Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

570 கோடி யாருக்குச் சொந்தம்?

Featured Replies

570 கோடி யாருக்குச் சொந்தம்?

தி.மு.க. நடத்தும் நீதிமன்ற யுத்தம்!அலசல்

 

p18b.jpg

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2016, பல கண்கட்டி வித்தைகளைப் பொதுமக்களுக்குக் காட்டிச் சென்றுள்ளது. அவற்றில் சில வித்தைகள், விடை தெரியாத விநோதங்களாக இன்னும் நீடிக்கின்றன. கரூர் தொழிலதிபர் அன்புநாதன் வீட்டில் சிக்கிய பணம் எவ்வளவு? அன்புநாதனுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? திடீரென சிறுதாவூரில் 18 கன்டெய்னர்கள் ஏன் நின்றன... அதில், என்ன இருந்தன? அதன்பிறகு, அவை எங்கே மாயமாக மறைந்தன? திருப்பூரில் ரூ.570 கோடிகளுடன் வந்த 3 கன்டெய்னர்கள் யாருடையவை? அந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி இதுவரை ஏன் வாய் திறக்கவில்லை என்பன எல்லாம் அப்படிப்பட்ட விடை தெரியாத விநோதங்கள்.

டகங்கள், போலீஸ், அரசு அதிகாரிகள், வங்கி விதிமுறைகள், நீதிமன்றங்கள் என அத்தனை பேரின் கண்களையும் கட்டிவிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த விநோதங்களை விசித்திர விநோதங்கள் என்று நாம் வகைப் படுத்தலாம். இவற்றில், 570 கோடி ரூபாய் விவகாரத்தை  தி.மு.க கொஞ்சம் சீரியஸாகக் கையில் எடுத்தது. சர்ச்சைகள் எழுந்தபிறகு, அவை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமானது என்று அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக உத்தரவுகள் பறந்துவந்தன. பணம் போக வேண்டிய இடத்துக்குப் போய்விட்டது. ஆனால், இதுவரை அந்தப் பணம் ஏன் வந்தது? எதற்கு வந்தது? அவை யாருக்குச் சொந்தமானது என்பது போன்ற பல கேள்விகளுக்குப் பதில்கள் இல்லை.

தி.மு.க தலைமை நிலையச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன், இதற்குப் பதில் தேடி, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் அனைத்தும் அதிர்ச்சி ரகமாக உள்ளன.

1. கடந்த மே 13-ம் தேதி நடு இரவில், தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது, 3 இன்னோவா கார்கள் பின்தொடர்ந்து வர, 3 கன்டெய்னர் லாரிகளில் கோடிக்கணக்கான பணம் சென்றது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமான பணம் என்றால், தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் நிறுத்தியபோது, அந்த லாரிகளை ஏன் அவர்கள் நிறுத்தவில்லை?

2. பெரமணல்லூர் - குன்னத்தூர் சாலையில் பிடிபட்ட அந்த லாரிகளில், மூன்று நாட்களாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தன. 18 மணி நேரம்வரை அந்தப் பணத்துக்கு யாரும் உரிமை கோரவில்லை. 

3. இந்த 570 கோடி ரூபாய் பணத்தை அனுப்பும்போது, வங்கி அதிகாரிகள் அல்லது வங்கி சார்பில் யாரும் அந்த லாரிகளிலும் அவற்றுடன் வந்த இன்னோவா கார்களிலும் ஏன் வரவில்லை?

4. தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள், அந்தப் பணம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு லாரிகளில் இருந்தவர்கள், இன்னோவா காரில் வந்தவர்கள் யாரும் எந்தப் பதிலும் சொல்லவில்லை. பணம் யாருடையது? எங்கிருந்து வருகிறது என்று கேட்டபோது, அவர்கள் யாரும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் பணம் என்று அப்போது சொல்லவில்லை.

p18.jpg

பணத்துக்குச் சொந்தமானவர்களுக்குத் தகவல் சொல்லுங்கள் என்று தேர்தல் அதிகாரிகள் அவர்களிடம் வலியுறுத்திய போது, அவர்கள் அதைச் செய்யவில்லை.

மாறாக, இன்னோவா காரில் வந்தவர்கள், ‘‘நாங்கள் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள்’’ என்று பதில் சொல்லியுள்ளனர். ஆனால், அவர்களிடம் அடையாள அட்டைகள் இல்லை. மேலும், அவர்கள் சீருடையிலும் இல்லை.

5. மூன்று கன்டெய்னர் லாரிகளின் பதிவு எண்கள், AP 13X 8650; AP 13X 5203 மற்றும் AP 13X 5204. இவற்றில் AP 13X 5204 என்ற பதிவு எண், லாரிக்கான பதிவு எண்ணே கிடையாது. இந்த எண் ஆந்திராவைச் சேர்ந்த, ஜாபர் அஹ்மத் கான் என்பவருடைய காரின் பதிவு எண். வங்கியின் பணம் இத்தனை கோடிகளை அனுப்பும்போது, அந்த வாகனங்கள் முறையான வைதானா என்பதை வங்கிகள் சோதிக்காதா?

6. கன்டெய்னர் லாரிகளின் ஆர்.சி, புத்தகங்களில் உரிமையாளர் பெயர் வேறுவேறாக இருக்கிறது. ஆனால், உரிமையாளரின் போட்டோவில் ஒரே நபர் இருக்கிறார். இது எப்படிச் சாத்தியம்? இவற்றில் இருந்து அந்த லாரிகள் சட்டவிரோதமான காரியங்களுக்குப் பயன்படுபவை என்பது தெரிகிறது. வங்கி இதுபற்றி இன்னும் வாய் திறக்காதது ஏன்?

7. கன்டெய்னர்கள் பிடிபட்டு, 18 மணி நேரம் கழித்து, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிடம் இருந்து ஒரு கடிதம் (கடித எண். 13451 / Ele-X/2016-1)  தேர்தல் ஆணையத்துக்கு வருகிறது. அதில், ‘அந்த மூன்று லாரிகளில் உள்ள பணம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமானது... அதை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் விசாகப்பட்டினம் கிளையில் இருந்து கோயம்புத்தூர் கருவூலத்துக்கு நாங்கள்தான் அனுப்பினோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கோடிக்கணக்கான ரூபாயை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்குச் சாலை வழியாக அனுப்பக் கூடாது என்பது ரிசர்வ் வங்கி விதிமுறை. ரயில்கள் மூலம், உள்ளூர் காவல் துறை அதிகாரிகளின் பாதுகாப்போடுதான் அனுப்ப வேண்டும் என்பதும் ரிசர்வ் வங்கியின் விதிமுறை. அதை ஏன் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பின்பற்றவில்லை.

8. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கடிதம் எழுதியவுடன், இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்குக் கடிதம் எழுதி, அந்தப் பணத்தை கோவை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கருவூலத்துக்கு அனுப்பச் சொல்லி உள்ளது. அந்தக் கடித எண் - 76 /EEPS/GE-2016/TN. அதன்பிறகு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம் எண்-13451/Ele-X/2016-2. இதன்பிறகு உடனடியாக மூன்று கன்டெய்னர்களும் இடம் மாற்றப்படுகின்றன. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியான பிறகும்கூட, இதுபற்றி ரிசர்வ் வங்கி எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் தேர்தல் ஆணையம் ஏன் இவ்வளவு அவசரமாகச் செயல்பட வேண்டும்?

p18c.jpg

9. கன்டெய்னர்களில் சீல் வைக்கப்பட்ட நிலையில் இருந்த பெட்டிகள் 195. அந்தப் பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த சீல், ஆக்ஸிஸ் வங்கியினுடையது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உரிமைகோரும் பணப்பெட்டிகளில் ஆக்ஸிஸ் வங்கியின் சீல் எப்படி இருக்க முடியும்?

10. இந்த விவகாரம் ஊடகங்களில் வந்த பிறகு, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா - விசாகப்பட்டினம்,  ஸ்ரீபுரம் சந்திப்பு மேலாளர், கோவை மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், பணத்தை இடம் மாற்ற, ரிசர்வ் வங்கியின் அனுமதியைக் கோரவும் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, ஸ்ரீபுரம் சந்திப்பு, விசாகப்பட்டினம் ஸ்டேப் பாங்க் ஆஃப் இந்தியா கிளை மேலாளரும், ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதி, 570 கோடி ரூபாய் பணத்தை இடம் மாற்ற அனுமதிக் கேட்டுள்ளார். பணம் முறையாகக் கொண்டு செல்லப்படுகிறது என்றால், கொண்டு செல்வதற்கு முன்பே அனுமதி கேட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல், பணத்தை அனுப்பிவிட்டு அது சிக்கலில் மாட்டிக்கொண்ட பிறகு, ஏன் அனுமதிக் கேட்க வேண்டும்? அப்படியானால், எதை மறைக்க ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமல் பணம் அனுப்பப்பட்டது?

11. அப்படி அனுமதிக் கடிதம் எழுதிய பிறகும், இதுவரை ரிசர்வ் வங்கி அதற்கு அனுமதிக் கொடுத்து எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அப்படியானால், அது சட்டவிரோதமான பணம் என்பது ஊர்ஜிதமாகிறது.

12. ரிசர்வ் வங்கி விதிமுறைகள் பின்பற்றப் படவில்லை; ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெறவில்லை; முறையான ஆவணங்கள் இல்லை; பணம் கொண்டு செல்லப்பட்ட லாரிகளும் கன்டெய்னர்களும் முறையான பதிவு பெற்றவை இல்லை; பணத்துக்கும் அவற்றை ஏற்றிவந்த லாரிகளுக்கும் முறையான ஆவணங்கள் இல்லை. இவ்வளவு சர்ச்சைகள் உள்ள பணத்துக்கு வங்கி அதிகாரிகள் உரிமை கோருகிறார்கள் என்றால், அவர்களின் நேர்மையைச் சந்தேகிக்க வேண்டி உள்ளது. அத்துடன், இந்தச் சர்ச்சைகள் இந்தப் பணம் ஹவாலா மோசடி பணம் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

p18d.jpg

இது தொடர்பாக பிரதமர்வரை புகார் கொடுக்கப்பட்டு, நாட்டின் உயர்ந்த விசாரணை அமைப்பான சி.பி.ஐ விசாரிக்கும் நிலையில்கூட, அந்த விசாரணைக்கு வங்கி அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். எனவே, இதில் ஹவாலா மோசடி மட்டுமல்ல, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் இது வழக்குக்கு உள்ளாகிறது என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த வழக்கில் மனுதாரர் டி.கே.எஸ்.இளங்கோவன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், “இந்த விவகாரத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் தலையிட்டு அவர்கள் விசாரணையைத் தொடங்கினர். அவர்கள் வாரன்ட் பிறப்பித்து விசாரணையைத் தொடங்கிய நிலையில், தேர்தல் ஆணையம் தலையிட்டுப் பணத்தைப் பத்திரமாக அனுப்பி வைத்துள்ளது. ஒரு குற்றம் நடந்தது ஊர்ஜிதமானால்தான், வருமானவரித் துறை அதிகாரிகள் வாரன்ட் பிறப்பித்து சோதனை நடத்துவார்கள். ஆக, அவர்கள் சோதனையைத் தொடங்கியதில் இருந்தே இதில் குற்றம் நடந்துள்ளது ஊர்ஜிதமாகி விட்டது. பிறகு, இதில் ஏன் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் வேலை இதுவா’’ என்று கேள்வி எழுப்பினார். அதைக் கவனமாகக் குறித்துக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்க சி.பி.ஐ-க்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

சி.பி.ஐ-யின் பதிலில் விடை தெரியுமா? அல்லது விடை தெரியாதா மர்மங்கள் நீடிக்குமா?

http://www.vikatan.com/juniorvikatan/2016-jun-22/investigation/120362-to-whom-own-570-crore-currency.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.