Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆக்கிரமிப்புப்படை போன்று காட்சியளிக்கும் இராணுவம்

Featured Replies

ஆக்­கி­ர­மிப்­பு­ப்படை போன்று காட்­சி­ய­ளிக்கும் இரா­ணுவம்

p22-b8c37365212359dd0193bef6384792dd6469cbe4.jpg

 

வடக்கு மக்­களை அவ­தூ­றுப்­ப­டுத்­தும் செயல்; ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா

பௌத்­தத்­துக்கு முத­லிடம் குறித்து சிறு­பான்­மை­யினர் அச்சம்
காணி­களை மீள கைய­ளி­யுங்கள
மலை­யக தமி­ழர்­களின் நிலைமை கவ­லைக்­கு­ரி­யது
தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை விடு­வி­யுங்கள்

(ரொபட் அன்­டனி)

முழு­மை­யான சிங்­கள மக்­களைக் கொண்ட இரா­ணு­வத்தின் விகி­தா­சா­ரத்­திற்கு அப்­பாற்­பட்ட மிக அதி­க­ள­வான பிர­சன்­ன­மா­னது வடக்கு மாகா­ணத்தில் இரா 

­ணு­வத்தை ஒரு ஆக்­கி­ர­மிப்புப் படை­யாக காட்­டு­கின்­றது. அதா­வது இது தமி­ழர் 

­களை ஒரு போர்க்­கு­ண­முள்ள மக்­க­ளாக

அவ­தூ­றுப்­ப­டுத்­து­வ­தாக காட்­டப்­ப­டு­கின்­றது என்று இலங்­கைக்கு10 நாட்கள் விஜ­யத்தை மேற்­கொண்ட ஐ.நா.வின் சிறு 

­பான்மை மக்கள் தொடர்­பான விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடியா தெரி­வித்தார். 

அர­சி­ய­ல­மைப்பில் பௌத்­தத்­திற்­கான 

முதன்மை இடத்தை தொடர்ந்து பேணு­வ­தா­னது மேலும் சிறு­பான்மை 

 மக்­க­ளுக்கு எதி­ரான அநீ­தி­க­ளுக்கும், அடக்கு முறை­மை­க­ளுக்கும் வழி­வ­குக்கும் என மக்கள் அச்­ச­ம­டை­கின்­றனர் என்றும் அவர் குறிப்­பிட்டார்

தனது விஜ­யத்தின் முடிவில் கொழும்­பி­லுள்ள ஐ.நா. அலு­வ­ல­கத்தில் நேற்று நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே ஐ.நா. விசேட அறிக்­கை­யாளர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

இலங்­கைக்கு கடந்த 10 ஆம் திகதி விஜயம் மேற்­கொண்ட ஐ.நா. பிர­தி­நிதி ரீட்டா ஐசாக் நாட்டின் பல பிர­தே­சங்­க­ளுக்கும் விஜயம் செய்­த­துடன் பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்சு நடத்­தி­யி­ருந்தார். 

அந்­த­வ­கையில் நேற்­றைய செய்­தி­யாளர் சந்­திப்பில் ரீட்டா ஐசாக் மேலும் குறிப்­பி­டு­கையில்:-

வர­லாற்றை ஆராய்­வ­தற்கும் தேசிய ஒற்­று­மை­யையும் தேசிய அடை­யா­ளத்­தையும் மீள் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் மனச்­சாட்­சி­யுடன் கூடிய நட­வ­டிக்­கைகள் அவ­சி­ய­மாக காணப்­ப­டு­கின்­றன. சிறு­பான்மை மக்கள் அதி­கார கட்­ட­மைப்­புக்­கான தீர்­மானம் எடுத்­தலின் போது தாம் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தாக உணர்­கின்­றனர். 

அதா­வது தீர்­மானம் எடுக்கும் நிறு­வ­னங்­களின் சிறு­பான்மை மக்­களின் குறைந்­த­ள­வி­லான பங்­கேற்பு குறித்து கவலை தெரி­விக்­கப்­பட்­டது. அனைத்து நிறு­வ­னங்­களும் சமூ­கத்தின் இன, மற்றும் மத பல்­லி­னத்­தன்­மையை பிர­தி­ப­லிக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

வடக்கு, மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் தொடர்ச்­சி­யான இரா­ணுவப் பிர­சன்­ன­மா­னது சர்ச்­சையை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது. இரா­ணுவம் தற்­போது பொது இடங்­களில் அதி­க­ளவில் தென்­ப­டா­விட்­டாலும் கூட இரா­ணு­வத்தின் பிர­சன்­ன­மா­னது எந்­த­ள­வுக்கு மக்­களின் அன்­றாட வாழ்வில் பாத­க­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது என்­பதை மக்கள் என்­னிடம் எடுத்துக் கூறினர். 

முழு­மை­யான சிங்­கள மக்­களைக் கொண்ட இரா­ணு­வத்தின் விகி­தா­சா­ரத்­திற்கு அப்­பாற்­பட்ட மிக அதி­க­ள­வான பிர­சன்­ன­மா­னது வடக்கு மாகா­ணத்தில் இரா­ணு­வத்தை ஒரு ஆக்­கி­ர­மிப்புப் படை­யாக காட்­டு­கின்­றது. அதா­வது இது தமி­ழர்­களை ஒரு போர்க்­கு­ண­முள்ள மக்­க­ளாக அவ­தூ­று­ப­டுத்­து­வ­தாக காட்­டப்­ப­டு­கின்­றது..

மேலும் தாம­த­மின்றி பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் அவர்­க­ளிடம் மீள் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எந்­த­வி­த­மான நட்­ட­ஈடும் முறை­யான நட­வ­டிக்­கை­யு­மின்றி பெறப்­பட்ட காணிகள், அந்த மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும். அல்­லது நட்­ட­ஈடு செலுத்­தப்­ப­ட­வேண்டும். நீண்­ட­கால இடப்­பெ­யர்­வுகள், சிறு­பான்மை மக்­க­ளுக்­கி­டை­யி­லேயே முரண்­பா­டு­களை தோற்­று­வித்­துள்­ளது. 

பயங்­க­ர­வாத தடைச்­சட்­ட­மா­னது தமிழ் மக்­களை பாரிய அளவில் பாதித்த ஒன்­றாக காணப்­ப­டு­கின்­றது. பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் இன்னும் பலர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு அர­சாங்கம் எடுத்­துள்ள முடிவு நல்­லி­ணக்­கத்­திற்கு மிகவும் முக்­கி­ய­மா­னது ஆனால் எவ்­வா­றான புதிய சட்­ட­மாக இருந்­தாலும் அது பொறுத்­த­மான தரங்­களை பின்­பற்­றி­ய­தாக அமை­வது அவ­சியம். அத்­துடன் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் விடு­விக்­க­படல் அல்­லது வழக்குத் தாக்கல் செய்­யப்­படல் அவ­சி­ய­மாகும். 

அத்­துடன் மலை­ய­கத்தின் சில பிர­தே­சங்­க­ளுக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்தேன். அவர்­களின் வாழ்க்கை வறுமை நிலையைக் கண்டு கவ­லை­ய­டைந்தேன். சிறு அள­வி­லான சுகா­தார கல்வி, சேவைகள் அவர்­க­ளுக்கு கிடைக்­கின்­றன. தினமும் வேலை தேடி வாழ­வேண்­டி­யுள்­ளது . அன்­றாடம் அவர்கள் தமது உணவைப் பெறு­வதில் கஷ்­ட­மாக உள்­ளது. மது­ப­ழக்கம், சிறுவர் தொழி­லா­ளர்கள், வன்­மு­றைகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள், வழ­மை­யா­கி­யுள்­ளன. பாட­சா­லை­களில் படிக்­க­வேண்­டிய பிள்­ளைகள் பாட­சா­லையை விட்டு வில­கி­யுள்­ளனர்.

இலங்­கையில் நீண்ட மோதலின் விளை­வாக நாட்­டுக்­குள்ளும் சமூ­கங்­க­ளுக்­கி­டை­யிலும் நம்­பிக்கை பற்­றாக்­குறை பிர­தான ஒரு விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. சமூ­கத்தின் பெரும்­பான்மை மக்கள் அனைத்து மக்­க­ளி­னதும் தேவை­களை அங்­கீ­க­ரிப்­பது, நம்­பிக்­கையை மீள் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு முக்கியமானதாகும்

இலங்கையின் சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உடனடியாக முக்கியமான சில வேலைத்திட்டங்களை அரசியல் ரீதியில் வெளிப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை காணட்டவேண்டும். 

அரசியலமைப்பில் பௌத்தத்திற்கான முதன்மை இடத்தை தொடர்ந்து பேணுவதானது மேலும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கும், அடக்கு முறைமைகளுக்கும் வழிவகுக்கும் என மக்கள் அச்சமடைகின்றனர். 

அரசியலமைப்பின் கீழ் தெளிவான ஆணை, மற்றும் அதிகாரம், வளங்களுடன் சிறுபான்மை மக்கள் தொடர்பாக சுயாதீன ஆணைக்குழுவொன்றை நிறுவுமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்கின்றேன். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-21#page-1

  • தொடங்கியவர்

'இலங்கைத் தமிழர்களுக்கு இதுதான் தேவை!'  -அரசை அதிர வைத்த ஐ.நா தூதுவர்

reeta_17290.jpg

லங்கையில் கடந்த பத்து நாட்களாக சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் ஐ.நா சிறப்பு தூதுவர் ரீட்டா ஐசக் நாடியா. ' இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கான அதிகாரங்கள் நிரம்பிய சுயேட்சையான அமைப்பை உருவாக்க வேண்டும்' என அதிர வைக்கிறார். 

ஐ.நா மனித உரிமை அமைப்பின் உத்தரவின்பேரில், கடந்த 10-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் ரீட்டா. விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு நடத்திய கடைசிகட்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசி வருகிறார். அவர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் குறித்தும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீர்வு குறித்தும் ஆய்வு நடத்தி வருகிறார். இந்த ஆய்வு அறிக்கையை ஐ.நா சபையின் பார்வைக்கு வைக்க இருக்கிறார். அவர் தன்னுடைய பேட்டியில், ' இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சமஸ்டி அமைப்பில் உரிய அதிகாரங்கள் வழங்கப்படுவது குறித்து அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

ksr_17526.jpgஅதிகாரங்கள் நிரம்பிய சுயேட்சையான அமைப்பை, சிறுபான்மை மக்களுக்கு வழங்க வேண்டும். இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் பேசப்படுகின்றன. பிற மொழி பேசுபவர்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். ராணுவம் ஆக்ரமித்த தமிழர்களின் நிலங்களில் இருந்து படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும். இதுகுறித்து ஐ.நா மன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன்" என உறுதியளித்திருக்கிறார் ரீட்டா ஐசக் நாடியா. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த வழக்கறிஞரும் தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், " ஐ.நா சிறப்பு தூதுவரின் கருத்துக்கள் ஒருபுறம் இருந்தாலும், இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய காரியங்கள் சில உள்ளன. இலங்கையில் நடந்த இன அழிப்புப் போருக்கு, நம்பகமான சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அது அயலக பொறிமுறை விசாரணையாக இருக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும். போரின்போது கைப்பற்றப்பட்ட தமிழர்களின் நிலங்கள் அனைத்தும், அதன் உரிமையாளர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

அங்கு மீன்பிடி தொழில் என்பது மிக முக்கியமானது. ஆனால், மீன்பிடி அதிகாரங்கள் எதுவும் மாகாண சபையிடம் இல்லை. அந்த அதிகாரங்களை மாகாண அரசிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகாரமில்லாத சபைகள் இருக்கின்றன. அங்கு இடைக்கால அதிகாரங்கள் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டாக வேண்டும். உள்துறை, காவல்துறை, நில நிர்வாகம் மற்றும் நில வருவாய் ஆகியவற்றுக்கான அதிகாரங்களை மாகாண கவுன்சிலிடம் வழங்க வேண்டும். இதற்கான பணிகளில் குறைந்தபட்சமாவது இலங்கை அரசு ஈடுபட வேண்டும் என விரும்புகிறோம். தற்போது ரணில் தலைமையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ' சமஸ்டி அமைப்பில் ஒற்றை ஆட்சிமுறைதான். எந்த அதிகாரங்களும் பகிர்ந்து அளிக்க முடியாது' என இலங்கை அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. அப்படியொரு அரசியல் சாசனம் வகுக்கப்பட்டால், அது ஈழத் தமிழர்களின் எதிர்காலத்திற்கே கேடாய் முடியும். ஐ.நா சிறப்பு தூதுவரின் அறிக்கையில் இதுகுறித்த அபாயம் எழுப்பப்படும் என்றே நம்புகிறோம்" என்றார் ஆதங்கத்தோடு. 

http://www.vikatan.com/news/world/70240-un-special-rapporteur-recommends-sri-lanka-to-establish-an-independent-commission-on-minorities.art

  • தொடங்கியவர்

சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா வின் விசேட அறிக்கையாளர் ஐசக் ரீட்டா

 

சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா வின் விசேட அறிக்கையாளர் ஐசக் ரீட்டா

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் ஐசக் ரீட்டா நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
காணொளியில் காண்க….

 


இதேவேளை, மலையக மக்களின் வாழ்வியலைக் கண்டு தாம் கவலையடைவதாகவும் ஐசக் ரீட்டா தெரிவித்தார்.
காணொளியில் காண்க…

 

 

http://newsfirst.lk/tamil/2016/10/சிறுபான்மையினர்-எதிர்நோ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.