Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறைவி -"இறைவி"க்குப் பதில் "மனிதி" பொருத்தமான பெயர் - அன்னா பொன்னம்பலம்

Featured Replies

இறைவி -"இறைவி"க்குப் பதில் "மனிதி" பொருத்தமான பெயர் - அன்னா பொன்னம்பலம்:-



இறைவிக்குப் பதிலாக மனிதி என்றே பெயர் வைத்திருக்கலாம். ஏனெனில் எம் சமூகத்தில் பெண்ணைத் தம்மைப் போல் விருப்பு, வெறுப்பு, ஆசைகள், உணர்ச்சிகள், இலட்சியங்கள் உடைய சக‌மனிசியாக அங்கீகரிக்கப் பின்வாங்குபவர்கள் பலர் அவள் தன் சுயமிழந்து முற்றிலும் கணவனைச் சார்ந்து குடும்பத்துக்காகத் தம்மை இழக்கும் பெண்களை இறைவிகளாக்க ஓடிவருவார்கள். அவர்களின் சிந்தனையைத் தூண்ட இப்படத்தில் வரும் பெண்கள் சக மனித உயிர்கள் என அடித்துச் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

உலகம் உனதாய் வரைவாய் மனிதி!

மனிதி வெளியே வா!

மனிதன் என்ற சொல்லுக்குள்ளே அடங்காதே பெண்ணே!

உயர‌ம் உனதே தான்!

அமர்ந்தால் உயரம் தெரியாது - நீ நிமிர்ந்தே வா பெண்ணே!

மனிதி வெளியே வா!

பாட்டு நன்றாக எழுதப்பட்டுள்ளது. அதைக் கடைசியில் போட்டதிற்குப் பதிலாக படத்தின் இடை இடையே போட்டு இறைவிகளாகச் சித்தரித்துருக்கும் ஒருவராவது முழுதாக இந்த சமூக ஒடுக்குமுறையிலிருந்து முற்றிலும் வெளியே வருவதாகக் காட்டியிருக்கலாம். இந்தப்பாட்டை எத்தனை பேர் கேட்டிருப்பார்களெனத் தெரியாது. ஏனெனில் இப்பாட்டு இறுதியில் ஒலிக்கத்தொடங்கும்போதே பலர் சினிமா அரங்கை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டனர். ஆனால் கேட்கப்  படவேண்டிய பாட்டே. மனிதி வெளியே வா என்ற இறுதியில் போட்ட பாட்டை படத்தில் இடை இடையே போட்டு படத்தின் முக்கிய மூன்று பெண் பாத்திரங்களில் இருவரையாவது வெளியில் வரச்செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

சில woMEN கதை என்று போடப்பட்டிருந்தது. நான்கு பெண்களும் அவர்களின் வாழ்க்கையில் முழுதாக ஆதிக்கம் செலுத்தும் ஆண்களைப் பற்றியதுமான கதை. ஆண்களின் கதாபாத்திரங்கள் தான் கதையை முழுதாக ஆக்கிரமித்திருக்கிறது.

முக்கியமாக‌ மூன்று பெண்கதாபாத்திரங்கள்: மலர்விழி, பொன்னி, யாழினி.

கணவனை இழந்த மலர்விழி, love and other drugs என்ற ஆங்கிலப் படத்தில் வரும் Anne Hathaway இன் கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்தியது. ஆனால் இந்தப் படத்தில் ஒரு குழப்பமான கதாப்பாத்திரமாக இருக்கிறது. தனக்கு உடலுறவு மட்டுமே வேண்டும் எனத் துணிவாகக் கூறிய பின் எதற்கு அவனைப் போகச் சொல்லி விட்டு அழவேண்டும். அவளுக்குப் பிடித்திருந்தால் ஒன்றாக வாழ்க்கை நடத்த எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லையே. ஒருவேளை ஆண்களின் பார்வையிலிருந்து எடுக்கப்பட்டதால், பெண்களால் மனரீதியாகக் காதலில்லாமல் இம்மாதிரியான உறவுகளில் எடுபட்டுச் சந்தோசமாக இருக்க மாட்டார்கள் எனக் கார்த்திக்  நினைத்தாரோ? அல்லது அப்படிக் காட்டினால் தான் மக்கள் அவளை இறைவியாகப் பார்ப்பார்கள் அல்லது கெட்டவளாகவே பார்க்கப்படுவாள் என யோசித்தாரா தெரியவில்லை. இந்தக் கதாபாத்திரம் மைக்கலின் மாமாவைச் சந்திக்கும் காட்சி வரை நன்றாகவே இருந்து பின் எதற்காகச் சிதைக்கப்பட்டதென்று விளங்கவேயில்லை.

இப்படத்தில் பிடித்த கதாபாத்திரமென்றால் பொன்னி என்பேன். கட்டுக்கோப்பாக, பெண்ணின் வாழ்வென்றால் திருமணம், கணவன், குழந்தைகள் என்ற குறுகிய வட்டம் மட்டுமே என்று பிறந்ததிலிருந்தே யாழினி சொல்வது மாதிரி template வாழ்க்கைக்கு வளர்க்கப்பட்டவள். அதையே தான் அவள் கனவு காண்கிறாள். ஒன்றுமே தெரியாது மாதிரி இருந்தாலும் எல்லாவற்றையும் புரிந்தே கணவனுடன் வாழ்கிறாள். பின் சந்தர்ப்பம் வரும் போது கணவனை மிகத் துணிச்சலாக எதிர் கொள்கிறாள். இவள் தான் கொஞ்சமாவது வெளியே வரத் துணிகிறாள் போலத்தெரிகிறது. அவள் மழையில் கடைசியில் நனைவது அதைக் காட்டத்தானோ?

யாழினி எனது சமூகத்தில் பெண்கள் படித்து நல்ல வேலைக்குப் போகிறார்கள் என்பதற்காக மட்டுமே அவர்கள் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட எல்லைக்குள் வெளியே சிந்திப்பார்கள் என நிச்சயமாகச் சொல்ல முடியாது என்பதற்கு நல்ல உதாரணம். கணவன் அவ்வளவு அட்டகாசம் செய்த பின்பும், தனிய இருக்க வசதி இருந்தும் ஏன் பெற்றோருடன் இருந்து பெற்றோர் பேச்சுக்குக் கட்டுப்படுவான்? மறுமணத்தைப் பற்றி யோசிக்கும் போது அவள் நண்பி இந்தத் திருமணத்தை விட்டு வெளியே வா - எனச்சொல்லும் போது அவளால் முடியவில்லை. ஏன்? கடைசி வரையும் மழையிலும் நனைய யோசிக்க வில்லை.

சிற்பி தனது மனைவியை சித்திரவதை எல்லாம் செய்துவிட்டு தாவரமாகிய நிலையில் இறைவி என்று விளிப்பது சகிக்கவில்லை. மைக்கல் உன்னை மட்டுமே காதலிக்கிறேன் மறக்க முடியவில்லை என மலர்விழியிடம் சொல்லி, ஆனால் அவள் வேறொருவனுடன் இருக்கிறாள் என நினைத்த அடுத்த நிமிடத்திலிருந்து தனது மனைவியிடம் உருகுவதும் சகிக்க முடியவில்லை.

ஜெகன், மற்ற இருவருடன் இருந்து குடிக்கும் போது பெண்களை இழிவாக நடத்துவது பற்றிக் கதைப்பது சிரிப்பை வரவழைத்தது. மற்ற இருவர் போலவும் பலர் கதைக்கும் போது அக்கூட்டத்தில் ஒரு ஆணாவது ஜெகனை மாதிரி அதை எதிர்த்துக் கதைத்து இதுவரை பார்த்ததில்லை.  பெண்ணியப் பார்வையுடன் சில இடங்களில் கதைப்பது போல் தெரிந்தாலும் பல தடவைகள் ஜெகன் கதைக்கும் போது benevolent sexism தல தூக்குகிறது. ஏதோ பெண்களைச் அவர்கள் நினைத்த மாதிரிச் சுதந்திரமாக வாழவிடு என்று நல்லது சொல்வது போலுள்ளது எனப் பார்த்தால் பின் ஜெகனும் பொன்னி தானே முடிவெடுத்து வேண்டாமெனச் சென்ற பின்பும் அவளுக்கு எது நல்லது என்று தனக்குத் தான் தெரியும் என்கிறான்.

கடைசியில் அருள் சொல்வது எல்லா ஆண்களும் அவர்களைப் போலத் தான் - பொறுத்து, சகித்துப் போக நாங்கள் என்ன பெண்களா எனக் கேட்பது பிடிக்கவில்லை. ஏற்கனவே சமூகம் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருக்குது. "ஆம்பிளைகளென்றால் அப்படித்தானே இருப்பினம். நீங்கள் தான் பொறுத்துப் போகவேண்டும்" என எத்தனை பேர் இன்னும் சொல்லிக்கொண்டிருக்கினம்.

இந்தப் படத்தின் செய்தியை இவ்வளவு சிக்கலான ஒரு கதைக்குள் வைத்து ஏன் சொல்ல முயற்சி செய்தினம் எனப் புரியவில்லை. இந்தப் பெண் கதாபாத்திரங்கள் சகஜமாக நாம் வாழ்க்கையில் பார்ப்பவர்கள் (மலர்விழியைத் தவிர‌). ஆனால் அது தான் சகஜம் என அதைப் பற்றி யோசிக்காமல்/ கேள்வி கேட்காமல் கடந்து போபவர்களே பலர். ஆனால் நாம் பலர் இதைச் சமூகத்தில் கேள்வி கேட்கிறோம். இவ்வாறு தத்தளிக்கும் பெண்களை எமது அன்றாட வாழ்வில் சந்திக்க நேரும் போது அவர்களுடன் கதைத்து முற்றாக இல்லாவிட்டாலும் இயலுமானவரை வெளியில் வர உதவி செய்கிறோம். இப்படிக் கேள்வி கேட்கும் பல பெண்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை என்பதே நிஜம். எத்தனை ஆண்களிடம் நான் இதைப் பற்றி கதைத்திருக்கிறேன். ஆனால் அதை ஒரு நக்கலாக/ வீண் விவாதமாகக் கடந்து போவோரே பலர். அதனால் தான் இந்தப் படம் போல், இச்சமூகத்தில் இந்த மாதிரிக் கோணத்தில் யாரும் கேட்டதில்லை - இது பலரை யோசிக்க வைக்கும் என்று சிலர் சொன்ன போது விரக்தியாக இருந்தது. பெண்கள் சிலர் கதைக்கும் போது காது கொடுத்துக் கேட்க நினைக்காதவர்கள் ஒரு ஆண் 13 மில்லியன் ரூபாயில் படம் எடுத்து mansplain பன்ணும் போது தான் பெண் என்பவள் பெண்ணுறுப்பையும் கருப்பையையும் தாண்டி ஒரு சக மனித உயிர் என்பது உங்களுக்கு விளங்குதென்றால், அப்படியாவது சிந்தியுங்கள் என்பதைத் தாண்டி வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

இதன் பிறகாவது இந்த விடயங்கள் முக்கியம் - இவற்றை கதைக்க/விவாதிக்க வேண்டும் - நாம் உணர்ந்து எமது வழக்கங்களை, நம்பிக்கைகளை மாற்ற வேண்டும் எனத் தோன்றினால், வாருங்கள் கதைக்கலாம்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133343/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.