Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரியலும் , உளவியலும், தீர்வும்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் என்பது முரண்களுக்கான தீர்வின் இறுதிச் செயற்பாடு. மனித சரித்திரத்தில் தீர்க்க முடியாத முரண்கள் போரினாலயே தீர்க்கப்படுள்ளன, தீர்க்கப்பட்டு வருகின்றன. மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து வளங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான போட்டி ஈற்றில் போர்களினாலையே தீர்க்கப்பட்டு வந்துள்ளது. போரை அதன் அடிப்படை மூல காரணியான முரணில் இருந்து பிரித்து , போரினால் ஏற்படும் அழிவுகளை மட்டுமே பேசும் எவரும் , போரின் மனித அவலத்தை மையமாக வைத்து தமது சொந்த அரசியல் இலக்குகளையே நகர்த்துகின்றனர். உலகில் போரின்றி தீர்க்கப்பட்ட முரண்கள் அடிப்படையில் போர் மூளக் கூடும் என்கிற அச்சத்தினாலையே தீர்க்கப்படுள்ளன. இதுவே சமாதான வழிமுறை எனப்படுகிறது. பலஸ்தீனச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் 'இன்ரபாடா' அல்லது மக்கள் எழுச்சியில் இருந்தே ஆரம்பமாகின்றன, பின்னர் தற்கொடைத் தாக்குதல்களலையே நகர்த்தப்பட்டன. தென்னாபிரிக்காவிலும், இந்தியாவிலும் போர் பற்றிய அச்சமும் தொடர் வன்முறையுமே தீர்வைக் கொண்டு வந்தன.

ஈழத்திலும் போரின்றி சமாதானப் பேச்சுவார்த்தைகள் இல்லை. சிங்கள பேரினவாதம் போரில்லாமால் தமிழருக்கான பிரச்சினைகள் அங்கே இருக்கின்றன என ஒத்துக் கொள்ளப் போவதில்லை. ஈழத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டம் இல்லை என்றால், அங்கே இந்த பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள், நடுனிலமையாளர்கள், கண்காணிப்பாளர்கள், நோர்வே, அமெரிக்கா, இந்தியா, ஐனா, எவருமே இல்லை. ஏன் டிபிசி, தேனி, டக்குளஸ், கருணா, சங்கரி முதல் இணயத்தில் சிரிரங்கன், ரயாகரன் வரை எவருக்குமே முகவரி இல்லை. போரின் அவலம் பற்றிய சிலரின் பதிவுகளோ ஏன் அவர்களின் புலம் பெயர்வுகள் கூட நடந்திருக்காது. காலம் காலமாக படுகொலை செய்யப்பட்டு இன அழிப்புக்கு உள்ளாகி உலகில் நாம் இருந்தோமா, இருக்கிறோமா, வாழ்கிறோமா என்பதே தெரியாமல் அழிந்து போயிருப்போம். முப்பது வருட போரில் என்ன கண்டீர்கள் என்று கேட்பதற்குக் கூட ஒருவரும் இருந்திருக்க முடியாது.

போரை நடாத்துகின்ற தரப்பு இன்னொரு தரப்பார் மீது தமது தீர்வை வன்முறையால் திணிக்க முயலுகிறது. அதற்கு எதிரான போராட்டம் அதனை அதன் வழி முறையிலையே எதிர்க்க முனைகிறது. இங்கே வளங்கள், பங்கீடு, அதற்கான அரசியல் அதிகாராம் , இவை யார் கைகளில் என்பதே அடிப்படைப் பிரச்சினை. போரின் அழிவின் அடிப்படையில் எழும் பொருளாதாரத் தளம்பல் பற்றிய அச்சமே சமாதான நடைமுறைகளை முன் தள்ளியது. சிங்கள இனவாதம் அந்த போர் பற்றிய அச்சம், பொருளாதாரத் தளம்பல் நீர்த்தபின், புதிய புதிய தலைவர்களை முன் நிறுத்துகிறது. மீண்டும் மீண்டும் போரையே தீர்வாக எம் முன் வைக்கிறது. காலம் காலமாக திம்பு முதல் ஜெனிவா வரை இது தான் நிகழ்ந்து வந்துள்ளது.

இந்த வரலாற்றை தமிழர் தலமை எவ்வாறு கையாண்டது? போர் பற்றிய எதிர் அச்சத்தை ஊட்டக்கூடிய சக்தியாக புலிகள் உருவெடுத்த பின்னையே, சிங்கள இனவாதம் தமிழருக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொண்டது. போரின் அவலம் பற்றி மட்டுமே எழுதும் எவரினதும் பக்கச் சார்பான விமரிசனங்கள் இதனை வெகு சாமர்த்தியமாக மறைத்து விடுகின்றன. இது தான் இவர்களின் எழுத்தின், கரிசனையின் அரசியல் உள் அடக்கத்தை வெளிக் காட்டும் இடமாக இருக்கிறது. இதனாலையே இவர்களால் போரின் காரணி பற்றியோ இந்த முரணைத் தீர்க்கக் கூடிய தீர்வு பற்றியோ பேச முடியாமல் இருக்கிறது. இவர்களுக்கான பொழுதுகள் மக்களின் அவலங்களுக்கு முடிவு கட்டும் தீர்வு பற்றி அன்றி, தம்மை முன் நிறுத்தும் போரின் அவலம் பற்றிய போலியான பதிவுகளுடன் , பொழுது போக்காக மட்டுமே இருக்கின்றன. மக்களின் அவலங்களுக்கு முடிவு கட்டாதா, கட்ட விழையாத எவரது கரிசனையும் போலியானதே.

மரபு ரீதியான யுத்தத்தில் நேரடி மோதல்களினுடாக எழும் உயிர் இழப்பினூடாகவே வெற்றி பெறப்படுகிறது. ஆனால் ஒரு மதி நுட்பமான தளபதி உயிர் இழப்புக்கள் இன்றி அதே வெற்றியை அடய முடியுமா என்றே சிந்திப்பான். வெற்றியும் தோல்வியும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பின் எண்ண ஓட்டத்திலேயே தங்கி உள்ளது. இந்த எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துவது அல்லது இயக்குவது எது? நாம் எமது எதிரியின் எண்ண ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி அவன் எமக்கு சாதகமான செயற்பாடுகளைச் செய்ய வைப்போமாயின், நேரடிச் சமர் இன்றி எமது இலக்கை அடய முடியுமா? மாசேதுங் கூறியது போல எதிரியின் காதை அடைத்தும் அவனது கண்ணைக் கட்டியும் அவனைக் குழப்பமடையச் செய்யவதன் மூலம் அவர்களின் தளபதிகளின் எண்ணங்களைச் சிதைக்க முடியும்.

இந்த எண்ண உருவாக்கத்தில் இரண்டு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. ஒன்று எண்ணத்தை உருவாக்கும் பொருள் மற்றது அதனைப் பார்ப்பவர். ஒரே பொருளை இருவர் வெவ்வேறு விதமாகப் பார்க்கலாம். இந்தப் பார்வையை கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவர் பார்க்கும் பொருளை எமக்குச் சாதகமான முறையில் எம்மால் காட்ட முடியும். இவ்வாறு மற்றவரின் பார்வையைக் கட்டுப்படுத்துவதற்கு , எமக்கு அவரின் சிந்தனை ஓட்டம் பற்றிய அறிவு அவசியம். ரணில் தோற்கடிக்கப்பட்டு மகிந்தர் வெல்லப்பட்டது இந்த சிந்தனை ஓட்டம் பற்றிய தேர்வினாலையே.

ஒருவரின் சிந்தனை ஓட்டம் அவரின் கடந்தகால அனுபவங்களினாலும் அவரின் மனதில் உண்மை என்று நிறுவப்பட்ட ஒரு சில அடிப்படை எண்ணக் கருக்களில் இருந்தே எழுகின்றது. எமக்கு சாதகமான ஒரு நிலையை நாம் எமது எதிரியிடம் ஏற்படுத்துவதற்கு நாம் அவரின் இந்த அடிப்படை எண்ணக் கருவை அதற்கு ஏற்றவகையில் உருவாக்க வேண்டும். இதற்கு அவரின் சிந்தனை தொழிற்படும் விதம் பற்றிய அறிவு அவசியம்.

எவருமே தோல்வி அடைவதை விரும்பார். எமக்கான வெற்றியைப் பெறுவத்தற்கு நாம் எமது எதிரியின் தோல்வி அவர்களின் வெற்றியாகத் தெரிவதற்கான பிம்பத்தை அல்லது தோற்றப் பாட்டை ஏற்படுத்த வேண்டும். எதிரியின் போரியற் செயற்பாடுகளை , எண்ண ஓட்டங்களை எமக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தாலையே எமக்கான வெற்றியைப் நாம் பெற முடியும்.

ஒரு மதியூகம் உள்ள தளபதி அல்லது தலைவன் வெற்றி பெறுவது என்பது களத்தில் இறுதியாக நடை பெறும் சண்டையில் இருந்து அல்ல தீர்மானிக்கப்படுகிறது. போரியற் களமும், தந்திரோபாயமும் போரிடும் தலமைகளாலையே தீர்மானிக்கப்படுகிறது. எதிரியின் போரியற் தந்திரோபாயத்தை தீர்மானிக்கும் தலமையை நாம் வழி நாடாத்து வோமாயின், எமக்கானா வெற்றியை களத்தில் போர் நிகழும் முன்னமே நிச்சயத்தவர்களாகிறோம்.

அன்றாடும் நடக்கும் பின் நகர்வுகள், படுகொலைகளை மையமாக வைத்து மட்டுமே எழும் தளம்பல்கள், கிலேசங்கள் , பரிகசிப்புக்கள், கிண்டல்கள், கரிசனைகள் எல்லாமே , இந்த போரின் அடிப்படை உளவியல் பற்றிய விளக்கமின்மையால் எழுதப் படும் புலம்பல்கள். வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும் எவருக்குமே எதிரியை வழி நாடாத்தும் , தமிழர் தலமையின் உளவியற் திறன் துலங்கும். ஜெயசிக்குரு முதல் அக்னிகெல வரை இது தான் நிகழ்ந்தது, இனியும் இது தான் நிகழப்போகிறது.

போரின்றி தீர்வில்லை, போரில் வெற்றி இன்றி விடிவு இல்லை. விடிவின்றி அவலம் தீராது.

போரில் வெற்றி , எமது உளவியற் பலத்தில், எமது எதிரியை நாம் கையாளும் , தீர்வு நோக்கி வழி நடாத்தும் உளவியற் திறனில் தங்கி உள்ளது. அன்றாடம் நடக்கும் சம்பவங்களுக்கு அப்பால் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்களே வரலாற்றைப் படைப்பார்கள்.

வரலாற்றைப் படைக்கும் உளவியற் திறன் உள்ளவர்களையே மக்கள் தலவர்கள் ஆக்குகிறார்கள். ஏனேனில் மக்கள் துயரம் வரலாற்றை படைப் பவர்களாலையே முடிவுக்கு வர முடியும்,வரும்.

http://aatputhan.blogspot.com/2007/01/blog-post_24.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.