Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதனை சாதித்தது பான் கீ மூனின் விஜயம்?

Featured Replies

ஐ.நா.செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இரண்­டா­வது தட­வை­யாக இலங்­கைக்கு மேற்­கொண்­டி­ருந்த விஜயம் முக்­கிய விட­யங்கள் பல­வற்றைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது. 

அர­சாங்­கத்­தினால் 2009 ஆம் ஆண்டு விடு­த­லைப்­பு­லிகள் ஆயுத ரீதி­யாகத் தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருந்த சூட்­டோடு, அவ­ரு­டைய முத­லா­வது விஜயம் அமைந்­தி­ருந்­தது. முள்­ளி­வாய்க்கால் என்ற கட­லோரப் பிர­தே­சத்தில் ஒரு சிறிய நிலப்­ப­கு­திக்குள் முற்­று­கை­யி­டப்­பட்­டி­ருந்த விடு­த­லைப்­பு­லிகள் மீது மோச­மான தாக்­கு­தல்கள் தொடுக்­கப்­பட்­டி­ருந்­தன. அவர்­களும் அந்தத் தாக்­கு­தலை எதிர்த்து மூர்க்­க­மாகப் போரிட்­டி­ருந்­தார்கள். இந்த மோதல்­க­ளுக்­கி­டையில் மூன்று லட்­சத்­துக்கும் அதி­க­மான பொது­மக்கள் சிக்கி சின்­னா­பின்­ன­மா­கி­யி­ருந்­தார்கள். 

அங்கு சிக்­கி­யி­ருந்­த­வர்­க­ளுக்கு ஊழிக்­கால அழிவை நிதர்­ச­ன­மாக்­கி­யி­ருந்த நிலை­மைகள் தொடர்­பாக ஐ.நா. மன்றம் குறிப்­பாக அதன் செய­லாளர் நாயகம் முதற் தர அறிக்­கை­களின் மூலம் தெளி­வாக அறிந்­தி­ருந்தார். அந்த மோதல்­களின் போது ஐ.நா. மன்­றத்தின் விசேட பிர­தி­நி­தி­யாக கொழும்­புக்கு அனுப்­பப்பட்­டி­ருந்த விஜய் நம்­பியார், விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான கடும்­போக்­கினைக் கொண்­டி­ருந்த இந்­தி­யாவின் நிலைப்­பாட்­டையே பிர­தி­ப­லித்­தி­ருந்தார் என்று இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்­களில் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. 

முள்­ளி­வாய்க்­காலில் பொது­மக்கள் தமது உயிர்­க­ளுக்­காகப் போரா­டிக்­கொண்­டி­ருந்த அதே­நேரம், விடு­த­லைப்­பு­லிகள் யுத்த நிறுத்­தத்தை மேற்­கொள்­வ­தற்கும், அர­சாங்­கத்­திடம் சர­ண­டை­வ­தற்­கு­மான முயற்­சி­க­ளுக்­காக முக்­கிய சர்­வ­தேச இராஜ­தந்­தி­ரிகள் மற்றும் ஊட­கத்­துறை சார்ந்தோர் மட்­டு­மல்­லாமல், அர­சாங்­கத்­திற்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளு­டனும் தொடர்­பு­களை ஏற்­படுத்தியி­ருந்­தனர். அந்த வேளை, அமை­தி­காக்கும் கொள்­கையைக் கடைப்­பி­டித்­தி­ருந்த ஐ.நா. செய­லாளர் நாய­கத்தின் விசேட பிர­தி­நி­தி­யா­கிய விஜய் நம்­பியார் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கேட்­டுக்­கொண்­ட­தற்கு அமை­வாக விடு­த­லைப்­பு­லி­களின் தலை­வர்­க­ளுடன் தொடர்பு கொள்­வ­தற்கு மறுத்­தி­ருந்­த­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. 

இந்திய பிர­தமர் ராஜீவ் காந்­தியின் படு­கொ­லை­யை­ய­டுத்து, இந்­தி­யர்கள் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராகக் கொண்­டி­ருந்த அணு­கு­மு­றையின் அடிப்­ப­டையில் முக்­கி­ய­மான இராஜ­தந்­தி­ரி­யாக இருந்த போதிலும், இந்­தியப் பிர­ஜை­யா­கிய விஜய் நம்­பி­யாரை யுத்த மோதல்கள் தீவி­ர­ம­டைந்து, பொது­மக்கள் வகை­தொ­கை­யின்றி கொல்­லப்­பட்டும், அவர்­க­ளுக்கு எதி­ராக அரசு மருந்து உணவுப் பொருட்கள் என்­ப­வற்றை ஆயு­த­மாகப் பிர­யோ­கித்தும் கடு­மை­யாக நடந்து கொண்­டி­ருந்த வேளையில், ஐ.நா. செய­லாளர் நாய­கத்தின் விசேட பிர­தி­நி­தி­யாக விஜய் நம்­பி­யாரை இலங்­கைக்கு அனுப்­பு­வது குறித்து பான் கீ மூனின் நெருங்­கிய இரா­ஜ­தந்­தி­ரி­களும் அதி­க­ாரி­களும் வியப்­ப­டைந்­தி­ருந்­தார்கள். 

ஐ.நா.செய­லாளர் நாய­கத்தின் விசேட பிர­தி­நி­தி­யாக இலங்­கைக்கு வந்­தி­ருந்த விஜய் நம்­பியார், யுத்த கள நிலை­மைகள் குறித்த சரி­யான தக­வல்­களை அறிந்­தி­ருந்தும் முறை­யாகச் செயற்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் அப்­போது அவர் மீது சுமத்தப்பட்­டி­ருந்­தது. அவர் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நடுப்­ப­கு­தியில் யுத்த களத்­திற்கு விஜயம் செய்­தி­ருந்த போதிலும், இரா­ணுவ அதி­கா­ரிகள், முக்­கிய இரா­ணுவ தள­ப­தி­க­ளா­னாலும், அவர்­க­ளு­டைய யுத்­த­கள நட­வ­டிக்­கைகள் பின்­னாளில் யுத்­தக்­குற்றச் செயல்­க­ளுக்குப் பொறுப்பு கூற வேண்­டி­யி­ருக்கும் என்ற மனித உரிமை நிலை­மையை அவர்­க­ளுக்குச் சுட்­டிக்­காட்டத் தவ­றி­யி­ருந்தார் என்றும் அந்தக் குற்­றச்­சாட்டில் குறிப்­பி­டப்­பட்­டிருந்தது. 

ஐ.நா.செய்த பரி­காரம் என்ன?

மனிதப் பேர­ழிவு இடம்­பெற்ற இறுதி யுத்­தத்­தின்­போது, யுத்த மோதல்­களில் மூன்று லட்­சத்து 60 ஆயிரம் பேர் சிக்­கி­யி­ருந்­தனர் என்றும் அவர்­களில் 80 ஆயிரம் பேர் தொடர்ச்­சி­யான ஷெல் வீச்­சுக்கள், குண்டுத் தாக்­கு­தல்கள், நோய் மற்றும் பட்­டினி கார­ண­மாகக் கொல்­லப்­பட்­டார்கள் என்றும் பின்னர் வெளி­வந்த ஐ.நா.வின் பேட்றி அறிக்கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இதனை அறிந்­தி­ருந்­தும்­கூட விஜய் நம்­பியார் ஐ.நா. மன்­றத்தின் உய­ர­தி­காரி என்ற வகையில் உரி­ய­மு­றையில்  நடந்து கொள்­ள­வில்லை என சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. 

அது மட்­டு­மல்­லாமல், இறுதி யுத்­தத்­தின்­போது, முன்­னரே இணங்கி ஏற்­றுக்­கொண்ட ஏற்­பாட்­டின்­படி, விடு­த­லைப்­பு­லி­களின் சமா­தான செயலர் புலித்­தேவன், அர­சி­யல்­துறை பொறுப்­பாளர் நடேசன் மற்றும் பெரும் எண்­ணிக்­கை­யி­லான போரா­ளிகள் உள்­ளிட்ட நூற்­றுக்கும் மேற்­பட்­ட­வர்கள்  வெள்ளைக் கொடி­களை ஏந்­தி­ய­வாறு இரா­ணு­வத்­திடம் சர­ண­டை­வ­தற்­காக வந்­த­போது படு­கொலை செய்­யப்­பட்ட விவ­கா­ரத்­திலும் விஜய் நம்­பியார் நேர்­மை­யாக நடந்து கொள்­ள­வில்லை என்று குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்தக் குற்­றச்­சாட்­டுக்கள் இன்னும் குற்­றச்­சாட்­டுக்­க­ளா­கவே இருக்­கின்­றன. அந்­தக்­குற்­றச்­சாட்­டுக்கள் பொய்­யா­னவை என்றோ, அவற்­றுக்கும் விஜய் நம்­பி­யாரை முதன்­மை­யாகக் கொண்ட ஐ.நா. செய­லாளர் நாயகம் உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கும் சம்­பந்தம் இல்லை என்றோ இன்னும் ஆதா­ர­பூர்­வ­மாக நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை. 

யுத்த களத்தில் அப்­பாவிப் பொது­மக்கள் அநி­யா­ய­மாகக் கொல்­லப்­பட்­டி­ருந்த போதிலும், ஐ.நா. வெளி­யிட்­டி­ருந்த பேட்றி அறிக்கை என்­ற­ழைக்­கப்­படும் அறிக்­கையில் அந்த உயிர்ச் சேதங்கள் பற்­றிய விப­ரங்­களை வெளி­யி­டு­வ­தற்கு விஜய் நம்­பியார் பெரும் தடை­யாக இருந்தார். அதற்கு அனு­ம­திக்­கவே இல்லை என்ற கசப்­பான உண்­மையும் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்த வகை­யி­லேயே முள்­ளி­வாய்க்கால் விட­யத்தில் ஐ.நா. முறை­யாகச் செயற்­ப­ட­வில்லை. அங்கு நிகழ்ந்த மனிதப் பேர­ழிவைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு வல்­லமை இருந்த போதிலும், எந்த வகை­யிலும் செயற்­ப­ட­வில்லை என்ற பாரிய குற்­றச்­சாட்டு எழுந்­தி­ருந்­தது. இதனை ஐ.நா. செய­லாளர் நாய­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த மூன்று நிபு­ணர்­களை உள்­ள­டக்­கிய தருஸ்மன் அறிக்கை (2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளி­வந்­தது) மிகத் தெளி­வாக சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது, இந்த அறிக்­கையின் அடிப்­ப­டையில் முள்­ளி­வாய்க்கால் சம்­ப­வங்­களில் ஐ.நா.வின் பங்­க­ளிப்பு குறித்து சாள்ஸ் பேட்றி என்­பவரால் ஆராய்ந்து  2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பேட்றி அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது என்­பது குறிப்பிடத்­தக்­கது. 

ஐ.நா. மன்றம் அதி­கார வல்­ல­மையைக் கொண்­டி­ருந்த போதிலும், நேர்­மை­யான முறையில் இலங்­கையின் இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் என்­ப­வற்றைத் தடுத்து நிறுத்­தவோ அது குறித்து உரிய முறையில் அரச தரப்­பி­ன­ருக்குச் சுட்­டிக்­காட்டி நிலை­மையை சீர்­செய்­யவோ தவ­றி­யி­ருந்­தது என்­பதை தனது நிபுணர் குழு அறிக்கை மற்றும் அதற்குப் பின்னால் வந்த பேட்றி அறிக்கை மூல­மா­கவும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்த ஐ.நா. செய­லாளர் நாயகம், ஐ.நா.வின் அந்தத் தவ­றுக்கு என்ன பரி­காரம் செய்தார் என்ற கேள்­விக்கு இன்­று­வரை பதி­ல­ளிக்­கப்­ப­ட­வில்லை. 

இலங்கை விட­யத்தில் ஐ.நா. தவ­றி­ழைத்­து­விட்­டது என்­பதை அவர் முன்­னமே பகி­ரங்­க­மாக  ஒப்­புக்­கொண்­டி­ருந்தார். இரண்­டா­வது தட­வை­யாக இலங்­கைக்கு வருகை தந்­த­போதும், அதனை, பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் மீண்டும் ஏற்­றுக்­கொண்­டி­ருந்தார். அதற்­காக அவர் வருத்­தமும் தெரி­வித்­தி­ருந்தார். 

சாதா­ரண குடி­ம­க­னும்­சரி, பொறுப்பு வாய்ந்த அதி­கா­ரி­க­ளும் ­சரி மனித உரிமை மீறல் என்ற குற்­றச்­சாட்டைப் புரி­யும்­போது, அதனை மிகத் தீவி­ர­மான ஒரு குற்றச் செய­லா­கவும், பாதிப்­பு­மிக்­க­தொரு விட­ய­மா­கவும் நோக்­கப்­ப­டு­வதே இயல்­பாகும். இந்த நிலையில் மனித உரிமை காவலன் என்று கரு­தப்­ப­டு­கின்ற ஐ.நா. மன்றம் - ஐ.நா. செய­லாளர் நாய­கமும் அவரைச் சார்ந்­த­வர்­களும், இலங்­கையில் இடம்­பெற்ற மனிதப் பேர­ழி­வின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­களைத் தடுத்து நிறுத்தத் தவ­றி­ய­மைக்கு எந்த வகையில் பொறுப்பு கூறி­யி­ருக்­கின்­றார்கள் என்ற கேள்வி இயல்­பா­கவே எழு­கின்­றது. 

நடந்து முடிந்­த­வற்­றுக்குப் பொறுப்பு கூற­வு­மில்லை. இது­வ­ரையில் நீதி வழங்­கப்­ப­ட­வு­மில்லை. இந்த நிலையில் தொடர்ந்து மனித உரி­மைகள் மீறப்­ப­டு­வது மட்­டு­மல்ல. அடிப்­படை உரி­மை­களும் அப்­பட்­ட­மாக மீறப்­ப­டு­கின்­றன. அவற்றைக் கூட ஐ.நா.­வினால் தடுத்து நிறுத்த முடி­ய­வில்லை என்­ப­துதான் மிகுந்த கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். 

அப்­பட்­ட­மான அடிப்­படை

உரிமை மீறல்கள்

ஏனெனில் முள்­ளி­வாய்க்­காலில் முடி­வ­டைந்த இலங்­கையின் இறுதி யுத்­தத்தின் போது மட்­டு­மல்­லாமல், யுத்­தத்தின் பின்­ன­ரான கடந்த ஏழு வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட காலத்­தி­லும்­கூட அப்­பட்­ட­மான மனித உரிமை மீறல்கள், இன ரீதி­யா­னதும், மத ரீதி­யா­ன­து­மான ஒடுக்­கு­முறை வடி­வத்தில் இடம்­பெற்று வரு­கின்­றன. இவற்றை ஐ.நா. மனித உரிமைகள் ஆணை­யா­ளரும், ஐ.நா. செய­லாளர் நாய­கமும் நன்­க­றி­வார்கள். 

ஒரு நாட்டின் இறைமை என்­பது மக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது. ஒரு தேசத்தில் உள்ள மக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே ஒரு நிலப்­ப­கு­தியை நாடு என்று குறிப்­பி­டு­கின்­றார்கள். மக்கள் வசிக்­காத நிலப்­பி­ர­தேசம் வனாந்­தரம், பாலை­வனம் அல்­லது மலைப்­பி­ர­தேசம் என அதன் தன்­மைக்கு ஏற்­ற­வ­கையில் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. 

மக்கள் எப்­போதும் நிலப்­ப­கு­தி­யி­லேயே தமது வாழ்க்­கையை அமைத்துக் கொள்­கின்­றார்கள். எனவே மக்கள் வசிப்­ப­தற்கு நிலம் மிகவும் அவ­சி­ய­மா­னது. நிலம் அல்­லது காணி இல்­லா­விட்டால், மக்கள் வசிக்க முடி­யாது. மக்கள் இல்­லா­விட்டால், அங்கு அர­சு­மில்லை. ஆட்­சி­யு­மில்லை என்­பதை சொல்லித் தெரிய வேண்­டி­ய­தில்லை. 

இந்த நிலையில் யுத்­தத்­திற்கு முன்னர் மக்கள் தங்கள் தங்கள் நிலங்­களில் காணி­களில் வசித்து வந்­தார்கள். இது வர­லாற்று உண்மை. இதனை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு ஆதாரங்கள் அவ­சி­ய­மில்லை. ஆனால் யுத்த மோதல்­க­ளின்­போது விடு­த­லைப்­பு­லிகள் நிலை­கொண்­டி­ருந்­தார்கள் என்­ப­தற்­காக அந்த நிலங்கள் அல்­லது காணிகள் யாவும் அவர்­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றிய இரா­ணுவத்­தி­ன­ருக்கே சொந்தம் என்ற ஒரு சித்­தாந்­தத்தின் அடிப்­ப­டையில் மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கமும், அதனைப் பின்­பற்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அர­சோச்சி வரு­கின்றனர். 

யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களில் விடு­த­லைப்­பு­லிகள் உரு­வா­வ­தற்கு முன்பே மக்கள் காணி­களில் வசித்து வந்­துள்­ளார்கள். விடு­த­லைப்­பு­லிகள் தமது செயற்­பா­டு­க­ளுக்­காக பொது­மக்­களின் காணி­க­ளையும், பொதுக் காணி­க­ளையும், இன்னும் காட்­டுப்­பி­ர­தே­சங்­க­ளையும் பயன்­ப­டுத்தி வந்­தார்கள். இதுதான் யதார்த்தம். 

இந்த நிலையில் விடு­த­லைப்­பு­லிகள் ஏதோ தாங்­களே காணி­களை நிலங்­களை எங்­கி­ருந்தோ கொண்­டு­வந்து அவற்றில் நிலை­கொண்­டி­ருந்­தது போன்ற கருத்­தோட்­டத்தில் விடு­த­லைப்­பு­லிகள் வச­மி­ருந்த காணிகள் யாவும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கே சொந்தம் என்று அதி­காரத் திமி­ரோடு இரா­ணு­வத்­தினர் பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை ஆக்­கி­ர­மித்து அங்கு நிலை­கொண்­டி­ருக்­கின்­றார்கள். அந்தக் காணி­களைத் திருப்பித் தாருங்கள் என கேட்டால், தேசிய பாது­காப்­புக்­காக இரா­ணுத்­தினர் நிலை­கொண்­டி­ருக்­கின்­றார்கள். எனவே, அந்தக் காணி­களைக் கைய­ளிக்க முடி­யாது. வேண்­டு­மானால் உங்­க­ளுக்கு வேறி­டங்­களில் காணிகள் தரு­கின்றோம். அல்­லது நட்­ட­யீடு தரு­கின்றோம் என்று அடா­வ­டித்­த­ன­மாக இரா­ணுவத்­தி­ட­மி­ருந்து பதில் வருகின்றது. அதனை ஆமோ­திக்கும் வகையில் அர­சாங்­கமும் நடந்து கொள்­கின்­றது. 

ஒரு மனிதன் உயிர்­வாழ்­வ­தற்கு காற்று, உணவு, நீர் என்­பன அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளாக இருக்­கின்­றன. இவை மூன்றும் இருந்­தாலும், அவன் வசிப்­ப­தற்கு நிலம் - காணி தேவை. காற்று, உணவு நீர் என்­ப­வற்றைப் போலவே, நிலமும் இயற்­கையின் கொடை­யாக மனி­த­னுக்கு அளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அவற்றை உரிமை கொள்­வது மனி­தனின் பிறப்­பு­ரிமை. அது அவனின் அடிப்­படை உரிமை. ஆனால் அந்த உரிமை – குறிப்­பாக காணி உரிமை இங்கு யுத்­தத்தின் பின்னர் அப்­பட்­ட­மாக அர­சாங்­கத்­தினால் மீறப்­பட்டு வரு­கின்­றது. 

இரண்­டா­வது தட­வை­யாக இலங்­கைக்கு விஜயம் செய்த ஐ.நா. செய­லாளர் நாயகம் பன் கி மூனின் கண்­களில் பட­வில்­லையா அல்­லது அவ­ரு­டைய கவ­னத்தை இது ஈர்க்­க­வில்­லையா என்­பது தெரி­ய­வில்லை. 

ஐ.நா.செய­லாளர்

நாய­கத்தின் நிலைப்­பாடு

இரண்­டா­வது தட­வை­யாக இலங்கை வந்த ஐ.நா. செய­லாளர் நாயகம் முதல் முறையைப் போல் அல்­லாமல் முக்­கிய இடங்­களைப் பார்­வை­யிட முடிந்­துள்­ளது. யாழ்ப்­பா­ணத்­திற்குச் சென்ற அவர் அங்கு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னரை இரண்டு பிரி­வாக தனித்­த­னியே சந்­தித்­துள்ளார். அத்­துடன் ஆளுநர் ரெஜினோல்ட் குரே­யையும் அவர் சந்­தித்து வட­மா­காண நிலை­மைகள் குறித்து அரச தரப்பில் இருந்து கேட்­ட­றிந்து கொண்டார். 

ஆயினும் அவரை நேர­டி­யாகச் சந்­தித்து தமது குறை­க­ளையும் மனத்­தாங்­கல்­க­ளையும் வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக வீதி­களில் காத்­தி­ருந்த பாதிக்­கப்­பட்ட பொது­மக்­களை அவரால் சந்­திக்க முடி­ய­வில்லை. பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக அவ­ருக்கு அதற்கு பாது­காப்புத் தரப்­பினர் இட­ம­ளிக்­காமல் இருந்­தி­ருக்­கலாம் என்­பதைப் புரிந்து கொள்ள முடி­கின்­றது. 

ஆயினும் அவர் மீள்­கு­டி­யேற்­றப்பட்டுள்ள சில குடும்­பங்­களைப் பார்த்து அவர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கின்றார். இதன் மூலம் இடம்­பெ­யர்ந்­துள்ள மக்கள் தொடர்பில் அரச தரப்பில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள முன்­னேற்றச் செயற்­பா­டு­களை அவர் நேரில் கண்­ட­றிந்து கொள்ள வாய்ப்பு ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டி­ருந்­தது என்றே கருத வேண்­டி­யி­ருக்­கின்­றது. 

பாதிக்­கப்­பட்ட மக்கள் தங்­க­ளுக்கு நீதி நியாயம் வழங்­கப்­ப­ட­வில்லை. பாதிப்­பு­க­ளுக்­கு­ரிய நிவா­ரணம் வழங்­கப்­ப­ட­வில்லை. அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் எடுக்­க­வில்லை. தமது உரி­மைகள் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. தமக்கு அநீதி இழைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதை எடுத்­துக்­கூ­று­வ­தற்­காக அவ­ரு­டைய வரு­கையை ஆவ­லோடு எதிர்பார்த்திருந்­தார்கள். 

ஆனால் மறு­பு­றத்தில் நாங்கள் முன்னரைப் போல் அல்லாமல் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இன்னும் முன்னேற்றம் காண்பதற்கு எமக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசாங்கம் தற்போதைய நிலைமைகளைச் சுட்டிக்காட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது. மேலும் முன்னேறுவதற்கு எமக்கு உதவுங்கள் என்பது அரச தரப்பு கோரிக்கை. இன்னும் நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு உதவுங்கள் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாகும். 

பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில்; அவருடன் பேச்சுக்கள் நடத்திய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் புதிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச நீதி விசாரணை உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய  பிரேரணையை முற்று முழுதாக நிறைவேற்ற வேண்டும் என ஐ.நா. செயலா

ளரிடம் வலியுறுத்தியிருப்பதாகக் கூறியுள்ளனர். 

அதனை அவர் ஏற்றுக்கொண்டாலும் சர்வதேச விசாரணை என்ற விடயம் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் குறித்து கருத்து எதனையும் வெளியிடவில்லை. அரசாங்கம் பொறுப்பு கூறலுக்கான பொறிமுறையை உருவாக்கும்போது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாத்திரமே கூறியிருக்கின்றார். 

அதேநேரம் அவர் அரசாங்கத்தின் மீது அழுத்தம் எதனையும் பிரயோகிக்கவில்லை. இன்னும் கால அவகாசம் கேட்டோம் அதனை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பொது மக்களைப் பொறுத்தமட்டில் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இரண்டாவது விஜயம் அவர்களை இலவுகாத்த கிளியின் நிலைமைக்கே தள்ளியிருப்பதாகவே கருத வேண்டியிருக்கின்றது.  

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=07/09/2016

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.