Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டொனால்ட் ட்ரம்ப் எதிர்கொண்டுள்ள சவால்கள்

Featured Replies

டொனால்ட் ட்ரம்ப் எதிர்­கொண்­டுள்ள சவால்கள்

 

உல­கத்தில் மிகவும் பலம்­வாய்ந்த நாடாகக் கரு­தப்­படும் அமெ­ரிக்க வல்­ல­ரசின் 45 ஆவது ஜனா­தி­ப­தி­யாக குடி­ய­ர­சுக்­கட்­சியின் டொனால்ட் டிரம்ப் தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். இவ­ருக்கு எதி­ராக ஜன­நா­ய­கக் ­கட்­சியின் சார்பில் போட்­டி­யிட்ட முன்னாள் ஜனா­தி­பதி பில் கிளின்­டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் இந்தத் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கிறார். அதா­வது முழு உல­கையும் வியப்பில் ஆழ்த்­திய வண்­ணமே டொனால்ட் ட்ரம்ப் அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்­றுள்­ள­துடன் அடுத்த நான்கு வரு­டங்­க­ளுக்கு உலக வல்­லரசு நாட்டை ஆளும் சந்­தர்ப்­பத்தை தன­தாக்­கிக்­கொண்­டுள்ளார்.

இந்தத் தேர்­தலில் ஜன­நா­யகக் கட்­சியின் வேட்­பாளர் ஹிலாரி கிளின்­டனே வெற்­றி­யீட்­டுவார் என பெரிதும் எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்­தது. ஊட­கங்கள் உள்­ளிட்ட பல்­வேறு அமைப்­புக்கள் ஹிலாரி கிளின்டன் வெற்­றி­பெ­று­வ­தாக எதிர்வுகூறி­யி­ருந்­தன. கருத்­துக்­க­ணிப்­புக்­களும் ஹிலாரி கிளின்­ட­னுக்கு ஆத­ர­வா­கவே காணப்­பட்­டன. அது­மட்­டு­மன்றி அமெ­ரிக்­காவின் பெரும்­பா­லான அமைப்­புக்கள் ஹிலாரி கிளின்­ட­னுக்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­தன. மேலும் அமெ­ரிக்­காவில் வாழ்­கின்ற சிறு­பான்­மை­யின மக்­களும் ஹிலா­ரிக்கே தீவி­ர­மான ஆத­ரவை வெளிக்­காட்­டி­யி­ருந்­தனர்.

 இந்த நிலையில் அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜன­நா­ய­கக்­கட்­சியின் வேட்­பாளர் ஹிலாரி கிளின்டன் மிகவும் இல­கு­வாக அமோக வெற்­றியைப் பெறுவார் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் தேர்தல் சூடு­பி­டித்த கட்­டத்தில் ஹிலாரி கிளின்டன் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. குறிப்­பாக, அவர் 2008 முதல் 2012 ஆம் ஆண்டு வரை அமெ­ரிக்­காவின் இரா­ஜாங்க செய­லா­ள­ராக இருந்­த­போது அலு­வ­லகப் பயன்­பாட்­டுக்­காக தனது சொந்த மின்­னஞ்­சலை பயன்­ப­டுத்­தினார் என்ற குற்­றச்­சாட்டு அவ­ருக்கு பாரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. எனினும் அவற்றை எல்லாம் கடந்து ஹிலாரி கிளின்டன் தனது பிர­சா­ரப்­ப­ணி­களை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்­தி­ருந்தார். எல்­லா­வ­ற்­றுக்கும் மேலாக பதவி முடிந்து செல்லும் தற்­போ­தைய ஜனா­தி­பதி பராக் ஒபாமா ஹிலா­ரிக்கு தனது முழு­மை­யான ஆத­ரவைத் தெரி­வித்­தி­ருந்­த­துடன், அவ­ருக்­காக பிர­சா­ரப்­ப­ணி­க­ளிலும் ஈடு­பட்­டி­ருந்தார்.

மறு­புறம் குடி­ய­ர­சுக்­கட்­சியின் வேட்­பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஆரம்­பத்­தி­லி­ருந்தே சர்ச்­சைக்­கு­ரிய வேட்­பா­ளா­ரா­கவே வலம்­வந்­தி­ருந்தார். குறிப்­பாக, முஸ்­லிம்கள் தொடர்பில் அவர் தெரி­வித்­தி­ருந்த கருத்­துக்கள் கடும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. அத்­துடன், மெக்­ஸிக்கோ எல்­லையில் தடுப்புச்சுவர் அமைக்­கப்­போ­வ­தாக அவர் வெளி­யிட்ட கருத்தும் பல்­வேறு முரண்­பா­டு­களை தோற்­று­வித்­தி­ருந்­தது. அத்­துடன் தேர்தல் காலம் முழு­வதும் பல்­வேறு பெண்கள் டொனால்ட் ட்ரம்ப் மீது பாலியல் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். இவ்­வா­றான பின்­ன­ணியில் டொனால்ட் ட்ரம்பை பின்தள்ளி ஹிலாரி வெற்­றி­பெறுவார் என எதிர்­பார்க்­கப்­பட்­ட­துடன் கருத்­துக்­க­ணிப்­புக்­களும் முன்­வைக்­கப்­பட்­டன.

இந்­நி­லையில், அனைத்து கருத்­துக்­க­ணிப்­புக்­க­ளையும் எதிர்­வு கூறல்­களையும் பொய்­யாக்கி இறு­தியில் குடி­ய­ர­சுக் ­கட்­சியின் வேட்­பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்­றி­யீட்­டி­யுள்ளார். வெற்றிப் பிர­க­ட­னத்தின் பின்னர் நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்­றிய டொனால்ட் ட்ரம்ப், தான் முழு அமெ­ரிக்­கர்­க­ளுக்கும் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அமெ­ரிக்­காவை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வேண்­டு­மென்றும் தெரி­வித்­துள்ளார். அத்­துடன், அமெ­ரிக்­காவின் அக்­க­றை­க­ளுக்கே முத­லிடம் கொடுக்­கப்­படும். ஏனைய நாடுகள் மற்றும் மக்­க­ளுடன் பொது­வான அடிப்­ப­டையில் பிணக்­குகள் அற்ற பங்­கா­ளித்­து­வத்தை நாடுவேன். மறக்­கப்­பட்­ட­வர்கள் இனி­மேலும் மறக்­கப்­ப­ட­மாட்­டார்கள் என்றும் டொனால்ட் ட்ரம்ப் தனது வெற்­றி­யு­ரையில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதே­வேளை, தோல்­வி­ய­டைந்த ஜன­நா­ய­கக்­கட்­சியின் வேட்­பாளர் ஹிலாரி கிளின்டன் தேர்தல் முடி­வு­களை தான் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும், வலி­மி­குந்­த­தாக இருப்­பினும் தாம் முடி­வு­களை ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். எமது பயணம் இன்னும் முடி­வ­டை­ய­வில்லை. தொடர்ந்தும் எது சரி­யா­னதோ அதற்­காக நாம் முன்­னிற்போம். பெண்­களின் சார்­பாக அவர்­களின் சம்­பி­ய­னாக முன்­னிற்­ப­தற்கு கிடைத்­தமை பெரு­மைக்­கு­ரி­ய­தாகும். தற்­போது டொனால்ட் ட்ரம்ப் நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக தெரிவுசெய்­யப்­பட்­டுள்ளார். எனவே நாம் இந்த நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப ஒன்­றி­ணைந்து பய­ணிப்போம் என்றும் நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்­றிய ஹிலாரி கிளின்டன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அந்த வகையில் கிட்­டத்­தட்ட 110 நாட்­க­ளாக இடம்­பெற்று வந்த ஒரு தேர்தல் செயற்­பாடு அமெ­ரிக்­காவில் நிறை­வு­பெற்­றுள்­ள­துடன், புதிய ஜனா­தி­பதி ஒரு­வரும் தெரிவுசெய்­யப்­பட்­டி­ருக்­கிறார். இந்­நி­லையில் டொனால்ட் ட்ரம்பின் தெரிவு தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள இலங்கை அர­சாங்­கத்தின் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன, அவரின் வெற்றி உலக சமா­தா­னத்­திற்கு வழி­வ­குக்கும் என தெரி­வித்­தி­ருக்­கிறார். அத்­துடன், அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்­றி­பெற்­றது நல்ல விடயம். அவர் வெற்­றி­பெ­றுவார் என நாம் அறிந்­தி­ருந்தோம். அவர் தேசி­யத்தை கையில் எடுத்து பிர­சாரம் செய்தார். உலக சமா­தா­னத்­திற்கு அவரின் வெற்றி சிறந்­த­தாக அமையும். அமெ­ரிக்­காவின் புதிய தலை­மைத்­துவம் ஏனைய நாடு­களின் விட­யத்தில் தலை­யி­டாமல் இருந்தால் நல்­லது என்றும் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

அத்­துடன் டொனால்ட் ட்ரம்பை கடும்­போக்­காளர் என்று கூறமுடி­யாது. தேர்தல் காலத்தில் ஒரு­சில கருத்­துக்­களை அவர் வெளி­யிட்­டி­ருந்தார். அவர் தேசியம் பற்றி பேசி­யி­ருந்தார். தேசியம் என்­பது நல்­ல­ வி­டயம். ஆனால் இன­வா­தம்தான் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது எனவும் அர­சாங்­கத்தின் பேச்­சாளர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

அந்த வகையில் தற்­போது உலக வல்­ல­ரசின் தலை­வ­ராக தெரிவுசெய்­யப்­பட்­டுள்ள டொனால் ட்ரம்ப் தேர்தல் காலத்தில் கூறிய விட­யங்­க­ளுக்கு அப்பால் சென்று அந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்­பவும், உல­கத்தின் சமா­தா­னத்­தையும் அமை­தி­யையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்பை செலுத்­து­ப­வ­ராக திக­ழ­வேண்டும். குறிப்­பாக அமெ­ரிக்கா ஏனைய நாடு­களின் விவ­கா­ரங்­களில் அநா­வ­சி­ய­மான முறையில் மூக்கை நுழைப்­ப­தாக நீண்­ட­கா­ல­மாக குற்­றச்­சாட்டு உள்­ளது. டொனால்ட் ட்ரம்பின் பத­விக்­கா­லத்தில் அவர் அவ்­வாறு ஏனைய நாடு­களின் விட­யத்தில் எல்லை கடந்து தலை­யி­டாமல் சிறந்­த­தொரு இரு­த­ரப்பு உறவை நாடு­க­ளுடன் பேணுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி என்­பவர் இந்­தப்­பூ­மியில் இருக்­கின்ற மிகவும் பலம்­வாய்ந்த நப­ரென வர்­ணிக்­கப்­ப­டு­கின்றார். எனவே அவ்­வா­றா­ன­தொரு பலம்­வாய்ந்த மனிதன் உல­கத்தில் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­தவும் அமை­தியை நிலை­நாட்­டவும் சிறந்த பங்­க­ளிப்பை செய்­ய­வேண்டும்.

குறிப்­பாக, தேர்தல் காலத்தில் முஸ்­லிம்கள் தொடர்பில் அவர் வெளி­யிட்­டி­ருந்த கருத்­துக்கள் மிகவும் சர்ச்­சையை தோற்­று­வித்­தி­ருந்­தன. எவ்­வா­றெ­னினும் தற்­போது அவர் ஜனா­தி­ப­தி­யாக தெரிவுசெய்­யப்­பட்­டுள்ள நிலையில் உலக முஸ்லிம் நாடு­க­ளு­டனும் ஆக்­க­பூர்­வ­மான உறவைக் கட்­டி­யெ­ழுப்­புவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் அர­சாங்­க­மா­னது அமெ­ரிக்­கா­வுடன் மிக நெருங்­கிய இரு­த­ரப்பு உறவைப் பேணி­வ­ரு­கின்­றது. கடந்த காலங்­களில் அமெ­ரிக்கா இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்கும் நோக்கில் பல்­வேறு ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்பை செய்துவந்­தது. எதிர்­கா­லத்­திலும் இந்த பங்­க­ளிப்­புக்கள் தொடரும் என பாதிக்­கப்­பட்ட மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர். விசே­ட­மாக, கடந்த நான்கு வரு­டங்­களில் அமெ­ரிக்கா இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்தி நான்கு பிரே­ர­ணை­களை ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையில் கொண்­டு­வந்­தி­ருந்­தது. இந்த செயற்­பா­டா­னது இலங்­கையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட சிறு­பான்மை மக்கள் மத்­தியில் நம்­பிக்­கையை தோற்று­வித்­தி­ருந்­தது.

 எனவே டொனால்ட் ட்ரம்ப் தலை­மை­யி­லான புதிய அமெ­ரிக்க அர­சாங்­கமும் இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட தமிழ் ­மக்­களின் விட­யத்தில் ஆக்­க­பூர்­வ­மான அணு­கு­மு­றைகளை முன்­னெ­டுக்­கு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. தற்­போது அமெ­ரிக்க தேர்தல் முடி­வ­டைந்து விட்­டது. இதன் பின்னர் அனைத்து அமெ­ரிக்க மக்­க­ளையும் இணைத்­துக்­கொண்டு அந்த நாட்டை பல­மிக்­க­தாகக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டியது புதிய ஜனாதிபதியின் பொறுப்பாகும்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அமெரிக்க மக்கள் டொனால்ட் ட்ரம்பை ஆதரித்து வாக்களித்துள்ளனர். எனவே அந்த மக்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில் ஒரு சிறந்த தலைவராக டொனால்ட் ட்ரம்ப் விளங்குவார் என முழு உலகமும் எதிர்பார்க்கிறது. டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். மிகவும் முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்கத் துருப்புக்கள் விவகாரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விடயத்தில் டொனால்ட் ட்ரம்ப் எவ்வாறான அணுகுமுறையை கையாள்வார் என்பதும் முக்கியமான விடயமாகும். அவர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விடயமாக இது காணப்படுகின்றது.

அந்த வகையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகள் எதிர்வரும் நான்கு வருடங்களில் எவ்வாறு அமையப்போகின்றன என்பதை முழு உலகமும் பார்த்துக்கொண்டிருக்கின்றது என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-11#page-4

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.