Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கை முற்றக மீட்ட பின்னர் பொதுத் தேர்தல் நடத்தத் திட்டம்

Featured Replies

தனது அரசியல் நிலையை ஸ்திரப்படுத்த யுத்த வெற்றிகளை நாடுகிறார் மஹிந்தா

கிழக்கில் புலிகளைத் தோற்கடித்து,இந்த மாகாணத்தை முற்றாக விடுவித்த பின்னர், அதனால் கிடைக்கும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தவும் யுத்த வெற்றிகளைத் தமது அரசியல நிலைமையை ஸ்திரப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்தவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திட்டமிட்டிருக்கின்றார் எனத் தெரிகின்றது.

லண்டனிலிருந்து வெளியாகும் ‘தபினான்ஸியல் டைம்ஸ்’ பத்திரகையில் ஜோ.லெகி என்பவர் வரைந்த அரசியல் கட்டுரையில் இவ்வாறு மதிபாய்வு செய்யபட்டிருக்கின்றது. அக் கட்டுரையின் முக்கிய சாராம்சங்கள் வருமாறு :

ஜனாதிபதி மஹிந்தத தனது வெற்றிக்குத் தாமே இரையகும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியவராகியிருக்கின்றார்.

2005 இல் தாம் பதவியேற்ற நாள் முதல் தமிழப் புலிக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டையே இவர் பின்பற்றி வந்துள்ளார். கிழக்கில் புலிகளின் பலமான பிடியிலிருந்து அவர்களை வெளியெற்றும் அளவுக்கு முன்னெறியுள்ள அரசபடைகள், இப்போது புலிகளின் வடக்கு நிலைகள் மீதும் தாக்குதல் கொடுக்கத் தயாராகி வருகின்றன. ஆனால்

கடந்தவாரம் தெற்கில் சிவிலியன்கள் உயிரிழக்கக் காரணமான பயங்கரவாதிகளின் இரு குண்டு வெடிப்புத் தாக்குதலை;களை அடுத்து-

தமிழீழ விடுதலைப்புலிகள் தமது பிரதேசங்களை இழந்து வரும் இன்றைய நிலைமையில் சிவிலியன்களுக்கு எதிரான எழுந்தமானமான தமது பழைய தாக்குதல் தந்திரோபாயத்தை அவர்கள் மீள ஆரம்பித்து விடட்டார்கள் என்ற எண்ணம் கொழும்பில் பரவலாக ஏற்பட்டிருக்கின்றது.

இதனால் ஜனாதிபதி குழப்பநிலையை எதிர் கொள்கிறார். இராணுவத்தைக் கட்டுப்படுத்தி, விடுதலைப் புலிகளுடன் பேச்சு மேசைக்குத் திரும்புவதன் மூலம் தமது தேசியப் போக்கு ஆதரவாளர்களுடனான உறவிலிருந்து விலகிப் போவதா? அல்லது பதிலடியாக இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி நாட்டைப் பெருங் குழப்பத்திற்குள் ஆழ்த்துவதா? என்பதைத் தீர்மானிக்க வேண்டிய இக்கட்டு அவருக்கு.

“இராணுவ மோதல்கள் விரிவடைவதால் நேரக்கூடிய ஆபத்துக்களை ஜனாதிபதி அறிவார். ஆனால், இப்பொது ‘தேசிய போக்கு கூட்டணி’ யின் சிறைக் கைதியாக அவர் இருப்பதுதான் அவரது பிரச்சினையாகும்.” என்று கூறுகிறார் பக்கச் சார்பற்ற அமைப்பான தேசிய சமாதானப் பேரவையின் இயக்குநர் ஜெஹான் பெரெரா.

2002 இல் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின்னர் இலங்கை இப்போது முழு அளவிலான யுத்தத்தை நோக்கி வழுக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

கடந்த வருடத்தில் பல தற்கொலைத் தாக்குதல்கள் இடம் பெற்றன. அரசு பதிலடிக்கு பல விமானத் தாக்குதல்களை நடத்தியது. கடந்த வாரம் அத்தகைய தாக்குதல் ஒன்றில் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த 16 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் எனப் புலிகள் கூறுகின்றனர்.

ஜெனிவாப் பேச்சுக்கள் பயன் தராமல் முடிவுற்றன.

சுதந்திரத்துக்கான போராட்டத்தை மீள ஆரம்பிக்கப் போகின்றோம் எனப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் விடுத்த அறிவிப்பு, ஏறத்தாழ யுத்தப் பிரகடனமாகவே கருதப்படுகின்றது.

இரண்டு தரப்பும் இராணுவத் தெரிவை நாடும் நிலையில் யுத்த நிறுத்தத்தின் பின்னர் இப்பொதுதான் முதல் தடவையாக அரசுப் படைகளின் கைகள் ஓங்கியுள்ளன. அதற்குப் புலிகளில் ஏற்பட்ட பிளவும் அரசுப் படைகளுக்குச் சாதகமாக உதவியுள்ளது.

ஆனால்,கிழக்கில் படைத்தரப்புக்கு கிடைக்கும் வெற்றி இரண்டு பக்கமும் கூரான வாள் போன்றதே. புலிகனின் கட்டுப்பாட்டிலிருந்து கிழக்கை விடுவித்தாலும் கூட, தற்கொலைத் தாக்குதலாளிகள் உட்பட கரந்தடித் தாக்குதலுக்குத் தயாரன பெருமளவு விடுதலப் புலிகளைக் கொண்டிருக்கக் கூடிய பரந்த அப்பிரதேசத்தைப் பாதுகாப்பது என்பது அரசப் படைகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும்.

மறுபுறத்தில் இலங்கையின் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சி நிலையை நோக்கிச் செல்கிறது. முழு அளவில் போர் வெடிக்குமானால் அதன் நிலையைக் கூறவே தேவையில்லை.

இப்பிரச்சினைகளிலிருந்து வெளிப்படுத்துவதற்கு ‘சர்வகட்சிப் பிரதிநிதிகள் மாநாடு’ மற்றும் அதன் சிபார்சுகளை லாவகமாக ஜனாதிபதி பயன்படுத்த எத்தனிக்கலாம்.

நாட்டின் பெரும்பான்மையினரான சிங்களவர்கள் மத்தியில் இருக்கின்ற கடும் போக்குத் தேசியவாதிகள், இந்தச் சிபார்சுகளைக் கடுமையாக எதிர்த்தாலும்,அவற்றில் சிலவற்றையேனும் பிரதான எதிர்க்ட்சியான ஐ.தே.கவின் ஆதரவுடன் ஜனாதிபதியால் முன்னெடுக்க முடியும்.

யுத்தத்தின் பெறுபேறை அரசியல் இலாபமாக மாற்றிக கொள்ளலாமா என்பது குறித்து ஜனாதிபதி இன்னும் முடிவு எடுகாமல் இருக்கக்கூடும்.

கிழக்கில் இராணுவம் வென்றால் முதலில் அங்கு பிராந்தியத் தேர்தலை அரசு நடத்தலாம். பின்னர் பெரும்பாலும் பொதுத் தேர்தலும் நடக்கும்.

“கிழக்கில் கிடைக்ககூடிய வெற்றி,ஜனாதிபதிக்கு தேர்தல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தனது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கான ஒருவாய்பிபை அளிக்கும்” என்று கணிக்கிறார் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து.

இப்படி அந்த ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : சுடர் ஒளி 10 ஜன 2007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.