Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆளை ஆள் விழுங்கும் தமிழரின் பண்பு

Featured Replies

ஆளை ஆள் விழுங்கும் தமிழரின் பண்பு

DSC07569-0e94e3a9a47b8eaf6d3e866574f71b22cc3cc86f.jpg

 

தமி­ழர்கள் மத்­தி­யி­லுள்ள மூத்த அர­ச­றி­வி­ய­லாளர் என்று சொல்­லத்­தக்­க­வரும், அர­சியல் ஆய்­வா­ள­ரு­மான மு.திரு­நா­வுக்­க­ரசு எழு­திய, “அர­சியல் யாப்பு- டொனமூர் யாப்பு தொடக்கம் உத்­தேச சிறி­சேன யாப்பு வரை“ என்ற நூலின் அறி­முக விழா அண்­மையில் யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்­றி­ருந்­தது.

இந்த விழாவில் நூல் அறி­மு­கத்­துக்குக் கொடுக்­கப்­பட்ட முக்­கி­யத்­து­வத்தை விட, அதன் உள்­ள­டக்கம் சார்ந்த கருத்­துக்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட முக்­கி­யத்­து­வத்­தை­விட, அர­சியல் முரண்­பா­டுகள் பற்றிப் பேசு­வ­தற்கே பேச்­சா­ளர்கள் பலரும் முக்­கி­யத்­துவம் கொடுத்­தி­ருந்­தனர்.

நீண்­ட­தொரு இடை­வெ­ளிக்குப் பின்னர், துரு­வ­நி­லைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த தமிழ் அர­சியல் பிர­மு­கர்கள் பலரும் ஒரே மேடையில் அமர்ந்­தி­ருந்­தனர்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், தமிழ் மக்கள் பேர­வையில் உள்ள முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலைவர் வீ. ஆனந்­த­சங்­கரி, ஈ.பி.­டி­.பியைச் சேர்ந்த வட­மா­கா­ண­ச­பையின் எதிர்க்­கட்சித் தலைவர் சி.தவ­ராசா ஆகியோர் இவர்­களில் குறிப்­பிட்டுச் சொல்­லத்­தக்­க­வர்கள்.

இவர்­களில் சிலர் முன்­னொரு காலத்தில் அர­சியல் களத்தில் சேர்ந்து- ஒன்­றாக இயங்­கி­ய­வர்கள். இப்­போது சேர்ந்து செயற்­பட முடி­யா­த­ள­வுக்கு முரண்­பட்டுக் கொள்­ப­வர்கள்.

ஆனாலும், இவர்கள் அனை­வரும் ஒரே அரங்கில் கொண்டு வரப்­பட்­ட­தற்­கான ஏற்­பாட்­டா­ளர்­களின் நோக்கம், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை ஒரு­சேர வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான கள­மா­கவும், தமிழர் அர­சியல் தரப்­பு­களின் ஒற்­று­மையை வலி­யு­றுத்­து­வ­தற்­கான ஒரு கள­மா­கவும் இதனைப் பயன்­ப­டுத்­து­வ­தாக இருந்­தி­ருக்­கலாம்.

அத­னால்தான் இந்த விழா அரங்கை பேச்­சா­ளர்கள் அறி­வுசார் ஒன்­று­கூடல் நிகழ்­வாக நடத்த ஒத்­து­ழைக்­கு­மாறு கேட்­கப்­பட்­டி­ருந்­தனர்.

எனினும், இந்த அரங்கில் நடந்த சம்­ப­வங்கள், அத்­த­கைய அறி­வுசார் தேடல் ஒன்­றுக்­கான முயற்­சி­யாக அமைந்­ததா? என்ற விவா­தங்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன.

காரணம், இந்த நிகழ்வில் பேச்­சா­ளர்­க­ளாக கலந்து கொண்­ட­வர்கள், தமது அர­சி­ய­லையும் அதற்குள் உட்­பு­குத்த முனைந்­தனர். தமது தரப்பு நியா­யங்­க­ளையே வலி­யு­றுத்த முற்­பட்­டனர். தமது தனிப்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கும் அர­சியல் சாயம் பூச எத்­த­னித்­தனர்.

இதனால், அரங்கின் பிர­தான நோக்கம் திசை திருப்பி விடப்­பட்டு விட்­ட­தா­கவே பொது­வான கருத்­துக்கள் நில­வு­கின்­றன.

அதே­வேளை, ஜன­நா­யக அர­சியல் சூழ­லுக்குள் தமிழ் மக்கள் இன்­னமும் முழு­மை­யாக வந்து சேர­வில்லை என்ற வருத்­த­மான விட­யத்­தையும் இந்த அரங்கம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்த நிகழ்வில், பங்­கேற்­ற­வர்­களில் சிலர் நடந்து கொண்ட முறை அர­சியல் நாக­ரி­கங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்கும் வகை­யி­லா­ன­தாக இருக்­க­வில்லை. இது நீண்­ட­கா­ல­மாக தொடர்ந்த போரினால், அர­சியல் அரங்­கிற்கு வெளியே இருந்த தமிழ் மக்கள் இன்னும் முழு­மை­யாக ஜன­நா­யக அரங்­கிற்குத் திரும்ப முடி­யா­தி­ருக்­கின்­றனர் என்ற செய்­தியை எடுத்­துக்­காட்­டி­யி­ருக்­கி­றது.

கடந்த காலங்­களில் யார் நடந்து கொண்­டது சரி - யார் பக்கம் தவறு - யார் தியாகி- - யார் துரோகி என்­றெல்லாம் விமர்­ச­னங்­க­ளையும் முரண்­பா­டு­க­ளையும் வளர்த்துக் கொள்ளும் போக்­கி­லி­ருந்து இன்­னமும் தமிழர் அர­சியல் மாற­வில்லை.

அத­னால்தான், ஆளை ஆள் விழுங்கிக் கொள்ளும் அணு­கு­மு­றை­யி­லி­ருந்து விலக மறுக்­கின்­றனர். எனினும், இன்றும் சரி - அன்றும் சரி எல்­லோ­ருமே சரி­யான பாதையில் செயற்­பட்­ட­வர்கள் என்று கூற முடி­யாது.

இன்று தமிழர் அர­சியல் களத்தில் இருப்­ப­வர்­களில் ஏதோ ஒரு கால­கட்­டத்தில், தமிழ் மக்­களின் பிர­தான அர­சியல் கொள்­கையை மறந்­து­விட்டு செயற்­பட்­ட­வர்­கள்தான் அதிகம்.

எனவே, கண்­ணாடி வீட்­டுக்­குள்­ளி­ருந்து கல் எறி­வதோ, தமது முதுகில் உள்ள அழுக்கை உண­ராது கொந்­த­ளிப்­பதோ அவர்­க­ளுக்கே பாத­க­மாக அமையும் என்­பதை யாரும் உணரும் நிலையில் இல்லை.

அதே­வேளை, பொது அரங்கு ஒன்றில் பின்­பற்­றப்­பட வேண்­டிய அர­சியல் நாக­ரிகம் கூட, தமிழர் அர­சி­யலில் உள்ள பல­ரிடம் குறைந்து வரு­கி­றது. இது ஆபத்­தான ஓர் அறி­குறி.

அர­சியல் என்­பது கருத்து- கொள்கை முரண்­பா­டுகள் கொண்ட ஒரு கள­மாக இருந்­தாலும், தமிழர் என்ற வகையில் அனை­வரும் ஒரு­வரே என்ற உணர்வு இருக்க வேண்டும்.

அந்த நிலை தமிழர் அர­சி­யலில் அன்றும் இருக்­க­வில்லை. இன்றும் இல்லை.

முரண்­பா­டு­களைக் கொண்ட அர­சியல் தலை­வர்கள் ஒரே மேடைக்கு வரத் தயங்­கு­கி­றார்கள். அதையும் மீறி வந்­தாலும், ஒரு­வ­ரோடு ஒருவர் பேசிக் கொள்­ளாமல் முகத்தை உம் என்று வைத்துக் கொள்­கி­றார்கள்.

இந்த விட­யத்தில் சிங்­கள அர­சியல் தலை­மை­க­ளிடம் தமிழர் அர­சியல் தலை­மைகள் பாடம் கற்க வேண்டும். வெளியில் ஒரு­வரை ஒருவர் கண்­ட­படி திட்டிக் கொண்­டாலும், மஹிந்­தவும், மைத்­தி­ரியும் நேருக்கு நேர் சந்­தித்தால் சிரித்துக் கொள்­கி­றார்கள், வணக்கம் சொல்­கி­றார்கள். பேசிக் கொள்­கி­றார்கள்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் மஹிந்த ராஜபக் ஷவும் அப்­படித் தான். ஏனைய அர­சியல் தலை­வர்கள் மத்­தி­யிலும் அந்த நாக­ரிகம் இருக்­கி­றது.

ஆனால், அதே நாக­ரிகம் தமிழர் அர­சியல் தலை­மை­க­ளிடம் எந்­த­ள­வுக்கு இருக்­கி­றது என்­பதை, பொது அரங்­கு­களில் அவர்கள் நடந்­து­கொள்ளும் முறையே காட்­டிக்­கொ­டுத்து விடு­கி­றது.

அது­போ­லவே, ஜன­நா­யக அர­சியல் அரங்­கு­களில் பல­த­ரப்­பட்ட கொள்­கை­யு­டை­ய­வர்­களின் கருத்­துக்­க­ளையும் செவி­ம­டுக்­கின்ற சூழலும் அரு­கி­விட்­டது என்­ப­தையே, அந்த நூல் வெளி­யீட்டு விழாவில் நடந்த சம்­ப­வங்கள் எடுத்துக் காட்­டின.

அந்த அரங்கில் எம்.ஏ.சுமந்­திரன், ஆனந்தசங்­கரி, தவ­ராசா போன்­ற­வர்கள் உரை­யாற்­றி­ய­போது சிலர் கேள்­வி­களை எழுப்பிக் குழப்பம் விளை­வித்­தனர். அந்தப் பழி ஒட்­டு­மொத்த பார்­வை­யா­ளர்கள் மீதே விழுந்­தது.

ஆனாலும், அவ்­வாறு குழப்பம் விளை­வித்­த­வர்கள், வேறு அர­சியல் மேடை­களில் தென்­பட்­ட­வர்­க­ளாக இருந்­தனர் என்­பதை யாராலும் மறுக்க முடி­யாது.

ஒரு பேச்­சாளர் தனது கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் குறுக்­கீடு செய்து குழப்பும் அள­வுக்­குத்தான், மாற்றுக் கொள்­கைகள் முன்­வைக்­கப்­ப­டு­மாக இருந்தால் அதற்குப் பெயர் மாற்றுக் கொள்­கை­யல்ல.

ஒரு பக்க குரலை மாத்­தி­ரமே மற்­ற­வர்கள் செவி­ம­டுக்க வேண்­டு­மென்று நினைப்­பது முட்­டாள்­தனம். அதற்குப் பெயர்தான் கருத்துச் சுதந்­திர மறுப்பு. அத்­த­கை­ய­தொரு நிலையில் தான் தமிழர் தரப்பு இருக்­கி­றது.

ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களும் இந்த நிலையில் இல்­லா­வி­டினும், பொதுப் பார்­வை­யாளர் என்ற பெயரில், அரங்கிலிருந்த அர­சியல் சார்­பு­டை­ய­வர்­களால் ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களும் அத்­த­கை­ய­தொரு நிலைப்­பாடு கொண்­ட­வர்கள் என்ற கருத்து ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

அதா­வது, ஜன­நா­யக பாரம்­ப­ரி­யங்­களை அறி­யா­த­வர்கள் தமிழ் மக்கள் என்­பது போன்ற ஒரு தோற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. ஜன­நா­யக ரீதி­யாக கருத்­துக்­களை செவி­ம­டுக்க விரும்­பா­த­வர்­க­ளாக அவர்கள் முத்­திரை குத்­தப்­படும் நிலைக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

ஒரு காலத்தில் தமி­ழீழம் கேட்­ட­வர்கள் இன்று அது வேண்டாம் என்­கின்­றனர். சமஷ்­டியை எதிர்த்­த­வர்கள் இன்று அத­னையே கோரு­கின்­றனர்.

இப்­படி தமிழ் அர­சியல் தரப்­புகள் தமது நிலைப்­பா­டு­களை மாற்றிக் கொண்­டி­ருந்­தாலும், பொது அரங்கில் தமி­ழரின் உரி­மை­க­ளுக்­காக ஒன்­று­பட வேண்­டு­மென்­பதே பொது­வான கருத்­தாகும்.

அத்­த­கை­ய­தொரு நிலையை வெளிப்­ப­டுத்தும் களங்கள் அமையும் போதா­வது, அதனை எல்லா அர­சியல் கட்­சி­களும் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக்கொள்ள வேண்டும்.

அப்­போ­துதான், தமது மக்­களின் உரி­மைகள் சார்ந்த விட­யத்தில் தமி­ழர்கள் ஒன்­று­பட்டு நிற்­கி­றார்கள் என்­பது சிங்­கள அர­சியல் தலை­மை­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தப்­படும்.

அதனை விடுத்து, பொது அரங்கில் ஒன்று­கூடும் சந்­தர்ப்­பங்கள் வாய்க்­கும்­போது, ஆளை ஆள் திட்டிக் கொள்­வ­தற்குப் பயன்­ப­டுத்தும் நிலை தொடர்ந்தால் இத்­த­கைய மேடைகள் இனிமேல் அமை­யா­ம­லேயே போய்­விடும் என்­ப­துடன், சிங்கள அரசியல் தலைமைகளுக்கு கொண்டாட்டமாகவும் அமைந்துவிடும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-10-09#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.