Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரியோ பராலிம்பிக்கில் 9 பேர் பங்கேற்பு

Featured Replies

ரியோ பராலிம்பிக்கில் 9 பேர் பங்கேற்பு
"எமக்கு இரண்டு பதக்கங்கள் கிடைக்கும்" இம்முறை நடைபெறும் 15ஆவது பராலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்களை வென்றெடுக்க முடியும் என இலங்கை பராலிம்பிக் சபையின் செயலாளர் கேர்ணல் ராஜா குணசேகர வீரகேசரி வார வெளியீட்டு க்குத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவி க்கையில், ''ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் பராலிம்பிக் போட்டியில் இலங்கையிலிருந்து 8 வீரர்கள் மற்றும் ஒரு வீராங்கனை அடங்கலாக 9 பேர் பங்குகொள்கின்றனர். இம்முறை இலங்கைக்கு இரண்டு பதக்கங்களை வெற்றி பெற முடியும் என நம்பிக்கைக் கொள்கிறேன். இலங்கை அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அனில் பிரசன்ன ஜயலத் மற்றும் தினேஸ் பிரியன்த ஹேரத் ஆகிய இருவரும் பதக்கங்களை வென்று தரக்கூடியவர்கள் என தான் நம்புவதாக தெரிவித்தார். அத்துடன் ஏனைய எமது வீரர்களும் தங்களது ஆற்றல்கள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தி இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுக்கொள்வார்கள்'' என்றார்.
 
 
showImageInStory?imageid=295002:mr
 
showImageInStory?imageid=295002:tn
 

(எம்.எம். சில்­வெஸ்டர்)

32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி அண்மையில் முடிவடைந்த நிலையில் மாற்றுத் திறளானிகளுக்கான 6 ஆவது பராலிம்பிக் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த 15ஆவது பராலிம்பிக்கில் 150 நாடுகள் பங்கு கொள்கிறது. பராலிம்பிக் போட் டியானது 1960ஆம் ஆண்டு இத்தாலி யின் ரோம் நகரில் முதன் முதலாக நடைபெற்றது.

2016 பராலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக 9 போட்டியாளர்களை உள்ளடக்கிய 16 பேரைக் கொண்ட இலங்கைக் குழுவானது நேற்று இரவு ரியோ டி ஜெனீரோ நோக்கி புறப்பட்டுச் சென்றது. இதில் பங்குகொள்ளும் ஒன்பது பேரில் ஏழு பேர் மெய்வல்லுநர் விளையாட்டுகளிலும், 2 பேரில் ஏனைய ஒருவர் வில்வித்தையிலும் மற்றையவர் சக்கர நாற்காலி டென்னிஸிலும் விளை யாடவுள்ளனர்.

மேற்கூறிய 7 மெய்வல்லுநர் போட்டி யாளர்களில் நான்கு பேர் சுவட்டு போட் டிப் பிரிவிலும் (TRACK EVENT), ஏனைய மூன்று பேர் மைதான போட்டிப் பிரிவிலும் (FIELD EVENT) விளையாடுகின்றனர்.

இதன் காரணமாகவே போட்டிப் பிரி வுகள் T எனவும் F எனவும் பிரிக்கப்ப ட்டுள்ளது. இதில் T 42 எனப்படுவது சுவட்டு நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் முழங்காலுக்கு மேல் காயமடைந்தவர் கள் ஆவர். T44 எனப்படுவது சுவட்டு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் முழங்கா லுக்கு கீழ் காயமடைந்தவர்கள்.

அத்துடன் T 47 எனப்படுவது சுவட்டு நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் கைகளில் காயமடைந்தவர்கள் ஆவர்.

இதேவேளை F46 எனப்படும் பிரிவா னது மைதான நிகழ்ச்சியில் பங்குகொள் ளும் கைகளில் காயமடைந்தவர்கள் என் பதுடன், F44 எனப்படும் பிரிவானது மைதான நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் முழங்காலுக்கு கீழ் காயமடைந்தவர்கள் ஆவர்.

வீரர்களும் போட்டிகளும்

T42 பிரிவில் அங்கம் வகிக்கும் அனில் பிரசன்ன, இலங்கை அணியின் தலை வராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் T42 பிரிவின் 100 மீற்றர், 200 மீற்றர் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் பங்குபற்றவுள்ளார்.

இக்குழுவில் இடம்பெறும் அஜித் ஹெட்டியாராச்சி T44 போட்டிப் பிரி வின் 100 மீற்றர், 200 மீற்றர் மற்றும் 400 மீற்றர் போட்டிகளிலும், இந்திக்க சூல தாச T42 பிரிவில், 100 மீற்றர், 200 மீற்றர் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

இம்முறை பராலிம்பிக்கில் இலங்கை சார்பாக பங்குகொள்ளும் ஒரே ஒரு வீரா ங்கனையாக அமரா இந்துமதி திகழ்கி றார். இவர் T47 பிரிவில், 200 மீற்றர், 400 மீற்றர் மற்றும் நீளம் பாய்தல் ஆகிய வற்றில் விளையாடவுள்ளார்.

மேற்கூறிய நால்வரும் மெய்வல்லுநர் போட்டியின் சுவட்டுப் பிரிவில் பங்கு கொள்வோராவார்கள்.

மைதான போட்டி நிகழ்ச்சிகளில் பங் குகொள்ளும் மூவரும் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்கின்றனர்.

இதில் தினேஸ் பிரியந்த ஹேரத், காமினி ஏக்க நாயக்க ஆகியோர் F46 பிரிவிலும், சம்பத் ஹெட்டியாராச்சி F46 பிரிவிலும் போட்டியிடுகின்றனர்.

தனி விளையாட்டுப் போட்டிகளில் சம்பத் பண்டார வில்வித்தையிலும், உபாலி ராஜகருணா சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியிலும் பங்குகொள் ளவுள்ளனர்.

கோடைக்கால ஒலிம்பிக்கில் டங்கன் வைட் மற்றும் சுசந்திகா ஜயசிங்க ஆகி யோர் தாய்நாட்டுக்கு வெள்ளிப் பதக்கங் களை வென்று பெருமை சேர்த்துள்ளமை நம்மில் பலர் நினைவில் வைத்துள்ள போதிலும், 2012ஆம் ஆண்டு லண்டன் பராலிம்பிக்கில் T46 பிரிவின் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக் கத்தை வென்று சரித்திரம் படைத்த பிரதீப் சஞ்ஜயவை நம்மில் பலர் மறந்திருப்பர்.

இவரே பராலிம்பிக்கில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை வென்றெடுத்த வர் என்ற மகத்தான சாதனைக்குச் சொந்

தக்காரராக திகழ்கிறார்.

கோடைக்கால ரியோ ஒலிம்பிக்கில் பங்குபற்ற அதே எண்ணிக்கையிலான ஒன்பது போட்டியாளர்கள் 6ஆவது பரா லிம்பிக் போட்டியிலும் பங்குகொள்கின் றமை குறிப்பிடத்தக்கது.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=19&editionDate=04/09/2016

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.