Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பலத்துக்கு வந்தது றிசாட்டின் சதி!

Featured Replies

அம்பலத்துக்கு வந்தது றிசாட்டின் சதி!

பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணித் தெரிவில் இடம்பெற்ற சதி, அது எவ்வாறு திட்டம் தீட்டப்பட்டது? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இவைபற்றி வடக்கின் முதலமைச்சர் விபரிக்கையில்,

கடந்த திங்கட் கிழமை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் மாகாண முதலமைச்சர்களும் கலந்துகொள்ளும் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெற்றது. கூட்டத்திற்குச் சென்றபோதுதான் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதில் அங்கே ஒரு சதி நடைபெற்றது தெரிய வந்தது.

அந்தக் கூட்டத்தில் கிராமிய பொருளாதார அமைச்சர் ஹரின், வடக்கு மக்களால் பொருளாதார மையத்திதை எங்கு நிறுவலாம் என்ற உறுதியான நிலைப்பாடு இல்லாமையால் அதனை மதவாச்சிக்கு மாற்றவேண்டும் என நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் என்ற தொனிப்பொருளில் தெரிவித்திருந்தார். அதற்கு அமைச்சர் றிசாட் பதியுதீனும் ஆமோதித்திருந்தார்.

நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வேன் என அவர் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவுகாலமும் வடக்கு மாகாணத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படும் எனக் கூறிவந்த அமைச்சர் அன்று தனது உள்ளக்கிடக்கையைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

உடனே நான் எழுந்து இது தொடர்பாக விளக்கமளித்தேன், நீங்கள் பொருளாதார மையம் அமைப்பது தொடர்பாக எமக்குத் தெரிவித்ததும், ஐந்து இடங்களைத் தெரிவு செய்து அவற்றில் எது சிறந்தது என நிபுணர் குழுவைக்கொண்டு ஆராய்ச்சி நடாத்தியிருந்தேன். அதில் தாண்டிக்குளத்துடன் ஏனைய மூன்று இடங்களையும் தவிர்த்து மற்றைய இடங்களுக்கு அனுமதியளித்தனர்.

தாண்டிக்குளத்தில் அமைத்தால் எமது விவசாயக் கல்லூரி மற்றும் விவசாயப் பண்ணையும் பாதிக்கபடும் எனவும் வேறு பல காரணங்களையும் நிபுணர் குழு தெரிவித்தது. இதனையடுத்து நான் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்குமாறு தெரிவித்திருந்தேன்.

இந்நிலையில், நான் கலந்துகொள்ளாத அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தாண்டிக்குளத்தில்தான் பொருளாதார மத்திய நிலையம் நிறுவப்படவேண்டுமெனக் கூறி முடிவெடுக்கவைத்துள்ளார். இந்தப் பிரச்சனையைத் தொடக்கிவிட்டவரே அவர்தான்.

இது பிரச்சனையானவுடன், பொருளாதார மத்திய நிலையத்தை இழக்கக்கூடாது என்ற நோக்கத்தில் நான் நேரில் சென்று ஹரினைச் சந்தித்தேன். அவர் தாண்டிக்குளமும், ஓமந்தையும் தூரமாகப் போய்விட்டன. நகரத்தில் ஒரு காணியைத் தருமாறு கேட்டார். இது வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் ஆகவே வடக்கு நோக்கி அமைதலே சிறந்தது என எண்ணி மாங்குளத்தைத் தெரிவுசெய்தேன். அப்படியில்லையென்றால் ஓமந்தையே சிறந்தது எனக் கூறிப் பார்த்தேன்.

அமைச்சர் விடாப்பிடியாக நகரத்தினுள் இடம் தாருங்கள் என நின்றார். எனவே ஒரு வாரகாலத்துக்குள் அவர் கேட்டதற்கிணங்க ஏ-9 வீதியில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குப் பின்புறமாக அமைந்துள்ள மதகு வைத்த குளப் பிரதேசத்தில் 5 ஏக்கர் காணியை அடையாளங் காட்டினேன். இதற்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் அமைச்சராக இருந்த காலத்தில் அந்தக் காணி நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு விடப்பட்டது எனத் தெரிவித்தார்.

நான் விசாரித்துப் பார்த்து அப்படியல்ல, குத்தகைக்கு எடுப்பதாக இருந்த நிறுவனம் கூறப்பட்ட பூர்வாங்க நடவடிக்கையில் இறங்காமையால் இரண்டு வருடங்கள் சென்ற நிலையில் காணியைத் திரும்பப் பெறுவதில் எந்தப் பிரச்சனையுமில்லை என்பதை அவருக்கு எடுத்துரைத்தேன். இது பற்றி காணி ஆணையாளரின் கடிதமும் கையளிக்கப்பட்டது. அப்படியிருந்தும் அன்று காலை அமைச்சர் கூட்டத்திற்கு முன்னர் அவர் என்னைச் சந்தித்து அவ்விடம் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு நான் எதந்தவித குத்தகையும் கைச்சாத்திடப்படவில்லை என்று தெரிவித்தேன். அதை அவர் ஏற்கவில்லை. பின்னர் கூட்டத்தில் அவரின் கூற்றின் போது பதில் அளிக்கையில் எம்மைப் பயப்படுத்திக் காரியம் சாதிக்கப் பார்க்கின்றார் அமைச்சர் என்று கூறி வடமாகாணத்திற்கு எப்படி என்றாலும் பொருளாதார மையத்தைத் தரவேண்டும் என்று கூறி; நிபுணர்கள் கூடாது என்று கூறியபோதிலும் கட்டாயத்தின் பேரில் வேண்டுமானால் தாண்டிக்குளத்தில் அமையுங்கள் என்றேன். முழு அமைச்சர் குழாமிற்குங் கேட்கும் படியாக பொருளாதார மையம் வடமாகாணத்திற்கு அவசியம் என்பதை எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றேன்.

கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அதனை மதவாச்சிக்குக் கொண்டுசெல்லவேண்டும் எனக் கூறியபோதும் அமைச்சர் றிசாட் அதனை ஆமோதித்தார். அத்துடன் மதவாச்சிக்குக் கொண்டு செல்லும் ஹரிசனை விமர்சிக்காமல் தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க முதலமைச்சர் இணங்கியுள்ளார் என அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குக் கூறியுள்ளார். தாண்டிக்குளத்தில் அமைக்கவே தீர்மானம் எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார். இதற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேன சிரித்துக்கொண்டு இல்லை, பிரதமருடன் கதைத்து ஒரு சுமூகமான தீர்வுக்கு வாருங்கள் எனத் தெரிவித்தார்.

அமைச்சர் றிசாட்டுக்கு தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்தியநிலையம் அமைப்பதால் எமக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள் பற்றிப் பெரிதாகத் தெரியவில்லை. விவசாய நிலம், விவசாயக் கல்லூரி, பண்ணை போற்றவற்றுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள் கூடப் பெரிதாகப் படவில்லை. அத்துடன் இப்படி வடக்கு மாகாணத்துக்கென கொண்டுவரப்படும் எத்தனையோ வேலைத்திட்டங்களைச் சூறையாட திரைமறைவில் பல சூழ்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=31538

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.