Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரபுசார் நிலைக்குத் திரும்பும் இலங்கை கடற்படை

Featured Replies

மரபுசார் நிலைக்குத் திரும்பும் இலங்கை கடற்படை

VVA-01-aba46685b8ef5eefe78a011dbce138f4bbc51794.jpg

 

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போர் முடி­வுக்கு வந்த பின்னர், இலங்கைக் கடற்­படை தன்னை உரு­மாற்றம் செய்து கொள்ளத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

கடற்­பு­லி­களின் பட­கு­களைச் சமா­ளிப்­ப­தற்­காக அதி­வேகத் தாக்­குதல் பட­கு­க­ளையும், சிறிய சண்டைப் பட­கு­க­ளை­யுமே பிர­தான பல­மாகக் கொண்­டி­ருந்த இலங்கைக் கடற்­படை, இப்­போது பாரிய கப்­பல்­களைக் கொண்ட கடற்­ப­டை­யாக மாற்றிக் கொள்ளத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

அண்­மையில் அமெ­ரிக்­காவில் நடந்த கடற்­படை கருத்­த­ரங்கு ஒன்றில் பங்­கேற்­ப­தற்­காகச் சென்­றி­ருந்த இலங்கைக் கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர குண­வர்­தன, அமெ­ரிக்க கடற்­படை அதி­கா­ரிகள், பென்­டகன் அதி­கா­ரிகள் மற்றும் அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளுடன் பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்தார்.

இந்தப் பேச்­சுக்­களின் முடிவில், இலங்கைக் கடற்­ப­டைக்கு ஆழ்­கடல் ரோந்துப் பணி­களில் ஈடு­ப­டுத்­தக்­கூ­டிய பாரிய கப்பல் ஒன்றை வழங்­கு­வ­தற்கு அமெ­ரிக்கா இணங்­கி­யி­ருக்­கி­றது.

அடுத்த ஆண்டில் இந்தக் கப்பல் இலங்கைக் கடற்­ப­டைக்குக் கிடைக்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர குண­வர்­தன, தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இலங்கைக் கடற்­ப­டைக்கு அமெ­ரிக்கா பாரிய கப்­பலை வழங்கப் போவது இது இரண்­டா­வது தட­வை­யாகும்.

அமெ­ரிக்க கட­லோரக் காவல்­ப­டையால் பயன்­ப­டுத்­தப்­பட்டு, சேவையில் இருந்து ஒதுக்­கப்­பட்ட கரே­ஜியஸ் என்ற கப்­பலை, 2004ஆம் ஆண்டு ஜூன் மாதம், 24 ஆம் திகதி இலங்கைக் கடற்­ப­டைக்கு அமெ­ரிக்கா அன்­ப­ளிப்­பாக வழங்­கி­யி­ருந்­தது.

அது 1967ஆம் ஆண்டு வெள்­ளோட்டம் விடப்­பட்டு, 35 ஆண்­டு­க­ளுக்கு மேலாக அமெ­ரிக்க கட­லோரக் காவல்­ப­டையால் பயன்­ப­டுத்தி ஒதுக்­கப்­பட்ட கப்பல். அதனை இலங்கைக் கடற்­படை தமது தேவை­க­ளுக்கு ஏற்ப மாற்­றி­ய­மைத்து இப்­போதும் பயன்­ப­டுத்தி வரு­கி­றது.

'சமுத்ர' என்று இலங்கைக் கடற்­ப­டையால் பெய­ரி­டப்­பட்ட இந்தக் கப்­பலே இப்­போது இலங்கைக் கடற்­ப­டை­யிடம் உள்ள மிகப்­பெ­ரிய ஆழ்­கடல் ரோந்துக் கப்­ப­லாகும்.

2001ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த ஐ.தே.க அர­சாங்கம் அமெ­ரிக்­கா­வுடன் நடத்­திய பேச்­சுக்­களை அடுத்தே, இந்தக் கப்பல் இலங்கைக் கடற்­ப­டைக்கு வழங்­கப்­பட்­டது. ஆனால், அந்தக் கப்­பலை பெற்­றுக்­கொண்ட போது, ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் பத­வியில் இருக்­க­வில்லை.

அமெ­ரிக்கா வழங்­கிய இந்தக் கப்பல், விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரில் முக்­கி­ய­மான திருப்பு முனை­க­ளுக்கு வழி­வ­குத்­தது.

விடு­தலைப் புலி­களின் ஆயுதக் கப்­பல்­களை ஆழ்­க­டலில் மூழ்­க­டிக்கும் நட­வ­டிக்­கை­களில் சமுத்ர முக்­கிய பங்­காற்­றி­யது. இதன் மூலம் புலி­க­ளுக்­கான ஆயுத விநி­யோகம் முடக்­கப்­பட்­டது.

புலி­களை அழிப்­ப­தற்­காக அமெ­ரிக்கா அப்­போது போர்க்­கப்­பலை மட்டும் வழங்­கி­யி­ருக்­க­வில்லை, புலி­களின் குறைந்­தது நான்கு ஆயுத விநி­யோக கப்­பல்கள் அழிக்­கப்­ப­டு­வ­தற்குத் தேவை­யான புல­னாய்வுத் தக­வல்­க­ளையும் அமெ­ரிக்­காவே வழங்­கி­யி­ருந்­தது.

அந்தக் கால­கட்­டத்தில், இலங்கைக் கடற்­ப­டையின் முது­கெ­லும்­பாக அதி­வேக தாக்­குதல் பட­கு­களே இருந்­தன. அவற்றில் பொருத்­து­வ­தற்­காக 25 மி.மீ புஸ்­மாஸ்டர் பீரங்­கி­க­ளையும் அமெ­ரிக்கா வழங்­கி­யி­ருந்­தது.

புலி­களை அழிப்­ப­தற்­கான செயற்­பா­டு­க­ளுக்­காக இலங்கைக் கடற்­ப­டையைப் பலப்­ப­டுத்­திய அமெ­ரிக்கா இப்­போது மீண்டும், ஒரு ஆழ்­கடல் ரோந்துக் கப்­பலை இலங்கைக் கடற்­ப­டைக்கு வழங்கப் போகி­றது.

இந்தக் கப்பல், புத்தம் புதி­ய­தாக இருக்­காது. அமெ­ரிக்க கடற்­படை அல்­லது கட­லோரக் காவல்­ப­டையால் பயன்­ப­டுத்­தப்­பட்ட பழைய கப்­ப­லா­கவே இருக்­கலாம். ஆனாலும் அது இலங்கைக் கடற்­ப­டைக்குப் பெரும் பலத்தைக் கொடுக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இலங்­கையின் ஆழ்­கடல் கண்­கா­ணிப்புத் திறனை அதி­க­ரிப்­பதில் அமெ­ரிக்கா எப்­போ­துமே ஆர்வம் காட்டி வந்­தி­ருக்­கி­றது. அது மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சிக்­கா­லத்­திலும் கூட – இரு­த­ரப்பு இரா­ஜ­தந்­திர உற­வுகள் நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யி­ருந்த போது கூட இலங்­கையின் ஆழ்­கடல் கண்­கா­ணிப்புத் திறனை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு அமெ­ரிக்கா உதவி வந்­தது.

2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், 20 ஆம் திகதி இலங்கை விமா­னப்­ப­டையின் பீச் கிராப்ட் விமா­னங்­களில், பொருத்­து­வ­தற்­காக நிகழ்­நேர தரவு சேக­ரிக்கும் கருவித் தொகு­தி­களை (Real Time Data Link system) அமெ­ரிக்கா அன்­ப­ளிப்­பாக வழங்­கி­யி­ருந்­தது.

இலங்கை விமா­னப்­ப­டையின் ஆழ்­கடல் கண்­கா­ணிப்புத் திறனை அதி­க­ரிப்­ப­தற்­கா­கவே அவற்றை வழங்­கி­ய­தாக அப்­போது அமெ­ரிக்கா கூறி­யி­ருந்­தது.

எனவே, இப்­போ­தைய நிலையில், அதுவும் அமெ­ரிக்­கா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான உற­வுகள் உச்ச நிலையில் இருக்­கின்ற போது, இலங்கைக் கடற்­ப­டைக்குக் கப்பல் ஒன்றை வழங்க அமெ­ரிக்கா முன்­வந்­தி­ருப்­பது ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரிய விட­ய­மல்ல.

விடு­தலைப் புலி­களின் காலத்தில், ஆழ்­கடல் ரோந்துக் கப்­பல்கள் அதி­க­ளவில் தேவைப்­ப­ட­வில்லை. அதனால் சிறி­ய­ள­வி­லான தாக்­குதல் பட­கு­களைக் கொள்­வ­னவு செய்­வதில் தான் கடற்­படை கவனம் செலுத்­தி­யது.

காரணம், புலிகள் பயன்­ப­டுத்­திய சண்டைப் பட­குகள் சிறி­யவை மாத்­தி­ர­மன்றி, அதி­வே­க­மா­கவும் பயணம் செய்யக் கூடி­ய­வை­யாக இருந்­தன.

பெரிய போர்க்­கப்­பல்­களை சண்­டைக்கு கொண்டு வரும் போது அவற்றைப் பாது­காப்­பதும் சிக்­க­லாக இருந்­தது. கடற்­க­ரும்­புலிப் பட­கு­க­ளிடம் இருந்து பாரிய கப்­பல்­களை பாது­காப்­பது கடினம்.

எனவே, தான் நான்­கா­வது கட்ட ஈழப்­போரின்போது கடற்­பு­லி­க­ளுக்கு எதி­ராக கடற்­படை முற்­றிலும் சிறிய ரக சண்டைப் பட­கு­களைக் கொண்டு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தது. அது பலனும் அளித்­தி­ருந்­தது.

ஆனால் இப்­போது கடற்­ப­டைக்கு அதி­க­ள­வி­லான சிறிய சண்­டைப்­ப­ட­குகள் தேவைப்­ப­ட­வில்லை. ஏனென்றால், இப்­போ­தைய நிலையில் ஆழ்­க­ட­லிலும் ரோந்து செல்லக் கூடிய, பல நாட்கள் கடலில் பயணம் செய்யக் கூடிய, வாரக்­க­ணக்கில் கடலில் தரித்து நின்று கண்­கா­ணிக்கக் கூடிய கப்­பல்கள் தான் தேவை.

எனவே தான் கடற்­படை இப்­போது பாரிய கப்­பல்­களை பெற்றுக் கொள்ளத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

ஏற்­க­னவே இந்­தி­யா­விடம் இருந்து இரண்டு ஆழ்­கடல் ரோந்துக் கப்­பல்­களைக் கொள்­வ­னவு செய்­வ­தற்­கான கட்­ட­ளை­களை இலங்கை வழங்­கி­யுள்­ளது.

கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இந்த இரண்டு கப்­பல்­க­ளையும் கட்டும் பணிகள் தற்­போது இடம்­பெற்று வரு­கின்­றன. அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்குள் இவை கடற்­ப­டையின் கைக்கு வந்து விடும்.

ஏற்­க­னவே, அவுஸ்­ரே­லி­யாவும் இரண்டு Bay வகை ரோந்துப் பட­கு­களை இலங்கைக் கடற்­ப­டைக்கு வழங்­கி­யி­ருக்­கி­றது.

ஜப்­பானும் இரண்டு பாரிய ரோந்துக் கப்­பல்­களை இலங்கைக் கடற்­ப­டைக்கு வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருக்­கி­றது.

இவை­யெல்லாம் இலங்­கையின் ஆழ்­கடல் கண்­கா­ணிப்புத் திறனை அதி­க­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளாகும்.

அமெ­ரிக்­காவும் கூட அதே நோக்கில் தான் இலங்கைக் கடற்­ப­டையைப் பலப்­ப­டுத்த ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

இந்­தியப் பெருங்­கடல் வழி­யாகப் பயணம் செய்யும் கப்­பல்­களின் பாது­காப்பை மலாக்கா நீரிணை வரை உறு­திப்­ப­டுத்தும் பணியில் இலங்கைக் கடற்­ப­டை­யி­னரை ஈடு­ப­டுத்தப் போவ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்தார்.

இது அமெ­ரிக்­காவின் திட்­டப்­படி முன்­னெ­டுக்­கப்­படும் நட­வ­டிக்கை. இந்த திட்­டத்தை சாத்­தி­ய­மாக்க வேண்­டு­மானால், பாரிய கப்­பல்கள் தேவைப்­படும். அதற்­கான முயற்­சி­களில் தான் கடற்­படை தற்­போது இறங்­கி­யி­ருக்­கி­றது.

பாரிய கப்­பல்­களை திரு­கோ­ண­மலைத் துறை­மு­கத்தில் இருந்து இந்தப் பணியில் ஈடு­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது. இதன் ஒரு கட்­ட­மா­கவே, திரு­கோ­ண­ம­லையில் உள்ள கடற்­ப­டையின் டொக்யார்ட் தளத்தின் இறங்­கு­து­றையை விரி­வாக்­கு­வற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இரண்டு வாரங்­க­ளுக்கு முன்னர் நடந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வரைகயில் ஜனாதிபதி இதற்கு அனுமதி கோரும் பத்திரத்தை சமர்ப்பித்து அனுமதி பெற்றிருந்தார்.

220 மீற்றர் நீளமும், 20 மீற்றர் அகலமும் கொண்டதாக இந்த புதிய இறங்குதுறையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பாரிய கப்பல்கள் இங்கு தரித்து நிற்கக் கூடிய வசதிகள் கிடைக்கும்.

கடற்படை ஆழ்கடல் ரோந்துப் பணிக்காக நான்கு பாரிய கப்பல்களை 2017-2019 ஆண்டு காலப்பகுதிக்குள் பெற்றுக் கொள்ளவுள்ள நிலையிலேயே, டொக்யார்ட்டில் புதிய இறங்குதுறையை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கைக் கடற்படை மரபுசார் நிலையில் இருந்து விலகியே கடற்புலிகளைத் தோற்கடிக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது, மீண்டும், மரபுசார் நிலைக்கு அது மாறத் தொடங்கியிருக்கிறது.

அதற்காகவே, ஆழ்கடல் கண்காணிப்புத் திறனை அதிகரிக்கும் திறனை இலங்கைக் கடற்படை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-10-09#page-9

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தமாக அமெரிக்க சார்நிலைக்கு திரும்புது என்று சொல்லுறது. tw_blush:

விடுதலைப்புலிகளை வெல்ல.. இத்தனை பேர் உதவி இருக்காய்ங்களா. கேட்டா நாங்க தான் வென்ற விழுத்தினம் என்றாய்ங்க.. சிங்களவங்க ஒரு பக்கம்.. தமிழ் ஒட்டுக்குழுக்கள் இன்னொரு பக்கம்.. இலங்கை..ஜிகாத் சகபாடிகள்.. இன்னொரு பக்கம். ஆக மொத்தத்தில்.. விடுதலைப்புலிகளை வீழ்த்துவதில்.. எல்லாரும் ஒன்றா இருந்தவை... தமிழ் மக்களுக்கு நீதி... தீர்வு என்று வரும் போது தான் ஒதுங்கிக்கினமோ. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.