Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் மீது தாக்குதல்?

Featured Replies

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் மீது தாக்குதல்?
 
 
உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் மீது தாக்குதல்?
உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் சிரானி மில்ஸ்சை, பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
 
கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மாணவிகளின் போராட்டம் தொடர்ந்து வருகின்ற நிலை யில், வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையில் சம்பிரதாயபூர்வமாக பதவியேற்ற பின்னர் புதிய அதிபர் இன்று பாடசாலைக்கு வந்துள்ளார்.
 
அப்போது மாணவிகள் அவரை பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்காது வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது புதிய அதிபருக்கு ஆதரவான சிலர், மாணவிக ளைத் தாக்கியதாக கூறப்படுகிறது. பெயர் குறிப்பிட விரும்பாத குறித்த பாடசாலையின் பழைய மாணவி ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
 
இந்நிலையில், பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ள்ளதுடன் குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படு கின்றது.
 
இதேவேளை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மேலும் மூன்று மாணவிகள் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

http://onlineuthayan.com/news/17289

  • தொடங்கியவர்

 

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபரை பதவி நீக்கும் நடவடிக்கைக்கு தொடர்ந்தும் மாணவிகள் எதிர்ப்பு

  • தொடங்கியவர்

உடுவில் மகளீர் கல்லூரி பிரச்சனை உச்சம். பொலிஸ் குவிப்பு. இன்றும் மாணவிகள் மூவர் மயக்கம்

 
உடுவில் மகளீர் கல்லூரி பிரச்சனை உச்சம். பொலிஸ் குவிப்பு. இன்றும் மாணவிகள் மூவர் மயக்கம்

உடுவில் மகளீர் கல்லூரி அதிபர் மாற்றம் தொடர்பிலான பிரச்சனை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இன்றைய தினமும் பாடசாலை மாணவிகள் மூவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

 
உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் சிரானி மில்ஸை பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் கடந்த 3 ஆம் திகதி முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
 
இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை காலை, இதுவரை  பாடசாலையில் உப அதிபராக இருந்த திருமதி பற்ரீசியா சுனித்தாவை புதிய அதிபராக பாடசாலையின் ஆளுநர் சபை,  நியமித்தது.
 
இதனை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகள் பழைய மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியமையால் , இன்றைய தினம் புதிதாக நியமனம் பெற்றுக்கொண்ட அதிபர் வட்டுக்கோட்டையில் வைத்தே நியமனம் பெற்றுக்கொண்டார்.
 
நியமனம் பெற்றுக்கொண்ட புதிய அதிபர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் சிலர் ஒன்றிணைந்து இன்று மாலை பாடசாலை வளாகத்தினுள் உட்பிரவேசிக்க முற்பட்ட வேளை , போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் , அவர்களை பாடசாலை வாளகத்தினுள் உட்பிரவேசிக்க அனுமதிக்கவில்லை. 
 
இதனால் பாடசாலை வாயில் கதவருகில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதன் போது தம் மீது புதிய அதிபருடன் வந்தவர்கள் தாக்குதல் மேற்கொண்டதாகவும் , மாணவிகள் என பொருட்படுத்தாமல் தம்மை இழிவாக பேசியதாகவும் , போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மாணவிகள் தெரிவித்தனர். 
 
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை தள்ளி விட்டு புதிய அதிபரும் அவருடன் வந்தவர்களும் பாடசாலை வளாகத்தினுள் உட்பிரவேசித்ததாகவும் , போராட்டத்தில்  ஈடுபட்டு இருந்தவர்கள் தெரிவித்தனர். 
 
 
அச் சம்பவத்தில் மூன்று மாணவிகள் மயக்கமுற்றதாகவும் , அதனை அடுத்து அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு சென்றதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். 
 
இந்த சம்பவங்களை அடுத்து பாடசாலை வாளகத்தினுள் பெருமளவான பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 
 
பாடசாலை வளாகத்தை சூழ உள்ள பகுதிகளில் இருந்து ஊடகவியலாளர்கள் , உட்பட அனைவரையும் பொலிசார் வெளியேற்றி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுக்களை நடாத்தினர். 
 
பொலிசாரின் பேச்சுக்கள் தோல்வி யடைந்ததை தொடர்ந்து போராட்டம் தொடர்ந்து வருகின்றது. அந்நிலையில் பாடசாலை வளாகத்தினுள் பெருமளவான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இரவும் போராட்டம் தொடர்கின்றது.
 
இந்நிலையில் நாளைய தினம் பாடசாலை மூன்றாம் தவணைக்காக மீள ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் பாடசாலைக்கு பெருமளவான மாணவிகள் வரவுள்ள நிலையில் போராட்டம் மேலும் வலு பெறும் நிலை காணப்படுகின்றது.
 
அத்துடன் நாளைய தினம் , புதிதாக நியமனம் பெற்ற அதிபர் தனது பொறுப்புக்களை பொறுப்பேற்று  கடமைகளை தொடரவுள்ளார். 
 
 புதிய அதிபராக கடமையேற்றவர் , தமது கடமையை தொடர்வார் எனில் , போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் பழிவாங்க பட கூடிய சூழல் ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கவலை தெரிவித்து உள்ளனர். 
 
அதிபர் மாற்றத்திற்கான போராடத்தின் பின்னணியில் தற்போது அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் வாதிகள் பலர் பின்புலமாக செயற்படுகின்றனர். 
 
புதிய அதிபருக்கு ஆதரவாக , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் , பழைய அதிபர் , மற்றும் போராட்ட கார்களுக்கு  ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்புலமாக உள்ளனர். என தெரிவிக்கப்படுகின்றது. 
 
அதேவேளை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சில மாகாணசபை உறுப்பினர்களும் இந்த பிரச்சினை சமூகமாக தீர்க்கப்பட்டு மாணவிகள் தமது கல்வியை தொடர வேண்டும் என சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேச்சுக்களை நடாத்தி வருகிறனர்.
 
இதேவளை  'உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி சிரானி மில்ஸ், 7 ஆம் திகதியன்று (இன்று) 60 வயதைப் பூர்த்தி செய்யவிருப்பதால், அவர் தனது பிறந்த தினத்துடன் ஓய்வுபெறுவார் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் புதிய அதிபர் நியமிக்கப்பட்டார். எனினும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பி மாணவர்களையும், பொதுமக்களையும் குழப்பும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்' என பேராயரும், கல்லூரியின் தலைவருமான பேரருட் கலாநிதி டீ.எஸ்.தியாகராஜா,  விளக்கமளித்து , ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
cleardot.gif

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135726/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

மாணவிகளை வீடியோ எடுத்து மிரட்டிய பொலிஸார் - உடுவில் மகளீர் கல்லூரி சூழலில் தொடரும் பதட்டம்

 

மாணவிகளை வீடியோ எடுத்து மிரட்டிய பொலிஸார் - உடுவில் மகளீர் கல்லூரி சூழலில் தொடரும் பதட்டம்



உடுவில் மகளீர் கல்லூரி மாணவிகளை பெற்றோர் தடுக்க தடுக்க வீடியோ எடுத்து சுன்னாக பொலிஸார் மிரட்டி உள்ளனர். உடுவில் மகளீர் கல்லூரி இன்றைய தினம் மீள ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் பழைய அதிபருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் புதிய அதிபர் தலைமையில் அவருக்கு ஆதரவான ஆசிரியர்கள் கலந்துரையாடல் நடத்தினர்.



அதில் இருந்து வெளியேறிய மாணவிகள் தமது பெற்றோருடன் வீடு செல்ல முற்பட்டவேளை அதனை பொலிஸார் தடுத்து நிறுத்தியதனையும் மீறி பெற்றோர் தமது பிள்ளைகளை அழைத்து செல்ல முற்பட்ட போது அந்த மாணவிகளை பொலிஸார் வீடியோ எடுத்துள்ளனர்.

அதனை பெற்றோர் தடுக்க முற்பட்ட போது அதனையும் மீறி வீடியோ எடுத்ததுடன் பெற்றோரை மிரட்டியதுடன்  பெற்றோரையும் வீடியோ எடுத்துள்ளனர்.



அத்துடன் அங்கு நின்ற ஊடகவியலாளர்களையும் பொலிசார்  வீடியோ  எடுத்த போது  அது தொடர்பில் ஊடகவியளாலர்கள் கேள்வி எழுப்பிய பொழுது அவர்களை தள்ளி விட்டு மிரட்டல் விடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு பாடசாலைக்குள் தடுத்து வைத்திருக்கும் மாணவிகளை மீட்டு தருமாறு பெற்றோர் அறிவித்து இருந்ததனை அடுத்து அங்கு வந்த மனித உரிமை ஆணைக்குழுவை சேர்ந்தவர்களையும் பாடசாலைக்குள் செல்வதற்கு பொலிஸார் அனுமதி மறுத்திருந்தனர்.



அதனை அடுத்து மனித உரிமை ஆணைக்குழுவை சேர்ந்தவர்கள். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்து தாம் பாடசாலைக்குள் சென்று மாணவிகளை சந்திப்பதற்கான அனுமதியினை பெற்றுக்கொண்டனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135741/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.