Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற உறுப்பினர்களை உற்பத்தி செய்து `விலைக்கு' விற்கும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ்

Featured Replies

குருநாகல் கூட்டத்தில் ஹக்கீம் வேதனை

அரசுடன் இணைவது பற்றிய பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற வேண்டுமானால் எம்முடன் புரிந்துணர்வும், இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டும். எமது நேர்மைக்கு சமமான பிரதிபலிப்புகள் காட்டப்படுகின்றன. ஆனால், அதைச் சீர்குலைக்க சில சக்திகள் அல்லது தனிநபர்கள் முன்வந்தால் அதனை அரசாங்கம் பகிரங்கமாக நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மக்களிடமிருந்து பெற்ற ஆணைக்கு அமைவாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சில விடயங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ள ரவூப் ஹக்கீம் அங்கு எடுக்கப்படும் முடிவு மாவட்ட மட்டமாக அன்றி தேசிய ரீதியில் கூட்டாக எடுக்கும் முடிவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டி நகர சபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை குருநாகல் மாவட்ட கட்சிப் பிரதிநிதிகள், அமைப்பாளர்கள் மத்தியில் சமகால அரசியல் தொடர்பிலான கலந்துரையாடலை குருநாகல் மாவட்ட மு.கா.அமைப்பாளர் எம்.எஸ்.எம்.கௌஸ் ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு ரவூப் ஹக்கீம் மேலும் பேசுகையில் கூறியதாவது;

அரசாங்கத்திடமிருந்து, அரசோடு இணைய வேண்டுமென்ற வேண்டுகோள் வந்திருக்கிறது. அரசோடு முஸ்லிம் காங்கிரஸ் இணைவது என்ற விடயம் இன்று நேற்று பேசப்படுகின்ற விடயம் அல்ல. நாம் எதிர்கட்சிக்கு வந்த சந்தர்ப்பத்திலேயிருந்து தொடர்ச்சியாக இவ்வாறான விடயம் பேசப்பட்டு வந்திருக்கிறது.

தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வந்த பிறகு ஜனாதிபதியை ஓரிரு தடவை நாங்கள் எங்கள் சில தேவைகளுக்கு சந்திக்கப் போனபோது நாங்கள் கேட்காமலேயே, எங்களை இணைத்துக் கொள்வதற்கு தக்க தருணத்தில் அழைப்பை விடுப்பதாகக் கூறியிருந்தார். நாங்களாகவே முந்திக் கொண்டு போய்ச் சேர்வதற்கான அவசியமோ அவசரமோ எங்களுக்கு இருக்கவில்லை. இக் கட்சி தன்னுடைய சுய கௌரவத்தை இழந்து போகின்ற கட்சியாக ஒரு போதும் இருக்கவில்லை என்ற காரணத்தினால் இது குறித்து நாங்களாக முந்திக் கொண்டு போய் அரசோடு இணைவதற்கான விடயங்களைப் பற்றி வலிந்து பேசுகின்ற ஒரு வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

ஆனால், அரசுக்கு எங்கள் மீது இருக்கின்ற அர்த்தமற்ற சந்தேகங்களை நீக்கிக் கொள்வதற்காக பலமுறை நாங்கள் அவரைச் சந்தித்திருக்கிறோம்.

தெற்கில் ஏற்பட்டுள்ள இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையிலான உடன்பாட்டில் தூய்மையானதாக இருக்கவில்லை என்பது எல்லோரும் அறிந்த விடயம். இம்மாதத்தில் அதற்கு நிரந்தரமான மூடுவிழா நடக்கப் போகிறது என்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்து கொண்டிருக்கின்றன. இது ஆபத்தான விஷயம் தான்.அரசியல் ரீதியாக அது தார்மீகமற்ற செயலாகத்தான் இருக்கும்.

அரசியலில் தார்மீகம் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ள முடியாதளவுக்குப் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் ஆசனங்களின் தொகை பிரச்சினையாக மாறியிருக்கிறது. இதற்கு ஒரே மாற்று வழி தேர்தலுக்குப் போவதாகும். ஆனால், தேர்தலுக்குப் போவதற்கும் ஒரு தயக்கம் இருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. தேர்தலுக்குப் போய் அறுதிப் பெரும்பான்மையை வென்று விடலாம் என்ற அசாமானியமான தைரியம் இருக்குமாக இருந்தால் ஜனாதிபதி வேறு எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

முஸ்லிம் காங்கிரஸுக்கு அரசாங்கத்தோடு இணைவது, இணையாமல் இருப்பது என்ற விடயத்தில் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஏனெனில், நாங்கள் அரசியல் தார்மீகம் என்ற விடயத்தில் நேர்மையாக இருப்பவர்கள். இந்தக் கட்சிக்கு உள்ள மூலதனம் இரு விடயங்களாகும். ஒன்று எமது அரசியல் நேர்மை. மற்றையது எமக்கு எதிராக தொடர்ந்தும் நடக்கும் அநியாயங்கள். நாங்கள் நேர்மையாக இருந்தும், ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எங்களை நேர்மையீனமாக நடத்தியிருக்கின்றன. அட்டூழியங்களை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்து நாங்கள் வென்றிருக்கலாம்.

முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றுவதற்காக அரசில் சேர முடியாது. ஏமாற்று என்ற கட்சியாக இது இருக்கவில்லை. ஆனால், நாங்கள் நிறைய ஏமாற்றப்பட்டிருக்கிறோம். முஸ்லிம் காங்கிரஸை அரசோடு சேர்த்துக் கொள்வது என்பது இன்று பிரச்சினைக்குரிய ஒரு விஷயம் அல்ல. ஆனால், அந்தத் தேவை இன்று அரசாங்கத்துக்கு வந்திருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ் ஒரு உடன்பாட்டோடு அரசுடன் சேர்வதில் எந்தத் தப்பும் இல்லை. சேர்வதற்கான காரணங்களும் ஏராளமாக இருக்கின்றன. சேராமல் இருப்பதற்கான காரணங்களும் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், நாம் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்று கேட்டால், இதில் எது நமது கட்சிக்கு குறைந்த ஆபத்தைத் தரும் என்று தான் நாம் பார்க்க வேண்டும். கட்சியைப் பாதுகாப்பதற்கு இரண்டில் எந்த அணுகு முறை, அனுகூலங்களைப் பெற்றுத் தரும் என்பது தான் ஒரே ஒரு எடுகோளாக இருக்க முடியும். அந்தக் காரணத்தை மட்டும் வைத்துத்தான் நாங்கள் அரசுடன் சேர்வதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அதைத் தீர்மானிக்கின்ற விஷயம் அரசுக்கும் எங்களுக்குமான புரிந்துணர்வாகும்.

அமைச்சுப் பதவிக்குப் பேரம் பேசுகின்ற சக்தியை இந்தக் கட்சி பெற்றிருப்பதை நாங்களாகவே இல்லாமல் செய்து விடக்கூடாது. அவசரப்பட்டு மாவட்டம் மாவட்டமாக அறிக்கை விடுவது தான் இந்தக் கட்சியில் இருக்கும் ஒழுக்கக் குறைவின் மிக மோசமான விடயமாகும். கட்சிக்கு முந்திப் போய், அரசாங்கத்தோடு சேர்வதற்கு நாங்கள் முடிவு எடுத்தாகி விட்டது என்கிறார்கள். சில இடங்களில் கட்சித் தலைவர் வந்தாலும் வராவிட்டாலும் நாங்கள் சேரத்தான் வேண்டும் என்று பேசுகின்ற அநாகரிகமான அரசியல் எங்கள் பேரம் பேசும் சக்தியை மழுங்கடித்திருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ் இப்போது எம்.பி.க்களை உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலை மாதிரி. எம்.பி.க்களை உற்பத்தி செய்து சந்தையில் போட, வேண்டியவர்கள் பணம் கொடுத்து வாங்கிவிட்டுப் போகலாம். இதுதான் முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி.ப் பதவி என்று சொல்கின்ற அளவுக்கு இந்தக் கட்சியின் எம்.பி.ப் பதவிகள் போய்விட முடியாது.

முஸ்லிம் காங்கிரஸுக்கு அரசோடு சேர வேண்டும் என்பதை விட அரசுக்கு முஸ்லிம் காங்கிரஸைச் சேர்க்க வேண்டும் என்ற தேவை இன்று கூடுதலாக இருக்கிற நிலையில், அதனுடன் நாகரிகமாகப் பேசி சில முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

பாராளுமன்றப் பெரும்பான்மையை முக்கியமான வாக்கெடுப்புகளில் காட்ட இயலாத ஒரு நிலைமை அரசுக்கு ஏற்பட்டு விடுமோ என்ற ஆபத்து இருக்கிறது. இந்த நிலையில் எமது 6 பேர் என்ற அந்தஸ்து இந்தச் சமூகத்துக்கு ஏதாவது அனுகூலங்களைப் பெற்றுத் தர முடியும். ஆனால், புதிதாக எதையும் பேச முடியாத அளவுக்கு அவசரப்பட்டு அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. தலைமையை விடுத்து யாரும் திரை மறைவில? பேச முடியாது. கட்சி முடிவு எடுத்துக் கட்சியோடுதான் போக வேண்டும். இதில் தான் குருநாகல் மாவட்டம் மிகச் சிறப்பான முன்னுதாரணத்தைக் காட்டியிருக்கிறது.

பெரிய வாக்கு வங்கியை வைத்திருக்கும் நாம், அரசாங்கத்துடன் சேர்வதாக இருந்தால் அதன் மூலம் ஒரு பெரிய பிரமை ஏற்படும். ஏறத்தாழ ஒரு தேசிய அரசின் சொரூபம் இந்த அசுக்கு ஏற்படும். இதை அரசாங்கத்தின் சார்பில் பேசியவர்களே எங்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் நாம் இறுக்கமாகப் பேசி எவ்வளவு இந்த சமூகத்துக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை அடையாளப்படுத்துகின்ற அந்தஸ்தை அவசரப்பட்டு இழந்து விட முடியாது.

இப்படியான ஒரு நிலைமை வரும் வரை முஸ்லிம் காங்கிரஸ் அமைதியாக இருந்ததே தவிர அவசரப்படவில்லை. ஏனெனில், கட்சிக்கு கௌரவம் என்பது முக்கியமான ஒரு விடயமாகும். முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம்களின் இயக்கம் அவமானப்படுத்தப்பட முடியாது.

http://www.thinakkural.com/news/2007/1/16/...s_page19347.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.