Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் இறந்துவிட்டதாக சரத் பொன்சேகாவே எனக்கு கூறினார்

Featured Replies

பிர­பா­கரன் இறந்­து­விட்­ட­தாக சரத் பொன்­சே­காவே எனக்கு கூறினார்

gothapaya-2-463c4e1539652d4577ec5f9ba952390cf749a2c6.jpg

 

இறுதி யுத்­தத்­தின்­போது புலி­களின் தலைவர் பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டு­விட்­ட­தாக முன்னாள் இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சே­காவே என்­னிடம் தெரி­வித்தார் என்று முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ தெரி­வித்­துள்ளார்.

ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கி­யுள்ள விசேட செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அந்த செவ்­வியின் விபரம் வரு­மாறு:

கேள்வி: நாட்டின் அர­சியல் நிலைப்­பா­டுகள் குறித்து அவ­தா­னத்­துடன் இரு­கின்­றீர்­களா?

பதில்: நாட்டின் அர­சி­யலில் தற்­போது வரையில் நான் நேர­டி­யாக தொடர்­பு­ப­ட­வில்லை. அதனால் ஒவ்­வொரு நாளும் இடம்­பெறும் நிகழ்­வுகள் தொடர்பில் கவனம் செலுத்­திக்­கொண்­டுதான் இருக்­கின்றேன். இருப்­பினும் நாட்டின் சக­ல­து­றை­களும் மந்த கதியில் பய­ணிக்­கின்­றன என்­பதே சக­ல­ரதும் கருத்­தாக அமைந்­துள்­ளது. கடந்த அர­சாங்கம் பல்­வேறு துறை­க­ளுக்கும் வழங்­கிய சேவைகள் இன்று முடங்­கி­யுள்­ளன. இது எமது நிலைப்­பாடு மாத்­தி­ர­மல்ல நாட்டு மக்கள் பலர் இந்த நிலைப்­பாட்­டி­லேயே உள்­ளனர். இந்த அர­சாங்­கத்­திடம் நாட்டை முன்­னோக்கி நகர்த்­து­வ­தற்­கான உரிய செயற்­றிட்­டங்கள் எதுவும் இல்லை. இல்­லா­விட்டால் கடந்த அர­சாங்­கத்­தினை வீட்­டிற்கு அனுப்­பு­வ­தற்­கான திட்டம் மட்­டுமே இவர்­க­ளி­டத்தில் இருந்­துள்­ளது என்றே நான் கரு­து­கின்றேன்.

எனது துறையை சம்­பந்­தப்­ப­டுத்தி கூறு­வ­தாயின் இன்று பாது­காப்பு தரப்­பிற்குள் பல்­வேறு தளம்பல் நிலை­மைகள் தோன்­றி­யுள்­ளன. அவற்றை சீர் படுத்­து­வ­தற்­கான எவ்­வ­கை­யி­லான திட்­டமும் அர­சாங்­கத்­திடம் இல்லை. பாது­காப்பு தரப்­புக்கள் விட­யத்தில் சிறந்த தலை­மைத்­து­வத்­தினை வழங்­க­க்கூ­டிய ஒரு­வரும் அர­சாங்­கத்தில் இல்லை. குறிப்­பாக வடக்கின் பாது­காப்பு விட­யத்தில் இந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்­து­வரும் செயற்­பாடுகள் குறித்து சிறிதும் திருப்­தி­ய­டைய முடி­யா­துள்­ளது.

பொரு­ளா­தா­ரத்­தைப்­பற்றி நோக்கும் போது இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வரும் முன்­ன­தாக சீனா­வு­ட­னான பொரு­ளா­தார உறவை முறித்­துக்­கொள்­வ­தையே பிர­த­ான இலக்­காக கொண்­டி­ருந்­தது. அதன் பிர­காரம் ஆட்­சிக்கு வந்த பின்னர். சீனா­வு­ட­னான பொரு­ளா­தார செயற்­பா­டுகள் பல­வற்­றுக்கு முற்­றுப்­புள்ளி வைத்­தி­ருந்­தனர். அதன் பலன்­க­ளையும் இன்று அர­சாங்கம் அனு­ப­வித்துக் கொண்­டுள்­ளது. தூர­நோக்­கற்ற செயற்­பா­டு­களே பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு பிர­தான கார­ண­மா­கி­யுள்­ளன. கொழும்பு, காலி, கண்டி ஆகிய மாவட்­டங்­களை அபி­வி­ருத்தி செய்ய நாம் திட்­டங்­களை வகுத்து அதற்­கான கடனை உலக வங்கி­யி­டத்தில் பெற்­றுக்­கொண்டு வேலை திட்­டங்­க­ளையும் ஆரம்­பித்­தி­ருந்தோம். ஆனால் அவற்றை நிறைவு செய்யும் முன்னர் ஆட்சி மாறி­விட்­டது.

இது ஐந்து வருட திட்டம். அதனை 3 வரு­டத்தில் நிறைவு செய்­யவே நாம் திட்­ட­மிட்டோம். அதற்­க­மை­வாக வேக­மாக குறித்த திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தினோம். அவற்றை நிறைவு செய்ய இன்று இன்னும் இரண்டு வரு­டங்கள் உள்­ளன. அதற்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட பணமும் இருக்­கின்றது. ஆனால், திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படு­கின்­ற­னவா என்­பதே கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது.

இவ்­வாறு தான் தற்­போதைய அர­சாங்­கத்தின் செயற்­பாடு .உள்­ளது இவற்­றுக்கு மேல­தி­க­மாக எதி­ரி­களை எப்.சீ.ஐ.டி, சீ.ஐ.டி, லஞ்ச ஊழல் ஆணைக்­குழு உள்­ளிட்ட இடங்­க­ளுக்கு வர­வ­ழைத்து அலைய விடும் செயற்­பாடு மாத்­திரம் வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. கடந்த அரசில் இருந்த சிலர் இந்த அர­சாங்­கத்­திலும் உள்­ளனர் அவர்­க­ளுக்கு விசா­ரணை எதுவும் இல்­லாத நிலையில் அர­சாங்­கத்தை சாரா­த­வர்­களை மட்டும் விரட்­டி­ப்பி­டிப்­பது வேடிக்­கை­யான செயற்­பாடு.

கேள்வி: கடந்த அர­சாங்­கத்தில் இருந்த திரு­டர்­க­ளை­யும் அவர்­களின் ஊழல் செயற்­பா­டு­க­ளையும் வெளிக்­காட்­டு­தற்­காகவே இந்த அர­சாங்­கத்தின் பிர­தி­நி­திகள் மக்கள் ஆத­ரவைக் கோரினர். அது எவ்­வாறு தவ­றாக அமையும்?

பதில்: விசா­ர­ணை­களை நடத்­தட்டும் அதற்கு நாம் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. அடித்­த­ள­மற்ற கார­ணங்­களை மையப்­ப­டுத்தி விசா­ரணை நடத்தக்கூடாது. அத்­துடன் முப்­ப­டையின் முக்­கி­யஸ்­தர்­க­ளையும் இரா­ணுவ வீரர்­க­ளையும் அடிக்­கடி விசா­ரணை என்ற பேரில் அழைத்து அலைக்கழிப்­பது ஏற்­றுக்­கொள்ள கூடிய விட­ய­மல்ல. எந்த விட­யத்­திலும் ஒரு நீதி­யான படி­முறை இருக்க வேண்டும்

கேள்வி: வடக்கில் இறு­தி­க்கட்ட யுத்தம் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த போது தெற்கில் பல அட்­டூ­ழி­யங்கள் அரங்­கே­றி­யுள்­ளதாம். வெள்ளை வேன் பல பகு­தி­களை சுற்றி வந்­துள்­ளதாம். அவ்­வா­றாயின் இவை அடித்­த­ள­மற்ற குற்­றச்­சாட்­டுக்கள் என்று எவ்­வாறு நீங்கள் கூறு­கி­றீர்கள்?

பதில்: இரா­ணுவ வீரர்கள் மீது முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து நான் தெளிவு படுத்த வேண்டும். குறிப்­பாக எக்­னெ­லி­கொட என்ற ஊட­க­வி­ய­லாளர் விவ­காரம் குறித்து இரா­ணு­வத்­தினர் மீதே குற்றம் சாட்­டப்­பட்­டுள்­ளது. ஆனால், அவர் இறந்த காலப்­ப­கு­தியில் அவ்­வாறு ஒரு ஊட­க­வி­ய­லாளர் இருந்­தாரா என்­பதே எமக்கு தெரி­யாது. அவர் அந்த அள­வுக்கு பிர­ப­ல­மான ஒரு ஊட­க­வி­ய­லா­ளரும் அல்ல. ஆனாலும் அவரின் மரணம் குறித்து விசா­ர­ணை­களை நடத்­தி­வந்தோம். இன்று எக்­னெ­லி­கொட விவ­கா­ரத்தில் சிறை வைக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்கள் ஒரு வரு­ட­கா­ல­மாக விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். ஒரு வரு­டத்தில் குற்­ற­வா­ளிகள் யார் என்­பதை ஒப்­பு­விக்க முடி­யா­விட்டால் அது இவர்­களை விசா­ரணை செய்யும் அதி­கா­ரி­களின் பல­வீ­னத்­தையே காட்­டு­கின்­றது.

இந்த அரி­கா­ரிகள் எக்­னெ­லி­கொட உயி­ருடன் உள்­ளாரா இல்­லையா என்­பதே தெரி­யாமல் அவர் கொல்­லப்­பட்­ட­தாக கூறி விசா­ரணை நடத்­திக்­கொண்­டுள்­ளனர். இதில் என்ன நியாயம் உள்­ளது? இன்று கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்கள் கள்ள சாராயம் காய்ச்­சி­ய­வர்­களோ அல்­லது வீதியில் நின்ற கொலை காரர்­களோ அல்ல. அதேபோல் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் காலத்தில் மாத்­திரம் சேவை ஆற்­றி­ய­வர்­களும் அல்லர். மாறாக தீவி­ர­வா­தத்­தினை அடக்க பாரிய உந்து சக்­தி­யாக இருந்து அர்­ப்ப­ணிப்­புடன் செயற்­பட்­ட­வர்கள். இவர்­களால் தெற்கை ஆக்­கி­ர­மிக்க வந்த தீவி­ர­வாத சக்­தி­க­ளையும் முடக்­கினோம். அதனை விடுத்து இவர்கள் நாட்­டிற்கு எந்­த­வி­த­மான பாத­க­மான செயற்­பா­டு­க­ளையும் செய்­ய­வில்லை.

கேள்வி: கோத்­த­பாய ராஜ­பக் ஷ அர­சி­ய­லுக்கு பிர­வே­சிப்பார் என்ற கருத்­துக்­களை அதி­க­மாக கேட்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. நீங்கள் இது தொடர்பில் என்ன நிலைப்­பாட்டில் உள்­ளீர்கள்?

பதில்: அது தொடர்பில் நான் இது­வ­ரை­யிலும் தீர்­மா­னிக்­க­வில்லை. புதிய அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­க­ளுக்கு அமை­வாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது. அவ்­வா­றாயின் அவ­ருக்கு அடுத்­த­ப­டி­யாக வரப்­போ­வது யார் என்ற கேள்வி எழுப்­பப்­பட்டே இந்த விடயம் அனு­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­க­மை­யவே எனது பெயர் கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் நான் இன்னும் அது­பற்றி தீர்­மா­னிக்­க­வில்லை. எவ்­வா­றா­யினும் இன்னும் மூன்று வரு­டங்கள் உள்­ளன. அதன் பின்­னரே இது குறித்து தீர்­மா­னிக்க வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.

கேள்வி: நீங்கள் மேற்­கு­றிப்­பிட்ட விட­யத்தில் அர­சி­ய­லுக்கு வரு­வீர்கள் என்ற விட­யத்­திற்கு வலு­சேர்ப்­பது போன்­றுள்­ளதே. இதனை ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா?

பதில்: அது தொடர்பில் உறு­தி­யா­னதும் இறு­தி­யா­ன­து­மான தீர்­மானம் இல்லை என்­பதை நான் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தேன். இருப்­பினும் நாம் பல வரு­ட­கா­ல­மாக மக்­க­ளுக்­கான சேவையில் ஈடு­பட்­டுள்ளோம். அதனால் எதிர்­கா­லத்தில் மக்கள் சேவை­களை முன்­னெ­டுக்க அர­சியல் பாதையை தேர்ந்­தெ­டுப்­பதா என்­பது குறித்து தீர்­மா­னிப்போம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-17#page-4

Page-07-a7f20895174afe3e67c0b6046152e861

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-17#page-7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.