Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச நாடுகளின் அசைவற்ற நிலையே, கொழும்பின் அராஜகப் போக்குக்கு உந்துசக்தியாக உள்ளது: சுப.தமிழ்ச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாடுகளின் அசைவற்ற நிலையே, கொழும்பின் அராஜகப் போக்குக்கு உந்துசக்தியாக உள்ளது: சுப.தமிழ்ச்செல்வன்

[திங்கட்கிழமை, 29 சனவரி 2007, 04:33 ஈழம்] [காவலூர் கவிதன்]

எந்தவிதமான உணர்வையும் வெளிப்படையாகத் தெரிவிக்காத, வெறும் அசைவற்ற போக்குடன் சர்வதேச சமூகம் இருப்பது, சிறீலங்கா அரசு, தனது வன்முறை அரசியலையும் இராணுவத் தீர்வையும் தொடர்ந்து முன்னெடுக்க, உந்துசக்தியாக இருக்கிறது என்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நெற் இணையத்தளத்திற்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவத்தீர்வு சரியானது அல்ல என்பதை வெறுமனே கருத்தாக வெளிப்படுத்திவரும் சர்வதேச சமூகம், கொழும்பு அரசு அந்த இராணுவத் தீர்வு என்ற நிலைப்பாட்டிலிருந்து வெளியே வருவதற்கான எந்த அழுத்தத்தையும் கொடுக்காது அமைதி காக்கிறது. விடுதலைப் புலிகள் எவ்வளவு பொறுமையை வெளிப்படுத்திய போதிலும், சர்வதேசம் அதைக் கண்டு கொள்ளவில்லை.

எக்காரணம் கொண்டும், நாம் இராணுவ செயல்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டு, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டோம்.

பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கான முன்னெடுப்புக்களுக்கு, தகுந்த அமைதியான சூழ்நிலை அவசியம். அத்தகைய அமைதியான சூழலின் அவசியத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு ஏற்கனவே தெளிவாக முன்வைத்துள்ளது.

இந்த சூழ்நிலைக்கான அடிப்படை விதிகள், பெப்ரவர் 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தெளிவாக ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

யுத்த நிறுத்த ஒப்பந்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட விடயங்களை சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான ஓர் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, கடந்த சில வருடங்களாக விடுதலைப் புலிகளின் தலைமை பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் வெளிப்படுத்தி வருகிறது.

கொழும்பு தலைமைப்பீடம், சமாதான முயற்சிகளில் போதிய அர்ப்பணிப்புடனும் கருத்துடனும் மீண்டும் தன்னை ஈடுபடுத்தும் என்ற நோக்கத்துடன் தான், இந்த சகிப்புத்தன்மையை தலைமைப் பீடம் வெளிப்படுத்தி வருகிறது.

விடுதலைப் புலிகள் விட்டுக் கொடுப்புடனும் திறந்த மனதுடனும் இருக்க வேண்டுமென்று சர்வதேச சமூகம் கோரியதை, நாம் தொடர்ந்து மதித்து நடக்கிறோம்.

இரு ஜெனீவா பேச்சுவார்த்தைகளிலும் இந்த விட்டுக்கொடுப்புத் தன்மையை நாம் சர்வதேச சமூகத்திற்கு நிரூபித்துள்ளோம்.

ஜெனீவா 1 மற்றும் ஜெனீவா 2 பேச்சுவார்;த்தைகளுக்கு இடைப்பட்ட 8 மாத காலத்தில், சிறீலங்கா அரசு, திட்டமிட்ட இரகசிய பனிப்போரை, நிரந்தர வெளிவாரியான வலிந்த போராக மாற்றியதையே அனைவரும் பார்க்கக் கூடியதாக இருந்தது.

ஜெனீவா 1 பேச்சுவார்த்தையில், துணைப்படைகளின் ஆயதம் களையப்படுவதை, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து 1.8 ற்கு அமைய, தாம் நிறைவேற்றுவதாக சிறீலங்கா அணி ஒத்துக்கொண்டது. இருப்பினும், மட்டக்களப்பு, கொழும்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற பல்வேறு பகுதிகளில் துணைப்படையின் அரசியல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு, துணைப்படை தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படியான சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை சமாளிக்க சிறீலங்கா அரசு சதிமுயற்சிகளை முன்னெடுத்தது.

சிறீலங்கா அரசு, துணைப்படைகளை தனது இராணுவத்தின் இணைந்து செயல்பட அனுமதித்ததை, ஆதாரபூர்வமாக நாம் நிரூபித்தோம். விடுதலைப் புலிகள் மீது, துணைப்படையினர் தங்களது அரசியல் செயலகங்கள் என்று சொல்லப்படுகிற நிலைகளிலிருந்து தாக்குதல் தொடுத்ததை, அவர்களே ஒத்துக் கொண்டுமிருக்கிறார்கள்.

பொதுமக்கள் மீதான கொலைகள், படுகொலைகள், கட்டாய கடத்தல்கள் போன்றவற்றை, சிறீலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணைப் படைகளும், மிகப் பரவலாக இணைந்து முன்னெடுத்து வருகின்றன. மனித உரிமை அமைப்புக்கள் திட்டமிட்ட வகையில், தொடர்ச்சியாக மிரட்டப்பட்டும் தடுக்கப்பட்டும் எச்சரிக்கப்பட்டும், அவர்களது உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவதுடன் கடத்தப்பட்டும் வருகின்றனர்.

கிழக்கில், பிரதான பாதைகள் அனைத்தும் மூடப்பட்டு, பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களை இலக்குவைத்து, வான் தாக்குதல்களும் எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதல்களும் நடக்கின்றன. இடம்பெயர்ந்து நீண்டதூரம் கால்நடையாகத் தப்பிச்செல்லும் பொதுமக்கள் மீதும் திட்டமிட்ட தாக்குதல் இடம்பெறுகிறது. எப்படியும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து பொதுமக்களைக் கலைக்கும் நோக்குடன் இந்த பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.

யுத்தத்தின் போது கடைப்பிடிக்கப்படும் அடிப்படை விதிகளை மீறும் வகையில், வைத்தியசாலை மீதும் நோயாளிகள் மீதும் கூட இராணுவத் தாக்குதல்கள் தொடர்கின்றன.

சிறீலங்கா தலைமையிடம் ஒரு பாரிய அரசியல் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும், ஒரு கொள்கை மாற்றம் தேவை என்றும், வடக்கு கிழக்கு இணைப்பை மீண்டும் உருவாக்குமென நம்புவதாகவும் சர்வதேச சமூகம் கூறிக்கொண்டிருக்கிறது. இராணுவத் தீர்வு சரியானதல்ல என்றும் சர்வதேசம் கூறுகிறது. ஆனால், சிறீலங்கா அரசு, அதற்கு முற்றிலும் முரண்பட்ட வழியில், நேர் எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதிக்கிறது.

அனைத்துக் கட்சி உறுப்பினர் சபை, விசாரணைக் கமிசன் போன்றவை உட்பட, மேற்பார்வைக் குழு போன்ற பல்வேறு குழுக்களையும் சிறீலங்கா அரசு நிறுவி, கொலைகளை விசாரணை செய்வதாக பாசாங்கு காட்டும் அரசு, மறுபக்கத்தில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் கைச்சாத்திட்டு தெற்கு அரசியலில் சுய ஆதாயம் தேடி காய்களை நகர்த்தி வருகிறது.

இந்தியாவால் உருவாக்கப்பட்டு 18 வருடங்கள் நிலைத்திருந்த வடக்கு கிழக்கு இணைப்பு என்ற சர்வதேச ஒப்பந்தத்தைக்கூட, அரசியல் சாயம்பூசப்பட்ட உச்சநீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, மிகவும் புத்திசாலித்தனமாக நிராகரித்து கிழித்தெறிந்திருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், சர்வதேச சமூகத்தின் ஆகக்குறைந்த கருசனை வார்த்தைகள், மிகச் சிறிதளவு ஆறுதலையே தமிழ் மக்களுக்குத் தருகிறது. துமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்து வரும் நிலையில், கிழக்கிலங்கை தமிழ் மக்கள் மிக மோசமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதனால், சர்வதேசத்தின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ் மக்களின் சந்தேகம் அதிகரித்துச் செல்கிறது. இலங்கைப் பிரச்சனை தொடர்பில், இரு தரப்பின் மீதும் சர்வதேசம் கொண்டுள்ள அணுகுமுறை தொடர்பாக கடும் சந்தேகமும் தமிழ் மக்களிடம் காணப்படுகிறது.

தமிழ் மக்கள், தங்களது பிரதிநிதிகளாக நம்பி ஏற்றுக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், சர்வதேச சமூகம் நியாயத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என்றுதான் தமிழ் மக்கள் கருதுகிறார்கள். நீண்ட வரலாறு கொண்ட ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளையும், சுய நிர்ணய உரிமையுடன் கூடிய கௌரவமான வாழ்வியலையும் சர்வதேசம் நியாயமான முறையில் கண்டுகொள்ளவில்லை என்று உணர்கிறார்கள்.

இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

புதினம்.கொம்

போதும் நிப்பாட்டுங்கள். உயர உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாக முடியாது. நாம் வேண்டியோ வேண்டாமலோ பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டு விட்டோம் எனிமேல் நாம் எப்படித்தான் நல்ல சமிக்கையினை கொடுத்தாலும் அவனைப்பொறுத்தவரை சொன்னதை மாற்றப்போறதே இல்லை. ஆகவே அறிக்கையினை அவன் ஒரு பொருட்டாகக்கூட எடுக்கப்போவதில்லை. ஏனென்றால் அவனைப்பொருத்தவரை ஏற்கனவே சொல்லிவிட்டான் எப்பவோ வன்முறையாக்காவிடாவிட்டால் புதிய ஒரு சிங்கள ஆமியினை சந்திக்கவேண்டிவரும் என்று. யாரோ ஒருவர் பொன்சேக்காவினை கொல்ல வெளிக்கிட்டபிறகு தான் எல்லாச்சண்டையும் தொடங்கியது என்று தான் பொதுவாக எல்லோரும் கூறுகிறார்கள். அவன் ஆமி என்ன செய்திருந்தாலும் அதற்கு பத்திரிகைத்தணிக்கை இருந்த படியால் வெளிநாட்டுத்தூத்ரங்களுக்கு தெரிந்திருக்க நியாமே இல்லை. ஆகவே அறிக்கைகள் என்பது வெறும் ஆத்தாமையின் வெளிப்பாடு என்று தான் எல்லோரும் நினக்க இடமுண்டு. முன்பு மாதிரி அடி கொடுகாவிட்டால் எங்கள் கதி அதோ தான். இரண்டில் ஒண்டு பார்க்கவேண்டிய தருணத்தில் அவன் பயப்பிடமாட்டான். அதுக்காக எம் இளைய சமூகத்தினையும் இழக்க முடியாதுதான் என்னாலையும் அடிபட முடியாதுதான் ஆகவே நீங்களே முடிவெடுங்கள் தமிழன் வாழ்வதா சாவதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.