Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமற்போன கிளிநொச்சி வர்த்தகர் பொலிஸில் சரண்

Featured Replies

காணாமற்போன கிளிநொச்சி வர்த்தகர் பொலிஸில் சரண்
 
 
காணாமற்போன கிளிநொச்சி வர்த்தகர் பொலிஸில் சரண்
கிளிநொச்சியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் கி.ரதீஸ் என்ற வர்த்தகர் இன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
 
யாழ்ப்பாணம் - இடைக்குறிச்சி - வரணியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி கிளிநொச்சியில் காணாமல் போயி ருந்தார்.
 
குறித்த வர்த்தகர் தனது வீட்டில் இருந்து கிளிநொச்சியில் உள்ள தனது பதிப்பகத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் காணாமல் போயிரு ந்த நிலையில், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்த விடயம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில் குறித்த நபர் இன்றைய தினம் பொலிஸ் நிலை ய த்தில் சரணடைந்துள்ளார்

http://onlineuthayan.com/news/19065

  • தொடங்கியவர்

மாயமான வர்த்தகர் திடீரென பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்தமையால் பரபரப்பு

 

(எஸ்.என்.நிபோஜன்)

கடந்த 6 நாட்களாக காணாமல்போன வர்த்தகர் ஒருவர் தீடீரென கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று பகல் சரணடைந்தமையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொம்மந்தரை வல்வெட்டித்துறைச் சேர்ந்த கிளிநொச்சியின் பிரபல வர்த்தகரான  கிருஸ்ணசாமி ரதீசன் (வயது36) கடந்த புதன்கிழமை மதியம் 12.00 மணியிலிருந்து இவரைக் காணவில்லை என்று உறவினர்களால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டமைக்கு அமைவாக கிளிநொச்சிப் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு இருந்த நிலையில் இவர் கடத்தப்பட்டிருப்பார் என ஒரு சிலரும்  இல்லை இவர் கடன்தொல்லையினால் தலைமறைவாகி இருப்பார் என ஒரு சிலரும் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களுக்கு அமைவாக விசாரைனைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

unnamed__19_.jpg

இந்நிலையில்  நேற்று  குறித்த வர்த்தகர் தானாகவே  கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்  இதனால் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்ட அவரது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அவரது பணியாளர்கள்  சந்தோசக்களிப்பிலும் ஆரவாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

unnamed__20_.jpg

பின்பு குறித்த வர்த்தகரை கிளிநொச்சிப் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பதில்பொறுப்பதிகாரி ஆனந்த சுமணசிறி விசாரணைக்கு உட்படுத்தியத்தில் தான் தனது வேலைப்பளு காரணமாக சரியாக நித்திரைகளின்றி மன உளைச்சல்  காரணமாக  தான் செய்வதறியாது  பஸ்ஸில் ஏறி வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை போன்ற இடங்களிற்கு பஸ்ஸிலேயே பயணம் செய்ததாகவும் தனது மனநிலை சரியானதும் தான் இன்று கிளிநொச்சிக்கு திரும்பி உள்ளதாகவும் தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் நான் கடன் காரணமாக தலைமறைவாகவில்லை எனவும் தனது வாக்குமூலத்தில் பதிவிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன 

அத்துடன் இவர்  கடன்காரணமாக தலைமறைவாகி இருந்திருப்பாரா என  எமது செய்திப்பிரிவு  கிளிநொச்சி பொலிஸ்  நிலையத்தில் வினவிய போது  அவர் தங்களுக்கு பணம் தர  வேண்டும் என இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் வரவில்லை எனவும்  அவர் வர்த்தகங்கள் செய்வதனால் சுழற்சி முறையிலான சில கடன்கள் இருப்பதாக அறிய முடிகின்றது என  கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

unnamed__21_.jpg

http://www.virakesari.lk/article/12460

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.