Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனல்மின் நிலைய சூத்திரமும் தமிழக திசைகாட்டியும்

Featured Replies

திருமலை சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்க, இலங்கை அரசு கடும் பிரயத்தனம் மேற்கொள்கிறது.

2005 ஆம் ஆண்டு இதை நிறுவுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, டிசெம்பர் 29 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்திய அமைதிப் படையின் பிரசன்ன காலத்திலேயே பல இடங்கள் புள்ளியிடப்பட்டு, எதிர்கால முதலீடுகளுக்கான தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் நிர்மாணிக்கப்படவிருக்கும் இவ்வனல் மின் நிலையம், 2010 ஆம் ஆண்டு செயற்படத் தொடங்குமெனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 500 மெகாவாட் (ஆறு) மின்சார உற்பத்தியை, 1000 மெகாவாட் வரை அதிகரிக்கும் திட்ட வரைவொன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஊடகவாயிலாக வெளிவந்த தகவல்கள். இதன் பின்புலத்திலுள்ள அரசியல் ரீதியிலான நகர்வுகள் வேறுவிதமாக இருக்கிறது.

இந்தியாவிற்கு மட்டுமல்லாது, பல சர்வதேச நாடுகளுக்கும், திருமலைத் துறைமுகம் குறித்து அதிக அக்கறை எப்போதும் உள்ளது. அவ்வாறான நலன்சார் அக்கறையின் அடிப்படையில் திருமலையின் வளங்களைப் பங்கிடுவதில் அந்த முனைப்புக் காட்டும் நாடுகளை, தமது பௌத்த மேலாதிக்க அரசியல் நகர்வுகளுக்குப் பகடைக் காயாகக் கையாள்வதில் அரசானது வேகமாகச் செயல்படுகின்றது.

சீனன்குடா நிலத்தடி எண்ணெய் சேமிப்புக் கிணறுகள் சிலவற்றை குத்தகைக்கு எடுத்த இந்தியா, தனது பொருளாதார பிடிமானத்தை மேலும் இறுக்க வரும் வாய்ப்புக்களை வரவேற்க வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளது.

அனல் மின் நிலையம் நிறுவ இந்தியா உடன்படாவிட்டால் பாகிஸ்தானையோ அல்லது வேறு நாடுகளையோ அணுகப்போவதாக இலங்கை அச்சுறுத்தியிருக்கும்.

துறைமுகத்திற்கு புலிகளால் ஆபத்து என்று பரப்புரை செய்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறிச் சம்பூரை ஆக்கிரமித்தவுடன் அனல் மின் நிலையம் அமைக்கப் போவதாக தமது அடுத்த நகர்வினை அரசு மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக கடந்த வருடம் செப்டெம்பரில் சம்பூரைக் கைப்பற்றியவுடன், கிடப்பில் போடப்பட்டிருந்த அனல் மின் நிலைய விவகாரத்தை அரசு உயர்த்திப் பிடித்தது.

இந்தியாவை சம்பூரில் உள்நுழைய விட்டு, புலிகளோடு உரசலை உருவாக்கலாமென்கிற தந்திர உத்தியை இலங்கை அரசாங்கம் பிரயோகித்தாலும் இடம் வரையறை செய்யப்படாத ஒப்பந்தமொன்றினை ஏற்படுத்தி, வேற்று நாட்டவர் கரங்களில் அது கைமாறாமல் தனது நலனை பாதுகாத்துக் கொண்டது இந்தியா.

இனிப் பாகிஸ்தானும் வர முடியாது. ஒப்பந்தத்தையும் மீற முடியாது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத சம்பூரில் இம்மின் நிலையத்தை நிறுவ வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவிற்கு இல்லை.

சம்பூரில்தான் மின் நிலையத்தை நிறுவ வேண்டுமென இலங்கை அரசு அடம் பிடித்தால் முதலீடு தொடர்பான அடிப்படைப் பிரச்சினையை இந்தியா கையிலெடுக்கலாம்.

இலங்கை மின்சார சபைக்கு உதவி செய்ய அரசு நிதியத்தில் பணம் இல்லை. பாதுகாப்புச் செலவு எல்லாவற்றையும் விழுங்கி விட்டது. தாழும் நிலையிலுள்ள அரசு திறைசேரியினால் முதலீடு செய்யக் கூடிய பலம் இல்லை.

இந்நிலையில் சர்வதேச சட்ட திட்டத்திற்குட்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களை இலங்கை இந்திய ஒப்பந்தங்கள் போன்று செயலிழக்கச் செய்ய முடியாது. தான் விரித்த வலைக்குள் தானே அகப்பட்டுக் கொண்ட நிலையிலுள்ளது இலங்கை.

துறைமுகப் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, சம்பூரை ஆக்கிரமித்து, இணைத்தலைமை அனுசரணையாளர்களை மௌனமாக்கிய அரசுக்கு சம்பூர் ஒரு பொறியாகவே மாறிவிட்டது.

சீனன்குடாவிலிருந்து சம்பூரை நோக்கிய பாதைகளை சீர்செய்வதற்கும், சம்பூரில் அடிக்கல் நாட்டுவதற்கும் அவசரப்படும் அரசின் வேகத்தை ஓரளவு ஊகித்தறிந்த இந்திய அரசு, மீட்கப்படும் வாகரையை வேறு நாட்டிற்கு அர்ப்பணிக்க திரைமறைவு வேலைகள் நடபெறுவதாகவும் சந்தேகம் கொள்கிறது.

துறைமுகத்தைப் பாதுகாக்கச் சம்பூரைப் பிடித்த இலங்கை அரசு, சம்பூரைத் தக்க வைக்க வாகரையை மீட்கும் முயற்சியை முடுக்கி விட்டு, முதலீடுகளுக்கு பாதுகாப்பானதொரு இடமாகச் சம்பூர் பகுதியினை காட்ட முனைகிறது. ஆயினும் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை இந்தியாவிற்கும் தெரியும்.

புலிகளின் புதிய போரியல் பரிமாணங்களை அனுமானிக்க இயலாத நிலையில் கொதி நிலைக்களத்தில் குதிக்க இந்தியா தயங்குகிறது.

அடை மழைக்கு முன்பான தூரத்து இடி முழக்கங்கள் ஒலிக்கத் தொடங்கி விட்டன. கொழும்பு வெடிகளுக்கு, ஈனக் குரலில் கண்டனம் தெரிவிக்கிறது சர்வதேசம்.

கொழும்புக் கட்சிகளின் தீர்வுத் திட்டத்தினை முன்வைக்க இரண்டு மாத கால அவகாசத்தினை சர்வதேசத்திடம் முன்வைக்கிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.

இதே இரண்டு மாத கால இடைவெளியில் கிழக்கிலிருந்து புலிகளை அகற்றுவேனெனக் கங்கணம் கட்டியபடி களமிறங்கியுள்ளார் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா.

இவ்வகையான தந்திரக் காய்நகர்த்தல்களை சர்வதேசம் உணர்ந்து கொண்டாலும் புலிகளின் இராணுவபலம் வெளிப்படும் வரையில் அவர்கள் இப்படியே இருப்பார்கள்.

அவர்களின் நலனிற்கான முன்னுரிமைப் பாதை தமிழர்களின் பக்கம் திரும்ப வேண்டுமாயின் அவர்கள் விரும்புவது தமிழர்கள் வசம் இருக்க வேண்டும்.

ஏனெனில் சர்வதேச சமூகத்தை மனு நீதிச்சோழனாக கற்பிதம் கொண்டு, பழைய கனவுகளில் வாழ்பவர்கள் வரலாறுகளை அறிந்து கொள்ளாதவர்களே.

ஆகவே இன்றைய அரசியல் கள நிலவரத்தில் இந்தியா குறித்து அதன் முரண்பட்ட நகர்வுகளை உன்னிப்பாக அவதானிப்பதே உகந்தது.

இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தினை ஏற்படுத்த முனைந்து களைத்த நிலையிலிருக்கும் சிறிலங்கா அரசு, மாற்று வழி நகர்வுகளைப் பிரயோகித்து அனல் மின் நிலையத் திட்டத்தின் ஊடாகவாவது எதைச் சாதிக்கலாமென எண்ணுகிறது.

இருப்பினும் மாவீரர் தின உரை, கள யதார்த்தமாகும் போது முழு இலங்கையும் யுத்த பூமியாக மாறக்கூடும்.

அந்நிலையில் மகிந்தவின் இறையாண்மையை காப்பாற்றும் ஒரே நாடாக இந்தியா இருக்கப் போகிறது. அதற்கான அவசர வேண்டுதலை அவர் இந்தியாவிடமே விடுப்பார்.

ஆயினும் தமிழ்நாட்டு அழுத்தத்தினால் இந்தியா சற்றுப் பின்வாங்கினால் பல்குழல் எறிகணைச் செலுத்திகளை வழங்கிய வரை அழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் மகிந்தருக்கு ஏற்படலாம்.

பல்குழல் எறிகணை கொடையாளியான பாகிஸ்தான், இலங்கையில் காலடி வைத்தால் தமிழர் தரப்பின் பக்கம் தவிர்க்க முடியாமல் இந்தியா நகருமென்றும் ஊகிக்கலாம்.

அந்த ஆதரவிற்கான வியாக்கியானத்தை 'எதிரிக்கு எதிரி நண்பன்" என்கிற ரீதியில் இந்தியா தம் மக்களுக்குப் புரிய வைக்கும்.

இவை நடைமுறைச் சாத்தியமாக வேண்டுமாயின் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பேரெழுச்சியே அதைத் தீர்மானிக்கும்.

கலைஞர், கனிமொழியின் வருகை, அச்சாத்தியப்பாட்டிற்கான தமிழக புறச்சூழலை முன்னகர்த்திச் செல்வது போலுள்ளது.

தமிழக உணர்வின் ஒருங்கிணைப்பு, தமிழ் தேச விடுதலைக்கான பெரும் ஊக்கியாகத் திகழும். அவை மாவீரர் தின உரையிலும் குறித்து கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

இந்தியா, தீர்மானகரமான பாதை ஒன்றை வகுப்பதற்கு தமிழகமே திசை காட்டியாக அமையப் போகிறது.

அதேபோன்று விடுதலையின் விரிதளங்களைப் பரப்பி அடிநாதமாக இருக்கப் போகிறவர்கள் மக்களே.

அகச் சூழல் பலமிக்கதாக இருந்தால் மட்டுமே, புறச் சூழல் அதற்கேற்றவாறு தன்னை தக்கவைத்துக் கொள்ளும்.

அகத்திலும் புலத்திலுமுள்ள வேர்கள், ஒருங்கிணைந்து பெருஞ் சக்தியாக மாற வேண்டிய வரலாற்றுத் திருப்புமுனையில், விடியலைத் தரிசிக்கக் காத்திருக்கிறது.

அடம்பன் கொடியும் திரண்டால்தான் முறுக்கேறும்.

தமிழ் பழமொழிகளை மீட்டிப் பார்த்தால், மாக்கிய வல்லியின் சாணக்கியங்களை கற்க வேண்டிய அவசியமேற்படாது. 'வரலாறு ஆசான்" என்கிற உண்மையும் உணரப்படும்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (14.01.07)

http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/17.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.