Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் கச்சத்தீவு வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டதா..?' - அதிர்ச்சி கிளப்பும் ஆட்சியரின் ஆவணம்

Featured Replies

எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் கச்சத்தீவு வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டதா..?' - அதிர்ச்சி கிளப்பும் ஆட்சியரின் ஆவணம்

mgrfb.jpg

ட்டமன்றத்தில் பெருத்த விவாதப் பொருளாக மாறியிருக்கிறது கச்சத்தீவு. ' அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் வழக்குத் தொடர்ந்தேன். 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது முதல்வர் கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்?' எனக் கொந்தளித்தார் முதல்வர் ஜெயலலிதா.

' மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதற்காக கச்சத்தீவை மீட்பேன்' என தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா. இதுகுறித்து சட்டசபையில் நேற்று நடந்த விவாதத்தில் தி.மு.க - அ.தி.மு.க உறுப்பினர்களிடையே பெரும் வாக்குவாதம் எழுந்தது. தி.மு.க உறுப்பினர் பொன்முடியின் கேள்விகளுக்கு அதிரடியாக  பதில் அளித்தார் முதல்வர்.

அவர் பேசும்போது, " கச்சத்தீவு தொடர்பான கேள்வியைக் கேட்பதற்கு தி.மு.க. உறுப்பினர்களுக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. 1974-ம் ஆண்டிலும், 1976-ம் ஆண்டிலும் அப்போதைய மத்திய அரசு இந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டபோது, அவர்களுடைய தலைவர், அன்றைய முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார்? அதைத் தடுப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? அதை எதிர்த்து போராட்டம் நடத்தினாரா? மத்திய அரசு மூலமாக நான் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று பேசியிருக்கிறேனே தவிர, ஒரு படையைத் திரட்டிக் கொண்டு, கச்சத் தீவை மீட்பேன் என்று பேசவில்லை.

அன்றைய தி.மு.க. முதல்வர் ஏன் மவுனம் சாதித்தார்? ஏன் அதைக் கொடுக்க அனுமதித்தார்? உச்ச நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுத்தது நான். 2008-ம் ஆண்டு,  மத்திய அரசை அணுகி எந்தப் பயனுமில்லை என்று தெரிந்த பிறகு, நான் தனிப்பட்ட முறையில்,  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது இங்கே முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. இன்று மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் காரணம் தி.மு.க.தான். அதை எத்தனை கூச்சல் போட்டாலும் மறைக்க முடியாது" எனக் கொந்தளித்திருந்தார்.

 

collectorramnad.jpg

 

தமிழக அரசியல் வரலாற்றில் 32 ஆண்டுகாலமாக கச்சத்தீவு என்ற பெயர் வலம் வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு அரசியலாக்கப்படுகிறது. அதன்பிறகு அதைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை.

" உண்மையில், 1170-ம் ஆண்டில் இலங்கை மன்னன் நிசங்க மல்லனால் ராமேஸ்வரம், ராமநாதசுவாமிக்கு சாசனமாக ஒப்படைக்கப்பட்டதுதான் கச்சத்தீவு. அந்தக் காலகட்டங்களில் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக நெடுந்தீவில் இருந்து பாலும், கச்சத்தீவில் இருந்து பூக்களும் கொண்டு வரப்பட்டதற்கான ஆதாரங்கள் இப்போதும் உள்ளது. அப்படிப் பார்த்தால் ராமநாதசுவாமிக்குச் சொந்தமான கச்சத்தீவு என்பது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. இந்து அறநிலையத்துறையின் சட்டப்படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தவறு" என்றும் சொல்கின்றனர் ராமேஸ்வரம் கோவிலின் நிர்வாகிகள் சிலர்.

" கச்சத்தீவைப் பற்றிப் பேசுவதற்கு தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளுக்குமே எந்தத் தகுதியுமில்லை. அவர்களின் அரசியலுக்கு கச்சத்தீவு இரையாகிக் கொண்டிருக்கிறது. 1925-ம் ஆண்டிலேயே மதராஸ் ராஜதானியின், மீன்வளத்துறை மூலமாக இலங்கைக்கு கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ' நமது மீனவர்களுக்கு அங்கே எந்த உரிமையும் இல்லை' என்ற ஆவணம், இப்போதும் மீன்வளத்துறை வசம் உள்ளது. இதைப் பற்றி இப்போதைய அரசுக்குத் தெரியுமா?" என அதிர வைக்கிறார் திருக்கோவில் திருமடங்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் பக்சி சிவராஜன்.

pakshi.jpgதொடந்து அவர், "  'இலங்கை அதிபரோடு ஒப்பந்தம் செய்து கொண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்படும்போது தி.மு.க ஆட்சியில் இருந்தது' என்கிறார் முதல்வர். உண்மைதான். ஆனால், இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு பிறப்பித்தது 1983-ம் ஆண்டு (மாவட்ட ஆட்சியரின் உத்தரவு எண்: RCF 23-75/83). அப்போது ஆட்சியில் இருந்தவர் எம்.ஜி.ஆர். இலங்கை அதிபருடன் பிரதமர் இந்திராகாந்தி செய்து கொண்ட ஒப்பந்தம் ஒருபக்கம் இருந்தாலும், அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வரைபடத்தையே மாற்றி அமைக்கப்பட்டது எம்.ஜிஆர் ஆட்சி காலத்தில்தான். இதுபற்றி அன்றைக்கு சட்டசபையில் யாராவது பேசினார்களா? ராமேஸ்வரத்தைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை சமூகத்து மக்கள் மீனவர்கள். இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கியதற்குப் பிறகுதான், ராமேஸ்வரம் கடலில் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதற்கு முன்பு வரையில் இந்தளவுக்கு படகுகள் இருந்ததில்லை. இப்போது பெரிய படகுகளில் மீன் பிடிக்கும் முதலாளிகளில் பெரும்பாலானோர் மீனவர்களே அல்ல" என விவரித்தவர்,

" பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் ராமநாதசுவாமிக்கு என கச்சத்தீவில் மிகப் பெரிய பூந்தோட்டம் இருந்தது. அதை அழித்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். அதன்பிறகு 1923-ம் ஆண்டில் ஓலைக்குடாவைச் சேர்ந்த ஒருவர்தான், கச்சத்தீவில் அந்தோணியார் வழிபாட்டைத் தொடங்கி வைத்தார். 1170-ம் ஆண்டு முதல் 1197-ம் ஆண்டு வரையில் ராமேஸ்வரம் கோவிலுக்கு பல சாசனங்களை எழுதி கொடுத்திருக்கிறார் இலங்கை மன்னர் நிசங்க மல்லன்.

ராமநாத சுவாமிக்கு அருகிலேயே விஸ்வநாதர் கோவிலைக் கட்டியது, கிழக்குப் பகுதியை எழுப்பியது என பல நல்ல காரியங்களை அவர்தான் செய்தார். ஏனென்றால், அப்போது ராமேஸ்வரம் பகுதி என்பது இலங்கை மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இலங்கை சிங்களவர்களும் பாண்டியர்களும் பெண் கொடுத்து பெண் எடுக்கும் அளவுக்கு சம்பந்திகளாகவும் இருந்தனர். பிற்காலத்தில், சேதுபதி மன்னராக இருந்த சண்முக ராஜேஸ்வர சேதுபதி, கச்சத்தீவை குத்தகைக்கு விட முயற்சித்தபோது, ' அந்தப் பகுதி இலங்கைக்குக் சொந்தமானது. நீங்கள் உரிமை கொண்டாட முடியாது' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது" என்றவர்,

இறுதியாக, " நமது மாநிலத்தைப் பொறுத்தவரையில்,கச்சத் தீவு என்பது அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நேரத்து ட்ரம்ப் கார்டாக மட்டுமே பயன்படுகிறது. மத்திய அரசு நினைத்தால் மட்டுமே, இலங்கை அரசுடன் நல்லுறவு அடிப்படையில் கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்கு முயற்சிக்கலாம். அதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்” என்கிறார் தீர்மானமாக.

' மத்திய அரசுடன் சுமூகமான நட்பு பாராட்டும் தமிழக அரசு, கச்சத் தீவு தொடர்பாக கொடுக்கும் அழுத்தங்கள் மட்டுமே, தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்' என்கின்றனர் நடுநிலையாளர்கள். இதுதொடர்பான ஆவணங்களை இந்து சமய அறநிலையத்துறையும் மீன்வளத்துறையும் வெளிக் கொண்டு வருவது கூடுதல் நன்மைகளை உருவாக்கும் என்கின்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்.

http://www.vikatan.com/news/india/65385-was-katchatheevu-removed-from-india-map-mgr-regime.art

  • தொடங்கியவர்

வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கினாரா எம்.ஜி.ஆர்? - நடந்ததை சொல்கிறார் முன்னாள் அமைச்சர்!

mgrleftkatch.jpgந்தியா -  இலங்கை இடையேயான ஒப்பந்தத்தின்படி, 1976 ம் ஆண்டு இலங்கை அரசுக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட விவகாரம்தான், இப்போது சட்டமன்றத்தை அனலடிக்கச் செய்துவருகிறது.

'கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு விட்டுத்தர அப்போதைய முதல்வர் கருணாநிதிதான் காரணம்' என காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த நிலையில், திமுகவை நோக்கி வீசப்பட்ட இந்த 'கச்சத்தீவு விவகாரம்' இப்போது பூமராங்காக அதிமுகவுக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது.

இலங்கை அதிபருடன் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி செய்து கொண்ட ஒப்பந்தம் ஒருபக்கம் இருந்தாலும், அந்த ஒப்பந்தத்தை அதிகாரபூர்வமாக நிறைவேற்ற வசதியாக வரைபடத்தையே மாற்றி அமைத்தது எம்.ஜிஆர் ஆட்சிக் காலத்தில்தான்' என அண்மையில் குபீர் குற்றச்சாட்டு கிளம்பியது.

“1983 ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியின்போதுதான் அன்றைய ராமாநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி  உத்தரவு பிறப்பித்தார். அதன் உத்தரவு நகல் எண்: RCF 23-75/83)” என அதிர்ச்சி கிளப்பியிருந்தார் திருக்கோவில் திருமடங்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் பக்சி சிவராஜன்.

தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து,  எம்.ஜி.ஆர் அரசில்  அமைச்சராக அங்கம் வகித்த அரங்கநாயகத்திடம் பேசினோம். கச்சத்தீவு இலங்கைக்கு தரப்படுவது தொடர்பாக, அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்திற்கு, அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரால் அனுப்பிவைக்கப்பட்டவர் அரங்கநாயகம்.

“கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட விவகாரத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு என்பது எள்ளளவும் இல்லை. இது முழுக்க முழுக்க கருணாநிதியின் நடவடிக்கை. அன்றைக்கு பல அரசியல் நெருக்கடிகளுக்குள்ளாகி இருந்தார் கருணாநிதி. அதன் காரணமாக பிரதமர் இந்திரா எதைச் சொன்னாலும் தலையாட்டும் நிலையில்தான் இருந்தார். இந்திராவை திருப்திப்படுத்துவதற்காக அவர் வளைந்துகொடுத்ததே கச்சத்தீவு நம்மை விட்டுப் போக காரணம்" என்றார் தடாலடியாக. 

aranganathan6001.jpg

அன்றைய தினம் நடந்ததென்ன என்பது குறித்தும், எம்.ஜி.ஆர் மீதான குற்றச்சாட்டு குறித்தும் அவரிடம் கேட்டோம்.


“1976 ம் ஆண்டு, ஜூன் 24 ம் தேதி கச்சத்தீவை இலங்கைக்கு அளிப்பதற்கு மத்திய அரசால் ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்கு முன்னதாக, அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க அரசு,  அதுகுறித்து விவாதிக்க 1974 ம் ஆண்டு, ஜூன் மாதம் 29 ம் தேதியன்று  அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றிற்காக நானும் எம்.ஜி.ஆரும் அப்போது திருச்சியில் இருந்தோம்.

விஷயமறிந்த எம்.ஜி.ஆர், 'கருணாநிதி என்னவோ திட்டமிடுகிறார். எதிர்க்கட்சியாக அதை நாம் முறியடிக்கவேண்டும்' என்றதோடு, எதிர்ப்பு தெரிவித்து ஒரு கடிதமும் கொடுத்தார்.

அதன்படி அதிமுக சார்பில் அக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், ம.பொ.சி மற்றும் இன்னபிற தலைவர்களும் வந்திருந்த அக்கூட்டத்தில், ஆரம்பம் முதலே கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு சாதகமான முடிவெடுப்பதுபோலவே கருணாநிதியின் நடவடிக்கை இருந்தது. காரணம், முன்னரே கச்சத்தீவு விவகாரத்தில் சாதகமான முடிவை அளிப்பதாக பிரதமர் இந்திராவுக்கு உறுதியளித்திருந்ததே. அதை அன்றைய மத்திய மந்திரி சவான், நாடாளுமன்றக் கூட்டத்திலேயே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

karunanithiindira6001.jpg

கூட்டத்தில், 'கச்சத்தீவு என்பது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம்' என்று பேசி,  அதை இலங்கைக்கு விட்டுக்கொடுப்பதற்கு அதிமுகவின் பலமான  எதிர்ப்பை பதிவு செய்தேன். 'கச்சத்தீவு எக்காரணம் கொண்டும் கைவிட்டுப்போகக்கூடாது. அதில் எந்த மாற்றம் தெரிந்தாலும் வெளிநடப்பு செய்யுங்கள்' என எம்.ஜி.ஆர் என்னிடம் முன்னரே அறிவுறுத்தியபடி, கருணாநிதியின் அந்த முடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்து, வெளியேறினேன்.

மற்ற கட்சி உறுப்பினர்களும் அதே கருத்தில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த, கருணாநிதி வேறு வழியின்றி, " சில ஷரத்துக்களுடன், கச்சத்தீவை இலங்கைக்கு அளிப்பதை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என்ற ரீதியில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார்.

katchatheevumap6001.jpg

அதிமுகவின் பலமான எதிர்ப்பினால்தான், கச்சத்தீவு விவகாரத்தில் அனைத்துக்கட்சியினரின் சம்மதத்தின்படி, மத்திய அரசுக்கு சாதகமான தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டிருந்த கருணாநிதியின் திட்டம் பலிக்காமல் போனது. அதன்பின் சட்டமன்றத்திலும் தொடர்ந்து எங்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள் ஆலடி அருணா, கோவை செழியன் ஆகியோர் கச்சத்தீவு விவகாரத்தில், அதிமுகவின் எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்துவந்தனர்.

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நடந்தவற்றை பொதுவெளியில் வராதவாறு, கருணாநிதி தனது அதிகாரத்தை  பயன்படுத்தி சாமர்த்தியமாக மறைத்துவிட்டார். இதற்கு பின் மாநில சட்டமன்றத்தில் அதிகார்பூர்வ தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையிலேயே,  தன்னிச்சையாக கச்சத்தீவை இலங்கைக்கு சொந்தமாக்கியது மத்திய அரசு.

mgr251.jpg

மத்திய அரசின் இந்த நடவடிக்கை அப்போது பெரிய அரசியல் பிரச்னையாக்கப்படவில்லை. விடுதலைப்புலிகளின் தமிழ் ஈழ போராட்டம் முன்னிலைப்படுத்தப்பட்டதால், கச்சத்தீவு விவகாரம் பின்னுக்கு சென்றுவிட்டது. இதுதான் நடந்த உண்மை.

இப்படி கச்சத்தீவு விவகாரத்தில், தமிழகத்திற்கு எதிராக எந்த ஒரு காலகட்டத்திலும் எம்.ஜி.ஆர் செயல்படவில்லை. ஒருவேளை அன்று சட்டமன்றத்தில் அப்படி அலுவல் ரீதியான ஒரு தீர்மானம் நிறைவேற்ற  இடம்கொடுத்திருந்தால், இன்று நாம் வழக்கு போட்டு நம் உரிமையை கோர சட்டப்படியான தகுதியைப் பெற்றிருக்கமுடியாது என்பதுதான் நிஜம். அதற்கு காரணம் எம்.ஜி.ஆர்தான்” என்றார்.

katchatheevu6001.jpg

எம்.ஜி.ஆர் ஆட்சியில் வரைபடத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கச்சத்தீவை நீக்கியது குறித்து கேட்டோம்.

“ அதிகாரபூர்வமாக கச்சத்தீவை ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஒப்பந்தப்படி ஒப்படைத்து விட்டபிறகு, அதை மாநில அரசு தன் வரைபடத்தில் இருந்து நீக்குவது சாதாரண ஒரு அலுவலக நடைமுறைதான் என்பது, நிர்வாக நடைமுறை அறிந்த யாருக்கும் நன்கு தெரியும்.” என முடித்துக்கொண்டார் அரங்கநாயம்.

திராவிடக் கட்சிகள், கச்சத்தீவு விவகாரத்தில் இன்னமும் லாவணி பாடிக்கொண்டிருக்காமல் சட்டப்படி  அதை மீண்டும் தமிழகத்திற்குரியதாக்க முயல்வதுதான் ஆரோக்யமான அரசியலாக இருக்கும். வாக்களித்தவர்களின் விருப்பமும் அதுதான்!

http://www.vikatan.com/news/tamilnadu/65502-katchatheevu-issuewhat-happened-during-mgr-regime.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.