Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காற்பந்து வரலாற்றில் புதியதொரு அத்தியாயமாக முதலாவது ப்ரீமியர் புட்ஸால் போட்டிகள்

Featured Replies

காற்பந்து வரலாற்றில் புதியதொரு அத்தியாயமாக முதலாவது ப்ரீமியர் புட்ஸால் போட்டிகள் 

 

figo

காற்பந்து வரலாற்றில் புதியதொரு அத்தியாயமாக முதலாவது ப்ரீமியர் புட்ஸால் போட்டிகள். 

காற்பந்து வரலாற்றில் புதியதொரு அத்தியாயமாக முதலாவது ப்ரீமியர் புட்ஸால் போட்டிகள் இந்தியாவில் ஆரம்பமாகியது. 

1930 ஆம் ஆண்டு உருகுவேஇல் புட்ஸால் காற்பந்து போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. காற்பந்து விளையாட்டை வெளிப்புற விளையாட்டாக மட்டும் விளையாடி வந்த உலகிற்கு காற்பந்தை உள்ளக விளையாட்டாகவும் அறிமுகப்படுத்தியது புட்ஸால் வகைப் போட்டிகள்.

புட்ஸால் போட்டிகள் பொதுவாக காற்பந்து விளையாட்டின் விதியையே கொண்டிருந்தாலும் உள்ளக விளையாட்டின் சில விதிகளையும் சேர்த்து புட்ஸால் போட்டிகளின் விதிகள் அமைக்கப்பட்டன.

ஒரு அணிக்கு 5 பேர், போட்டியின் நேரம் 40 நிமிடங்கள் போன்ற விதிகள் பாஸ்கெட் பால் விளையாட்டில் இருந்தும் மைதான அளவுகள் வாட்டர் போலோ விளையாட்டில் இருந்தும் எடுக்கப்பட்டன.

தென் அமெரிக்கா நாடுகளில் பரவலாக தொடங்கிய புட்ஸால் போட்டிகள் பின்னாளில் உலகளாவிய ரீதியில் பரவலடைந்தது.

சர்வதேச ரீதியான போட்டிகள், பிராந்திய போட்டிகள் என நடைபெற்று வந்த புட்ஸால் போட்டிகளின் புதிய பரிமாணமாக முதல் முறையாக இந்திய தொழில் முனைவோரால் பிரிமியர் புட்ஸால் போட்டிகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ப்ரீமியர் புட்ஸால் போட்டிகளின் ஸ்தாபாராக அபிநந்தன் பாலசுப்ரமணியன் மற்றும் தலைவராக முன்னாள் போர்த்துக்கல் காற்பந்து ஜாம்பவான் லூயிஸ் பிகோ திகழ்கின்றனர். இவ்வருட விளம்பர தூதுவராக இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.Premier-Futsal-Featured

இம்முறை போட்டிகள் 6 இந்திய நகரங்களை( சென்னை, மும்பை, கொச்சி, கோவா, கொல்கத்தா, பெங்களூர் ) மையப்படுத்தி உருவாகியுள்ள 6 அணிகளுக்கிடையில் நடாத்தப்படவுள்ளன. உலக காற்பந்து ஜாம்பவான்கள் இவ்வருட போட்டிகளில் இணைந்துள்ளனர்.

பல்கோ-சென்னை, ரியன் கிக்க்ஸ்-மும்பை, கிரெஸ்பா-கொல்கத்தா, பால் ஸ்சோல்ஸ்-பெங்களூர், றொனாலட்டினோ-கோவா, சால்கடோ-கொச்சி ஆகியோர் முன்னணி வீரர்களாக இவ்வருடம் களமிறங்கியுள்ளனர்.

இவ்வருட போட்டிகள் ஜூலை 15 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6 அணிகளும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடாத்தப்படுகின்றன.

குழு A  இல் சென்னை,மும்பை,கொச்சி அணிகளும் குழு B இல் கோவா,கொல்கத்தா,பெங்களூர் ஆகிய அணிகளும் போட்டியிடுகின்றன. போட்டிகள் அனைத்தும் சென்னை மற்றும் கோவா இல் நடைபெறுகின்றன. போட்டிகள் இன்று சென்னை நேர

இப்போட்டிகள் SONY SIX, SONY ESPN இல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

http://vilaiyattu.com/16324-2/

  • தொடங்கியவர்

புட்சால் கால்பந்து மும்பை அணி வெற்றி

 
 
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று பிரிமியர் புட்ஸால் கால்பந்து தொடர் தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடினார். படம்: ஆர்.ரகு
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று பிரிமியர் புட்ஸால் கால்பந்து தொடர் தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடினார். படம்: ஆர்.ரகு

பிரீமியர் புட்சால் கால்பந்து தொடர் சென்னையில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சிறப்பு நிகழ்ச்சி இடம் பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதின.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் பிரேசில் வீரர் பால்கோவும், மும்பை அணியில் மான்செஸ்டர் யுனைடெட் முன்னாள் கேப்டன் ரேயான் கிக்ஸூம் நட்சத்திர வீரர்களாக களமிறங் கினர்.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - கொச்சி அணிகள் மோது கின்றன. இதைதொடர்ந்து 8 மணிக்கு நடை பெறும் 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா, பெங்க ளூரு அணியை சந்திக்கிறது.

http://tamil.thehindu.com/sports/புட்சால்-கால்பந்து-மும்பை-அணி-வெற்றி/article8858568.ece

  • தொடங்கியவர்

புட்சால் கால்பந்து: கொச்சி அணி வெற்றி

 

புட்சால் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொச்சி அணி மும்பையை 4-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.

மும்பை - கொச்சி அணி களிடையேயான புட்சால் கால் பந்து போட்டி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் முதல் 3 குவார்ட்டர்களிலும் இரு அணிகளும் சமமாக மோதின. ஆனால் அதன்பிறகு கொச்சி அணி ஆட்டத்தை தன் பக்கம் இழுத்தது. இப்போட்டி யில் கொச்சி அணி 4-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. கொச்சி அணிக்காக டெய்வஸ் மோரியாஸ் 2 கோல் களை அடித்தார். மைக்கேல் சலகாடு, கெகாபர்ட் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

http://tamil.thehindu.com/sports/புட்சால்-கால்பந்து-கொச்சி-அணி-வெற்றி/article8862214.ece

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்.... நடக்கட்டும், நடக்கட்டும். சுவாரசியமாய்த்தான் இருக்கும். சுவாரஸ் வினளயாடினால் மனுசன் எல்லோருடைய காதையும் கடிச்சுப் போடுவார் கவணம்.... . tw_blush:

  • தொடங்கியவர்

சென்னை- கொச்சி ஆட்டம் சமன்: ரொனால்டினோ 5 கோல்கள் அடித்து கலக்கல்!

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் புட்சால் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. நேற்று நடந்த ஆட்டத்தில், கோவா அணியுடன் பெங்களூரு அணி மோதியது. இந்த போட்டியில் கோவாவின் நட்சத்திர வீரரும் பிரேசில் சூப்பர் ஸ்டாருமான ரொனால்டினோ 5 கோல்கள் அடித்து கலக்கினார். இதனால் இந்த ஆட்டத்தில் கோவா அணி 7-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
          

 

மற்றொரு ஆட்டத்தில் சென்னை அணி கொச்சி அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 4-2 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. கடைசிக் கட்டத்தில் கொச்சி வீரர்கள் மோரவ்ஸ், சாகுன்ஹா தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் இந்த ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதுவரை சென்னை அணி ஒரு வெற்றியை கூட பெறவில்லை.

அடுத்த சுற்று ஆட்டங்கள் மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் கோவாவில் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் வருகின்ற 24-ம் தேதி கோவாவில் நடைபெறுகிறது.

http://www.vikatan.com/news/sports/66284-ronaldinho-five-goal-india-premier-league-futsal.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.