Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழறிஞர் து.மூர்த்தி காலமாகிவிட்டார்.

Featured Replies

தமிழறிஞர் து.மூர்த்தி காலமாகிவிட்டார்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய மொழிகள் துறைத்தலைவராகப் பணியாற்றிய தமிழறிஞர் து.மூர்த்தி காலமாகிவிட்டார். வார்ஸா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர் இவர். தமிழியல் ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட பேராசிரியர் து.மூர்த்தி மார்க்சியம், பெரியாரியம், தமிழ்த்தேசியம் ஆகிய அரசியல் கருத்தாக்கங்களிலும் ஆழமான பற்று கொண்டவர். ’தமிழியல் புதிய தடங்கள்’ என்ற இவரது நூல் தமிழியல் ஆய்வில் முக்கியமான புத்தகம். 1989 : அரசியல் சமுதாய நிகழ்வுகள், தனிமையில் தவிக்கும் குழந்தைகள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். ‘பெரியாரும் தமிழ்த்தேசியமும்’ என்ற இவரது குறுநூல் பெரியார் மீது முன்வைக்கப்பட்ட தமிழ்த்தேசிய நோக்கிலான விமர்சனங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு விரிவான பதில்களை முன்வைத்தது. பெரியாரின் மீதும் ஆனைமுத்துவின் மீதும் மாறாத நேசம் கொண்டது. மூர்த்தி மார்க்சிய லெனினிய இயக்கங்களின் ஆரம்பகாலகட்டங்களில் அதன் அனுதாபியாகவும் இருந்தார்.

14875231_10209670959904272_1528093784_n_

 

து.மூர்த்தியுடனான தனது அனுபவங்களைக் குறிப்பிடத்தக்க மனித உரிமைப் போராளி பேராசிரியர்.அ.மார்க்ஸ் தன் ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது :

’’தூய தமிழிலேயே இலக்கணமாக உரையாடும் அளவுக்குத் தமிழ்ப் பற்றுடையவர். தந்தை பெரியார் மீதும் அவர் வழி வந்த ஆனைமுத்து அவர்கள் மீதும் மிக்க மரியாதை உடையவர். இறுதிவரை பெரியவர் ஆனைமுத்து அவர்கள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர்.
கல்லூரிப் பருவத்தில், அன்று அவரது வட ஆற்காடு மாவட்டத்தில் எழுச்சியுடன் இருந்த நக்சல்பாரி இயக்கங்களின் தாக்கத்தால் அரசியலுக்கு ஈர்க்கப்பட்டவர். தோழர் பாலன் காவல்துறையால் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டபோது சென்னை அரசு மருத்துவமனை வாசலில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த, கடும் போலீஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் தான் காத்திருந்த கதையை அவர் விவரிக்கும்போதெல்லாம் உணர்ச்சி வயப்படும் காட்சியை என்னால் மறக்க இயலாது.
மாநிலக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு முடித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் "தமிழ், மலையாளத்தில் உள்ள பொதுவான சொற்கள் குறித்த ஆய்வு" எனும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.
தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கியபோது விரிவுரையாளர்களில் ஒருவராகப் பணி ஏற்றார். அப்போதுதான் எனக்கும் அவருக்கும் நெருங்கிய பழக்கம், 'கைலாசபதி இலக்கிய வட்டம்' எனும் பெயரில் நான், அவர், பேரா. இராம சுந்தரம் ஆகியோர் இணைந்து செய்த பணிகள், நடத்திய ஆய்வரங்குகள் ஏராளம்.
1983 யூலை படுகொலையை ஒட்டி இங்கு ஒரு ஈழ ஆதரவு அலை எழும்பியபோது தஞ்சையில் நாங்கள் நடத்திய ஆதரவுக் கூட்டங்கள் வெளியிட்ட இரண்டு முக்கிய பிரசுரங்கள் தமிழகத்திலும் ஈழத்திலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.
ஈழத்தின் புகழ்பெற்ற இடதுசாரித் தலைவர் தோழர் சண் அதற்கு ஒரு மறுப்புரை எழுதும் அளவுக்கு அது கவனம் பெற்றது. டானியல் அவர்களின் பஞ்சமர் நாவலைத் தஞ்சையில் நாங்கள் வெளிய்யிட்ட நிகழ்வும் குறிப்பிடத்தக்க ஒன்று”

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த பேராசிரியர் து.மூர்த்தியின் உடல், எந்தவித சடங்குமின்றி வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்படவிருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/70522-tamil-scholar-moorthi-passed-away.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.