Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறையின்போது கேபிஎன் பேருந்துகளை எரித்த வழக்கில் 7 பேர் கைது: பெண் உட்பட 10 பேருக்கு வலைவீச்சு

Featured Replies

 

பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறையின்போது கேபிஎன் பேருந்துகளை எரித்த வழக்கில் 7 பேர் கைது: பெண் உட்பட 10 பேருக்கு வலைவீச்சு

 

 
பெங்களூருவில் தீ வைத்து கொளுத்தப்பட்ட கேபிஎன் பேருந்துகள். (கோப்புப் படம்)
பெங்களூருவில் தீ வைத்து கொளுத்தப்பட்ட கேபிஎன் பேருந்துகள். (கோப்புப் படம்)

பெங்களூருவில் தமிழகத்தின் கேபிஎன் நிறுவன பேருந்துகள் எரிக்கப்பட்ட வழக்கில் 7 பேரை கர்நாடக போலீஸார் கைது செய்துள்ளனர். ஒரு பெண் உட்பட 10 பேரை தேடி வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ கத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப் பட்டதை எதிர்த்து, கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் கடந்த 12-ம் தேதி வன்முறையில் ஈடுபட் டனர்.

பெங்களூருவில் மைசூரு சாலையில் உள்ள டிசவுசா நகரில், கேபிஎன் நிறுவனத்துக்கு சொந்தமான 42 பேருந் துகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. இந்தப் பேருந்துகளுக்கு கன்னட அமைப்பினர் தீ வைத்ததில் 42 பேருந்துகளும் எரிந்து நாசமாயின. கேபிஎன் நிறுவன பேருந்துகள் உட்பட பெங்களூருவில் 200-க்கும் மேற் பட்ட தமிழக வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

தீவைப்பு சம்பவம் தொடர்பாக கேபிஎன் நிறுவன ஊழியர் வெங்கடாசலம் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கேபிஎன் நிறுவன ஊழியர்கள் எடுத்த வீடியோ மற்றும் ஊடகங்களில் வெளியான வீடியோ ஆதாரங்களும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் டிசவுசா நகரை சேர்ந்த ரக் ஷித் (19), சந்தன் (19), சதீஷ் (27), லோகேஷ் (25), கிரண் கவுடா (27), கெம்பேகவுடா (28), பிரகாஷ் (46) ஆகிய 7 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 (சட்ட விரோதமாக கூடுதல்), 147 (கலவரம் செய்தல்), 427 (சேதம் விளைவித்தல்), 324 (பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்), 435 (தீ வைத்து எரித்து பெரிய இழப்பு ஏற்படுத்துதல்) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைதான 7 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வன்முறையை நேரில் பார்த்தவர்கள் அளித்த சாட்சியம் மூலம், இதில் ஒரு பெண் உட்பட மேலும் 10 பேர் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள 10 பேரையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அப்பாவிகள் கைது?

இதனிடையே பெங்களூருவில் 12-ம் தேதி நடந்த வன்முறை தொடர் பாக, இதுவரை 400-க்கும் மேற்பட் டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் அப்பாவிகள் பலரை போலீ ஸார் கைது செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கைது செய்யப் பட்டவர்களில் பெரும்பாலா னோர் கூலித் தொழிலா ளர்கள், சுமை தூக்கும் தொழி லாளர்கள், ஓட்டுநர்கள் எனத் தெரியவந்துள் ளது.10-க்கும் மேற் பட்டோர் பெங்களூருவில் வாழும் தமிழர்கள் என்றும் தெரிகிறது.

இந்நிலையில் கைதானவர்களின் குடும்பத்தினர், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதில் “போலீஸார் வன்முறையில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரை கைது செய்யாமல் அப்பாவிகளை கைது செய்துள்ளனர். இந்த வன்முறைச் சம்பவங்களில் எங்கள் குடும்பத்தினருக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எனவே அவர்களை விடுவிக்க வேண்டும்” என்று கோரியுள்ளனர்.

http://tamil.thehindu.com/india/பெங்களூருவில்-தமிழர்களுக்கு-எதிராக-நடந்த-வன்முறையின்போது-கேபிஎன்-பேருந்துகளை-எரித்த-வழக்கில்-7-பேர்-கைது-பெண்-உட்பட-10-பேருக்கு-வலைவீச்சு/article9117892.ece?homepage=true

  • தொடங்கியவர்

பெங்களூருவில் பேருந்துகளை எரித்தது 22 வயது பெண்ணா..?

5555.jpg

மிழகத்துக்குக் காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கர்நாடகாவில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில், கே.பி.என் பேருந்துகள் உட்பட 42 பேருந்துகள் வன்முறையாளர்களால் கொளுத்தப்பட்டன. இந்தப் பேருந்துகளை எரிக்க உதவியதாக, 22 வயதுமிக்க இளம்பெண்ணை பெங்களூரு போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

கே.பி.என் பேருந்துகள் எரியூட்டப்பட்ட பிறகு, பூர்வாங்க விசாரணைகளைத் தொடங்கிய ஆர்.ஆர். நகர் போலீஸார், டிசோசா நகரைச் சேர்ந்த ஏழு இளைஞர்களைக் கைதுசெய்தனர். விசாரணையில், ‘‘அடையாளம் தெரியாத ஒரு பெண், பேருந்துகளுக்குத் தீவைக்க எங்களுக்கு உதவினார்’’ எனக் கைதான இளைஞர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து பேருந்து நிறுத்திவைக்கப்பட்ட இடத்தில் இருந்த சி.சி.டி.வி பதிவுகளைப் போலீஸார் ஆய்வு செய்தபோது, ஓர் இளம்பெண் வன்முறையாளர்களுக்கு பெட்ரோல் கேன்களை சப்ளை செய்ததும், அந்தப் பெண் பேருந்துகளுக்குள் பெட்ரோல் ஊற்றுவதும் கேமராவில் பதிவாகியிருந்தது.

சி.சி.டி.வி கேமரா பதிவுகளைப் பார்த்து அதிந்துபோன போலீஸ், தீவிர தேடுதலுக்குப் பாக்யா என்ற பெண்ணை கைதுசெய்துள்ளனர். அவர், கே.பி.என் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த டிப்போவுக்கு அருகில் இருக்கும் கிரிநகர் பகுதியில் பெற்றோருடன் வசித்துவருகிறார். தினக்கூலி தொழிலாளியாக வேலை செய்யும் பாக்யா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோருடன் அந்தப் பகுதிக்குக் குடிபெயர்ந்துள்ளார்.

455555.jpg

பயங்கர ஆயுதங்களுடன் கலவரம் செய்தல், கொலை முயற்சி, பொது சொத்துக்குச் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் பாக்யா கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று பாக்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், தற்போது கஸ்டடியில் எடுத்து விசாரித்துவருகின்றனர். ‘‘பேருந்துகள் கொளுத்தப்பட்டதில் பாக்யாவின் பங்கு என்ன’’ என்பது விரைவில் வெளிவரும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தனது தரப்புக்கு ஆதரவாக வாதாட வழங்கறிஞரை நியமிக்க முடியாத அளவுக்கு, பாக்யா பொருளாதாரச் சிக்கலில் உள்ளாராம். இந்த நிலையில் பெங்களூருவில் வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்திக் கைதானவர்களுக்கு இலசவ சட்ட உதவிகளை வழங்க உள்ளதாக பெங்களூரு வக்கீல்கள் சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கே.பி.என் நிறுவன உரிமையாளர் கே.பி.அன்பழகன் பேசினோம். ‘‘பேருந்துகள் கொளுத்தப்பட்ட அன்று எங்கள் நிறுவன ஓட்டுநர்கள் அந்தப் பெண்ணை சம்பவ இடத்தில் பார்த்துள்ளனர். வன்முறைக் கும்பலுக்கு அவர் உதவியுள்ளார். அவர், எங்கிருந்து வந்தார்... அவர் யார் போன்ற விவரங்கள் எங்களுக்குத் தெரியவில்லை. போலீஸாரிடம், அவரை அடையாளம் காட்டினோம். மேலும், சில வன்முறைச் சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு இருப்பதாக எங்கள் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்’’ என்றார்.

பேருந்துகளைக் கொளுத்தியது பெண் மட்டும்தானா?

http://www.vikatan.com/news/india/68494-woman-who-burnt-42-buses-is-only-22.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.