Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சுவாதி வழக்கில் கைதானவரைப் பற்றி என்ன சொல்வது?' -கமிஷனர் பதில்

Featured Replies

'சுவாதி வழக்கில் கைதானவரைப் பற்றி என்ன சொல்வது?' -கமிஷனர் பதில்

swathifb.jpg



மென்பொறியாளர் சுவாதியை, ராம்குமார் சில நாட்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார். அவரிடம் பழக முடியாததால் கொலை செய்துள்ளார் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்தது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அப்போது, அவர் கூறுகையில், "கடந்த மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் விசாரித்தனர். அங்கிருந்து எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுவாதி கொலை தொடர்பாக பலகட்ட புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டது. சுவாதியின் குடும்பத்தினர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். வெளிநாடுகளில் இருந்தும்  எங்களுக்கு தகவல்கள் வந்தன.

rajendran.jpg



அந்த தகவல்களின் அடிப்படையில் நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற இன்ஜினீயரை கைது செய்துள்ளோம். காவல்துறையினர் அவரை கைது செய்ய முயன்றபோது ராம்குமார் தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலையில் ராம்குமாருக்கு யாரும் உடந்தையாக செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரின் படத்தை இப்போது வெளியிட முடியாது. சுவாதியை ராம்குமார் சில நாட்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார். அவரிடம் பழக முடியாததால் கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது" என்றார்.

ராம்குமாரை கைது செய்தது எப்படி, குற்றவாளியை நெருங்கியது எப்படி உள்ளிட்ட கேள்விகளுக்கு காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், வழக்கு விசாரணையில் இருப்பதால் இது தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது என்று பதில் அளித்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/65759-commissioner-states-reason-for-swathi-murder.art

  • தொடங்கியவர்

ஸ்வாதியை பல நாட்களாக பின்தொடர்ந்த கொலையாளி: சென்னை நகர காவல்துறை ஆணையர் தகவல்

 

சென்னையில் ரயில் நிலையம் ஒன்றில் பலர் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்ட ஸ்வாதி என்ற 24 வயது மென் பொறியாளரை, தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் நபர் நீண்ட நாட்களாக பின்தொடர்ந்து சென்றதாக சென்னை நகரக் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

 

160702085128_rajendran_640x360_bbc_nocre

 சென்னை நகரக் காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன்

 

கடந்த மாதம் 24-ஆம் தேதி காலை ஆறரை மணியளவில், சென்னை நகரின் மையப் பகுதியில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பலரது முன்னிலையில் ஸ்வாதி வெட்டிக்கொல்லப்பட்டார்.

முதலில் ரயில்வே காவல்துறை விசாரித்த இந்த வழக்கு, மூன்று நாட்களுக்குப் பிறகு சென்னை நகரக் காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

கொலை நடந்த ரயில் நிலையத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் ஏதும் இல்லாத நிலையில், அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான சந்தேக நபரின் படத்தை காவல்துறையினர் வெளியிட்டனர்.

மேலும் ஸ்வாதி பணிபுரிந்த அலுவலகம், அவரது சக ஊழியர்கள், நண்பர்கள் எனப் பலரிடம் காவல்துறை விசாரணை செய்துவந்தது.

ஸ்வாதியின் வீடு அமைந்திருந்த சூளை மேடு பகுதியில் தங்கும் விடுதிகள் அதிகம் என்பதால் அனைத்து விடுதிகளிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சூளைமேடு பகுதியில் உள்ள ஏ.எஸ். மேன்ஷன் என்ற தங்கும் விடுதியில் தங்கியிருந்தவர்கள் பற்றிய பதிவில் இருந்த ராம்குமார் என்பவரின் படமும் சந்தேக நபரின் படமும் ஒத்துப் போனதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

ராம்குமார் விடுதியில் இல்லாத நிலையில், அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டி. மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு திருநெல்வேலி மாவட்டக் காவல்துறையினர் அனுப்பப்பட்டதாகவும், அவரைப் பிடிக்க முயன்றபோது கையில் வைத்திருந்த ஆயுதத்தால் கழுத்தில் காயம் ஏற்படுத்திக்கொண்டதாகவும் காவல்துறை கூறியிருக்கிறது.

அதன் பிறகு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகரக் காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன், இந்தக் கொலை விவகாரத்தில் ராம்குமார் என்ற ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருப்பதாக கருதப்படுவதாகவும் கூட்டாளி யாரும் இல்லையென்றும் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் உள்ள ஜஸ்டின் பொறியியல் கல்லூரியில் மெக்கானிகல் பொறியியல் படிப்பை முடித்திருக்கும் ராம்குமார், 3 மாதங்களுக்கு முன்பு வேலைதேடி சென்னைக்கு வந்தது சூளைமேடு பகுதியில் தங்கியதாகவும் காவல்துறை கூறுகிறது.

தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் இந்த வாலிபர் ஸ்வாதியுடன் பழகவிரும்பி, அதற்கு ஸ்வாதி மறுத்துவிட்ட நிலையிலேயே அந்த வாலிபர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக ஆணையர் டி.கே. ராஜேந்திரன் தெரிவித்தார்.

புலனாய்வு முடியும்வரை வேறு தகவல்களை வெளியிட முடியாது என்றும் டி.கே. ராஜேந்திரன் கூறினார்.

பட்டப்பகலில் ஸ்வாதி கொலைசெய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒரு வாரத்திற்குப் பிறகு கொலையாளி என சந்தேகிக்கப்படும் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

http://www.bbc.com/tamil/india/2016/07/160702_swati_murder

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.