறித்தும், கொள்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டுமே தவிர, தனி நபர் தொடர்பான விவாதங்கள் கூடாது என்றும் அவர் கூறினார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், வட்டி விகிதத்தை குறைக்கத் தவறியதால் அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் அல்லது அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி போன்ற சிலர் வலியுறுத்தி வருகின்றனர். ரகுராம் ராஜனின் பதவிக் காலம் வரும் செப்டம்பர் மாதம் நிறைவடையும் நிலையில், அதற்கு முன்னதாகவே அவரைப் பதவிநீக்கம் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி இரு முறை கடிதம் எழுதிவிட்டார். இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் ஜேட்லி கூறியதாவது: இந்தியப் பொருளாதாரத்தில், ரிசர்வ் வங்கியும், அதன் ஆளுநர் பதவியும் மத்திய அரசின் முக்கிய அங்கமாகும். எனவே, ரிசர்வ் வங்கி மற்றும் அதன் கவர்னர் மீதான எந்தவொரு விமர்சனத்தையும், யார் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் விவாதிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். அரசின் கொள்கைகளை ஆதரிக்கவும், அவற்றை விமர்சிக்கவும் மக்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், அது தனிநபர் மீதான விமர்சனமாக மாறிவிடக் கூடாது.

ஏனெனில் தனி நபர் விமர்சனங்கள், பிரச்னையின் வீரியத்தை மங்கச் செய்துவிடும் என்றார் அவர்."ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்குமா?' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ஜேட்லி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். மேலும், "இதுதொடர்பாக ஊடகங்களுடன் விவாதிக்க முடியாது' என்று அவர் பதிலளித்தார்."தடை விதிப்பு தாற்காலிகமானதே': ""தில்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்குத் தடை விதித்திருப்பது தாற்காலிக நிலைப்பாடுதான்; இதனால், வாகன உற்பத்தி நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது'' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதைத் தடுப்பதற்காக, தில்லியிலும், கேரளத்திலும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை இயக்கவும், 2,000 சி.சி.க்கும் அதிகமான புதிய டீசல் வாகனங்களைப் பதிவு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, சிறிய ரக டீசல் வாகனங்களையும், பெட்ரோல் வாகனங்களையும் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணிகளில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.இந்நிலையில், சுசூகி மோட்டார் நிறுவனத்தின் தலைவர் ஒசாமு சுசூகியை அருண் ஜேட்லி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பாக, செய்தியாளர்களிடம் ஜேட்லி கூறுகையில், "இந்தியாவில் வாகன உற்பத்தித் துறை மிகவும் நல்ல முறையில் இயங்கி வருகிறது; பழமையான டீசல் வாகனங்களுக்குத் தடை விதிப்பதால், சுசூகி போன்ற நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது' என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=158555&category=IndianNews&language=tamil

Edited by தமிழரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.