Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் எமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை! - மைத்திரி

Featured Replies

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் எமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை! இப்படிக் கூறுகின்றார் மைத்திரி

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் எமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை! இப்படிக் கூறுகின்றார் மைத்திரி!!

"ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எமக்கு அழுத்தம் கொடுக்கவோ, எம்மீது அதிகாரத்தைப் பயன்படுத்தவோ இல்லை. இந்நாட்டின் மக்களின் நலனுக்காகவும் சட்டத்துறையை மேம்படுத்துவதற்குமாகவே ஆணையாளர், இச்சட்டத்துறையின் சுயாதீனம் பற்றிப் பேசியுள்ளார்." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற, 34 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மூதூர் நீதிமன்றக் கட்டடத்தொகுதியைத் திறந்து வைத்ததன் பின்னர், உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"பொதுமக்களின் நலன்கருதி இத்துறையை மேம்படுத்தவும், அபிவிருத்தி செய்யவும் உச்சக்கட்ட நிதியை செலவிட அரசு தயாராக இருக்கின்றது. ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் மனச்சாட்சிக்கு விரோதமில்லாத வகையில் முன்னெடுக்க வேண்டும். மூதூரின் வரலாறு பற்றி இரசனையுடன் சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டிருந்தார். மூதூரின் வரலாறானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை நான் வரலாற்றை படிக்கும் போது தெரிந்து கொண்டேன். ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பால் அடிக்கடிப் பேசப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் பற்றி நாம் அறிந்திருக்கின்றோம். இந்த நாட்டின் மனித விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக அரசு அதன் முனைப்பான செயற்பாடுகளை காட்டியும் செயற்படுத்தியும் வருகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இந்நாட்டின் சட்டத்துறையின் சுயாதீனத் தன்மை பற்றி கடந்த நாட்களில் என்னோடு அடிக்கடி பேசியுள்ளார். அதேவேளை, மனித உரிமைகள் ஆணையாளர், எமக்கு அழுத்தம் கொடுக்கவோ, எம்மீது அதிகாரத்தைப் பயன்படுத்தவோ இல்லை.

இந்நாட்டின் மக்களின் நலனுக்காகவும் சட்டத்துறையை மேம்படுத்துவதற்குமாகவே ஆணையாளர், இச்சட்டத்துறையின் சுயாதீனம் பற்றிப் பேசியுள்ளார். இந்நாட்டின் அரசமைப்பும் சட்டத்துறையும் சர்வதேச ரீதியாக எமக்கு வரவேற்பை பெற்றுத்தரக்கூடியதாக இருக்க வேண்டும். இது தனிப்பட்ட கட்சிக்கான வேலைத்திட்டமில்லை. நாட்டின் புலகாங்கிதத்தை எடுத்துகாட்டுகின்ற விடயமாக இருக்க வேண்டும்" - என்றார். இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் உட்பட திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், அப்துல்லா மகருப், இம்றான் மஹ்ரூப், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எச்.எம்.நசீர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், பல அரச நிறுவனங்களின் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

maithridjhdhdhjdjjd012525565602.jpg

maithridjhdhdhjdjjd01252556561.jpg

maithridjhdhdhjdjjd012525565603.jpg

 

 http://malarum.com/article/tam/2016/07/30/15144/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.