Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் வடக்கில் சீன ஆதிக்கத்தால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்

Featured Replies

தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இலங்கை உள்நாட்டு போரில் வடக்கு மாகாணம் அதிகம் பாதிக்கப்பட்டது. இங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இந்த மாகாணத்தின் முதல்வராக விக்னேஸ்வரன் உள்ளார்.

சீன துாதர் யீ சைன்லியங்க் வடக்கு மாகாணத்தில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் அம்மாகாண முதல்வர் விக்னேஸ்வரனையும் கவர்னர் றெஜினோல்ட் கூரேவையும் சந்தித்தார்.

வடக்கு மாகாணத்தில் சீனா தொழில் முதலீடுகள் செய்வதற்காக இந்த சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்குடன் சீனாவின் நெருக்கம்  இந்தியர்கள் புலம்பல்

இந்த சுற்றுப்பயணம் தொடர்பாக சீன துாதரக அதிகாரிகள் கூறியதாவது:

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே வரலாற்று உறவு உள்ளது. இலங்கை உடனான நட்புறவை வளர்ப்பதில் சீனா அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

இலங்கைகான சீன துாதர் யீ சைன்லியங்க் வடக்கு மாகாணத்தில் நான்கு நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவரது பயணத்தில் அம்மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் கவர்னர் றெஜினால்ட் கூரேவை அவர் சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்கு சீன உதவும் என உறுதி அளித்துள்ளார்.

2009 ம் ஆண்டு உள்நாட்டுப்போர் முடிவடைந்தது. இதில் வடக்கு மாகாணம் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னர் அம்மாகாணத்தில் அரசியல் மற்றும் பொருாளாதார வளர்ச்சிகள் நிகழ்ந்து வருவதை சீனா மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

வடக்கு மாகாணத்தில் சீன தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

இதன் மூலம் அம்மாகாணத்தில் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சீனா உதவ திட்டமிட்டுள்ளது.

சீன துாதரின் சுற்றுப்பயணத்தில் யாழ்ப்பாணம் பல்கலையில் படிக்கும் 10 மாணவர்களுக்கு சீன துாதர் கல்விஉதவித் தொகை வழங்கப்பட்டது. மேலும் அப்பல்கலை நுாலகத்திற்கு புத்தகம் வாங்குவதற்காக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினார்.இலங்கையில் சீன ஆதிக்கத்தால் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

- Dina Malar

http://www.tamilwin.com/politics/01/108077

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.