Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் நிறுவ அனுமதி கேட்டு பிரதமருக்கு அவசர கடிதம்

Featured Replies

வடபகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க உத்தரவிடுமாறு கேட்டு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்க கடிதம் எழுதியுள்ளார். இதே கோரிக்கையை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அவர் கிராமியப் பொருளாதார அமைச்சிடமும் விடுத்திருந்தார். அது ஏற்க்கப்படாதலை அடுத்து பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக் குளத்தில் அமைப்பது என்று வடக்கு மாகாண சபை ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் முதலமைச்சர் மீண்டும் இந்த விவகாரத்தைப் பிரதமரிடம் எடுத்துச் சென்றிருக்கின்றார்.

மத்திய அரசின் வரவு - செலவுத் திட்டத்தில் வவுனியாவில் பொருளாதார மையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதற்குரிய காணியை அடையாளப்படுத்துவதில் சிக்கல் தோன்றியது. ஓமந்தையில் உள்ள மாணிக்கம் பண்ணைக் காணியில் இதனை அமைப்பதற்கு வவுனியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இணங்கியிருந்தனர்.

வவுனியா நகரிலிருந்து 2 கிலோ மீற்றர் பிரதேசத்தினுள்ளேயே, பொருளாதார மத்திய நிலையம் அமைக்க முடியும் என்று திட்டத்துக்கான நிதியை விடுவிக்கும் கிராமிய பொருளாதார அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. இதனால் ஓமந்தையில் அதனை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மாற்றுத் தெரிவாக தாண்டிக்குளம் விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் காணி பரிந்துரைக்கப்பட்டது.

தாண்டிக்குளம் காணியில் நிலையம் அமைவதை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் விரும்பியிருக்கவில்லை. இதனால் இந்தத் திட்டத்தில் இழுபறி ஏற்பட்டது. உரிய காணியை அடையாளப்படுத்தி வழங்காவிடின், திட்டம் வேறு மாகாணத்திற்கு மாற்றப்படும் என்று கிராமிய பொருளாதார அமைச்சு மிரட்டி வந்தது. இதனால் வவுனியாவில் இருந்து முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து வடக்கு மாகாண சபையில் இது விவாதிக்கப்பட்டது. நீண்ட விவாதத்தின் பின்னர், தாண்டிக்குளம் காணியை இந்தத் திட்டத்துக்கு வழங்க வடக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தினால், வவுனியா மாவட்ட அரச அதிபர், கிராமிய பொருளாதார அமைச்சு என்பவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கமைய தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை நிறுவுவதற்கான பூர்வாங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக தாண்டிக்குள காணி நில அளவைத் திணைக்களத்தினரால் அளவீடு செய்யப்பட்டது.

இத்தகைய பின்னணியில் நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இது தொடர்பில் திடீரெனக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தக் கடிதம் கொழும்பு அரசின் அமைச்சர் ஒருவர் ஊடாகவே பிரதமரிடம் சேர்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் தீர்மானம் தாண்டிக்குளத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று இருக்க, முதலமைச்சர் ஓமந்தையில் அமைக்குமாறு பிரதமரைக் கோரியுள்ளமை மீண்டும் இந்தப் பிரச்சினையைச் சர்சைக்குள்ளாக்கி உள்ளது.

http://www.tamilwin.com/politics/01/107582

  • தொடங்கியவர்

தமிழின விரோத சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் பின்புலத்துடன் சில வவுனியா தமிழ் உறுப்பினர்கள் சுயநல நோக்குடன் பாரிய சதி முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

அதனால் தான் "வவுனியா நகரிலிருந்து 2 கிலோ மீற்றர் பிரதேசத்தினுள்ளேயே, பொருளாதார மத்திய நிலையம் அமைக்க முடியும்" என்று திட்டத்துக்கான நிதியை விடுவிக்கும் கிராமிய பொருளாதார அமைச்சு கொஞ்சமும் பொருத்தமற்ற நிபந்தனைகளை அடாத்தாக விதித்திருந்தது. இந்த தமிழின விரோத சிங்கள-பௌத்த இனமதவெறி அமைச்சு இது போன்று அடாவடித்தனமான கட்டுப்பாடுகளை விதிப்பது அருகில் உள்ள பதவியா, அனுராதபுர சிங்களவர்களின் நன்மைகள் கருதி. இதற்கு ஆதரவாக சில வவுனியா தமிழ் உறுப்பினர்கள் சுயநல நோக்குடன் வட மாகாண சபைக்கு எதிராக இயங்குவதும், நம்பிக்கையில்லா தீர்மானங்களை கொண்டு வருவதும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது. மேலும் அவர்களின் அழுத்தங்களுக்கு வட மாகாணசபை முதலமைச்சர் செவி சாய்ப்பதும் கண்டிக்கப்பட வேண்டியது.

வட மாகாணத்துக்கு உரிய பொருளாதார மையம் வட மாகாண மக்களுக்கு மையமான மாங்குளம், முறிகண்டி பகுதிகளில் அமைவது தான் பொருத்தமானது. இங்கு தான் பயன்படுத்தாத பல அரச காணிகளும் ஓரளவு நீர் வசதிகளும் காணப்படுகின்றன. இந்த இடங்கள் தான் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, யாழ் பிரதேசங்களுக்கு ஓரளவு மையமும், தொடரூந்து நிலைய, சாலை கட்டமைப்பு வசதிகள் உள்ள இடங்களும் ஆகும்.

எனவே சுயநலவாதிகளின் சதித் திட்டங்களும்,  தமிழின விரோத சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் பொருத்தமற்ற நிபந்தனைகளும் முறியடிக்கப்பட்டு பொருளாதார மையம் போதியளவு பயன்படுத்தாத அரச காணிகள் உள்ள மாங்குளம் அல்லது முறிகண்டிப் பகுதியில் நிறுவப்பட வேண்டும்.

மேலும் இந்த மிக மோசமான சதித் திட்டத்தில் இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும்  "தாண்டிக்குளம் விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் காணியை"  பறிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது. அப்போது விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் நிலை என்ன? ஏனைய பகுதிகளில் போதியளவு அரச காணிகள் இருக்க தமிழ் பகுதியில் இருக்கும் விவசாய ஆராய்ச்சி நிலைய காணியை முடக்குவதன் நோக்கம் என்ன? இந்த சதித் திட்டத்துக்கு சில கேட்டுகெட்ட வவுனியா தமிழ் உறுப்பினர்கள் துணை போவது ஏன்?

இந்த அரைவேக்காட்டு உறுபினர்களின் அடுத்த சதி நடவடிக்கை:  "ஓமந்தையில் உள்ள மாணிக்கம் பண்ணைக் காணியில் இதனை அமைப்பதற்கு வவுனியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இணங்கியிருந்தனர்". ஏனைய பகுதிகளில் போதியளவு அரச காணிகள் இருக்க தமிழ் பகுதியில் செயற்பட்டு முடங்கியிருக்கும் ஒரு தனியார் காணியை அபகரிக்க முற்படுவதன் நோக்கம் என்ன? இந்த சதித் திட்டத்துக்கு சில கேட்டுகெட்ட வவுனியா தமிழ் உறுப்பினர்கள் துணை போவது ஏன்?

அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழின விரோத சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் பொருத்தமற்ற நிபந்தனைகளை முறியடித்து, வடக்கு அபிவிருத்தி என்ற பெயரில் சர்வதேசத்திடம் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசு  பெற்ற நிதியுதவியை கொண்டு வட மாகாண தமிழருக்கு சாதகமான இடத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை நிறுவுவதே பொருத்தமானதாகும்.  

இல்லையெனில் எட்டப்பர் வேலை செய்யும் குறித்த 4 காடையர்களும் தமிழ் மக்களின் கோபத்துக்கு ஆளாகி மிக விரைவில் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரலாம்.
 

  • தொடங்கியவர்
16 hours ago, போல் said:

வடபகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க உத்தரவிடுமாறு கேட்டு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்க கடிதம் எழுதியுள்ளார். இதே கோரிக்கையை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அவர் கிராமியப் பொருளாதார அமைச்சிடமும் விடுத்திருந்தார். அது ஏற்க்கப்படாதலை அடுத்து பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக் குளத்தில் அமைப்பது என்று வடக்கு மாகாண சபை ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் முதலமைச்சர் மீண்டும் இந்த விவகாரத்தைப் பிரதமரிடம் எடுத்துச் சென்றிருக்கின்றார்.

தமிழின விரோத சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் ஒவ்வொரு நகர்வையும் கவனமாக அலசியே முடிவெடுக்க வேண்டும். அதன் மூலமே அவர்களின் நீண்டகால சதித்திட்டங்களை முறியடிக்க முடியும். கால தாமதமானாலும் முதலமைச்சரின் நடவடிக்கை தேவையான ஒன்றே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.