Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்ச்சைகளுக்குரிய விடயங்களை‘விக்னேஸ்வரன் பேசவில்லை’: சபையில் சம்பந்தன் விளக்கம்

Featured Replies

article_1475639932-11111111111111111.gif

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற 'எழுக தமிழ்' பேரணியின் போது, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாகச் சர்ச்சைகள் எழுப்பப்பட்டுவரும் கருத்துக்கள், அவரால் பேசப்பட்டிருக்கவில்லை என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04) சபையில் விளக்கமளித்தார்.  

எழுக தமிழ் நிகழ்வில் போது, பௌத்த சாசனத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணான வகையிலுமான கருத்துக்களை விக்னேஸ்வரன் முன்வைத்தார் என்று சுட்டிக்காட்டிய, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, 23/2ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ், நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே, சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,  

“இந்த விடயத்தைச் சர்ச்சைக்குள்ளாக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. நாம் அந்த எழுக தமிழ் நிகழ்வில் கலந்துகொள்ளவுமில்லை. அதில் கலந்துகொள்ளாமல் இருந்தமைக்கு எம்மிடம் உரிய காரணங்களும் உண்டு.  

இதேநேரம், வடக்கிலும் அதேபோல், கிழக்கிலும் உள்ள மக்கள் நீண்ட காலமாக பாரிய கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அவற்றில் மிகவும் விரைந்து தீர்க்கப்பட வேண்டிய பல நியாயபூர்வமான விடயங்கள் இருக்கின்றன. இவ்வாறான விடயங்களில் அரசாங்கத்தின் மந்தகதியான செயற்பாடு குறித்து அதிருப்பதி தெரிவித்து, இந்த சபையில் நான் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் முறையிட்டிருக்கிறேன். அந்த விடயங்கள் தொடர்பில், அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டிய அவசியம் காணப்படுகிறது.  

எழுக தமிழ் நிகழ்வைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பேச்சு, அச்சு மற்றும் இலத்திரனியல் என இரு ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன. அந்த வகையில், அவர் கூறியதாக காரணம் கூறப்படும் அனைத்து விடயங்களையும் அவர் அங்கு பேசியிருந்தார் என்று நான் கருதவில்லை. உண்மையில், தாம் கூறியதாக காரணம் கூறப்பட்ட விடயங்களுக்கு, அவர் பின்னர் மறுப்பும் வெளியிட்டிருந்தார்.

விக்னேஸ்வரனின் பேச்சு, தமிழில் கிடைத்தது. நான் அதை தமிழில் வாசித்திருந்தேன். அந்த வகையில், எனது நிலைப்பாடு என்னவென்றால், அவர் கூறியதாக காரணம் காட்டப்படும் பல்வேறு கருத்துக்களும் அவரால் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை” என்றார்.

http://www.tamilmirror.lk/183250/சர-ச-ச-கள-க-க-ர-ய-வ-டயங-கள-வ-க-ன-ஸ-வரன-ப-சவ-ல-ல-சப-ய-ல-சம-பந-தன-வ-ளக-கம-



‘இனவாதத்தைக் கிளப்ப வேண்டாம்’

 

 

'எழுக தமிழ்' பேரணியின் போது, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாக, சர்ச்சைகள் எழுப்பப்பட்டுவரும் கருத்துக்கள் தொடர்பில் அவர் மறுப்பு வெளியிட்டுள்ளதால், அது பற்றி மீண்டும் கேள்வி எழுப்புவது தவறான விடயமென, சபையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை சுட்டிக்காட்டிய இந்த விடயத்தை பயன்படுத்தி இனவாதத்தை கிளப்ப முயல வேண்டாம் என்றும் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் வலியுறுத்தியது.  

விக்னேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களுக்கு, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, நிலையியற் கட்டளையின் கீழ், நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பினார்.  

அதற்குப் பதிலளித்த சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, “வட மாகாண முதலமைச்சர், இந்த விடயம் தொடர்பில் தaனது மறுப்பை வெளியிட்டுள்ளார். அவ்வாறு அவர் மறுப்பை வெளியிட்ட பின்னரும், இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்புவது நியாயமற்றதாகும்” என்றார்.

http://www.tamilmirror.lk/183248/-இனவ-தத-த-க-க-ளப-ப-வ-ண-ட-ம-

  • தொடங்கியவர்

"விக்கி மிகவும் பொறுப்பான மனிதர்" நாடாளுமன்றில் இடித்துரைத்தார் சம்பந்தன்

"விக்கி மிகவும் பொறுப்பான மனிதர்" நாடாளுமன்றில் இடித்துரைத்தார் சம்பந்தன்:-

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றில் வாதிட்டுள்ளார்.


எழுக தமிழ் நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாக வெளியாகியிருந்த பல விடயங்கள் திரிவுபடுத்தப்பட்டவை எனவும்,  பலவிடயங்களை அவர் குறிப்பிடவே இல்லையெனவும் இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தி தனது உரையை ஆற்றியுள்ளார்.


எழுக தமிழ் நிகழ்வின் போது பௌத்த சாசனத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணான வகையில் விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்ட, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான தினேஸ் குணவர்தன, அரசாங்கத்திடம் அதற்கான பதிலைக் கோரியிருந்தார்.  


நேற்றைய  நாடாமன்ற கூட்டத் தொடரில், தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்திலேயே சம்பந்தன் விகினேஸ்வரனுக்காக தனது கருத்தை சபையில் தெளிவுபடுத்தினார்.


இவ்விடயம் குறித்து சம்பந்தன் சபையில் விளக்கமளிக்கையில்-


”எழுக தமிழ் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அவர் கூறியதாக தெரிவிக்கப்படும் அனைத்து விடயங்களையும் அவர் அங்கு பேசியிருந்தார் என்று நான் கருதவில்லை. உண்மையில், தாம் கூறியதாக காரணம் கூறப்பட்ட விடயங்களுக்கு அவர் மறுப்பும் வெளியிட்டிருந்தார். அவர் இந்த சபையில் இல்லாத நிலையில், அவருக்கு இங்கு நியாயம் கிடைக்க வேண்டும்.  விக்னேஸ்வரனின் உரையின் தமிழ் வடிவம் எனக்குக் கிடைத்திருந்தது. அதை வாசித்து நான் அறிந்ததில் அவர் கூறியதாக தெரிவிக்கப்படும் பல கருத்துக்களை அவர் கூறியிருக்கவில்லை”


அவர் மிகவும் பொறுப்பான நபர். மக்களால் தெரிவுசெய்யப்பட்டு வட மாகாண முதலமைச்சராக இருக்கும் அவர், உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசராவார். வடக்கு மக்கள் அவரை கணிசமான பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்துள்ளனர். ஆகவே, அவர் கூறியதாக காரணம் காட்டப்படும் கருத்துக்களை தாம் வெளியிட்டிருக்கவில்லை என்று அவர் கூறும்போது, இதுபற்றி கருத்து வெளியிடுபவர்கள் அதற்கு முன்னதாக உண்மை என்னவென்பதை கண்டறிந்து உறுதிப்படுத்த வேண்டும் என இரா சம்பந்தன் நாடாளுமன்றிடம் கோரியுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136668/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.