Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்பான தெற்கின் அதிருப்தி

Featured Replies

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்­பான தெற்கின் அதி­ருப்தி
 

யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற 'எழுக தமிழ்' எழுச்சிப் பேர­ணி­யானது தென்­ப­கு­தியில் பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யிருக்­கின்­றது. அர­சாங்க அமைச்­சர்கள் மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உட்­பட அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் எழுக தமிழ் தொடர்­பான தமது எச்­ச­ரிக்­கை­க­ளையும், அதி­ருப்­தி­களையும் வெளிப்­ப­டுத்­தி­யிருக்­கின்­றனர்.

தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் நடை­பெற்ற இந்த எழுக தமிழ் பேர­ணி­யா­னது தென்­ப­கு­தியில் பெரும் சர்ச்­சையை கிளப்­பி­யி­ருக்­கின்­றது. எழுக தமிழ் பேர­ணியைத் தொடர்ந்து கருத்து தெரி­வித்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, இந்த எழுச்சிப் பேரணி தொடர்பில் தெற்கு மக்கள் விழிப்­பாக இருக்­க­வேண்டும். போர் வெற்­றிக்குப் பின்னர் உரு­வாக்­கப்­பட்ட இலங்­கையின் ஒரு­மைப்­பாட்­டுக்கு தற்­போது அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது. தமிழ் தலை­மைகள் தங்­க­ளுக்கு என்ன வேண்டும் என்­பது தொடர்­பிலும் என்­னென்ன விட­யங்­களை நீக்­க­வேண்டும் என்­பது குறித்தும் பேசி­வ­ரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு அதி­காரப் பகிர்வே தேவை­யாக உள்­ளது என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதேபோல் எழுக தமிழ் பேரணி தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க, வடக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட எழுக தமிழ் பேர­ணி­யா­னது அர­சாங்­கத்தின் முயற்­சி­க­ளுக்கு தடை­யா­கவே உள்­ளது. எவ்­வா­றான தடைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டாலும் எமது முயற்­சியில் நாம் ஒரு­போதும் பின்­னிற்­க­மாட்டோம். எமது அர­சாங்­க­மா­னது வடக்கு, கிழக்குப் பிரச்­சி­னையைத் தீர்த்து நாட்டில் நிரந்­த­ர­மான தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­களில் ஒரு­போதும் பின்­னிற்­கப்­போ­வ­தில்லை என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இவரைப் போல் எழுக தமிழ் குறித்து கருத்து தெரி­வித்­துள்ள பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்த்­தன, வடக்கில் நடை­பெற்ற எழுக தமிழ் பேர­ணியைக் கண்டு அர­சாங்கம் அச்­ச­ம­டை­யப்­போ­வ­தில்லை. வடக்கு முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனின் கோரிக்­கைக்­கி­ணங்க வடக்­கி­லி­ருக்கும் இரா­ணுவ முகாம்­களை அகற்­று­வ­தற்கு ஒரு­போதும் அர­சாங்கம் இணங்­கப்­போ­வ­தில்லை. நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­த­பின்­னர்தான் இன, மத ஐக்­கி­யத்­திற்­கான வேலைத்­திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான நிலையில் இன­வா­த­மான இத்­த­கைய செயற்­பா­டு­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. முத­ல­மைச்சர் மற்றும் ஒரு சில இன­வாதக் குழுக்­களால் நடத்­தப்­பட்ட இந்தப் பேர­ணியில் வடக்­கி­லி­ருக்கும் இரா­ணுவ முகாம்­களை அகற்­று­மாறும் வெளி­யாட்­களை அந்தப் பிர­தே­சத்தில் குடி­யேற்­ற­வேண்­டா­மென்றும் கோரிக்கை விடுத்­துள்­ளனர். இவர்­க­ளது கோரிக்­கைக்­கி­ணங்க இரா­ணுவ முகாம்­களை அகற்­ற­வேண்­டிய தேவை எமக்­கில்லை என்று கூறி­யி­ருக்­கின்றார்.

பிரதி அமைச்சர் எரான் விக்­கி­ர­ம­ரட்ண எழுக தமிழ் பேரணி குறித்து கருத்­துக்­கூ­று­கையில், வடக்­கிலும் தெற்­கிலும் இன­வாதம் தூண்­டப்­ப­டு­வதை முழு­மை­யாக தோல்­வி­ய­டை­யச் ­செய்­ய­வேண்டும். வார்த்தைப் பிர­யோகம் செய்து மக்கள் மத்­தியில் அச்­சத்­தையும் சந்­தே­கங்­க­ளையும் உரு­வாக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கக்­கூ­டா­து. புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக அனைத்து இனத்­த­வர்­க­ளுக்கும் சம­மான அதி­கா­ரங்­களை வழங்­குவோம். வட­மா­காண முத­ல­மைச்சர் தலை­மையில் தமிழ் மக்கள் பேரவை நடத்­திய எழுக தமிழ் பேரணி மூலம் அர­சாங்கம் அச்­சப்­ப­டப்­போ­வ­தில்லை. நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்­னர்தான் இன, மத ஐக்­கி­யத்­திற்­கான வேலைத்­திட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இவ்­வா­றான நிலையில் இன­வா­த­மான இத்­த­கைய செயற்­பா­டுகள் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாகும் என்று கூறி­யி­ருக்­கிறார்.

இந்த விவ­காரம் தொடர்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லா­ளரும், அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீரவும் கருத்­துக்­ கூ­றி­யி­ருக்­கின்றார். வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் செயற்­பா­டு­களும் கருத்­துக்­களும் அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளுக்கு தடை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. அவரின் இந்த நட­வ­டிக்­கைகள் கண்­டிக்­கத்­தக்­கவை. இவர் யாரு­டை­யதோ சூழ்ச்­சியின் பங்­கு­தா­ர­ரா­கவே இருக்­கிறார். இவரின் செயற்­பா­டு­க­ளினால் தமிழ் மக்­க­ளுக்கு கிடைக்­க­வுள்­ளதும் கிடைக்­காது போகலாம் என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இவ்­வாறு எழுக தமிழ் பேரணி தொடர்பில் தமது அதி­ருப்­தி­களை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜபக் ஷவும் அர­சாங்­கத்தின் அமைச்­சர்­களும் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். இவர்­களை விட எழுக தமிழ் பேர­ணியை ஜே.வி.பி.யும் கண்­டித்­தி­ருக்­கின்­றது. வட­மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான குழு­வினர் தமது அர­சியல் சுய­ந­ல­னுக்­காக இன­வா­தத்தை தூண்­டு­கின்­றனர். இவர்­க­ளுக்கு இன­வாதம் இல்­லாது அர­சியல் செய்ய முடி­யா­துள்­ளது. யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற எழுச்சிப் பேர­ணியும் இதை வலி­யு­றுத்­து­வ­தா­கவே உள்­ளது. விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லா­ன­வர்­க­ளுக்கு தற்­போது தேவை­யா­னது சமஷ்டித் தீர்­வல்ல. அதற்கு மாறாக தெற்கில் வாழும் சிங்­கள மக்கள் மத்­தியில் இன­வா­தத்தை தூண்­டு­வ­தே­யாகும் என்று ஜே.வி.பி.யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்துன்­னெத்தி குற்­றம் ­சாட்­டி­யி­ருக்­கின்றார்.

தென்­ப­கு­தியைப் பொறுத்­த­வ­ரையில் எழுக தமிழ் பேரணி தொடர்பில் விமர்­சனங்­களே முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய எழுச்சிப் பேரணி நடத்­தப்­பட்­ட­தனை அர­சாங்­கத்­த­ரப்­பினால் கூட ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை என்­பது அமைச்­சர்­களின் கருத்­துக்­க­ளி­லி­ருந்து புலப்­ப­டு­கின்­றது. உண்மையிலேயே எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடத்­த­வேண்டிய சூழல் ஏன் ஏற்­பட்­டது என்­பதை நாம் எண்­ணிப்­பார்க்­க­வேண்­டி­யுள்ளது.

யுத்­தத்­தினால் தமிழ் மக்கள் தமது உயிர்­க­ளையும் உட­மை­க­ளையும் இழந்து நிர்க்­க­தி­யாக்­கப்­பட்­டனர். யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு ஏழு வரு­டங்கள் ஆகி­விட்­ட­போ­திலும், இன்­னமும் தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணப்­ப­ட­வில்லை. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் காலத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் கொன்று குவிக்­கப்­பட்ட நிலை­யி­லேயே யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. இதன் பின்­ன­ரா­வது தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தமிழ் மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்த போதிலும் முன்­னைய அர­சாங்க காலத்தில் அவர்கள் தொடர்ந்தும் அடக்கி ஒடுக்­கப்­படும் நிலை உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது.

முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் தமிழ் மக்கள் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணு­மாறு கோரி போராட்­டங்­களைக் கூட சுதந்­தி­ரமாக நடத்த முடி­யாத இக்­கட்­டான நிலை நில­வி­வந்­தது. இவ்­வாறு அடக்கி ஒடுக்­கப்­பட்­டி­ருந்த மக்கள் கடந்த வருடம் ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு பேரா­தர­வினை வழங்­கி­யி­ருந்­தனர். புதிய ஆட்­சியில் தமது பிரச்­சி­னை­களுக்கு தீர்வு காணப்­ப­டு­மென்று தமிழ் மக்கள் எதிர்­பார்த்­தனர்.

புதிய ஜனா­தி­பதி பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்கம் பத­வி­யேற்­றது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் மீளவும் நல்­லாட்சி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. இவ்­வா­றான நிலையில் தமது அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்­கா­வது தீர்வு கிடைக்கும் என்று தமிழ் மக்கள் நம்­பி­யி­ருந்­தனர். ஆனால் புதிய அர­சாங்கம் பத­வி­யேற்று ஒன்­றரை வரு­டங்கள் ஆகி­விட்ட போதிலும் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை என்ற ஆதங்­கமும் அதி­ருப்­தியும் தமிழ் மக்கள் மத்­தியில் மேலோங்­கி­யுள்­ளது. இத்­த­கைய ஆதங்­கமும் அதி­ருப்­தி­யுமே எழுக தமி­ழாக எழுச்சி பெற்­றுள்­ளது.

தமிழ் மக்­களின் இந்த உணர்­வெ­ழுச்­சியை அர­சாங்­க­மா­னது புரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு தமிழ் மக்கள் கிளர்ந்தெழும் நிலையில் உள்ள போதிலும் நல்லிணக்க முயற்சியில் தொடர்ந்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையானது பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஈடுபட்டு வருகின்றது. தென்பகுதியில் இனவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அச்சப்பட்டு வரும் நிலையில் வடக்கு, கிழக்கிலும் தமிழ் மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில் அந்த அதிருப்தியானது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக மாறிவருகின்றது என்பதையும் அரசாங்கமானது உணர்ந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறான இக்கட்டுக்களுக்கு மத்தியிலும் இவ்வருட இறுதிக்­குள் அரசியல் தீர்வைக் கண்டுவிட வேண்டும் என்பதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது. எனவே இந்த சந்தர்ப்­பத்தை அரசாங்கம் பயன்படுத்தி உண்மையானதும் உறுதியானதுமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=27/09/2016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.