Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காஷ்மோரா திரை விமர்சனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image result for காஷ்மோரா

 

 

தமிழ் சினிமாவில் எப்போதும் பேண்டஸி படங்களுக்கு பஞ்சம் தான். எப்போதாவது ஒரு படம் வந்தால் அதையும் கிண்டல் செய்ய தான் ஒரு கூட்டமே இருக்கும், இந்நிலையில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் என பிரமாண்ட கூட்டணியுடன் களம் கண்டுள்ள படம் தான் காஷ்மோரா.

மூன்று கதாபாத்திரத்தில் கார்த்தி, ப்ரீயட் கதை, ராணியாக நயன்தாரா என ட்ரைலர் பார்க்கும் போதே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய காஷ்மோரா எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

கார்த்தி காஷ்மோரா கதாபாத்திரத்தில் பேய் ஓட்டுபவராக வருகிறார், 420 வேலைகள் பார்த்து பணம் சம்பாதிக்கும் இவர் ஒரு கட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ வீட்டிற்கு பேய் ஓட்ட வருகிறார்.

அவர் செய்யும் சில போர்ஜரி வேலை, யதார்த்தமாக அந்த எம்.எல்.ஏவிற்கு நல்லது நடக்கின்றது, பிறகு ஒரு கட்டத்தில் எம்.எல்.ஏ வீட்டில் ரைடு வர, காஷ்மோரா நம்பிக்கையான ஆள் அவர் வீட்டில் பணத்தை வையுங்கள் என சொல்கிறார்.

அந்த நேரத்தில் ஒரு பங்களாவில் பேய் ஓட்ட சென்ற கார்த்தி அங்கு வசமாக மாட்ட, எம்.எல்.ஏவின் பணத்தை கார்த்தியின் அப்பா விவேக் சுரட்டிக்கொண்டு ஓட, அவரும் அந்த பங்களாவில் மாயமாக வந்து மாட்டுகிறார்.

இவர்கள் குடும்பம் ஏன் அந்த பங்களாவிற்கு வருகிறது, இவர்களை அழைத்து வந்த மாய சக்தி எது என்பதை அடுத்தடுத்து காட்சிகளில் தெரிகிறது. பிறகு கார்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினர் பங்களாவில் இருந்து வெளியே வந்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கார்த்தி பேய் ஓட்டுபவராக அசத்துகிறார், படத்தின் ஆரம்பக்காட்சிகளில் பயமுறுத்தும்படி அறிமுகமானாலும் அடுத்தடுத்து காட்சிகளில் தனக்கே உரிய கலகலப்பில் செம்ம ஸ்கோர் செய்கிறார், அதிலும் பேய் பங்களாவில் மாட்டிக்கொண்டு உண்மையை பேயை, பொய் என்று நினைத்து இவர் செய்யும் அட்டகாசம் தியேட்டரே சிரிப்பால் அதிர்கிறது.

அதேபோல் ப்ளாஷ்பேக்கில் ராஜ்நாயக்காக கொடூர வில்லனாக வருகிறார், பெண்மோகம் கொண்டவராக வந்தாலும், கார்த்தியை அதில் பொருத்தி பார்க்க முடியவில்லை, ராணியாக நயன்தாரா அத்தனை அழகு கம்பீரம். இன்னும் சில வருடங்களுக்கு யாராலும் அசைக்க முடியாது போல இவர் மார்க்கெட்டை.

விவேக் கார்த்தியின் அப்பாவாக தான் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பிற்கு முழு கேரண்டி, சூப்பர் சார், அதிலும் கிளைமேக்ஸில் வில்லனிடம் பணப்பெட்டியை கொடுக்கும் இடத்தில் அடிக்கும் கவுண்டர் அப்லாஸ் அள்ளுக்கின்றது.

படத்தின் நாம் பெரிதும் எதிர்ப்பார்த்தது அந்த ப்ரீயட் கதைக்களம் தான், ஆனால், அதில் அத்தனை சுவாரசியம் இல்லை என்பதே மிகப்பெரிய மைனஸ், CGயில் கஷ்டப்பட்ட படக்குழு, அந்த காட்சிகளை இன்னும் கொஞ்சம் ஈர்ப்புடன் கொண்டு சென்றிருக்கலாம்.

தலையில்லாமல் முண்டமாக வரும் கதாபாத்திரம் ஒன்று குழந்தைகளை கவர வேண்டும் என்பதற்காகவே வைத்திருப்பார்கள் போல, அந்த கதாபாத்திரமும் மிரட்டுகின்றது. சந்தோஷ் நாரயணன் உங்களுக்கு என்ன தான் ஆச்சு? இறைவி பாடலையெல்லாம் இதில் போட்டு வைத்துள்ளீர்கள்?.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கிராபிக்ஸ் காட்சிகள் அத்தனை இருந்தும் அழகாக உள்ளது, கடைசி நேரத்தில் படத்தின் நீளத்தை குறைத்தது கூடுதல் பலம். அதெல்லாம் சரி ஸ்ரீதிவ்யா எதற்கு?

க்ளாப்ஸ்

கார்த்தி ஒன் மேன் ஷோவாக கலக்குகிறார், நயன்தாரா சில மணி நேரங்கள் வந்தாலும் மனதில் நிற்கும்படியான கதாபாத்திரம்.

விவேக்கின் ஒன் லைன் காமெடி காட்சிகள், சில போலி சாமியர்களின் முகத்திரையை தைரியமாக காட்டியதற்காகவே பாராட்டலாம்.

ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள்.

பல்ப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் திரைக்கதை மெதுவாக நகர்கின்றது.

பாடல்கள் ஏதுமே மனதில் நிற்கவில்லை.

மொத்தத்தில் இன்னும் கொஞ்சம் கவனமாகவே பேய் ஓட்டியிருக்கலாம் காஷ்மோரா.

 

http://lankapuri.com/காஷ்மோரா-படத்தின்-திரை-வ/

’டூ--பீஸ்’ கார்த்தி... வாள் வீச்சு நயன்தாரா... காஷ்மோரா மேஜிக் பலித்ததா? - காஷ்மோரா விமர்சனம்

1477399359-1226_10101.jpg

பில்லி சூனியம், ஆவி விரட்டுதல் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கார்த்தியும் அவர் குடும்பமும் ஒரிஜினல் ஆவியிடம் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்...? 

படம் பற்றிய வீடியோ விமர்சனத்தைக் காண

 

 

    ஊருக்குள் பில்லி சூனியம் (வைத்துவிட்டு) எடுப்பது, ஆவி விரட்டுவது என்று பிரபலமான ஆள் காஷ்மோரா கார்த்தி. அப்பா, தங்கை, அம்மா, பாட்டி என மொத்தக் குடும்பமும் ஃப்ராடு. ‘எங்க ஊர்ல ஒரு பங்களால ஆவிகள் தொந்தரவு தாங்கலை” என்று கார்த்தியை அழைக்கிறார்கள். பங்களாவுக்குள் நுழையும் இவரால் வெளியில் வரமுடியவில்லை. காரணம்...? ஃப்ளாஷ்பேக்கில் ராஜ்நாயக்- ரத்தினமகா தேவி இடையில் சில சம்பவங்கள் நிகழ்கின்றன. அது என்ன? ஆவியை விரட்டப்போன கார்த்தி குடும்பத்துக்கு என்ன ஆனது...? ‘ஆவி’ பறக்கும் க்ளைமாக்ஸ்! 

    துர்சக்திகளை விரட்டுவது, ஆவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது என பக்தர்கள் முதல் அமைச்சர்கள் வரை தன் மாயாஜாலம் மூலம் வசியம் செய்கிறார் கார்த்தி. இந்நிலையில்,  ஆவியை விரட்ட கார்த்தியை அழைக்கிறார்கள். பங்களாவுக்குள் நுழையும் அவரால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. காரணம் உள்ளே காலங்காலமாக இருக்கும் ’ராஜ்நாயக்’கின் (கார்த்தி) ஆவி. பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன் இறந்த ராஜ்நாயக்கும், அவரது படையினரும் ரத்தினமகாதேவி (நயன்தாரா) இட்ட சாபம் காரணமாக எந்த உலகத்துக்கும் போக முடியாமல் தவிக்கிறார்கள். அந்த சாபம் கார்த்தி குடும்பத்தால்தான் விமோசனம் அடையுமென்பதால் காஷ்மோராவுக்கு பங்களா அரெஸ்ட். ஆவியை விரட்டப்போன கார்த்தி குடும்பம், ’ஆவி’ கார்த்தியிடம் இருந்து தப்பிக்கிறதா என்பது க்ளைமாக்ஸ்.

    கார்த்திக்கு காஷ்மோரா, ராஜ்நாயக் என்று இரட்டை வேடம். காஷ்மோராவாக கலகல, ராஜ்நாயக்காக லகலக என வெரைட்டி வித்தியாசம் காட்டுகிறார். பேய் பங்களாவில் ‘இந்த செட்டப் நல்லால்ல... டைமிங் மிஸ் ஆகுது’ என்று புலம்பும் போது செம்ம. மொட்டைத் தலையுடன் வில்லங்கச் சிரிப்புடன் வாள் வீசும் காட்சிகள்... செம கெத்து. ஆனால், பிளாக் மேஜிசியனாக காட்டும் அதட்டல்... இன்னும் மிரட்டியிருக்கலாம் பங்கு!

 93_10326.jpg


    ஃப்ளாஷ்பேக் இளவரசியாக நயன்தாரா. வாள் வீச்சிலும் விழி வீச்சிலும்... வாவ். ஸ்ரீதிவ்யா இந்தப் படத்துக்கு ஏன்? இந்தக் கேள்விக்கு பதில் யோசிப்பது போலவே அவர் படம் முழுக்க உலாத்திக் கொண்டே இருக்கிறார். ‘ஃப்ரெண்டு ஃபீல் ஆய்டாப்ல’ வசனத்தில் ஃபீல் ஃப்ரெண்டு, ஆவி பங்களா புராணம் சொல்வதும் ஒரு குவளை தண்ணீர் குடிப்பதும்... சூப்பர்ஜி... சூப்பர்ஜி! மற்றபடி... படத்தில் அனைவரும் வருகிறார்கள்... நடிக்கிறார்கள்... செல்கிறார்கள்.  

    ராஜ்நாயக் கார்த்தி ‘டூ-பீஸ்’ உரையாடல் நடத்துவதும், மோசடி குடும்பம் அத்தனை வழிகளிலும் ஏமாற்றுவதும் படத்தின் ‘லைக்கோ லைக்’ அத்தியாயங்கள்.  கார்த்தி குடும்பம் மற்றும் அமைச்சரின் ஆஸ்தான சாமியார் மூலம் பிரபல ஆன்மீக மையங்களை குறீயீட்டால் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர் கோகுல். 

    கார்த்தி காமெடியில் இறங்குகிற காட்சிகள் அட போட வைக்கிறதென்றால்.. அந்தக் கலகலப்பை தொடராமல் ’ஆ....வ்’ சொல்ல வைக்கிறது அமைச்சர் சம்பந்தப்பட்ட காட்சிகள்.     படத்தின் பெரிய மைனஸ்... இருவரில் ஒரு கார்த்தி ஜெயிக்க வேண்டும் என்று பார்வையாளர்களுக்கு ஒரு பதட்டம் வேண்டுமே... அது ம்ஹ்ம்! காஷ்மோரா ஊரை ஏமாற்றும் பித்தலாட்டகாரன் என்றால், ராஜ்நாயக் காமாந்தக வில்லன். இதனாலேயே யார் ஜெயித்தால் என்னவென்று தேமேவென காத்திருக்கிறோம். 

    பழக்க வழக்கமான காட்சிகள் கொண்ட படத்தில் ஃப்ளாஷ்பேக்கின் சில பகுதிகளுக்கு மட்டும் வந்தனம் சொல்லலாம். மலை முகட்டில் நயன்தாராவிடம் குதிரை மீது அமர்ந்தபடி கார்த்தி பேசும் காட்சி, இருவருக்குமிடையிலான சண்டையின் முடிவு என சில காட்சிகளில் விசேஷம். அரண்மனை பங்களாவை, ஆவியுலக பங்களாவாக மாற்றியதில் கலை இயக்கமும் அனிமேஷனும் கைகோர்த்து பளிச்சிடுகிறது. பாடல்களில் ஓயா ஓயா  மட்டும் ஓ.கே.  பின்னணி இசையில் என்னாச்சு சந்தோஷ்..? 

 

     ’தீய காற்று தூய தீபத்தை அவ்வளவு எளிதாக அணைத்துவிடமுடியாது’ என்று சீரியஸ் வசனங்களாகட்டும், ‘பயப்படாதீங்க. பயந்தா பயமாருக்கும்.. பயப்படலைன்னா பயமிருக்காது’ என்று ஆங்காங்கே வசனங்கள் செம.  ஆனால், அது ரொம்ப அரிதாகத்தான் வருகிறது. 

    ஆரம்பக் காட்சிகள் மிக சீரியஸ்.... சீரியஸாக இருக்க வேண்டிய காட்சிகளில் காமெடி கதம்பம் என படம் முழுக்க ஒரு நிலையில்லாமை நிலவுவது ஏனோ!?

http://www.vikatan.com/cinema/movie-review/70767-kashmora-movie-review.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.