Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்தவர் மதியில் ஏறுமா இது..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது. பங்காளிகளாக இருக்க வேண்டும்: மா.க.ஈழவேந்தன்

இந்தியாவுடன் செய்துகொண்ட இருநாட்டு ஒப்பந்தத்தையே 19 ஆண்டு முடிவில் தூக்கியெறிய முடியும் என்றால், எதனை நம்பி சிங்கள அரசுடன் நாங்கள் இனி ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும்? என்ற கேள்வியையே பதிலாக்கினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன்.

அண்மையில் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் அங்கிருந்து வெளிவரும் 'தமிழ்முரசு' நாளேட்டிடம் பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள், அதாவது வடக்கு - கிழக்கின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எங்கள் மண்ணின் மக்களோடு உறவு கொண்டு பிரச்சினையைத் தீர்க்க முடியாத நிலையில் உள்ளோம் என்று வேதனையை தமிழ்முரசிடம் பகிர்ந்து கொண்ட ஈழவேந்தன், இலங்கையில் தமிழ் மக்களின் நிலைமை சொல்ல முடியாத அளவுக்கு மோசமடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையில் வாழும் எந்தத் தமிழரும் போரை விரும்பவில்லை. ஆனால் எங்களுக்கு வழியில்லை. அழிவின் விளிம்பில் நிற்கிறோம். எல்லைமீறி பொறுமை காக்கும் நிலையில் நாங்கள் இல்லை. இந்தியாவுடன் செய்துகொண்ட இருநாட்டு ஒப்பந்தத்தையே 19 ஆண்டு முடிவில் தூக்கியெறிய முடியும் என்றால், எதனை நம்பி சிங்கள அரசுடன் நாங்கள் இனி ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும்?

அனைத்துலக சமூகத்தை நம்பித்தான் ஐந்து ஆண்டுகளாக பொறுமை காத்துள்ளோம். ஆனால் எங்கள் நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே வருகிறது.

வடக்கிற்கும் கிழக்கிற்கும் இருந்த தரைவழிப் பாதைகளான ஏ-9, ஏ-15 இரண்டும் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருப்பதால் பெரும் அங்கு வாழும் பல ஆயிரம் மக்கள் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

மக்கள் பசியோடும் பட்டினியோடும் வாழும் நிலை. பிள்ளைகளுக்கு கல்வியில்லை. விவசாயிகள் விவசாயம் செய்ய முடியவில்லை. மீனவர்களால் மீன்பிடிக்க முடியவில்லை. பண்பாட்டுப் படுகொலை, உயிர்ப்படுகொலை, பொருளாதார ஒடுக்குதல் என்று எல்லா வகையிலும் தமிழ் மக்கள் பூண்டோடு அழிக்கப்படுகிறார்கள்.

புற்றுநோய் மருத்துவமனை யாழ்ப்பாணத்தின் உயர்பாதுப்பு வலயத்தில் இருப்பதால் அங்கு மருத்துவர் இல்லை. மக்களால் சிகிச்சை பெற முடியவில்லை. போரினால் மக்களுக்கு மனப்பாதிப்பு கூடியுள்ளது இரத்தப் புற்றுநோயும் அதிகரித்துள்ளது. ஆனால் சிச்சை பெற வசதியில்லை.

வடக்கின் நிலைமையாவது அறியக் கூடியதாக இருக்கிறது. கிழக்கின் நிலைமை இன்னும் மோசம். என்ன நடக்கிறது என்பதே வெளியுலகுக்குத் தெரியாத அளவுக்கு மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் துயரம் சொல்லி மாளாது.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களை நெருக்கும் பிரச்சினைகள் ஆயிரம். சொந்த மண்ணில் வாழ்வு பெறாத நிலைக்கு, அழிவுக்குத் தமிழ் இனம் ஆளாகியுள்ளது. இந்த மண்ணிலும் வாழ முடியாமல் விரட்டப்பட்டால் இந்து மா சமுத்திரத்தில்தான் எங்கள் மக்கள் இடம் தேட வேண்டும் என்றும் வருத்தப்பட்டார் ஈழவேந்தன்.

இலங்கை சுதந்திரம் பெற்று 56 ஆண்டுகள் ஆகிய நிலையில், இங்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் எண்ணிலடங்காதவை. நாங்கள் எமது மண்ணிலேயே வேரோடும், வேரின் மண்ணோடும் சாய்க்கப்படும் நிலைக்கு அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

"தமிழீழத்தைத் தவிர ஈழத் தமிழ் மக்களுக்கு வேறு எந்தத் தீர்வும் விடிவையோ விடுதலையையோ தாரது. இந்த நாட்டுக்கு ஒற்றையாட்சி முறை ஒரு போதும் ஒத்துவராது" என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்று புதிதாகச் சொல்லவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன், 76 இல் "தந்தை செல்வா" என்றழைக்கபடும் ஈழத்தமிழ் மக்களின் மூத்த தலைவர், மறைந்த செல்வநாயகம் கூறினார்.

இலங்கையில் இனப்பிரச்சினை முற்றிய புற்றுநோயாக மாறிவிட்டது. அறுவை சிகிச்சைதான் ஒரே வழி. அறுவை சிகிச்சையில் நோயாளி இறப்பதற்கும் சாத்தியமுண்டு. ஆனாலும் எங்கள் எதிர்கால சந்ததியினருக்கு ஒர் அரசியல் காப்புறுதியை நாங்கள் செய்து வைக்க வேண்டும்.

அழுதாலும் பிள்ளையை நாங்கள் தான்பெற வேண்டும். எனினும் எங்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் தற்போது உதவக்கூடிய தலைவர் தமிழக முதல்வர் மு.கருணாநிதிதான். ஆரம்ப காலத்தில் இருந்தே ஈழத்தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டி வருபவர் அவர். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களைக் காக்கும் கடவுளாக அவர் உள்ளார் என்று குறிப்பிட்டார் அவர்.

ஒரு நாட்டில் வாழும் தமிழ் மக்கள் வாழ்வா சாவா போராட்டம் நடத்தும் போது மற்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது. பாங்காளிகளாக இருக்க வேண்டும். களத்தில் குதித்து நிலைக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஈழவேந்தன், நாங்கள் உதவி கேட்பது போராட்டத்துக்கு அல்ல என்பதையும் குறிப்பிட்டார்.

இன்றைய உடனடித் தேவை வடக்கு - கிழக்கு பகுதிகளில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் என்று கூறிய அவர், வடக்கு - கிழக்கில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி பற்றியும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் உள்ள செம்மையான நிர்வாகம், மேம்பாடுகள், கடுமையான சட்டதிட்டங்கள் போன்றவற்றின் சிறப்புக்களை விளக்கினார். மக்களிடம் தமிழ் உணர்வு மேலோங்கியுள்ளது. நல்ல தமிழ்ப் பெயர்களை குழந்தைகளுக்கு மட்டுமின்றி, அமைப்புக்கள் நிறுவனங்களுக்கும் வைக்கிறார்கள். விதவைகள் மறுமணம் போன்ற பல விடயங்களில் மக்களின் சிந்தனை முன்னேறியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

புதினம்.கொம்

http://www.eelampage.com/?cn=30578

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நேரத்தில் மிகவும் முக்கியமான வேண்டுகோள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.