Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரையில் பெரும் மனித அவலங்கள்: ஐரோப்பிய ஒன்றிய மனிதாபிமான பணிகளுக்கான ஆணைக்குழு

Featured Replies

வியாழக்கிழமை, 11 சனவரி 2007, 04:15 ஈழம் (க.நித்தியா)

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பின் வாகரைப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பெரும் மனித அவலங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான பணிகளுக்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான பணிகளுக்கான ஆணைக்குழுவின் தலைவர் ஜுலியன் வில்சன் நேற்று புதன்கிழமை இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது:

வாகரைப் பகுதிக்கான போக்குவரத்து மிகக் கடினமாக உள்ளது. அங்கு உணவுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. அண்மைக் காலங்களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையினால் 20இ000 மக்கள் வாகரைப் பிரதேசத்திலிருந்து வெளியேறியுள்ள போதும் மேலும் 15,000 மக்கள் அங்கு வசித்து வருகின்றனர்.

வாகரையில் தேன்றியுள்ள நெருக்கடி அங்கு வாழும் மக்களை பெரும் துன்பங்களுக்கு உள்ளாக்கி உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமானப் பணிகளுக்கான ஆணைக்குழு இந்த மக்களுக்கான விநியோகப் பணிகளுக்கும்இ ஏனைய உதவிகளுக்கும் என நிதியை ஒதுக்கியுள்ளது.

வாகரையிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான பணிகளுக்கான ஆணைக்குழுவின் சகோதர நிறுவனங்கள் ஆற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த உதவிப் பணிகளில் அவசர தங்குமிட வசதிகள், உணவு மற்றும் உணவு அல்லாத அத்தியாவசியப் பொருட்கள், முகாம் முகாமைத்துவம், உளவியல் ஆதரவுகள், குடிநீர் வசதிகள் என்பன அடங்கும் என்றார் அவர்.

நன்றி : புதினம்

வாகரையில் உள்ள 15,000 மக்களுக்கு அவசர உதவிகள் தேவை: ஐ.நா

[வியாழக்கிழமை, 11 சனவரி 2007, 03:51 ஈழம்] [பா.பார்த்தீபன்]

வாகரையில் உள்ள 15,000 மக்களுக்கு அவசர உதவிகள் தேவை என்று சிறிலங்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானப் பணிகளுக்கான இணைப்பாளர் ஒலாரா கிளிங்டன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று புதன்கிழமை அவர் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா அரசும் விடுலைப் புலிகளும் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என நினைவுபடுத்துவதுடன் உணவும் பிற அத்தியாவசிய பொருட்களுமற்ற நிலையில் வாகரையில் உள்ள 15,000 மக்களுக்கும் உதவிகளை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் தேவை.

வாகரைப் பகுதியில் மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் மனிதாபிமான உதவி நிறுவனங்கள் அங்கு செல்ல முடியாது உள்ளது. கடந்த நவம்பர் 29 ஆம் நாளே அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யும் வாகனங்கள் அப்பகுதிக்கு சென்றன. அங்கு உணவுப்பொருட்களோ, அவசர மருத்துவ சேவைகளோ, தங்குமிட வசதிகளோ இல்லை.

அரசோ அல்லது விடுதலைப் புலிகளோ பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் செய்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 70,000 மக்களுக்கு தேவையான அடிப்டை தேவைகளுக்கு நாம் உதவி வருகிறோம். எமது தொண்டர்கள் அவசர தேவைகளுக்கு உதவும் பொருட்டு அங்கு உள்ளனர் என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=30452

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.