Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா கடற்படையில் மகனை சேர்த்து மகிந்த ஆடும் நாடகம்.

Featured Replies

சிறிலங்கா கடற்படையில் மகனை சேர்த்து மகிந்த ஆடும் நாடகம்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் 2 ஆவது மகன் ஜோசித ராஜபக்ச அண்மையில் கடற்படையில் இணைந்ததும், திருமலை கடற்படைத்தளத்திற்கு திடீரெனச் சென்ற மகிந்தவை அவர் மரியாதை செலுத்தி வரவேற்றதையும் தென்பகுதி சிங்கள, ஆங்கில ஊடகங்கள் படங்களுடன் பெரிய தலைப்பு செய்திகளாக வெளியிட்டிருந்தது.

அந்த ஊடகங்களின் பார்வையில் நாட்டிற்காக மகிந்த தானம் செய்தது போலவும் தியாகம் செய்தது போலவும் எழுதப்பட்டிருந்தன. ஆனால் ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்ட விடயம் ஒன்று இரகசியமாக அரங்கேறியுள்ளது.

கடற்படையில் சேர்ந்து பயிற்சி பெற்ற மகிந்தவின் மகன் இருவாரங்கள் பெற்ற பயிற்சியுடன் பிரித்தானியாவுக்கு புலமைப்பரிசில் பெற்று இருவருட பயிற்சிக்காக சென்றுள்ளார். மிகவும் புகழ் வாய்ந்த பிரித்தானியாவின் 'டோர்மௌத்' கடற்படைத்தளத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பயிற்சியை ஆரம்பித்த 24 பேர் கொண்ட அணியில் மகிந்தவின் மகனும் ஒருவர் ஆவார்.

பொதுவாக கடற்படையில் இணையும் இளம் அதிகாரிகள் 3 வருடங்கள் அடிப்படைப் பயிற்சியை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஒரு ஆண்டு பயிற்சியின் பின் அவருக்கு 'மிட்மன்சிப்' நிலை வழங்கப்படும்.

இரண்டு ஆண்டு பயிற்சியின் பின் தற்காலிக சப் லெப்டினன்ட் நிலை வழங்கப்படும். மூன்று ஆண்டுகளும் பயிற்சியை முடித்த பின்னரே முழுமையான இளநிலை அதிகாரியாக முடியும். இது தவிர பிரித்தானியாவின் 'டோர்மௌத்' கடற்படைத்தளத்தில் பயிற்சிக்காக புலமைப் பரிசில்களில் அனுப்பப்படுபவர்கள் முழுமையான பயிற்சியை நிறைவு செய்திருக்க வேண்டும் என்பதுடன் பல சுற்று நேர்முகத் தேர்வுகளிலும் தோற்றியிருக்க வேண்டும்.

ஆனால் மகிந்தவின் மகன் விடயத்தில் எந்த நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்பதுடன் இருவார பயிற்சிகளுடன் புலமைப்பரிசில் பெற்று கடற்படை அதிகாரி பிரித்தானியா சென்றது இது தான் முதல் தடவை என தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படைப் பயிற்சியை முடித்த ஜோசித வெற்றிலைக்கேணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுடன் மோதுவார் என கனவுகண்ட அப்பாவிச் சிங்கள மக்களின் கனவு கனவாகவே போய்விட்டது.

மகிந்தவின் மூத்த மகனும் பிரித்தானிய பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டக்கல்வி பயின்று வருவது இங்கு குறிப்பிடத்தக்கது

-Puthinam-

ஏழை சிங்களச் சிப்பாய்கள் யுத்தகளத்தில் இறக்க அரசியல்வாதிகளின் பிள்ளைகள் சொகுசு வாழ்க்கை வாழ வெளிநாடு செல்லட்டும். சிங்களவர்களுக்கு இது புரிந்தால் சரி. புரியுமா?

ஈழத்திலிருந்து

ஜானா

இதனை நண்பர் ஒருவர் ஆங்கிலத்தில் இணைத்திருந்தார் அதில நல்லா புட்டு புட்டு வச்சிருகிறாங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=17764 இந்த இணைப்பில் அது உள்ளது புதினம் அதனை தழுவி எழுதியிருக்கு என நம்புகிறேன்

இதனை சாதாரண சிங்களவருக்கும் அம்பலப்படுத்த வேண்டிய கடமை சிங்கள ஊடகங்களுக்கு உண்டு இனவாதத்தை கக்கும் அவை இதனை செய்யுமா????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.