Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமக்குள்ள பிரச்சினைகளைச் சொல்ல தமிழர்கள் எத்துணை தயாராகவுள்ளோம்?

Featured Replies

நமக்குள்ள பிரச்சினைகளைச் சொல்ல தமிழர்கள் எத்துணை தயாராகவுள்ளோம்?

[28 - January - 2007] [Font Size - A - A - A]

-பீஷ்மர்-

* தமிழரிடையே அருகிச் செல்லும் மக்கட் பொதுநிலை அபிப்பிராய உருவாக்கம், செயற்பாடு பற்றிய ஒரு சிந்திப்பு

கடந்த வாரத்தில் இரண்டு செய்திகள் இலங்கைத் தமிழர் நிலைப்பட்ட அதிமுக்கியத்துவம் கொண்டனவாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை பற்றிய தமிழ் ஊடகச் சிரத்தை எதுவுமே இல்லாதிருப்பது அதிர்ச்சியும் கவலையும் தருகின்ற விடயமாகும்.

முதலாவது இலங்கையில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி நியமித்துள்ள ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் பற்றிய சர்வதேச கண்காணிப்புக் குழுவுக்கு வேண்டிய அங்கத்தவர்களுள் கனடாவினது அங்கத்துவம் பற்றிய செய்தி.

ஜனாதிபதி அவர்கள் சர்வதேச மட்டத்தில் தனது நியாயப்பாட்டினை பிரகடனப்படுத்துவதற்காக மேற்கொண்ட ஒரு நடவடிக்கையே இது. சம்மந்தப்பட்ட நாடுகள் ஒவ்வொன்றும் தத்தம் பிரதிநிதிகளை நியமிக்கும் பொழுது ஜனாதிபதியின் அரசியல் நேர்மையையும் பாராட்டிவிட்டே தத்தம் நியமனங்களைச் செய்கின்றன. இந்தியாவின் பிரதிநிதியாக இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பகவதி அவர்கள் இடம்பெறுகின்றார். இந்தியாவில் பல ஆணைக்குழுக்களுக்கு தலைமை தாங்கிய பகவதி அவர்கள் கருத்துக்களை தெளிவாகவும் நியாயத்துடனும் ஆனால் வெட்டொன்று துண்டு இரண்டாகவும் கூறும் பண்பினர் கனடா நியமித்திருப்பவரோ தென்னாசிய மதங்கள் இனக் குழுமங்கள் பற்றி மிகப்பெரிய அறிஞர்.

இரண்டாவது செய்தி இலங்கையின் சமாதான விடயங்கள் சம்மந்தமாக ஐக்கிய அமெரிக்கா தன் பங்குக்கு ஒரு சிறப்புத் தூதரை நியமிக்க வேண்டுமென்று அமெரிக்க செனற் சபையிலே பேசப்பட்டுள்ளதாகும். ஜனாதிபதி புஷ் இதுபற்றி உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று அந்தச் செய்தி சொல்லிற்று.

இலங்கை நிலையில் அந்தச் செய்தி சிங்கள ஊடகங்களிலே கணிசமான கவனத்தை ஈர்த்தது. ஆனால் தமிழில் அத்தகையதொரு சிரத்தை இருந்ததாகத் தெரியவில்லை.

அமெரிக்க அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான குறிப்பாக இது அமையாவிடினும் அமெரிக்க ஆட்சி சார் நிறுவனங்கள் இலங்கை நிலைபற்றி குறிப்பாக சமாதான முயற்சிகள் பற்றி திட்டவட்டமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லையென்பதனை கூர்ந்து அவதானிக்கின்றன என்பது இதனால் தெரிகின்றது.

இச் செய்தி இலங்கைத் தமிழர் நிலைபற்றிய ஒரு சர்வதேச அரசியல் சுட்டியாக அமைகின்றது என்பதில் சந்தேகமிருக்க நியாயமில்லை. ஆயினும், இந்த இரு செய்திகளும் கிளப்புகின்ற மிக முக்கியமான வினாக்கள் இலங்கைத் தமிழர் நிலையில் குறிப்பாக அரசியல் அபிப்பிராய உருவாக்க நிலையில் என்ன விடயங்கள் நடைபெறுகின்றன என்பது பற்றி தமிழர்கள் தம்மைத் தாமே நோக்கி கேட்க வேண்டிய வினாவாக இது அமைகின்றது. சுயதேடுகை அல்லது சுய உசாவல் என்பது ஒரு முக்கியமான விடயமாகும். ஏனெனில், தமிழர்களுடைய அரசியற் குறைபாடுகளையும் குறிப்பாக அடக்குமுறைகளையும் இல்லாது செய்ய வேண்டுமென்று சிங்கள முற்போக்காளர்கள் சிலர் அரசாங்கத்தின் அண்மைய யுத்த முனைப்பு நடவடிக்கைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர். இந்த யுத்த விரோத நடவடிக்கையின் பின் புலத்தில் தமிழ்க் களத்தை நோக்கும் பொழுது சோர்வும் துக்கமுமே ஏற்படுகின்றன.

இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் இன்றைய நிலையில் விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்படுவதை பயங்கரவாதமென்ற சுலோகப் பயன்பாட்டின் மூலம் இலங்கை அரசாங்கம் தென்னாசிய உதவிகளையும் சர்வதேச ஆதரவையும் பெற விரும்புகின்றது.

பேச்சுவார்த்தையென்ற சொல்லைக் கூட சிங்கள மட்டத்தில் அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆனால் மிக மிக அண்மையில் வாகரை நடவடிக்கைகளின் பின்னர் தமிழ் மக்களின் விடுதலைக்கு தாங்கள் உதவுவது போல பேசிக்கொள்கின்றார்கள். வடகிழக்கு அலகில் கிழக்கை பிரித்துவிட்டு, எடுத்த கிழக்கையும் துண்டாடிவிட்டு ஒட்டு மொத்தமான தமிழ் விடுதலை பற்றி அரசாங்கத்தில் சிலர் பேசத் துணிகின்றார்கள். கிழக்கின் துண்டாடுகை பற்றி விடுதலைப் புலிகள் தவிர்ந்த மற்றைய சக்திகள் வாயுபசாரமாக இரண்டொரு வார்த்தைகள் பேசியதற்கு மேல் எதனையும் செய்யவுமில்லை, சொல்லவுமில்லை.

ஆனால் இலங்கைத் தமிழர்களில் இந்திய அரசியற் கட்சிகளின் பெயர்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு ஒரு முறையீடு செய்யப்படுவதாக செய்தியொன்று வந்துள்ளது. அதிலும் இந்தியாவிலிருந்து சிலர் வந்து இங்கு விடுதலைப் புலிகள் தான் பிரச்சினையாக இருக்கின்றார்கள் என்பதனை பார்த்து அறிந்து கொள்ளவேண்டும் என்பது தான் அந்தக் கோரிக்கையின் மேல் நிலையில் தெரியும் நோக்கம். ஆனால் சற்று உன்னிப்பாக நோக்கும் பொழுது இத வடக்கு, கிழக்கில் தமிழர் படும் கஷ்டங்கள் பற்றி தமிழகத்தில் காணப்படுகின்ற அனுதாப உணர்வினை இல்லாமல் செய்வதற்கான ஒரு உபாயமே. அண்மைக் காலத்தில் சென்னையிலுள்ள இலங்கை தூதுவராலயப் பிரிவுமிகுந்த உத்வேகத்துடன் தன் கடமையை புரிவதனையும் நோக்காமல் இருக்க முடியவில்லை.

மீண்டும் மேலே கூறிய பிரச்சினைக்க வருவோம். மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் பற்றிய எத்தகைய செயற்பாடுகளும் தொழிற்பாடுகளும் தமிழ் மக்களிடையே காணப்படுகின்றன. இந்த விடயம் பற்றி யாராவது சிரத்தை காட்டுகிறார்களா? உண்மையில் இந்த வினா இன்னொரு வகையிலேயே எடுத்துக் கூறப்பட வேண்டும். இப்படியானதொரு விடயம் பற்றி தமிழர்கள் அபிப்பிராயம் தெரிவிக்க கூடிய முறையிலான வடக்கிலும் கிழக்கிலும் விடயங்கள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாண தீபகற்பத்தில் வவுனியாவில் நடைபெறுவனவற்றைப் பார்க்கும் பொழுது சாதாரணமாக உலாவுவதற்கே பயம் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் மக்கட் பொது நிலையில் அரசியல் அபிப்பிராயங்களை கூறக்கூடிய சூழல் உள்ளதா?

மேலும், மனிதவுரிமை மீறல்கள் பற்றிய ஆணைக்குழுக்கள் தமிழ்ப் பகுதிகளுக்கு சென்றுள்ளனவா? இவையாவற்றுக்கும் மேலாக தமிழ்ப் பகுதிகளில் செய்யப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் பற்றிய விபரத் தரவுகள் எந்த தமிழ் அரசியல் நிறுவகத்திடம் உள்ளன?

கடந்த 3 மாத காலமாக யாழ்ப்பாண தீபகற்பத்திலும் வவுனியாவிலும் நடைபெறும் காணாமற் போதல்களும் கொலைகளும் ஆணைக்குழுக்களின் விசாரணைக்குள் வருகின்றனவா? இவை பற்றி அரசியற் கண்காணிப்பு எதுவும் செய்யப்படுகின்றதா? முன்னர் வடக்கு, கிழக்கில் மாத்திரம் நடைபெற்று வந்த பல நிகழ்ச்சிகள் இப்பொழுது புத்தளப் பகுதியிலும் நடைபெறுவதாக செய்திகள் கூறுகின்றன. இவை பற்றிய கணக்கெடுப்புகள் ஏதாவது உண்டா? வரவிருக்கும் சர்வதேச கண்காணிப்புக் குழு ஜனாதிபதி நியமித்துள்ள ஆணைக்குழுவின் பணிச் செயலாற்றுகைகளை கண்காணிக்குமே தவிர அவர்கள் நேரடியாக இந்த அடிநிலைக் குறைபாடுகள் பற்றி விசாரிக்கப்போவதேயில்லை. இதில் நாம் கருத்திற் கொள்ள வேண்டிய முக்கிய விடயம் யாதெனில் ஜனாதிபதி தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எடுக்கும் இந்த அரசியல் நடவடிக்கைக்கு முகங்கொடுத்து இந்த நடவடிக்கைகளினூடே காணப்படுகின்ற முரண்பாடுகளையும் நம்பகமின்மைகளையும் அரசியல் ரீதியாக எவ்வாறு எடுத்துக் கூறுவது என்பதாகும். இது அரசியல் களத்தில் ஆடப்படும் ஆட்டம் அரசியல் களத்தில் நின்றே பதில் சொல்ல வேண்டிய தேவையானது உண்மையில் வேறெந்த நிலையில் நின்றும் இதற்கு பதில் கூறக்கூடாது. ஆனால் அரசாங்கமோ பயங்கரவாதம் எனும் கோஷத்தை பயன்படுத்தியும் படை நடவடிக்கைகளைப் பயன்படுத்தியும் அரசியல் ரீதியான எதிர்ப்பு வராது பார்த்துக்கொள்கிறது. ஒரு நல்ல உதாரணம் அண்மையில் கிழக்கில் படைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ள அரசியல் துண்டாடுகை பற்றி கிழக்குத் தமிழர்களின் அபிப்பிராயம் யாது என்பது பற்றிய பேச்சு மூச்சேயில்லை. இப்படியொரு வினாவைக்கேட்பதே பயமாகவுள்ளது. இப்பொழுது வினா யாதெனில் சர்வதேச கண்காணிப்புகுழுவுக்கு இந்த வெளிப்பிரச்சனை தெரியுமா?. இந்த விடயம் பற்றிய அபிப்பிராய உருவாக்கத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பதாகும்.புத்திஜீவிகள் பேசுவதில்லை. தொழிற்சங்கங்கள் பேச முன்வருவதில்லை. முன்னர் ஒரு காலத்தில் இருந்த பிரஜைகள் குழுக்கள் போன்ற நிறுவனங்கள்போலக்கூட இப்பொழுதில்லை.

இந்த மௌனங்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தொடங்கிவிட்டது. விடுதலைப்புலிகளை அகற்றி விட வேண்டும் என்பது பலருக்குத் தேவையாக இருக்கலாம் .ஆனால் அகற்றி விட்டால் இலங்கையின் தமிழரின் உரிமைப் போராட்டம் உலக அரங்கில் இப்பொழுது பெறும் கவனத்தை பெறுமா என்பது ஒரு நியாயபூர்வமான கேள்விக்கு உண்மை இது தான். பிரச்சனை அரசியல் பிரச்சனை . இது தமிழர்கள் யாவரையும் சம்பந்தப்படுத்துவது. இரண்டு அணிகள் கால்பந்தாட்டப் போட்டியில் ஆடும் பொழுது பார்த்துக் கொண்டிருந்து ஜே போடும் விடயமல்ல.சுருக்கமாகச் சொன்னால் அரசியற் பங்குகொள்ளல் அவசியம். அக முரண்பாடுகள் இல்லாதிருக்க முடியாது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அல்- பற்றா ஒரு நல்ல உதாரணம். பிரச்சனை அல்-பற்றாவின் பிரச்சனையல்ல ஹமாஷின் பிரச்சனையுமல்ல . பாலஸ்தீனத்தின் பிரச்சனை.

சர்வதேச கண்காணிப்புக் குழுவுக்கு உண்மை தெரிய வேண்டும். இந்த உண்மைகள் எடுத்துக்கூறப்பட வேண்டும். அப்பொழுதுதான் இந்தக் கண்காணிப்புக் குழுவுக்கு மேலாக ஒரு அமெரிக்க அவதானியும் வேண்டுமா என்பது தெரியவரும்.

http://www.thinakkural.com/news/2007/1/28/...s_page20238.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.