Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2017 அடுத்த ஆண்டு ஜூன் 17 துவக்கம் !

Featured Replies

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2017 அடுத்த ஆண்டு ஜூன் 17 துவக்கம் !

 

13315564_1068967676517312_80832320873747

 

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பையின், அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும்; இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் பி பிரிவிலும் சேர்க்கப்பட்டு உள்ளது.

vikatan

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: ஒரே பிரிவில் இந்தியா - பாகிஸ்தான்!

 


 
  • ind-pak.jpg

இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணி, பி குரூப்பில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஜூன் 4 அன்று நடைபெறுகிற இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகிற போட்டி ரசிகர்களின் ஆவலைத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ குரூப்பில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஜூன் 1-ம் தேதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் இங்கிலாந்தும் வங்கதேசமும் மோதவுள்ளன. ஜூன் 18 அன்று ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. 2015 செப்டம்பர் 30 அன்றோடு ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த அணிகள் இப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இதனால் மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இப்போட்டியில் பங்குபெறவில்லை.  

http://www.dinamani.com/sports/2016/06/01/சாம்பியன்ஸ்-டிராபி-கிரிக்க/article3461331.ece

  • தொடங்கியவர்

சம்பியன்ஸ் கிண்ணம் 2017: ஒரே குழுவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை
 
01-06-2016 03:49 PM
Comments - 0       Views - 22

article_1464787331-TamilsaindvspakChampi2017ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில், இந்தியாவும் பாகிஸ்தானும், ஒரே குழுவிலேயே இடம்பிடித்துள்ளன. அதேபோல், அக்குழுவிலேயே இலங்கை அணியும் இடம்பெற்றுள்ளன.

ஜூன் 1, 2017இல் இங்கிலாந்தில் ஆரம்பிக்கவுள்ள இந்தத் தொடர், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறந்த 8 அணிகளுக்கான தொடராகும்.

இதற்கான தகுதிபெறும் நாளான செப்டெம்பர் 30, 2015இல் 9ஆவது இடத்தில் காணப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, இத்தொடருக்குத் தகுதிபெறத் தவறியிருந்தது. இதன்படி, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் தகுதிபெற்றிருந்தன. இந்நிலையிலேயே, இத்தொடருக்கான போட்டி அட்டவணையை, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

தொடரின் முதலாவது போட்டியில், தொடரை நடாத்தும் இங்கிலாந்து அணி, பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இலங்கை அணி, ஜூன் 3ஆம் திகதி, தென்னாபிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. இத்தொடரின் இறுதிப் போட்டி, ஜூன் 18ஆம் திகதி, ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

போட்டி அட்டவணை:

1 ஜூன் - இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்

2 ஜூன் - அவுஸ்திரேலியா எதிர் நியூசிலாந்து

3 ஜூன் - இலங்கை எதிர் தென்னாபிரிக்கா

4 ஜூன் - இந்தியா எதிர் பாகிஸ்தான்

5 ஜூன் - அவுஸ்திரேலியா எதிர் பங்களாதேஷ்

6 ஜூன் - இங்கிலாந்து எதிர் நியூசிலாந்து

7 ஜூன் - பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா

8 ஜூன் - இந்தியா எதிர் இலங்கை

9 ஜூன் - நியூசிலாந்து எதிர் பங்களாதேஷ்

10 ஜூன் - இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா

11 ஜூன் - இந்தியா எதிர் தென்னாபிரிக்கா

12 ஜூன் - இலங்கை எதிர் பாகிஸ்தான்

14 ஜூன் - முதல் அரையிறுதி

15 ஜூன் - 2ஆம் அரையிறுதி

18 ஜூன் - இறுதிப் போட்டி

19 ஜூன் - மேலதிக நாள்

- See more at: http://www.tamilmirror.lk/173621/சம-ப-யன-ஸ-க-ண-ணம-ஒர-க-ழ-வ-ல-இந-த-ய-ப-க-ஸ-த-ன-இலங-க-#sthash.7pKuMd6k.dpuf
  • தொடங்கியவர்

வேண்டுமென்றேதான் இந்தியா-பாகிஸ்தான் அணிகளை ஒரே பிரிவில் சேர்த்தோம்: ஐசிசி

 
இந்தியா-பாகிஸ்தான். | கோப்புப் படம்.
இந்தியா-பாகிஸ்தான். | கோப்புப் படம்.

2017ம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இது எதேச்சையாக நடைபெற்றது இல்லை என்றும் வேண்டும் என்றேதான் இரு அணிகளையும் ஒரே பிரிவில் சேர்த்துள்ளதாக ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

சமீப காலத்தில் இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம் பெறுவது இது 5-வது முறையாகும். உலகக் கோப்பைப் போட்டியிலும், டி 20 உலகக் கோப்பைத் தொடரிலும் கூட இரு அணிகளும் ஒரே பிரிவில்தான் இடம் பெற்றிருந்தன.

தற்போது 2017-ல் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பின்ஸ் டிராபி தொடரிலும் கூட இரு அணிகளும் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் 2017-ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மோதவுள்ளன. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறும்போது, "சந்தேகமே வேண்டாம். வேண்டும் என்றேதான் நாங்கள் இரு அணிகளையும் ஒரே பிரிவில் சேர்த்துள்ளோம். இரு அணிகளும் மோதும்போது அது முக்கியத்துவம் பெறுகிறது.

பெரும் பிரபலம் ஆகிறது. ரசிகர்களும் அதிக அளவில் போட்டியை காண மைதானத்துக்கு வருவார்கள். சர்வதேச அளவில் இந்த இரு அணிகளும் மோதும் போட்டிகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது" என்றார்.

http://tamil.thehindu.com/sports/வேண்டுமென்றேதான்-இந்தியாபாகிஸ்தான்-அணிகளை-ஒரே-பிரிவில்-சேர்த்தோம்-ஐசிசி/article8682461.ece

  • தொடங்கியவர்
இளம் வீரர்களுக்கு மிகவும் அவசியமான அனுபவத்தை ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் பெற்றுக்கொடுக்கும் - ஏஞ்சலோ மெத்யூஸ்
2016-06-03 10:59:43

1706719.jpgஇங்­கி­லாந்தில் அடுத்த வருடம் நடை­பெ­ற­வி­ருக்கும் சர்வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ சி சி) சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி தமது இளம் அணிக்கு மிகவும் அவ­சி­ய­மான அனு­ப­வத்தைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­துடன் ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­தவும் வழி­வ­குக்கும் என இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­விக்­கின்றார். 

 

இந்த அனு­ப­வமும் ஆற்றல் வெளிப்­பா­டு­களும் 2019 இல் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கு தம்மை சிறப்­பாக தயார்­ப­டுத்­திக் ­கொள்ள இளம் வீரர்­க­ளுக்கு பெரிதும் உதவும் என அவர் மேலும் தெரி­வித்தார்.

 

இங்­கி­லாந்தில் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள ஐ சி சி சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான குழு­நி­லைப்­ப­டுத்தல் மற்றும் அட்­ட­வ­ணைப்­ப­டுத்தல் நிகழ்வு இங்­கி­லாந்தில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்­ற­போது அதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கையில் ஏஞ்­சலோ மெத்யூஸ் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

 

அவுஸ்­தி­ரே­லிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், நடப்பு சம்­பியன் இந்­திய அணித் தலைவர் எம்.எஸ். தோனி, தென் ஆபி­ரிக்க அணித் தலைவர் ஏ.பி.டி வில்­லியர்ஸ், நியூ­ஸி­லாந்து அணித் தலைவர் கேன் வில்­லி­யம்சன், இங்­கி­லாந்து அணித் தலைவர் ஒய்ன் மோர்கன், பங்­க­ளாதேஷ் அணித் தலைவர் மோர்ட்­டஸா மஷ்­ராஃபே ஆகி­யோரும் தத்­த­மது கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்­தனர்.

 

தொடர்ந்து கருத்து வெளி­யிட்ட மெத்யூஸ், ‘‘நாங்கள் மீள் எழுச்சிப் பெறத் துடித்­துக்­கொண்­டி­ருப்­பதால் ஐ சி சி சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டிகள் இலங்­கைக்கு மிகவும் முக்­கியம் வாய்ந்­த­தாக அமை­ய­வுள்­ளது.

 

உயர்­தர கிரிக்கெட் போட்­டி­களில் சவால்­க­ளையும் தேவைப்­பா­டு­க­ளையும் எவ்­வாறு எதிர்­கொள்­வ­தென்­பது குறித்து எமது இளம் ஆனால் அதி திற­மை­வாய்ந்த வீரர்கள் கற்­று­வ­ரு­கின்­றனர். உலக 50 ஓவர் போட்­டி­க­ளுக்கு தேவை­யான அனு­ப­வத்­தையும் ஆற்­றல்­க­ளையும் ஐ சி சி சம்­பி­யன்கள் கிண்ண கிரிக்கெட் போட்­டிகள் அவர்­க­ளுக்கு கொடுக்கும் என் நான் உறு­தி­யாக கரு­து­கின்றென்.

 

2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்­காக தம்மைத் தயார்­ப­டுத்தும் வீரர்­க­ளுக்கு இப் போட்­டிகள் அரு­மை­யான அனு­ப­வத்தைப் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்கும்’’ என்றார்.

 

‘‘இந்­தியா, பாகிஸ்தான், தென் ஆபி­ரிக்கா ஆகிய நாடு­க­ளுடன் குழு பியில் இலங்கை இடம்­பெ­று­கின்­றது. எனவே இல­கு­வான போட்டி எதுவும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. எனினும் 2002இல் இந்­தி­யா­வுடன் சம்­பியன் பட்­டத்தைப் பகிர்ந்­து­கொண்­டி­ருந்­த­தாலும் 2013 இல் அரை இறு­தி­வரை முன்­னே­றி­யி­ருந்­த­தாலும் அடுத்த வருடம் இதை­விட சிறப்­பாக எம்மால் செய்­ய­மு­டியும் என்­ப­தற்­கான தடைகள் இருப்­ப­தாக நான் பார்க்­க­வில்லை’’ என சக­ல­துறை வீரர் ஏஞ்­சலோ மெத்யூஸ் மேலும் கூறினார்.

 

அவுஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து, நியூ­ஸி­லாந்து, பங்­க­ளா தேஷ் ஆகிய நாடுகன் குழு ஏயில் இடம்­பெ­று­கின்­றன.

 

சர்­வ­தேச ஒருநாள் தரப்­ப­டுத்­த­லுக்­கான முதல் எட்டு இடங்­க­ளுக்குள் வர­மு­டி­யாமல் போனதால் மேற்­கிந்­தியத் தீவு­களும் ஸிம்­பாப்­வேயும் இப்போட்­டி­க­ளுக்கு சேர்த்­துக் ­கொள்­ளப்­ப­ட­வில்லை.

 

ஐ சி சி சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்
ஐ சி சி சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டிகள் 2017 ஜூன் மாதம் 1ஆம் திகதி இங்­கி­லாந்­துக்கும் பங்­க­ளா­தே­ஷுக்கும் இடை­யி­லான போட்­டி­யுடன் ஆரம்பமாகவுள்ளது.

 

18 தினங்கள் நீடிக்கும் இப் போட்டிகளின் இறுதி ஆட் டம் ஜூன் 18ஆம் திகதி தி ஓவல் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. ஜூன் 19 ஆம் திகதி ஒதுக்கப்பட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தி ஓவல், எஸ்பெஸ்டன், கார்டிவ் ஆகிய மூன்று மைதா னங்களில் மொத்தம் 15 போட்டிகள் நடைபெறவுள்ளன.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17067#sthash.CORtOptU.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.