Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ., உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ வந்தார் கவர்னர்

Featured Replies

 

 

சென்னை : உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக 2வது முறையாக தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வந்துள்ளார்.

கவர்னர் வந்தார் :

Tamil_News_large_1633144_318_219.jpg

செப்டம்பர் 22 ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அக்டோபர் 1ம் தேதி வித்யாசாகர் ராவ், அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் அவர் பூரண நலம் பெறும் வரை அவர் கவனித்து வந்த இலாக்காக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பேசி வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து இன்று 2வது முறையாக ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் வந்துள்ளார்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1633144

  • தொடங்கியவர்

ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் : ஆளுநர் மகிழ்ச்சி

g_13197.png

ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இன்று ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்து‌மனைக்கு நேரில் சென்று விசாரித்து அறிந்தார். ஏற்கனவே கடந்த 1 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு சென்று முதல்வர் உடல்நிலை குறித்து ஆளுநர் விசாரித்தார். அதன்பிறகு, இரண்டாவது முறையாக இன்று காலை  மருத்துவமனைக்கு சென்ற  ஆளுநர், சுமார் 25 நிமிடங்கள் மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். தற்போது ஆளுநர் மாளிகையில் இருந்து செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது. அதில் முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக  உள்ளதாக அறிவித்துள்ளனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/70278-jayalalithaa-has-made-good-progress-in-health-says-governor.art

  • தொடங்கியவர்
 

இரண்டாவது வருகையிலும் ஜெயலலிதாவைப் சந்திக்கவில்லையா ஆளுநர்?! தொடரும் மர்மம்

vidyasagar-rao_15174.jpg

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்கனவே ஒரு முறை ஜெயலலிதா சந்திக்க அப்போலோ சென்றார். அவரை சந்திக்கவிடவில்லை.  அவர் மத்திய அரசுக்கு ரகசிய அறிக்கை அனுப்பினார். உடன் மத்திய அரசின் தூதுவர்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அப்போலோவுக்கு வந்தார்கள். அவர்கள் பல நாட்கள் அப்போலோவில் முகாமிட்டிருந்தனர். மற்ற டாக்டர்களுடன் அந்த இருவரும் இணைந்தே சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய முழு ரிப்போர்ட்டை பிரதமர் மோடி பார்வைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்த நிலையில், அப்போலோ வெளியிட்ட 11வது அறிக்கையில், ஜெயலலிதா நன்றாக 'இன்ட்ராக்ட்' செய்கிறார். உடல்நிலை நன்றாக முன்னேறி வருகிறது என்கிற வார்த்தைகள் இருந்தன. இதே கோணத்தில் அ.தி.மு.கழக சீனியர் தலைவர் பொன்னையன் பேட்டி கொடுத்திருந்தார். சில மீடியாக்களிலும் உடல்நிலை தேறிவிட்டார் என்றே செய்திகள் வெளியாகின. இதையெல்லாம் கவனித்த கவர்னர், தன்னை இந்த முறை ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிப்பார்கள் என்றே எதிர்பார்த்து, இரண்டாவது முறையாக சந்திக்க முடிவு செய்தார்.

அதன்படி, இன்று காலை அப்போலோவுக்கு இரண்டாவது முறை விசிட் அடிக்க திட்டமிட்டார். தனது வருகையை முன்கூட்டியே தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தெரிவித்தார். சொன்ன நேரத்துக்கு அப்போலோவுக்கு வந்து சேர்ந்தார். ஆனால், ஜெயலலிதாவை சந்திக்க விடவில்லை அப்போலோ டாக்டர்களும், அ.தி.மு.கழக சீனியர் தலைவர்களும்! மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

governrer_15157.jpg

 

இருந்தாலும், டாக்டர்கள் சொன்னதை வைத்துக்கொண்டு, ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் என்று பெயரளவில் ஒரு அறிக்கை மட்டும் கொடுத்தார். தனக்கு ஏற்பட்ட இரண்டாவது ஏமாற்றம் பற்றி மீண்டும் ரகசிய அறிக்கையை பிரதமர் மோடி பார்வைக்கு இன்று மாலை அனுப்பும் வேலையில் பிஸியாக இருக்கிறாராம்.


நேற்றைய தினம் வெளியிடப்பட்ட அப்போலோ அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வரிகள் உண்மை என்றால், ஜெயலலிதாவை இன்று சந்திக்க சென்ற கவர்னரை சந்திக்க விட்டிருக்கலாம் அல்லவா? கவர்னருக்கு தடா போட்டதால், ஜெயலலிதாவின் உடல்நிலை எப்படி உள்ளது என்கிற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.

சுப்பையா விஸ்வநாதன் போய் சத்தியபாமா ஏன் வந்தார்?

இதற்கிடையில், சென்னையில் உள்ள அ.தி.மு.கழக ஆதரவு டாக்டர்கள் சிலர், " நேற்றைய அப்போலோ அறிக்கையில் சிகிச்சை அளிக்கும் பெரிய டாக்டர்களில் லிஸ்ட்டை முதன்முதலாக குறிப்பிட்டுள்ளனர். அவ்வளவு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள் என்றால், அவரது உடல்நிலையில் பிரச்னை இன்னும் நீடிக்கிறது என்றுதானே அர்த்தம். முழுமையாக குணமாக வில்லை என்றுதான் புரிந்துகொள்ளமுடிகிறது. பொதுவாக, எந்த ஒரு மனிதனின் உடல்நிலை கன்டிஷனைப் பொறுத்தவரையில், ஏற்றம்&இறக்கம் தெரியலாம். இது மெடிக்கல் படித்த அனைவருக்கும் தெரியும். இன்று நன்றாக இருப்பார். நாளை உடல்நிலை கிரிட்டிக்கல் என்று சொல்லலாம். அப்படிப் பார்க்கும்போது, ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய உண்மை நிலவரத்தை அறிவிப்பதில் அப்போலோ நிர்வாகத்தை யாரோ ரிமோட் மூலம் பேச வைக்கிறார்களோ? என்று எண்ண தோன்றுகிறது. இதற்கு முன்பு வந்த 10 அறிக்கைகளில் சுப்பையா விஸ்வநாதன் பெயரில் வெளியானது. ஆனால், நேற்று வந்த அறிக்கையில் அவர் பெயர் இல்லை. தனது பெயர் அறிக்கையில் வேண்டாம் என்று அவர் மறுத்துவிட்டதால், சத்தியபாமா டைரக்டர் ஆஃப் மெடிக்கல் சர்வீஸ் பெயரில் வெளியானதை கவனியுங்கள்" என்கிறார்கள்.

vidyasagar-rao2_15216.jpg

http://www.vikatan.com/news/tamilnadu/70286-mystery-on-governers-visit-to-apollo-hospital.art

  • தொடங்கியவர்

முதல்வரை சந்திக்க விடாமல் ஆளுநரைத் தடுக்கலாமா? சட்டம் என்ன சொல்கிறது? #ApolloUpdates

governor_16354.jpg

மிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் ஓடிவிட்டது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தவிர்த்து, அவரை இதுவரை யாரும் நேரில் பார்க்கவில்லை. மாநில அமைச்சர்கள் அப்போலோவின் முதல் தளத்திற்கே போகமுடியவில்லை. மத்திய அமைச்சர்கள் இரண்டாவது தளத்தோடு திரும்பிவிடுகின்றனர். இரண்டுமுறை மருத்துவமனைக்கு வந்த தமிழக கவர்னர்  வித்யாசாகர் ராவ், முதலமைச்சரின் நிலையை நேரில் பார்த்ததாக சொல்லவில்லை. கவர்னர் மாளிகையில் இருந்து வெளிவரும் அறிக்கைகளில், மேதகு ஆளுநர், முதலமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம், முதலமைச்சர் உடல்நிலை பற்றி விசாரித்தார்” என்றுதான் இருக்கிறது. இன்றைய தேதிக்கு, பிரதமர் மோடியே வந்தாலும், ஜெயலலிதாவைப் பார்க்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், மாதக்கணக்கில் இதுபோல் ரகசியமாக இருக்க முடியுமா? ஒரு மாநில முதலமைச்சரை சந்திக்கவிடாமல் கவர்னரை யாராவது தடுக்க முடியுமா? நிலைமை இப்படியே தொடரும் நிலையில், சட்டம் அதற்கு என்ன தீர்வை முன்மொழிகிறது? என்பது பற்றி, மூத்த வழக்கறிஞர் தடா எஸ்.துரைசாமியிடம் பேசினோம். 

சட்டவிரோதம்!

adv%20duraisamy_16065.jpgபிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதாவை நலம் விசாரிக்க வந்தால், அவர் நேரில் பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், கவர்னர் நேரில் பார்த்த பிறகே, அறிக்கை அளிக்க முடியும். ஒரு முதலமைச்சரைப் பார்க்க வரும்போது, கவர்னரை யாரும் தடுக்க முடியாது. அப்படித் தடுத்தால், அது சட்ட விரோதம்.

ஒரு பொது ஊழியர், அரசாங்க ஊதியம் பெறுகிறார். அப்படி அரசாங்கத்தில் இருந்து ஊதியம் பெறுபவர், ஒருபோதும் ரகசியமாக இருக்க முடியாது; மாதக்கணக்கில் மறைந்து இருக்க முடியாது. ஆனால், அரசாங்க ஊதியம் பெறும், முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது அந்த நிலையில் இருக்கிறார். அவரை கவர்னரே போய்ப் பார்க்க முடியவில்லை. சாதரணமாக ஒரு அரசாங்க ஊழியர் மாதக்கணக்கில் மருத்துவ விடுப்பில் இருந்தால், அந்த ஊழியரை ‘மெடிக்கல் போர்டு’க்கு அனுப்புவார்கள். அவர் நேரில் ஆஜராகமுடியவில்லை என்றால், அவருக்கு ஏற்பட்டுள்ள நோய் பற்றிய அறிக்கையை மெடிக்கல் போர்டுக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பி, “மருத்துவவிடுப்பில் இருக்கும் அரசு ஊழியர், அவருடைய பணியைத் தொடர தகுதி உள்ளவரா?” என்று விளக்கம் கேட்கப்படும். அதை பரிசீலிக்கும் மெடிக்கல் போர்டு, மேற்கொண்டு பணியைத் தொடர தகுதி உள்ளவர் என்று சான்று அளித்தால், அதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். மாறாக, அந்த ஊழியரால் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று அறிக்கை கொடுத்தால், அந்த ஊழியரை ‘டிஸ்மிஸ்’ செய்வார்கள். 

மெடிக்கல் போர்டு’ ரிப்போர்ட்!

மாநில முதலமைச்சருக்கும் இதே நடைமுறை பொருந்தும். ஆனால், இந்த நடைமுறைகள் இப்போது மீறப்படுகிறது. கவர்னர் வித்யாசாகர் இரண்டுமுறை அப்போலோ மருத்துவமனைக்குப் போனபோதும், அவரால், முதலமைச்சரைப் பார்க்க முடியவில்லை. இது சட்டவிரோதம். ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி, மெடிக்கல் போர்டு ரிப்போர்ட்டை இன்னும் கவர்னர் ஏன் வாங்காமல் இருக்கிறார்? இப்போதும் ஜெயலலிதா அரசாங்க ஊதியம் பெறும் பொது ஊழியர். அதனால், உடனடியாக கவர்னர் ‘மெடிக்கல் போர்டு’ ரிப்போர்ட் வாங்க வேண்டும். அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இனிமேல் ஜெயலலிதாவால் அவருடைய பணியைத் தொடர முடியாது என்று மெடிக்கல் போர்டு அறிக்கை கொடுத்தால் உடனடியாக அவரை கவர்னர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் தடா எஸ்.துரைசாமி தெரிவித்தார்.

இந்த விவகாரம்பற்றி அ.தி.மு.க மூத்த தலைவர்கள் தரப்பில் பேசினோம். முதலமைச்சர் சுயநினைவுடன் இருக்கும்போதுதான், புரோட்டோகால் உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முதலமைச்சரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும்போது, அவருடைய மருத்துவர்கள் சொல்லும் அறிவுரைப்படிதான் கவர்னரோ, பிரதமரோ நடந்து கொள்ள வேண்டும். சட்ட நடைமுறைகளைத் தாண்டி இது அடிப்படையான மனிதாபின விஷயம். அதன் அடிப்படையில்தான், கவர்னர் செயல்படுகிறார். மேலும், இங்கு முதலமைச்சர் அம்மா அவர்கள் தலைமறைவாகவோ ரகசியமாகவோ இல்லை. அவர் உடல்நிலை பற்றி வெளிப்படையாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை கொடுக்கிறது. கவர்னரிடம், அம்மாவுக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்கள் வெளிப்படையாக எல்லா விபரங்களையும் தெரிவிக்கின்றனர். அதனால், இதில் எந்தச் சிக்கலும் இல்லை. மத்திய அரசும் அதைப் புரிந்து கொண்டுதான் செயல்படுகிறது. விளம்பரத்திற்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தான், இதுபோல் அர்த்தமற்று பேசிக் கொண்டிருக்கின்றனர். 

http://www.vikatan.com/news/politics/70289-is-it-legal-to-stop-the-governor-to-visit-the-cm-apolloupdates.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.