Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு- கிழக்கு இணைப்புக்கு நிபந்தனை விதிக்கும் முஸ்லிம் தலைவர்கள் பிரிப்புக்கு உதவ விதித்த நிபந்தனைகள் எவை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு- கிழக்கு இணைப்புக்கு நிபந்தனை விதிக்கும் முஸ்லிம் தலைவர்கள் பிரிப்புக்கு உதவ விதித்த நிபந்தனைகள் எவை?

[15 - January - 2007] [Font Size - A - A - A] ஜ{தினக்குரல்}

-ஏ.சீ.எம். கலீல்-

வடக்கு- கிழக்கு இணைப்புக்கு நிபந்தனை விதிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வடக்கு- கிழக்கு பிரிப்பின் மூலம் முஸ்லிம் மக்கள் பெறப்போகும் நன்மைகளையும் பகிரங்கப்படுத்த வேண்டிய கடப்பாடு கொண்டவராக இருப்பதை உணர வேண்டும்.

கிழக்கை வடக்கிலிருந்து பிரிப்பதன் மூலம் கிழக்கில் முஸ்லிம்களின் செல்வாக்கும் நலன்களும் உறுதிப்படுத்தப்படும் என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது என்பதை முஸ்லிம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் . வடக்கு- கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவில்லை என்று கூறுவதன் மூலம் முஸ்லிம் , தமிழ் உறவை மேலும் நாசப்படுத்தும் செயலில் ஈடுபட்டு சாதாரண முஸ்லிம்- தமிழ் மக்களை மேலும் மேலும் பகையுணர்வு கொண்டவர்களாகச் செய்வதாக உள்ளது.

ஒரு தலைமைக்குக் கீழ் கௌரவமான முறையில் கட்டுப்பாட்டுடன் செயல்படமுடியாத முஸ்லிம் தலைவர்களும்,தனது கட்சியை இணக்கத்துடன் விட்டுக்கொடுத்துக் கட்டிக்காக்க முடியாதவர்களும் சமூகம் தொடர்பாக முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். தலைமைப் பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் அமைச்சர் பதவியையும் எதிர்பார்த்து கனவுலகில் சஞ்சரிப்பவர்களால் சமுதாயத்திற்கு என்ன செய்ய முடியும்?

பொத்துவிலில் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டவுடன் சர்வதேச விசாரணை வேண்டும் என்று அறிக்கைவிட்டு முஸ்லிம்களின் காவலனென்று முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் குரலெழுப்புவோம் என்றவர்கள் இப்போது எங்கே ஓடி ஒளிந்துவிட்டார்கள்? முஸ்லிம்களின் படுகொலை பற்றிப் பேசினால் எதிர்காலத்தில் கிடைக்கும் என ஏங்கிக் கொண்டிருக்கும் லாபங்கள் இல்லாமல் போகும் என்பதால் மௌனமாகிவிட்ட நமது தலைவர்கள் சமுதாயத்தின் பாதுகாப்பாளர்களா? அன்று பேசிய வீராப்பு எங்கே?

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை அடிபணிய வைக்கலாமென்று தமிழர் தரப்பு நினைத்தால் அது முடியாது. அதுபோலவே முஸ்லிம்களாலும் தமிழரை அடக்கி ஆள முடியாது. இதுவே யதார்த்தம். இரு சமுதாயமும் ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து இணைந்து தான் வாழ்ந்தாக வேண்டும்.

தமிழருக்கெதிராக பேசுவதால் பேரினாவதிகளைத் திருப்திப்படுத்த முடியும் என்ற கருத்துடன் நமது தலைவர்கள் இயங்குகின்றனர். பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று நினைக்கின்றனர்.

முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக் குழுக்களாக கிழக்கில் இயங்குவதாக பவ்ரல் தலைவர் றொட்றிகோ, பத்திரிகையாளர் மகாநாடு நடத்திக் கூறினார். முஸ்லிம்களின் பாரம்பரிய காணிகளில் பௌத்த வழிபாட்டு இடங்கள் இருப்பதாக பிக்குகளின் கட்சி கூறுகின்றது. இதையெல்லாம் உறுதியாக மறுக்கத் துணிவில்லாத நமது தலைமைகள் பேரினவாதிகளின் விருப்பப்படியும் வேண்டுகோளின்படியும் ஆடுகின்றன.

கிராமங்களிலும் பாடசாலைகளிலும் பள்ளிவாசல்களிலும் பல்கலைக்கழகத்திலும் ஆஸ்பத்திரிகளிலும் கூட அரசியலைப் புகுத்தி எல்லா இடங்களிலும் போட்டியையும் பொறாமையையும் பகையுணர்வையும் ஏற்படுத்தி நமது மக்களை பிளவுபடுத்திக் கொண்டு சமுதாய உரிமைபற்றி சொல்கின்றார்கள் தலைவர்கள்.

பேரின தலைவர்கள் கிழக்கு முஸ்லிம்களது காணிகளில் தமது இன மக்களை குடியேற்றமாட்டார்கள் என்று உறுதி தருவார்களா? முஸ்லிம்களின் ஆட்சி உரிமையை கிழக்கில் உருவாக்கித் தருவார்களா? முஸ்லிம்களுக்கு தனி அலகு பெற்றுத் தருவார்களா?

இதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதா? அல்லது பேரினவாதிகளின் விருப்பத்தை நிறைவேற்றி வடக்கு- கிழக்கைப் பிரிப்பதற்கு முஸ்லிம்கள் ஆதரவு தந்தால் மேற்படி நிபந்தனைகளை முஸ்லிம் தலைவர்கள் முன்வைப்பார்களா என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.

வடக்கு- கிழக்கை இணைப்பதற்கு தமிழர் தரப்புக்கு நிபந்தனை விதிப்பது போல, அவற்றைப் பிரிப்பதற்கு சிங்களத் தரப்பிடம் நமது முஸ்லிம் தலைவர்கள் வைத்துள்ள நிபந்தனை என்ன என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட நிலைக்கு முஸ்லிம் மக்களை நமது தலைவர்கள் உள்ளாக்கிவிடக்கூடாது.

பிரிக்கப்பட விதிக்கப்பட்ட நிபந்தனை

1.-காணிவேல் ஜஸ்கிறீமை தேசிய உணவாக அறிவிக்க வேண்டும் [இது ஹக்கீமுடையது]

2.-குமாரி குரே வழக்கை வாபஸ் வாங்க வேண்டும்

3.-ஒவ்வொரு மாவட்டத்திலும் முஸ்லீம் தலைமைக்கு[இவருக்குத்தான் தன்னை தானே இப்படித்தான் சொல்லுறார்] சொகுசு பங்களா

4.-5 கோடி பணம்

5.-அமைச்சுப்பதவி அதாவது துறைமுக அதிகார அமைச்சு

6.-அஸ்ரப் இறந்ததன் மர்மத்தை தோண்டவே கூடாது

7.-கருணா குழுவின் பாத்துகாப்பு வழங்கவேண்டும்

இவையாகத்தான் இருக்கும் வேற என்ன முஸ்லீம் சகோதரர்களுக்காக ஏதும் கேக்கப்போகிறாரா இந்த முஸ்லீம் தலைமை.எல்லோருக்கும் பெப்பே காட்டீட்டு தான் சுகபோகம் அனுபவிப்பார் இந்த மகாராசர்

பிரிக்கப்பட விதிக்கப்பட்ட நிபந்தனை

1.-காணிவேல் ஜஸ்கிறீமை தேசிய உணவாக அறிவிக்க வேண்டும் [இது ஹக்கீமுடையது]

2.-குமாரி குரே வழக்கை வாபஸ் வாங்க வேண்டும்

3.-ஒவ்வொரு மாவட்டத்திலும் முஸ்லீம் தலைமைக்கு[இவருக்குத்தான் தன்னை தானே இப்படித்தான் சொல்லுறார்] சொகுசு பங்களா

4.-5 கோடி பணம்

5.-அமைச்சுப்பதவி அதாவது துறைமுக அதிகார அமைச்சு

6.-அஸ்ரப் இறந்ததன் மர்மத்தை தோண்டவே கூடாது

7.-கருணா குழுவின் பாத்துகாப்பு வழங்கவேண்டும்

இவையாகத்தான் இருக்கும் வேற என்ன முஸ்லீம் சகோதரர்களுக்காக ஏதும் கேக்கப்போகிறாரா இந்த முஸ்லீம் தலைமை.எல்லோருக்கும் பெப்பே காட்டீட்டு தான் சுகபோகம் அனுபவிப்பார் இந்த மகாராசர்

போகிறபோக்கில் குத்துமதிப்பாய் பார்த்தால் கருணா மூலமாக கிழக்கிலிருந்து முஸ்லீம்களும் விரட்டப்படபோகிறார்கள் என்பதுதான் உண்மை.இதற்காகத்தான் அரசியல் வாதிகளுக்கு எலும்புத்துண்டுகள் வீசுகிறார்கள் போல......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.