Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகில் எழுத்தறிவற்றோரின் தொகை ஒரு பில்லியன்.!

Featured Replies

உலகில் எழுத்தறிவற்றோரின் தொகை ஒரு பில்லியன்.!

 

 

writing_8.jpg

செப்­ெடம்பர் 08 ஆம் திக­தியை சர்­வ­தேச எழுத்­த­றிவு தின­மாக அனுஷ்­டிக்க வேண்­டு­மென 1965 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆறாம் திகதி “யுனெஸ்கோ” பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது. முத­லா­வது எழுத்­த­றிவு தினம் 1966 ஆம் ஆண்டு அனுஷ்­டிக்­கப்­பட்­டது. எழுத்­த­றிவு தினத்தின் அரை­நூற்­றாண்டு நிறைவை இவ்­வாண்டு (2016) எழுத்­த­றிவு தினம் குறிக்­கின்­றது.

தனி மனி­தர்­க­ளுக்கும் சமூ­கங்­க­ளுக்கும் எழுத்­த­றிவின் முக்­கி­யத்­துவம் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது தான் இத்­தி­னத்தின் நோக்கம்.

உலக நாடு­களின் கல்வி அமைச்­சர்கள் கலந்து கொள்ளும் இவ்­வாண்­டுக்­கான பிர­தான நிகழ்­வினை பிரான்சின் பாரிஸ் நகரில் “யுனெஸ்கோ” ஒழுங்கு செய்­துள்­ளது. கடந்த ஆண்­டு­களைப் போலவே இவ்­வாண்டும் எழுத்­த­றிவு விரு­து­களும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

எழுத்­த­றிவு என்­பது பாரம்­ப­ரி­ய­மாக வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதம் ஆகிய திறன்­களைக் குறிப்­ப­தாக இருந்து வந்­தது. இன்று அதன் வரை­வி­லக்­கணம் விரி­வ­டைந்­துள்­ளது. இன்று அது மொழி, கணிதம் குறி­யீ­டுகள், கணினி ஆகி­ய­வற்றில் திறன் பெற்­றி­ருப்­ப­தையும் மற்றும் புரிந்து கொள்­ளுதல், தொடர்­பாடல், பயன்­தரும் அறி­வினைப் பெற்றுக் கொள்­ளுதல் மற்றும் ஐதீ­க­மான கலா­சாரக் குறி­யீ­டு­களை பயன்­ப­டுத்­துதல் ஆகி­ய­வற்­றையும் குறிக்­கின்­றது.

எழுத்­த­றிவை அபி­வி­ருத்தி செய்யும் நோக்­குடன் மிலே­னிய அபி­வி­ருத்தி இலக்­குகள் மற்றும் பல்­வேறு சர்­வ­தேச, தேசிய வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த போதி லும் இன்­ற­ளவும் சர்­வ­தேச சமூ­கத்தின் மிகப் பெரிய சவால்­க­ளி­லொன்­றாக எழுத்­த­றி­வின்மை இருந்து வரு­கின்­றது. “யுனெஸ்­கோ”­வினால் வெளி­யி­டப்­பட்ட மிக சமீ­பத்­திய தக­வ­லின்­படி உலகில் எழுத்­த­றி­வற்­றோரின் தொகை ஒரு பில்­லி­ய­னாகும். உலக சனத்­தொ­கையில் இது 26%. இதில் மூன்­றி­லிரு பங்­கினர் பெண்கள். 98% ஆன எழுத்­த­றிவற்றோர் வளர்­முக நாடு­க­ளி­லேயே உள்­ளனர்.

குழந்­தைகள் – மாண­வ­ரி­டையே

எழுத்­த­றிவு

குழந்­தைகள் – மாண­வ­ரி­டையே எழுத்­த­றிவை வளர்ப்­ப­தற்­கான பெரு­மு­யற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இது தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள ஆய்­வு­க­ளி­லி­ருந்து அரிய தக­வல்கள் தெரி­ய­வந்­துள்­ளன. அவற்றில் சில­வற்றைப் பார்ப்போம்.

ஒரு குழந்தை வாசிக்கத் தொடங்­குமுன் அக்­கு­ழந்தை ஆயிரம் கதை­க­ளை­யா­வது கேட்­டி­ருக்க வேண்டும். வீட்டில் புத்­த­கங்கள் இருப்­பது தந்­தையின் கல்­வித்­த­ரத்தைப் போல் இரு மடங்கு முக்­கி­ய­மா­ன­தாகும். குறை­வான எழுத்­த­றி­வு­டைய பெற்­றோர்­களின் குழந்­தைகள் வாசிப்பில் மோச­மாக இருப்­ப­தற்கு 72% ஆன வாய்ப்பு இருக்­கின்­றது.

ஐந்து முதல் ஆறு வய­தி­ன­ரான குழந்­தைகள் 2,500 முதல் 5,000 சொற்கள் வரை தெரிந்து வைத்­தி­ருத்தல் வேண்டும்.

2008 ஆம் ஆண்டு ஆய்­வொன்றின் படி உல­கெங்­கு­முள்ள கல்­லூரி மாண­வர்­களில் மூன்றில் ஒருவர் ஒவ்­வோ­ராண்டும் பாட­சா­லை­யி­லி­ருந்து இடை­வி­லகிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த இடைக்­கா­லத்தில் இந்த வீதம் குறைந்­தி­ருக்­கின்­றதா? என்­பது தெரி­ய­வில்லை.

இரண்டாம் தரத்தில் ஒழுங்­காக வாசிக்க முடி­யாத ஒரு குழந்­தைக்கு தனது ஆரம்பக் கல்­வியை நிறைவு செய்­வ­தற்கு நான்கில் ஒரு வீத­மான வாய்ப்பே இருக்­கின்­றது.

வளர்ச்­சி­ய­டைந்த சில நாடு­களின் நிலை

நான்காம் வகுப்பில் திற­மை­யாக வாசிக்க முடி­யா­தோரில் கணி­ச­மானோர் சீர்­தி­ருத்­தப்­பள்­ளி­க­ளையோ, சிறைச்­சா­லை­க­ளையோ சென்­ற­டை­கி­றார்கள் என்று அமெ­ரிக்க ஆய்வு ஒன்று தெரி­விக்­கின்­றது. அமெ­ரிக்க சிறைக்­கை­தி­களில் 70% ஆனோர் நான்காம் தரத்­திற்­கு­ரிய வாசிப்புத் திற­னையே உடை­ய­வர்­களாய் இருக்­கின்­றனர். 50% ஆன அமெ­ரிக்­கர்கள் எட்­டாந்­த­ரத்­திற்­கு­ரிய புத்­த­கங்­களை வாசிக்க முடி­யா­த­வர்­க­ளா­க­வே­யி­ருக்­கின்­றார்கள். எழுத்­த­றிவின் சர்­வ­தேச மட்­டத்தில் அமெ­ரிக்கா 28 ஆம் இடத்தில் இருக்­கின்­றது.

2014 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வு ஒன்­றி­லி­ருந்து இங்­கி­லாந்தில் 11 வய­து­டைய குழந்­தை­களில் ஐந்தில் ஒருவர் திற­மை­யாக வாசிக்க முடி­யா­த­வ­ரா­யி­ருக்­கின்றார் எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

கன­டாவில் 42% ஆனோர் அரை எழுத்­த­றி­வு­டை­ய­வர்­க­ளா­கவே கணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அது மாத்­தி­ர­மின்றி, கடந்த 15 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக அந்­நாட்டு எழுத்­த­றிவு வீதத்தில் பெரி­தான மாற்­றங்­க­ளேதும் ஏற்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

சில ஆசிய நாடு­களின் நிலை

ஆசி­யா­வி­லேயே மிக மோச­மான எழுத்­த­றிவு வீதம் இந்­தி­யா­வுக்­கு­ரி­யது. எழுத்­த­றி­வற்­றோரின் தொகை 287 மில்­லியன். இதிலும் பெண்­களின் தொகையே அதி­க­மாகும். உலக எழுத்­த­றி­வற்றோர் தொகையில் இது 37% என “ஒக்ஸ்பாம் (OXFAM)” நிறு­வ­னத்­தகவல் தெரி­விக்­கின்­றது. ஏற்றத் தாழ்­வான சமூக, பொரு­ளா­தார வளர்ச்சி மற்றும் பாரம்­ப­ரிய பழக்க வழக்­கங்கள், மூட நம்­பிக்­கைகள் ஆகி­யன இதற்குக் கார­ண­மா­கலாம். வல்­ல­ரசு நிலையில் வளர்ந்து வரு­வ­தாகச் சொல்­லப்­படும் இந்­தியா எழுத்­த­றிவில் இந்த நிலையில் இருப்­பது வியப்­புக்­கு­ரி­ய­துதான்.

ஆனால், அமெ­ரிக்க மத்­திய உள­வுத்­துறை முக­வ­ர­மைப்பின் (சி.ஐ.ஏ.) தக­வல்கள் படி இந்­தியா உலக மட்­டத்தில் 124 ஆவது இடத்­திலும் பாகிஸ்தான் 144 ஆவது இடத்­திலும் இருக்­கின்­றன.

சீனாவில் எழுத்­த­றிவை சற்று வித்­தி­யா­ச­மான முறையில் மதிப்­பி­டு­கின்­றார்கள். சீன எழுத்­துக்கள் ஒவ்­வொன்றும் ஒரு குறி­யீ­டாக அமைந்­துள்­ளன. இவ்­வா­றான குறி­யீ­டுகள் 1,500 ஐ கிரா­மப்­பு­றத்­த­வர்கள் தெரிந்து வைத்­தி­ருக்க வேண்டும். நகர்ப்­பு­ற­மாயின் அது 2,000 குறி­யீ­டுகள். அவ்­வா­றாயின் அவர் எழுத்­த­றி­வுள்­ளவர்.

சீனப்­பு­ரட்­சிக்கு முன் 80% ஆனோர் எழுத்­த­றி­வற்­ற­வர்­க­ளா­யி­ருந்­தார்கள். இன்று 15 – 24 வய­து­டை­யோரில் 99% ஆனோர் எழுத்­த­றி­வு­டை­ய­வர்­க­ளா­யி­ருக்­கின்­றார்கள்.

இலங்­கையின் எழுத்­த­றிவு வீதம் 92 ஆகும். ஆண்கள் 93%, பெண்கள் 91%. ஆண்­க­ளுக்கும் பெண்­க­ளுக்­கு­மி­டை­யி­லான வித்­தி­யாசம் 1.9%. சர்­வ­தேச மட்­டத்தில் 83 ஆவது இடத்தில் இருக்­கின்­றது. 82 ஆவது இடத்தில் மியன்­மாரும் 84 ஆவது இடத்தில் கொஸோ­வாவும் உள்­ளன. இலங்­கையின் நிலை உலகச் சரா­ச­ரி­யிலும் பிராந்திய சராசரியிலும் மேம்பட்டதாகும். இது குறித்து நாம் பெருமை கொள்ளலாம். உலகச் சராசரி 86% என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வடகொரியாவுக்கு முதலிடம்

வடகொரியாதான் எழுத்தறிவில் உலகில் முதலாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடம் லட்வியாவுக்குத்தான். மூன்றாவது இடத்தை அஸர்பைஸ்தானும் கியூபாவும் பகிர்ந்து கொண்டுள்ளன. கடைசியான 160 ஆவது இடத்தில் உள்ளது நைகர் ஆகும்.

16 – 65 வயதினரிடையே மேற்கொள்ளப் பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து உடல்நலக் குறைவுடையோர் குறைவான எழுத்தறிவுடை யோராய் இருப்பது தெரியவந்துள்ளது.

எழுத்தறிவுடையோரை விட எழுத்தறி வற்றோர் குறைவாக வாக்களிப்போராய் உள்ளனர் என்பதும் சுவையான தகவலே.

http://www.virakesari.lk/article/11012

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.