Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவிற்கு பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை

Featured Replies

ஜெயலலிதாவிற்கு பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை

ஜெயலலிதாவிற்கு பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை

 
உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து 29வது நாளாக சிகிச்சைப் பெற்று வரும் ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது தவிர, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ்நாயக் ஆகியோரும் இடையிடையே ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு முதல் ஜெயலலிதாவிற்கு சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை பிசியோ தெரபி நிபுணர்கள் சீமா, மேரி ஆகியோரும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப அதிமுகவினர் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். அப்பல்லோ மருத்துவமனைக்கு வெளியேயும் அதிமுகவினரின் பிரார்த்தனைகள் தொடர்ந்து வருகின்றன.

http://tamil.adaderana.lk/news.php?nid=84617

  • தொடங்கியவர்

‘முதல்வர் ஜெயலலிதா எப்போது டிஸ்சார்ஜ்?' -அப்போலோ அப்டேட்ஸ்

appolollo_13326.jpg

ப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு 29 நாட்கள் ஆகிவிட்டன. ' முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவந்தாலும், தீவிர மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படுகிறது. கார்டன் திரும்புவதற்கு மேலும் சில நாட்கள் ஆகலாம்' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில். 

போயஸ் கார்டனில் இருந்து கடந்த 22-ம் தேதி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. தொடக்கத்தில் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டாலும், நுரையீரல் தொற்று உள்பட பலவித சிரமங்களுக்கு ஆளானார். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயலின் வருகையும் அதைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் சிகிச்சையும் முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தை அளித்தன. இந்நிலையில், 'முதல்வர் சில நாட்களில் வீடு திரும்புவார். அதன்பிறகு கார்டனிலேயே சிகிச்சையைத் தொடர்வார்' என்ற ரீதியில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

" முதல்வர் உடல்நிலையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேல் சர்க்கரை நோய் பாதிப்பில் இருக்கிறார் முதல்வர். நுரையீரலில் நீர்க் கோர்ப்பைச் சரிசெய்வதற்கான சிகிச்சைகள்தான் தொடக்கத்தில் வேகமெடுத்தன. தற்போது நுரையீரல் தொற்றின் பாதிப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இன்னமும் வெண்டிலேட்டர் நீக்கப்படவில்லை. treacheostomy எனப்படும் மூச்சுக் குழாயை தொண்டையில் இருந்து அகற்றப்பட உள்ளது. சில நேரங்களில் மூச்சுத் திணறலால் அவதிப்படுகிறார். நல்ல நினைவோடு சுற்றியுள்ளவற்றைக் கவனிக்கிறார்" என நம்மிடம் தெரிவித்த கார்டன் ஊழியர் ஒருவர், "முகம் மற்றும் இரண்டு கை, கால்களுக்கு பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் இயக்கங்களை மீண்டும் இயல்புக்குக் கொண்டு வரும் வேலைகளில் பிஸியோதெரபி நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நேரத்தில், சிறுநீரகத் தொற்றுக்கும் ஆளானார் முதல்வர். அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. பலவிதமான சிகிச்சை முறைகளால் உடல் மெலிந்துவிட்டார் முதல்வர். 

படுக்கையில் தொடர்ந்து இருப்பதால், முதுகில் ஏற்படும் புண்களுக்கு சிகிச்சை நடக்கிறது. படுக்கையில் இருந்து அவ்வப்போது நிமிர்ந்து உட்காரும் அளவுக்கு அவரை தயார்படுத்திவிட்டனர் மருத்துவர்கள். ஆனால், சிகிச்சைக்கான மருந்துகளை மிகவும் தாமதமாகத்தான் அவரது உடல் ஏற்றுக் கொள்கிறது. எனவே, படிப்படியான முன்னேற்றத்தை நோக்கித்தான் சிகிச்சை முறைகள் செல்கின்றன. ஜெயலலிதாவின உடல்நிலையில் அவ்வப்போது ஏற்றம் இறக்கம் தெரிந்தாலும், இன்றைய நிலவரப்படி அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. அவரது கழுத்தில் நவீன தொழில்நுட்ப முறையில் பொருத்தப்பட்ட TRACHEOSTOMY - இன்று (வெள்ளிக்கிழமை) நல்ல நேரத்தில் அகற்றப்படலாம். அதற்கான பணியில் தற்போது மருத்துவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அதை எடுத்தாலே, ஒரளவு பேச ஆரம்பித்துவிடுவார். அதோடு ஜெயலலிதா உடல்நிலையின் முழு ரிப்போர்ட் அப்போலோ தரப்பில் இன்று வெளியிடப்படலாம்... அல்லது கடைசி நிமிட அறிவுறுத்தல் காரணமாக நிறுத்தப்படலாம்!’’ என்றார் விரிவாக. 

"இயல்பாகவே, ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர் முதல்வர் ஜெயலலிதா. தற்போதுள்ள கிரக சூழல்களின்படி, ' தீபாவளிக்கு முன்பு டிஸ்சார்ஜ் ஆவது சரியல்ல' என சசிகலாவிடம் தெரிவித்துள்ளனர். எனவே, தீபாவளிக்கு முன்பு முதல்வர் வீடு திரும்பும் வாய்ப்பு குறைவு. தினமும் காலையில், அனைத்து அமைச்சர்களும் அப்போலோவில் அட்டெண்டென்ஸ் போட்டுவிட்டுத்தான் கோட்டைக்குச் செல்கிறார்கள். ஒவ்வொருவரையும் தீவிரக் கண்காணிப்பில் வைத்திருக்கிறார் சசிகலா. அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையும், உளவுத்துறை மூலம் உடனுக்குடன் அவரது கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

தீச்சட்டி ஏந்துவது, நோன்பு திறப்பது, அலகு குத்துவது, பால் குடம் சுமப்பது என அப்போலோ வாசலே, ஆன்மிகத் தலமாக மாறிவிட்டது. முதல்வரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள் கார்டன் ஊழியர்கள். 

முதல்வர் விரைவில் நலம் பெறட்டும்....!

http://www.vikatan.com/news/tamilnadu/70209-apollo-updates-on-cm-health-condition.art

  • தொடங்கியவர்

'நன்றாக பேசி வருகிறார் ஜெ.,' -அப்போலோ அறிக்கை

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்போலோ 10-வது அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், 'முதல்வர் அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நன்றாக அவர் பேசி வருகிறார். சிறப்பு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்களின் அறிவுரைகளின் பேரில் சிகிச்சை தரப்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்' என கூறப்பட்டுள்ளது. 

மேலும், தீவிர சிகிச்சை நிபுணர்கள், இதய சிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய், சர்க்கரை நோய் குழுவினரது கவனத்திலும், பிசியோத்தெரபி நிபுணர்களால் தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போலோவின் 9-வது அறிக்கை கடந்த 10-ம் தேதி வெளியாகியிருந்தது.

apollo_19527.jpg

http://www.vikatan.com/news/tamilnadu/70250-cm-jayalalitha-interacting-and-progressing-gradually-says-apollo.art

  • கருத்துக்கள உறவுகள்

'நன்றாக பேசி வருகிறார் ஜெ.,' 

சும்மா கிருமி தோற்று அம்மா வந்துடுவா ....
நீ சாப்பிடு என்று சொன்னார்கள்.

இப்போ அம்மா பேசுறா என்கிறார்கள் .....
அப்போ பேசாமல் இருந்திருக்கிறார் ???


எதோ .....
2 மாதம் கழித்து 
மூச்சு விடுகிறார் என்று சொல்லாமல் இருந்தால் சரிதான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.