Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொறுப்பை உணர்ந்து செயற்படுங்கள்

Featured Replies

பொறுப்பை உணர்ந்து செயற்­ப­டுங்கள்

 

இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­க­ளான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் இணைந்து அமைத்­துள்ள தேசிய நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குள் தற்­போது ஏற்­பட்­டுள்­ள­தாக வெளிக்­காட்­டப்­படும் நெருக்­கடி நிலைமை கார­ண­மாக நீதி வழங்கும் பொறுப்புக் கூறும் விசா­ரணைப் பொறி­மு­றையில் தாம­தங்கள் ஏற்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­காத நிலைமை ஏற்­பட்டு விடுமோ என்ற அச்­சமும் மக்கள் மத்­தியில் தோன்­றி­யுள்­ளது.

குறிப்­பாக யுத்த காலத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் என்பவற்­றினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்­டு­மானால் இரண்டு கட்­சி­களும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­ப­டு­வதன் ஊடா­கவே அது சாத்­தி­ய­மாகும். ஆனால், தற்­போது தேசிய அர­சாங்­கத்­திற்குள் ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் நெருக்­க­டி­யா­னது எக்­கா­ரணம் கொண்டும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் காயங்­களை ஆற்றும் செயற்பாட்டில் தாம­தத்தை ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூ­டாது. இதில் அனைத்துத் தரப்­பி­னரும் பொறுப்­புடன் செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். காரணம் தற்போதைய நிலை­மையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் செயற்­பாடானது தாம­த­ம­டைந்து செல்­வ­தாக பல்­வேறு தரப்­பி­னரும் சுட்­டிக்காட்டி வரு­கின்ற நிலையில் தேசிய அர­சாங்­கத்­திற்குள் ஏற்­பட்டுள்ள­தாக கூறப்­படும் நெருக்­க­டி­யா­னது அதனை மேலும் தாமதப்­ப­டுத்­தி­விடுமோ என்ற அச்சம் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டுள்­ளது.

அதா­வது கடந்த வருடம் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையின் பிர­காரம் அர­சாங்கம் உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றை­யொன்றை முன்­னெ­டுப்­ப­தாக உறு­தி­ய­ளித்­தி­ருக்­கி­றது. எனினும் அந்த பிரே­ரணை நிறைவேற்­றப்­பட்டு ஒரு வருடம் நிறை­வ­டைந்த நிலையில் இது­வரை உள்ளக விசாரணைப் பொறி­மு­றையின் வடிவம் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. அதற்கான ஆலோ­ச­னை­களும் கலந்­து­ரை­யா­டல்­களும் இடம்­பெ­று­வ­தாக அர­சாங்கத் தரப்பில் கூறப்­பட்டு வரு­கின்ற போதிலும் பாதிக்­கப்­பட்ட மக்கள் ஆரம்பத்தில் வைத்­தி­ருந்த நம்­பிக்கை மேலோங்கும் வகையில் செயற்­றி­றனான செயற்­பா­டுகள் இடம்­பெ­று­வ­தாக தெரி­ய­வில்லை.

அண்­மையில் அறிக்­கை­யொன்றை வெளியிட்­டி­ருந்த சர்­வ­தேச மன்­னிப்புச் சபை­யா­னது பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ச்­சி­யாக நீதிக்­காக காத்­தி­ருக்கும் நிலைமை தொடர்­வ­தா­கவும் அந்த நிலைமை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட வேண்­டு­மென்றும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது. அது மட்­டு­மன்றி உள்­நாட்­டிலும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட முக்­கிய தரப்­புக்கள் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் செயற்­பாட்டில் தாமதம் இருக்கக் கூடாது என்­பதை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றன. ஆனால் இலங்கை தொடர்­பான பிரே­ரணை ஜெனீ­வாவில் நிறை­வேற்­றப்­பட்டு ஒரு வருடம் கடந்­துள்ள நிலை­யிலும் இது­வரை விசா­ரணைப் பொறிமு­றையின் இறுதி வடிவம் தயா­ரிக்­கப்­ப­டாமல் இருப்­ப­தா­னது பல்­வேறு சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. விசே­ட­மாக அர­சாங்கம் படிப்­ப­டி­யாக நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தாக கூறி வரு­கின்ற போதிலும் அவ்­வப்­போது அர­சாங்­கத்­திற்குள் இடம்­பெறும் நிகழ்­வு­க­ளையும் வெளி­யி­டப்­படும் கருத்­துக்­க­ளையும் பார்க்கும் போது எங்கே பொறுப்புக் கூறல் செயற்­பா­டா­னது வேண்­டு­மென்றே தாம­தப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றதா? என்ற சந்­தேகம் பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் மத்­தியில் எழு­கின்­றது. விசே­ட­மாக அண்­மையில் கருத்­து­ரைத்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்னாள் கடற்­படைத் தள­ப­திகள் மற்றும் இரா­ணுவ அதி­கா­ரிகள் நீதி­மன்­றத்­திற்கு அழைத்து விசா­ரிக்­கப்­ப­டு­கின்­ற­மையை கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்தார்.

இவ்­வாறு நாட்டின் தலைவர் தெரி­வித்­தி­ருந்­த­மை­யா­னது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் செயற்­பா­டு­ நம்­ப­க­ர­மான முறை­யிலும் சுயா­தீன முறை­யிலும் இடம்­பெ­றுமா என்ற சந்­தே­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. குறிப்­பாக பொறுப்புக் கூறல் விசா­ரணை என்று வரும்­போது அந்தப் பொறி­முறை எவ்­வாறு அமையும் என்­பது இது­வரை தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை, இந்­நி­லையில் அதற்கு முன்­னரே இவ்­வாறு நிபந்­த­னை­களை விதிப்­ப­தா­னது சுயா­தீ­ன­மான செயற்­பாடு தொடர்பில் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. அந்த விடயம் தான் தேசிய அர­சாங்­கத்தில் தற்­போது தோற்­று­விக்­கப்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை­யா­னது பொறுப்புக் கூறல் செயற்­பாட்டில் எவ்­வா­றான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பது தொடர்பில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தரப்பில் ஒரு­வி­த­மான அச்சம் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மா­கி­யுள்­ளது.

எவ்­வா­றெ­னினும் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் செயற்­பாட்டில் எவ்­வி­த­மான தாமதம் எதுவும் இல்லை என்றும் அவை கிர­ம­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­காரி கடந்த வாரம் தெரி­வித்­தி­ருந்தார். அதா­வது பொறுப்புக் கூறல் விசா­ர­ணையை தயா­ரிக்கும் செயற்­பாட்டில் எவ்­வி­த­மான தாம­தமும் இல்லை.

இந்த செயற்­பா­டுகள் படி­முறை ரீதி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன. நல்­லி­ணக்கப் பொறி­முறை தொடர்­பான மக்கள் கருத்­த­றியும் செயற்­பா­டுகள் ஏற்­க­னவே நிறை­வ­டைந்­து­விட்­டன. தற்­போது அது தொடர்­பான அறிக்கை அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்­கப்­பட ஏற்­பா­டா­கி­யுள்­ளது. அதன் பின்னர் இந்த விட­யங்­களை கருத்தில் கொண்டு பொறுப்புக் கூறல் வரைபு தயா­ரிக்­கப்­படும். இந்த விட­யத்தில் சட்ட ரீதி­யான தேவை­களும் காணப்­ப­டு­கின்­றன. அவற்றைக் கருத்தில் கொண்டு செயற்­பா­டுகள் உரிய முறையில் முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­காரி சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அர­சாங்கம் பொறுப்புக் கூறல் செயற்­பாட்டை முன்­னெ­டுப்­ப­தாக ஒரு அடிப்­படைத் திட்­டத்தை சில மாதங்­க­ளுக்கு முன்னர் வெளி­யிட்­டி­ருந்­தது. அதா­வது உண்­மையைக் கண்­ட­றிதல் மீள் நிக­ழா­மையை உறு­திப்­படுத்­துதல், நட்­ட­ஈடு வழங்­குதல் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக சிறு­பான்மை மக்­களின் உரி­மை­களை நிலை­நாட்­டுதல் போன்ற நான்கு விட­யங்­களின் ஊடாக உள்­ளகப் பொறி­முறை விசா­ர­ணையை தயா­ரிப்­ப­தாக அர­சாங்கம் கூறி­யி­ருந்­தது. அதன்­படி தற்­போது காணாமல் போனோர் குறித்த அலு­வ­லகம் நிறு­வப்­ப­ட­வுள்­ளது.

இதற்­கான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அதே­வேளை விரைவில் உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவும் அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு சமாந்­த­ர­மாக பொறுப்­புக்­கூறல் செயற்­பாடு தொடர்­பான மக்­களின் கருத்­துக்­களை அறி­வ­தற்­கான கலந்­து­ரை­யா­டல்­களும் ஆலோ­ச­னை­களும் இடம்­பெற்­றுள்­ளன.

இந்­நி­லையில் அனைத்து விட­யங்­க­ளையும் கொண்டே பொறுப்­புக்­கூறல் விசா­ரணைப் பொறி­மு­றையின் வடிவம் தயா­ரிக்­கப்­ப­டு­மென அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால், இவ்­வாறு வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டாலும் ஜெனீவா பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு ஒரு வருடம் கடந்­துள்ள நிலையில் இது­வரை இறுதி வடிவம் தயா­ரிக்­கப்­ப­டாமல் இருக்­கின்­றமை ஒரு தாமத நிலையை வெளிக்­காட்­டு­கின்­றது. அதனால் தான் சர்­வ­தேச மன்­னிப்புச் சபை போன்ற அமைப்­பு­களும் உள்­நாட்டு அமைப்­பு­களும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டை தாம­தப்­ப­டுத்த வேண்­டா­மென வலி­யு­றுத்த ஆரம்­பித்­துள்­ளன.

அது­மட்­டு­மன்றி தேசிய அர­சாங்­கத்­திற்குள் ஏற்­பட்­டுள்ள சர்ச்சை நிலை­மை­களும் பொறுப்­புக்­கூறல் விசா­ரணை செயற்­பாட்டை தொடர்ந்தும் தாம­தப்­ப­டுத்­தி­வி­டுமா என்ற நியா­ய­மான சந்­தே­கமும் தவிர்க்க முடி­யா­த­தாக காணப்­ப­டு­கின்­றது. எது எவ்­வா­றெ­னினும் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்­பட வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாகும்.

குறிப்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கடந்த ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­திகள் மற்றும் இந்தக் கட்­சி­க­ளுக்கு மக்கள் வழங்­கிய ஆணை என்­ப­வற்றை மறந்­து­வி­டாமல் தமது பொறுப்பு என்ன என்­பதை புரிந்­து­கொண்டு செயற்­பட வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தாம­த­மற்ற நிலையில் பொருத்­த­மான நீதி நிலை­நாட்­டப்­படு­மென ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுட்டிக்காட்டியிருந்தன. அந்த வாக்குறுதிகள் மறக்கடிக்கப்பட்டுவிடக்கூடாது.

அரசாங்கத்திற்குள் ஏற்படுகின்ற நெருக்கடிகள் மற்றும் புறக் காரணிகளின் அழுத்தங்கள் காரணமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலை நாட்ட வேண்டிய நீதியை தாமதப்படுத்தவோ இருட்டடிப்புச் செய்யவோ எந்தவொரு தரப்பும் முயற்சிக்கக்கூடாது. அதுமட்டுமன்றி கடந்த காலங்களில் அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட அணுகுமுறைகளையும் பின்பற்றுவதற்கு தற்போதைய தலைவர்கள் முயற்சிக்கக்கூடாது.

நீதிவழங்கும் செயற்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதும் சர்வதேச சமூகத்தின் மீதும் ஐக்கிய நாடுகள் சபையின் மீதும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அந்த நம்பிக்கையை சிதைக்கும் வகையில் எந்தவொரு தரப்பினரும் செயற்படக் கூடாது. அதாவது, இந்த விடயத்தில் அனைத்துத் தரப்பினரும் தமது பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-17#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.