Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய போக்குவரத்து விதிகளை அமுல்படுத்த போதியளவு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இல்லையென தெரிவிப்பு

Featured Replies

நிட்டம்புவ மற்றும் ஹிக்கடுவ பிரதேசங்களில் தொடர்சியாக இடம்பெற்ற இரு பஸ் குண்டு வெடிப்புகளையடுத்து, அரசாங்கத்தால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் பாதுகாப்புடன் கூடிய புதிய பல போக்குவரத்து விதி முறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்கக் கூடிய அளவில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த உத்தியோகத்தர்கள் இல்லையென விசனம் தெரிவிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து அமைச்சு ஏ.எச்.எம்.பௌஸியின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் பஸ், ரயில் போக்குவரத்துக்களின் போது பயணிகளின் பாதுகாப்பு கருதி சில புதிய விதிமுறைகளை அமுல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இதன் போது, பெரிய பொதிகளுடன் வரும் பயணிகளை பயணத்தின் இடைநடுவில் பஸ்ஸில் ஏற்றுவதில்லை. பஸ் பயணம் ஆரம்பிக்கும் முன்னர் சாரதியும், நடத்துனரும், நேர கண்காணிப்பாளரும் அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், ரயில் பயண ஆரம்பத்தின் போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை ஏற்க வேண்டுமெனவும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

அரசாங்கம், ரயில் மற்றும் பஸ் போக்குவரத்துகளுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து மேற்கொண்ட தீர்மானங்கள் குறித்து சகல பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து நிலையங்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு, அதன்படி பணிகளை மேற்கொள்ளுமாறு சுட்டிக்காட்டப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பௌசி தெரிவித்தார்.

இதேநேரம், கொழும்பு மத்திய பஸ் தரிப்பிட முகாமையாளர் எம்.டபிள்யு.சி.தர்மவர்தன இது தொடர்பாக கருத்துக் கூறுகையில்;

சகல ஊழியர்களையும் பணிக்கு சமுகமளிக்குமாறு அழைப்பு விடுத்து, புதிய விதி முறைகள் குறித்து, அறிவுறுத்தப்பட்டன. பயணிகள் ஏற்றப்பட முன்னர் பஸ் முற்று முழுதாக சோதனைக்கு உட்படுத்தப் படுகிறது. சகல பயணிகளையும் சோதனைக்குட்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியப்படாத விடயம். சந்தேகத்துக்கிடமானவர்களே சோதனைக்கு உட்படுத்தப் படுவார்கள்.

பஸ்ஸில் ஏறுபவர்கள் குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்கும்படி சாரதியும், நடத்துனரும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அதை பயணிகளுக்கும் எடுத்துரைக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளோம்.

இதேநேரம், பாதுகாப்பு திருப்தியாகவுள்ளதென நடத்துனர் கையொப்பமிட்டதன் பின்னரே பஸ் பயணத்தை ஆரம்பிக்கும் என்றார்.

கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடத்திற்கு வந்த அனைத்து பஸ்களும் சோதனையின் பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்பட்டன. இருப்பினும், பயணிகள் வரும் அளவிற்கு ஈடுகொடுக்கக் கூடியளவிற்கு பாதுகாப்பு ஊழியர்கள் இல்லையென அதிகாரிகள் விசனம் தெரிவித்தனர்.

கொழும்பு தனியார் பஸ் தரிப்பிடங்களை பொறுத்த வரையில் உட்பிரவேசிக்கும் போது எந்த சோதனை நடவடிக்கைகளுமில்லை. அத்துடன், பயணிகளை சோதனை செய்யப் போவதாக சிரமம் கொடுத்தால், அவர்கள் தங்களின் மீது அதிருப்தி கொள்ளலாமென தனியார் பஸ் நடத்துனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதனால், தங்களுக்கே நட்டத்தை ஈட்ட நேரிடுமெனவும் நடத்துனர்கள் கூறியுள்ளனர்.

இதேநேரம், சந்தேகத்துக்கிடமான பொருளோ அல்லது நபர்களோ இருந்தால், தாங்கள் கட்டாயம் `எமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள வகையில் செயற்படுவோமென'வும் அவர்கள் தெரிவித்தனர்.

அனைத்து பயணிகளை சோதனையிடுவது நடைமுறை சாத்தியமற்ற விடயமெனவும், இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கண்டால் இவ்வாறு எந்த சிக்கலும் வராதெனவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தலைவர் கெமுனு விஜேரத்தின தெரிவித்தார்.

அத்துடன், புதிய விதிமுறைகளுக்கமைய பெரிய பொதிகளுடன் இடைநடுவில் ஏற நின்ற பயணிகள் பலரை பஸ்ஸில் ஏற்றாமல் விட்டுச் சென்ற பல சம்பவங்களும் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேநேரம், இவ்வாறான பாதுகாப்பு நடைமுறைகள் தங்களுக்கு நன்மையெனவே பயணிகள் தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும், எவரும் பஸ்ஸில் தமிழில் பேசும் பட்சத்தில் சாரதிகள் சந்தேகப்பட்டு வேண்டுமென்றே சோதனைச் சாவடிகளில் பஸ்ஸை நிறுத்தி விடும் சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் கொழும்பு பஸ் தரிப்பிடங்களில் நின்ற சில தமிழ், முஸ்லிம் பயணிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, ரயில் பயணங்களின் போதும் வழமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை விட செயற்பாடுகள் தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் சேவை திணைக்கள தலைவர் பேமசிறி தெரிவித்தார்.

சந்தேகத்துக்கிடமானவர்கள் சோதனைக்குட்படுத்தப் படுவதுடன் பொதிகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப் படுவதாகவும் கூறிய அவர், ரயில்கள் பயணத்தை ஆரம்பிக்கும் முன்னர் பூரணமாக சோதனை செய்யப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னரே பயணம் ஆரம்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ரயில்களில் பொதிகளை ஏற்றும் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப் பட்டுள்ளதுடன், இடை நடுவிலுள்ள நிலையங்களுக்கு பயணிகள் கொண்டு வரும் பொதிகளும் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவதாகவும் பேமசிறி கூறினார்.

கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடத்திலும், தனியார் பஸ் தரிப்பிடங்களிலும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கோட்டை பிரதான ரயில் நிலையத்தில் பொலிஸாரும், படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடம் காலை நேரத்தில் மட்டும் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை செய்யப்படுவதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://www.thinakkural.com/news/2007/1/11/...s_page18973.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.