Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2-வது ஒருநாள்: மோர்டசா ஆல்ரவுண்ட் ஆட்டம்; வங்கதேசத்திடம் இங்கிலாந்தும் தோல்வி

Featured Replies

2-வது ஒருநாள்: மோர்டசா ஆல்ரவுண்ட் ஆட்டம்; வங்கதேசத்திடம் இங்கிலாந்தும் தோல்வி

 

வெற்றிக்களிப்பில் வங்கதேசம். | படம்: ஏ.பி.
வெற்றிக்களிப்பில் வங்கதேசம். | படம்: ஏ.பி.

மிர்பூரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமன் செய்தது வங்கதேசம்.

முதலில் பேட் செய்த வங்கதேசம் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 204 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி தழுவியது.

ஜோஸ் பட்லர் 57 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து எல்.பி. ஆகிச் செல்லும் போது வங்கதேச வீரர் ஒருவர் ஸ்லெட்ஜ் செய்ய பதற்றம் அதிகரித்தது.

இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி முதல் 10 ஒவர்களுக்குள்ளேயே 26/4 என்று ஆனது. இதில் முதல் போட்டியில் சதம் எடுத்த பென் ஸ்டோக்ஸ், மற்றும் பென் டக்கட் ஆகியோர் விக்கெட்டுகளும் அடங்கும் இருவருமே டக் அவுட்.

தொடக்கத்திலேயே ஒரு முனையில் ஷாகிப் அல் ஹசன் அறிமுகம் செய்யப்பட்டர், மறு முனையில் மோர்டசா வீசினார். ஜே.எம்.வின்ஸ் மோர்சசா பந்தை பேக்வர்ட் பாயிண்டில் கேட்ச் கொடுத்து 5 ரன்களில் வெளியேறினார். டக்கெட், ஷாகிப் அல் ஹசனின் அருமையான பந்தில் ரன் எடுக்காமல் பவுல்டு ஆனார்.

எப்பவும் பவுண்டரி அடிக்க விரும்பும் ஜேசன் ராய் 13 ரன்களில் ஒரு பவுண்டரியையும் அடிக்க முடியாமல் வெறுப்பில் ஒரு பந்தை பவுண்டரி அடிக்க முயன்று கோட்டை விட பிளம்ப் எல்.பி.ஆனார். பென் ஸ்டோக்ஸ் மோர்டசா பந்து ஒன்றை லெக் திசையில் அடிக்க முயன்று ரன் எடுக்கும் முன்னரே பவுல்டு ஆகி வெளியேற இங்கிலாந்து 10-வது ஓவரில் 26/4 என்று ஆனது.

பட்லர், ஜானி பேர்ஸ்டொ இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 79 ரன்களைச் சேர்த்தனர். பேர்ஸ்டோ 35 ரன்களை எடுத்தார் இதற்கு 53 பந்துகளை அவர் எடுத்துக் கொண்டார் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்.

இந்நிலையில் தனது முதல் 2 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக் கொடுத்த டஸ்கின் அகமது மீண்டும் வந்து பேர்ஸ்டோ விக்கெட்டை விக்கெட் கீப்பர் கேட்ச் பிடிக்க வீழ்த்தினார். பட்லர் 57 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து டஸ்கின் பந்தை சற்றே முன்னேறி வந்து அடிக்க முயன்றார் அது நேர் பந்து கால்காப்பைத் தாக்க ரிவியூவில் எல்.பி.தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பட்லர் கடும் ஏமாற்றமடைந்தார், மேலும் வங்கதேச வீரர்களில் ஒருவர் பட்லரை நோக்கி ஏதோவொன்று கூறப்போக வாக்குவாதம் நடந்தது. நடுவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

மொயின் அலி 4 ரன்களில் நசீர் ஹுசைனிடம் வீழ்ந்தார். கிறிஸ் வோக்சை 7 ரன்களில் டஸ்கின் வீழ்த்தினார். 132/8 என்ற நிலையில் அடில் ரஷித் (33), ஜேக் பால் (28) இணைந்து கடைசி விக்கெட்டுக்காக 49 ரன்களைச் சேர்த்து ஸ்கோரை 204 வரைக்கும் கொண்டு வந்தனர், வெற்றிக்குத் தேவை 35 ரன்கள் என்ற சமயத்தில் மோர்டசா, பால் விக்கெட்டை வீழ்த்தி 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியும் முன்னதாக பேட்டிங்கில் கடைசியில் இறங்கி 29 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 44 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

முன்னதாக முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட வங்கதேசம் முதலில் 39/3 பிறகு 89/4 பிறகு 169/7 என்று தடுமாறியது. மஹமுதுல்லா மட்டுமே முதல் வரிசையில் அபாரமாக ஆடி 75 ரன்கள் எடுத்தார். கடைசியில் மொசாடெக் ஹுசைன் 29 ரன்களையும், நசிர் ஹுசைன் 27 ரன்களையும், மோர்டசா 44 ரன்களையும் சேர்த்தது வெற்றியைத் தீர்மானித்தது.

http://tamil.thehindu.com/sports/2வது-ஒருநாள்-மோர்சடா-ஆல்ரவுண்ட்-ஆட்டம்-வங்கதேசத்திடம்-இங்கிலாந்தும்-தோல்வி/article9206361.ece?homepage=true

  • தொடங்கியவர்

இங்கிலாந்தை பழி தீர்த்தது பங்களதேஷ்  ; எதிரணி மற்றும் பட்லரிடையில் கடும் வாக்குவாதம் ; மைதானத்தில் பரபரப்பு (வீடியோ இணைப்பு)

 

இங்கிலாந்து மற்றும் பங்களதேஷ் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் மற்றும் பங்களதேஷ் அணியினருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தினால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

போட்டியில் பங்களதேஷ் அணி 238 ஓட்டங்களை பெற்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 204 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

 

இந்நிலையில் ஜோஸ் பட்லர் 57 ஓட்டங்களை பெற்றிருந்த போது தஸ்கின் அஹமட்டின் பந்தில் ஆட்டமிழந்தார்.

போட்டியின் முக்கியமான விக்கட் வீழ்த்தப்பட்ட நிலையில், பங்களதேஷ் அணியினர் தமது மகிழ்ச்சியை ஆரவாரமாக வெளியிட்டனர்.

இதன் போது பட்லர்  மற்றும் பங்களதேஷ் அணியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் நடுவர்கள் குறுக்கிட்டு  வாக்குவாதத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

எனினும் போட்டி நிறைவடைந்தும் வாக்குவாதம் தொடர்பிலான விவாதங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களதேஷ் வெற்றியின் ரூலம் ஒருநாள் தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.

253257.3.jpg

253262.3.jpg253267.3.jpg253268.3.jpg253269.3.jpg253270.3.jpg253271.3.jpg253273.3.jpg

http://www.virakesari.lk/article/12255

  • தொடங்கியவர்

வெற்றி மிதப்பில் வங்கதேச வீரர்கள்... கடுப்பான இங்கிலாந்து கேப்டன்!

110755775_DHAKA_BANGLADESH_-_OCTOBER_09_

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மூன்று  ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் ஆடுவதற்காக  இங்கிலாந்து அணி வந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் முடிந்தபிறகு வங்கதேசம் சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது. 

பாகிஸ்தான், நியூசிலாந்து, ஜிம்பாப்பவே, இந்தியா, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வரிசையாக வங்கதேசத்துக்கு சென்று ஒருநாள் தொடரை இழந்து வந்துள்ளன. இந்நிலையில் இங்கிலாந்தின் இந்த சுற்றுப்பயணம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது. முதல் ஒருநாள் போட்டியில் தட்டுத்தடுமாறி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று தாக்காவில் நடந்தது. 

முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 238 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மஹமதுல்லா 75 ரன்களை குவித்தார், கடைசி ஓவர்களில் வங்கதேச அணியின் கேப்டன் மோர்தாசா 29 பந்தில் இரண்டு பவுண்டரி, மூன்று சிக்ஸர் உட்பட 44  ரன்களை அதிரடியாகச் சேர்த்தார். இங்கிலாந்து அணி 239  ரன்களை எடுத்தால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணத்துடன் களம் இறங்கியது. 

bangla1.jpg

சுமாரான இலக்கு என்பதால் வங்கதேசம் வெற்றிபெறுமா என்ற சந்தேகம் உள்ளூர் ரசிகர்களுக்கே இருந்தது. முதல் மூன்று ஓவர்களில்  11 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. அதன் பின்னர் மோர்தாசா விக்கெட் வேட்டையை ஆரம்பிக்க 10 ஓவரில் 31  ரன்களுக்கே நான்கு விக்கெட்டுகளை  இழந்து தத்தளித்தது இங்கிலாந்து அணி. பேர்ஸ்டோ, பட்லர்  இருவரும் சேர்த்து அதன் பின்னர் பொறுமையாக ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது.பேர்ஸ்டோ 35 ரன்னிலும், அடுத்த வந்த மொயின் அலி 4  ரன்னிலும் பெவிலியன் திரும்பினார்கள். 

அடுத்த ஓவரிலியேயே டஸ்கின் அகமது பந்துவீச்சில் பட்லர் அவுட்டானார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்க வில்லை, இதையடுத்து மூன்றாவது அம்பயரை வங்கதேச கேப்டன் மோர்தசா நாட உடனடியாக எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. அப்போது   இங்கிலாந்து கேப்டன் பட்லரை கடுப்பேற்றும் வகையில் கொண்டாடினர் வங்கதேச வீரர்கள். குறிப்பாக மஹமதுல்லா, பட்லர் முன்  சென்று முஷ்டி முறுக்கி பழித்தார். இதனால் ஆத்திரமடைந்த பட்லர் மஹமதுல்லாவுடன் சண்டை போட விரைந்தார். ஆனால் களத்தில் இருந்த அம்பயர் சமாதானப்படுத்தி பட்லரை அனுப்பி  வைத்தார்.

பட்லர் சென்ற பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கடைசி விக்கெட்டுக்கு கூட்டணி சேர்ந்த ஜேக் பால் மற்றும் அடில் ரஷிட் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். 44  ரன்கள் சேர்த்த இந்த கூட்டணியை மோர்தசா  பிரித்தார். 34  ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது மட்டுமின்றி தொடரையும் சமன் செய்தது வங்கதேசம். பேட்டிங்கில் 44 ரன்கள், பவுலிங்கில் நான்கு விக்கெட்டுகள் எடுத்து அசத்திய மோர்தசா ஆட்டநாயகன் விருதை வென்றார். வங்கதேச வீரர்களின் மோசமான கொண்டாட்ட முறை குறித்து அதிருப்தி தெரிவித்தார் இங்கிலாந்து கேப்டன் பட்லர்.

banla2.jpg

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் மற்ற நாடுகளின் வீரர்களை தொடர்ந்து கேலி செய்யும் வண்ணம் வங்கதேச ரசிகர்களும், வங்கதேச வீரர்களும் செயல்பட்டு வருகின்றனர். இது அந்த அணி மீது கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடும் கோபம் கிளப்பியிருக்கிறது. வங்கதேசம் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி போட்டிகளை ஜெயிப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயமாக இருந்தாலும், இது போன்ற செயல்கள் தொடர்ந்து அந்த அணி மீது உலக அரங்கில் தவறான பார்வையை விதைக்கிறது. வங்கதேசம் அதனை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

http://www.vikatan.com/news/sports/69321-bangladesh-cricketers-sledge-england-captain.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.