Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விழித்தெழும் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள்

Featured Replies

விழித்­தெழும் முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள்

RitaIzsakcoloursmall-0cf2420dea9cbbb4487a155334ce5695b3e77150.jpg

 

இனப்பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்­டு­மென்­பற்­காக அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றது. புதிய அர­சியல் யாப்பு, தேர்தல் முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தல் போன்­ற­வை­களில் கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றன. இவ்­வி­ட­யங்கள் குறித்து நேர் மற்றும் எதிர்­மறைக் கருத்­துக்கள் தெரி­விக்கப்படு­கின்­றன. ஆயினும், முஸ்லிம் கட்­சி­களும் தலை­வர்­களும் புதிய அர­சியல் யாப்பு, தேர்தல் முறை, முஸ்­லிம்கள் எதிர் கொண்­டுள்ள பிரச்­சி­னைகள் குறித்து போதிய கரி­சனை காட்­டா­தி­ருக்­கின்­றார்கள். அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய அர­சியல் தீர்­வி­னையும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தொகையை பாது­காப்­ப­தற்கும் , ஏனைய பிரச்­சி­னை­க­ளுக்­கு­ரிய தீர்­வு­க­ளையும் வழங்கும் என்று முஸ்­லிம்­களின் அர­சியல் தலை­வர்கள் சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இதேவேளை, முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் முஸ்­லிம்­களின் அர­சியல், பொரு­ளா­தார, சமூக விழு­மி­யங்­களில் அக்­கறை செலுத்துக் கொண்­டி­ருக்­கின்­றன. அர­சியல் தலை­வர்­களின் மீது நம்­பிக்கை இழந்­துள்­ள­மைதான் முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் சமூக விட­யங்­களில் கவனம் செலுத்­து­வ­தற்கு கார­ண­மாகும்.

நாட்டில் இடம்­பெற்ற உள்­நாட்டு யுத்­தத்­தி­னாலும், பௌத்த இன­வாத அமைப்­புக்­களின் நட­வ­டிக்­கை­க­ளி­னாலும் முஸ்­லிம்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளி­யே­யுள்ள முஸ்­லிம்கள் பெருந்துய­ரங்­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். மத­வி­ழும்­மியம் தொடர்பில் நாடு பூரா­கவும் உள்ள முஸ்­லிம்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். முஸ்­லிம்­களின் மதச் சுதந்­திரம் பாரிய சவால்­க­ளுக்கு உட்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இவை­களில் முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பொறுப்­புடன் செயற்­ப­டாத தன்­மை­யையே காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

இலங்­கைக்கு பல நாடு­களின் பிர­தி­நி­தி­களும், ஐ.நாவின் பிர­தி­நி­தி­களும் வருகை தரு­கின்­றார்கள். ஆனால், முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கு­ரிய தீர்­வு­களை பெற்றுத் தரு­மாறு கோரிக்­கை­களை ஆவண ரீதி­யாக முன் வைக்­க­வில்லை. அர­சாங்­கத்தின் திட்­டங்­க­ளுக்கு அமை­வாக சமூ­கத்தை வழி நடத்­து­வ­தற்கும், சுக­போ­கங்­களை அனு­ப­வித்துக் கொள்­வ­தற்­குமே முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இதனால், முஸ்­லிம்கள் அர­சியல் தலை­வர்­க­ளையும், தமது வாக்­கு­களைப் பெற்றுக் கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் நம்­பு­வ­தனை குறைத்துக் கொண்டு வரு­கின்­றார்கள். இதே­வேளை , முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் சமூ­கத்தின் நலன்­களை பாது­காத்துக் கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளன

அந்த வகையில் RRT (Rapid Response Team) எனும் அமைப்பு இலங்­கைக்கு விஜ­யத்தை மேற்­கொண்­டுள்ள சிறு­பான்மை இனங்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நதே­யாவை கொழும்­பி­லுள்ள ஐ.நா. அலு­வ­ல­கத்தில் (10.10.2016) சந்­தித்­துள்­ளது.

இந்­நாட்டு முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் குறித்து விரி­வான பேச்­சு­வார்த்­தை­களை அவ்­வ­மைப்பு மேற்­கொண்­டது. சுமார் மூன்று மணித்­தி­யா­லங்கள் நீடித்த இப்­பேச்­சு­வார்த்­தையின் இறு­தியில் அறிக்கை ஒன்­றினை ரீட்டா ஐசாக் நதே­யா­விடம் இந்த அமைப்­பினர் வழங்­கி­யுள்­ளனர் . முஸ்­லிம்கள் எதிர்­கொண்­டி­ருக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வு­களை வழங்­கு­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்­கு­மாறும் கேட்டுக் கொண்­டார்கள்.

ஐ.நாவின் மனித உரிமை பேர­வையின் முன்னாள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை வருகை தந்தபோது முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் பற்­றிய ஆவண அறிக்கை ஒன்­றினை மு.காவின் செய­லாளர் ஹஸன்­அலி வழங்­கி­யி­ருந்தார்.

இந்த அறிக்­கையால் கடந்த அர­சாங்கம் திக்­கு­முக்­கா­டி­யது. அவர் எங்­க­ளுக்கு தெரி­யாமல் வழங்­கி­விட்டார் என்று அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷ­விடம் ஹஸன்­அலி காட்டிக் கொடுக்­கப்­பட்டார். ஹஸன்­அ­லியின் அந்த அறிக்­கையின் பின்னர் ஐ.நாவின் அதி­காரி ஒரு­வ­ரிடம் முஸ்லிம் சமூ­கத்தின் அதி­க­பட்ச பிரச்­சி­னை­களை உள்­ள­டக்­கி­ய­தொரு அறிக்­கை­யாக RRT எனும் அமைப்­பி­னரின் அறிக்கை அமைந்­துள்­ளது.

முஸ்­லிம்­களின் அர­சியல் தலை­வர்கள் சமூ­கத்தின் மீது அக்­கறை காட்­டாது வேறு விவ­கா­ரங்­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். யார் என்ன சொன்­னாலும் அர­சாங்­கத்­திற்கு நல்ல பிள்­ளை­யாக இருக்க வேண்டும் என்ற கொள்­கை­யு­ட­னேயே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். சமூகம் சார்ந்த கேள்­வி­களை கேட்­கின்­ற­வர்­களை கட்­சி­யி­லி­ருந்து தூர­மாக்­கு­வ­தற்கும், விலக்கி வைப்­ப­தற்கும் நட­வ­டிக்­கை­களை எடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இதனால், முஸ்லிம் கட்­சி­களின் உயர்­பீ­டங்கள் மௌனி­களின் சபை­யாக உள்­ளது. அச்­ச­பை­களில் உள்ள மௌனிகள் தலை­மை­யினால் தங்­க­ளுக்கு கிடைத்துக் கொண்­டி­ருக்கும் கூனி­களைக் கூட இழக்கக் கூடா­தென்­ப­தற்­காக முஸ்லிம் சமூ­கத்­திற்கு தீங்­காக அமை­யுள்ள விட­யங்­களை சரி­யென்று விவா­தித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு சிறு­பான்­மை­யி­னரின் நன்மை கருதி எதிர்த்த சட்ட மூலங்­க­ளான அவ­சர கால சட்டம், திவி­நெ­கும, 18ஆவது சட்ட மூலம் போன்­ற­வை­க­ளுக்கு முஸ்லிம் கட்­சிகள் ஆத­ரவு அளித்­தன. 18ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு கைகளை உயர்த்தி மக்­களை ஏமாற்­றி­னார்கள்.

இன்­றைய அர­சாங்­கத்தில் கூட முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­க­ளி­னதும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­னதும் நட­வ­டிக்­கைகள் எரியும் வீட்டில் எதனை எடுத்துக் கொள்­ளலாம் என்­ப­தா­கவே இருக்­கின்­றது. இந்­நி­லையில் முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களும் அர­சியல் தலை­வர்­களைப் போன்று செயற்­பட முடி­யாது.

கடந்த அர­சாங்­கத்தில் முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் பலவும் மௌன­மா­கவே செயற்­பட்­டன. ஒரு சில அமைப்­புக்கள் முஸ்லிம் சமூ­கத்தின் அன்­றைய பிரச்­சி­னை­க­ளுக்­காக குரல் கொடுத்­தன. நீதி­மன்­றத்தில் வழக்­கு­க­ளையும் தாக்கல் செய்­தன. அந்­த­வ­கையில் RRT எனும் அமைப்பு முஸ்லிம் சமூ­கத்தின் பல பிரச்­சி­னை­க­ளுக்கு குரல் கொடுத்து வந்­துள்­ளது.

சிறு­பான்மை இனங்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நதே­யாவை சந்­தித்த RRTஎனும் அமைப்­பினர் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு கடந்த அர­சாங்­கத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட எதிர்­ந­ட­வ­டிக்­கைகள் இன்­றைய அர­சாங்­கத்­திலும் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு சட்­டத்தின் உத­வியை நாடும் போது அதி­கார துஸ்­பி­ர­யோ­கங்கள், சட்ட மீறல்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன எனத் தெரி­வித்­துள்­ளார்கள்.

2014ஆம் ஆண்டு பொது­பல சேன­வினால் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட அளுத்­கம வன்­செயல்கள் குறித்து அர­சாங்கம் இன்னும் நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. இதன் போது இருவர் உயிரிழந்­துள்­ளார்கள், முஸ்­லிம்­க­ளுக்கு பல கோடி ரூபா நஷ்டம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இவை தொடர்பில் பூரண விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும். இதற்­கொரு ஆணைக்­குழு நிய­மி­கக்ப்­பட வேண்­டு­மென்றும் RRTஎனும் அமைப்­பினர் ரீட்­டா­விடம் தெரி­வித்­துள்­ளார்கள்.   

புதிய அர­சியல் யாப்­பொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இதில் முஸ்­லிம்­க­ளுக்கு நியா­ய­மான தீர்வு அவ­சி­ய­மாகும். முஸ்­லிம்­களின் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை குறைக்கும் வகையில் நட­வடிக்;கைகள் இடம் பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. எல்லை நிர்­ண­யங்கள் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை குறைக்கும் வகையில் அமையக் கூடா­தெ­னவும் RRT எனும் அமைப்­பினர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்கள்.

புதிய அர­சியல் யாப்பில் தேர்தல் மறு சீர்­தி­ருத்தம் என்­பதும் அடங்­கு­கின்­றது. தற்­போது நடை­மு­றையில் உள்ள விகி­தா­சாரத் தேர்தல் முறையை மாற்­றி­ய­மைப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. ஒரு சில விசேட எற்­பா­டு­களை செய்து தொகு­தி­வாரி தேர்தல் முறையை கொண்டு வரு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இதனால், முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் வீழ்ச்­சி­ய­டையும். ஆதலால், சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்தை பாது­காத்துக் கொள்­வ­தற்கு விகி­தா­சார தேர்தல் முறையே தொடர்ந்தும் நடை­மு­றையில் இருக்க வேண்டும். இத்­தேர்தல் முறையில் உள்ள குறை­களை நீக்­கு­வ­தற்கு விசேட ஏற்­பா­டு­களை செய்­வதே பொருத்­த­மான நட­வ­டிக்­கை­யாக அமையும். ஆனால், முஸ்லிம் கட்­சி­களும், தலை­வர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இதில் கவனம் செலுத்­து­வ­தாகத் தெரி­ய­வில்லை. அர­சாங்­கத்­தினால் கொண்டு வரப்­படும் தேர்தல் முறைக்கு ஆத­ர­ளிக்கும் செயற்­பா­டு­க­ளுக்­கு­ரிய ஆரம்ப வேலை­களை முஸ்­லிம்கள் மத்­தியில் மேற்­கொண்­டுள்­ளார்கள். தொகு­தி­வாரி முறையில் தாங்கள் வெற்றி பெறக் கூடிய வகையில் தொகு­தி­களின் எல்­லை­களை நிர்­ணயம் செய்து விட்டு முஸ்லிம் சமூ­கத்தை நட்­டாற்றில் விடு­வ­தற்கே முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இது விட­யத்தில் முஸ்லிம் பொறுப்­புடன் நடந்து கொள்ளல் வேண்டும்.

கடந்த 08.10.2016 கொழும்பில் முஸ்லிம் காங்­கிரஸ் ஒரு அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்தம் தொடர்­பான கருத்­த­ரங்கு ஒன்­றினை நடத்­தி­யது. இதன் போது உத்­தேச தேர்தல் சீர்­தி­ருத்தம் பற்­றி­ய­தொரு ஆலோ­சனை ஆவ­ணத்­தையும் மு.கா அன்று வெளி­யிட்­டுள்­ளது. அதில் 196 தேர்தல் தொகு­திகள் அமைக்­கப்­பட வேண்­டு­மென்றும், 33 பேர் தேசி­யப்­பட்­டி­யலில் தெரிவு செய்­யப்­பட வேண்­டு­மென்றும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் முழுத் தொகை 235ஆக அமைய வேண்­டு­மென்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஆலோ­சனை மு.கா தொகு­தி­வாரி தேர்தல் முறையை ஏற்றுக் கொள்ளப் போகின்­றது என உணர முடி­கின்­றது. தொகு­தி­வாரி தேர்தல் முறையில் எந்த விசேட ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டாலும் முஸ்லிம் சமூ­கத்­திற்கு பாதிப்­பா­கவே அமையும். இதில் குறிப்­பாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே உள்ள முஸ்­லிம்­கள்தான் பாதிக்­கப்­ப­டு­வார்கள். தேர்­தலில் யார் வெற்றி பெற வேண்­டு­மென்­பது முக்­கி­ய­மல்ல. முஸ்லிம் சமூகம் தோல்வி அடையக் கூடாது.

ஆதலால், RRTஎனும் அமைப்­பினர் பாரா­ளு­மன்­றத்தில் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை பாது­காத்துக் கொள்ள வேண்­டு­மென்று கவனம் செலுத்­தி­யி­ருப்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தொரு நட­வ­டிக்­கை­யாகும். அத்­தோடு, புதிய அர­சியல் யாப்பில் முஸ்லிம்; தனியார் சட்டம் இடம்­பெ­றுமா என்ற சந்­தேகம் வலுத்துக் கொண்­டி­ருக்­கின்­றது. தாங்கள் வெற்றி பெறுவதற்கு தேர்தல் தொகுதிகளை அமைத்துக் கொள்வதற்கு பேரினவாதிகளின் கால்களில் விழுந்து கிடக்கும் தலைமைகள் இதனைப் பற்றி கவலை கொள்வதாகத் தெரியவில்லை. இதனால், சுசுவு எனும் அமைப்பினர் முஸ்லிம் தனியார் சட்டம் குறித்தும் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தோடு மும்மானை முஸ்லிம் பாடசாலை மைதானப் பிரச்சினை, எல்லை நிர்ணயம், பாத்தியா மாவத்தை மற்றும் பொரலஸ்கமுவ பள்ளிவாசல்கள் பிரச்சினைகள், ஏனைய பள்ளிவாசல் மீதான தாக்குதலகள்; பற்றியும், பெண்களை காதி நீதிபதிகளாக நியமிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், முஸ்லிம்களுக்கு எதிரான மத வெறுப்பு பேச்சுகள் குறித்தும் பேசியுள்ளார்கள்.

இவ்வாறு முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ள போதிலும், வடமாகாண முஸ்லிம்களினது மீள்குடியேற்றப் பிரச்சினை, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளை பற்றி பேசியதாகவோ, அறிக்கையில் உள்ளடக்கியதாகவோ அறிய முடியவில்லை. ஆயினும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைமைகளும் சமூகத்தை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கையில் RRT எனும் அமைப்பினர் இந்தளவிற்காவது சமூகம் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை பாராட்டுக்குரியது.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-10-16#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.