Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.வீ. சன் சீ கப்பல் விவகாரம் நால்வருக்கு எதிராக ஆட்கடத்தல் வழக்கு

Featured Replies

எம்.வீ. சன் சீ கப்பல் விவகாரம் நால்வருக்கு எதிராக ஆட்கடத்தல் வழக்கு
 
 
எம்.வீ. சன் சீ கப்பல் விவகாரம் நால்வருக்கு எதிராக ஆட்கடத்தல் வழக்கு
எம்.வீ. சன் சீ கப்பலில் ஆபத்தான கடல்வழிப்பயணமாக சுமார் 500 ஈழத் தமிழர்களை கனடாவிற்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் நால்வருக்கு எதிராக ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
இலங்கையை சேர்ந்த லெஸ்லி இமானுவேல், குணரொபின்ஸன் கிறிஸ்துராஜா, நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பிநாயகம் ராஜரட்ணம் ஆகியோருக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
 
வன்கூவரில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தாம் எந்தவொரு குற்றங்களையும் இழைக்கவில்லை என பிரதிவாதிகள் வாதிட்டுள்ளனர்.
 
12 பேரடங்கிய ஜுரிகள் முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் தமது வாதங்களை முன்வைத்த அரச தரப்பு சட்டத்தரணி, கப்பலில் வந்த ஒருவரிடம் 5 ஆயிரம் அமெரிக்க டொலரையும் கனடாவை சென்றடைந்த பின்னர் 25 ஆயிரம் அமெரிக்க டொலரையும் பிரதிவாதிகள் அறவிட்டதாக குறிப்பிட்டார்.
 
கனடாவிற்குள் பிரவேசிக்க விரும்பும் ஸ்ரீலங்கா பிரஜையொருவருக்கு செல்லுபடியான கடவுச்சீட்டு இருக்க வேண்டும் எனவும் கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கான வீசாவை கனடா அரசாங்கமே வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
இமானுவேல் கப்பலின் கப்டனாக செயற்பட்டதாகவும் படகில் ஆட்களை கொண்டுவந்து கப்பலில் ஏற்றும் பணிகளை கவனித்த ஒருவராக இருந்ததாகவும் அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
 
படகு மூலம் கப்பலில் ஏறிய குழுவில் கிறிஸ்துராஜா இருந்ததாகவும் அவர் வரும் வரை கப்பல் நகரவில்லை எனவும் குறிப்பிட்ட அரச தரப்பு சட்டத்தரணி, கப்பல் பணியாளர் குழுவில் ஒருவராக அவரும் இருந்ததாக கூறியுள்ளார்.
 
படகு மூலம் கப்பலுக்கு ஆட்களை கொண்டுவரும் நடவடிக்கைக்கு கிறிஸ்துராஜாவே முன்னின்று மேற்கொண்டதாகவும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பாங்கொக்கில் தொடர்மாடியை அவரே வாடகைக்கு பெற்றுக்கொடுத்ததாகவும் அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
 
ராஜரட்னம் மற்றும் மகேந்திரன் ஆகியோர் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான முகவர்களாக செயற்பட்ட போதிலும் கனேடிய அதிகாரிகளால் கப்பல் வழிமறிக்கப்பட்ட போது அவர்கள் அதில் இருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை எட்டு வாரங்கள் முன்னெடுக்கப்படும் என கனேடியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

http://onlineuthayan.com/news/19221

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.