Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு: சுவாதியின் தந்தையும், கடைக்காரரும் குற்றவாளியை அடையாளம் காட்டினர்

Featured Replies

புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு: சுவாதியின் தந்தையும், கடைக்காரரும் குற்றவாளியை அடையாளம் காட்டினர்

 
 
ராம்குமாரின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து.
ராம்குமாரின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து.

சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நடந்தது

சுவாதி கொலைக் குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்கான அணிவகுப்பு சென்னை புழல் சிறையில் நேற்று நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்டது. சுவாதியின் தந்தையும், கொலையை நேரில் பார்த்த சாட்சி யான நுங்கம்பாக்கம் ரயில் நிலைய கடைக்காரரும் குற்றவாளியை அடையாளம் காட்டினர்.

அடையாள அணிவகுப்புக்கு ராம்குமார் முழு ஒத்துழைப்பு அளித்ததாக கூறிய நீதிபதி, சிறையில் அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அடையாள அணிவகுப்பு குறித்த விசாரணை அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பொறியாளர் சுவாதி (24) கடந்த மாதம் 24-ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். கண்காணிப்பு கேமரா காட்சி களின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை யினர், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அடுத்த டி.மீனாட்சி புரத்தை சேர்ந்த ராம்குமாரை (24) கடந்த 1-ம் தேதி நள்ளிரவு கைது செய்தனர். அப்போது, பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற ராம்கு மாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து, கடந்த 5-ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், அவர் தரப்பு வழக்கறிஞர்கள் சிலர் ராம்குமார் உண்மையான குற்றவாளி இல்லை என்று கூறினர்.

நீதிபதி நியமனம்

இந்நிலையில், சாட்சிகளைக் கொண்டு குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்காக புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்த போலீஸார் மனு செய்தனர். அடையாள அணிவகுப்பு நடத்த சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சங்கர் நியமிக்கப்பட்டார். அவர் புழல் சிறைக்கு நேற்று காலை 10.30 மணிக்கு வந்தார்.

சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தில் கடை வைத்திருக்கும் சிவக்குமார் ஆகியோர் சுவாதி கொலையில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் காரில் சிறைக்கு வந்தனர். நீதிபதி உட்பட அனைவரையும் சிறை கண்காணிப்பாளர் அன்பழகன் சிறைக்குள் அழைத்துச் சென்றார்.

ராம்குமார் போல பலர்

புழல் சிறையில் காலை 10.45 மணி அளவில் நீதிபதி சங்கர் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு தொடங்கியது. ராம்குமாருடன், அவரைப் போலவே உருவம், நிறம், உயரம், எடை, ஆடை அணிந்த நபர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். சுவாதியின் பின்னால் தொடர்ந்து சுற்றியது யார் என்று அடையாளம் காட்டும்படி அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணனிடம் கூறப்பட்டது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடை நடத்தும் சிவக்குமார், கொலையை நேரில் பார்த்த சாட்சி என்பதால், கொலை யாளியை அடையாளம் காட்டு மாறு அவரிடம் கூறப்பட்டது. இதையடுத்து இருவரும் குற்றவா ளியை அடையாளம் காட்டினர்.

விரைவில் விசாரணை அறிக்கை

அடையாள அணிவகுப்பை முடித்துவிட்டு சிறையில் இருந்து நீதிபதி சங்கர் பகல் 12.45 மணி அளவில் வெளியே வந்தார். அங்கு காத்திருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, ‘‘இந்த அடையாள அணிவகுப்பு, முறைப்படி நடத்துவதுதான். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பல வழக்குகளில் இதுதொடர்பாக வழிகாட்டுதல்கள் அளித்துள்ளன. அதன்படி அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

அடையாள அணிவகுப்புக்கு ராம்குமார் முழு ஒத்துழைப்பு அளித்தார். சிறையில் அவர் நலமாக இருக்கிறார். அடை யாள அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களின் விவரம், விசாரணை விவரங்களை வெளியிட முடியாது. விசாரணை அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

‘சுவாதி யார் என்றே தெரியாது’: ராம்குமார்

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் மார்க்ஸ் ரவீந்திரன், மனோகரன், மரிய ஜான்சன் உட்பட 8 பேர் நேற்று மாலை சந்தித்துப் பேசினர். அவர்களின் சந்திப்பை போலீஸார் கண்காணித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் கூறியதாவது:

புழல் சிறைக்கு பிற்பகல் 3.30 மணிக்கு சென்றோம். போலீஸார் ராம்குமாரை மாலை 5 மணிக்கு அழைத்து வந்தனர். மாலை 5.30 மணி வரை ராம்குமாருடன் பேசினோம். அப்போது, ‘எனக்கும் இந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சுவாதியுடன் நான் பழகவில்லை. சுவாதி யார் என்றே எனக்கு தெரியாது’ என ராம்குமார் தெரிவித்தார்.

மேலும், ‘வீட்டின் இருட்டு அறையில் இருந்தபோது என்னை சிலர் பிடித்தனர். என்னுடைய கழுத்தை அறுத்தனர். கழுத்தை அறுத்த நபரின் முகத்தை பார்க்க முடியவில்லை. அம்மா, அப்பாவை பார்க்க வேண்டும். பேசமுடியாத நிலையில் இருந்தபோது, என்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கிவிட்டனர். கையெழுத்தும் வாங்கினார்கள்’ என்றும் ராம்குமார் தெரிவித்தார்.

ராம்குமார் இன்னும் சோர்வாகத்தான் காணப் படுகிறார். அவரால் சரியாக பேசக்கூட முடியவில்லை. அவரது கழுத்துப் பகுதியில் போடப்பட்ட 18 தையல்கள் பிரிக்கப்படவில்லை. ராம்குமார் நிரபராதி. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் நிறைய உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/புழல்-சிறையில்-அடையாள-அணிவகுப்பு-சுவாதியின்-தந்தையும்-கடைக்காரரும்-குற்றவாளியை-அடையாளம்-காட்டினர்/article8842441.ece?homepage=true

  • தொடங்கியவர்

'என் மகளை ஏன் கொன்றாய்?' அடையாள அணிவகுப்பில் கதறிய சுவாதியின் தந்தை

சென்னை:இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று நடந்த குற்றவாளி அடையாள அணிவகுப்பில் சுவாதியின் தந்தை 'என் மகளை ஏன் கொலை செய்தாய்' என ராம்குமாரிடம் கேட்டு கதறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

rams.jpg

 

இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில்  குற்றவாளி அடையாள அணிவகுப்பு புழல் சிறையில் நேற்று நடந்தது. நீதிபதி ஆர். சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த அடையாள அணி வகுப்பில்  சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடை வைத்திருக்கும் சிவகுமார் உள்ளிட்டோர் ராம்குமாரை அடையாளம் காணும் நபர்களாக பங்கேற்றனர்.

அணிவகுப்பில் அடையாளம் காட்ட வந்தவர்கள் முன்னிலையில் 10 பேர் நிறுத்தப்பட்டனர். ராம்குமாரை போலவே முகத்தோற்றம் கொண்ட 35 பேரில் இருந்து 10 பேரை நீதிபதி சங்கர் தேர்வு செய்து அடையாள அணிவகுப்பில் பங்கேற்க வைத்தார். ராம்குமாரை அவரது விருப்பம்போல 10 பேர் கொண்ட வரிசையில் எந்த இடத்தில் நிற்கவும் அனுமதி அளித்தார் நீதிபதி.  ராம்குமாரின் கழுத்தில் பிளேடால்  வெட்டப்பட்டு, தையல் போட்ட அடையாளம் இருப்பது அனைவருக்குமே தெரியுமென்பதால், அடையாள அணிவகுப்பில் பங்கேற்ற அனைவரின் கழுத்திலும் பிளாஸ்திரி போடப்பட்டு ஒரே மாதிரியாக காட்சியளிக்குமாறு செய்யப்பட்டது

ராம்குமாரை அடையாளம் காட்ட மொத்தம் 3 முறை அடையாள அணி வகுப்பு நடத்தப்பட்டது. முதல் ரவுண்டில்  சுவாதியின் தந்தை, ராம்குமாரை சரியாக அடையாளம் காட்ட முடியாமல் குழம்பியதாகத் தெரிகிறது. எனினும் மிகுந்த யோசனைக்குப்பின் இவர்தான் என்று அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது. இரண்டாவது ரவுண்டில் அனைவருமே சிவப்பு சட்டை அணிந்திருந்தனர். இந்த ரவுண்டிலும் சுவாதியின் தந்தையும், சிவகுமாரும் ராம்குமாரை எளிதாக அடையாளம் காட்டியுள்ளனர்.

முதல் இரு ரவுண்டுகளிலும் ராம்குமாரை அடையாளம் காட்டினாலும் ராம்குமாரிடம் சுவாதியின் தந்தை எதையும் பேசவில்லை. ஆனால் மூன்றாவது ரவுண்டில் ராம்குமாரை பார்த்ததும் சுவாதியின் தந்தையால் தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. உணர்ச்சிவசப்பட்டவராய், '' என் மகளை ஏன் கொலை செய்தாய்' என திரும்ப திரும்பக் கேட்டு என்று கதறியுள்ளார். “உன்னால்தானே எனது மகள் கொல்லப்பட்டாள் இப்போது நானும் உன்னால்தான் சிறைக்குள்ளேயே வந்துள்ளேன் ''எனக் கூறி கண்ணீர் விட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது அருகிலிருந்தவர்கள் அவரைத் தேற்றி அழைத்துவந்தனர் என்கிறார்கள்.

இந்த 3 ரவுண்டு அடையாள அணிவகுப்பிலுமே, சிவகுமார்  எந்த சந்தேகமும் இல்லாமல் ராம்குமாரை சரியாக அடையாளம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/66105-why-did-you-do-this-to-my-swathi-father.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.