Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆவா குழு சந்தேகநபர்களுக்கு புலம்பெயர் புலி உறுப்பினர்களிடமிருந்து நிதி உதவிகள்

Featured Replies

ஆவா குழு சந்­தேகநபர்­க­ளுக்கு புலம்பெயர் புலி உறுப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்து நிதி உத­விகள்

Sp13-5b159255626b5c50a21f1d67971abfa14cd5910d.jpg

 

மன்­றுக்கு அறி­வித்­தது ரி.ஐ.டி; ஆதா­ரங்­களை சமர்ப்­பிக்க நீதிவான் உத்­த­ரவு 11 சந்­தேகநபர்­க­ளுக்கு விளக்­க­ம­றியல்; பேஸ்புக்கில் 'சட்' செய்த இரு­வ­ருக்கு பிணை

(எம்.எப்.எம்.பஸீர்)

 வடக்கில் செயற்­படும் 'ஆவா' குழு­வுக்கு புலம்பெயர் வாழ் முன்னாள் புலி உறுப்­பி­னர்கள் நிதி உதவி அளித்துவரு­வ­தாக பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று கொழும்பு நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்­த னர். ஆவா குழு சந்­தேக நபர்கள் எனக் கரு­தப்­ப­டுவோர் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைதுசெய்­யப்­பட்­டமை, விசா­ரணை செய்­யப்­ப­டு­கின்­றமை தொடர்பில் மேல­திக நீதிவான் அருணி

ஆட்­டி­கல, விளக்கம் கோரி­ய­போதே மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த பயங்­கர­வாத புல­னய்வுப் பிரிவின் பொலிஸ் அதி­காரி மேற்­படி விட­யத்தை மன்­றுக்கு அறி­வித்தார். ஆவா குழுவின் நோக்கம் அரசை அசெ­ள­க­ரி­யத்­துக்கு உட்­ப­டுத்­து­வதே என்­பது சாட்­சியகள் ஊடாக உறுதி­யா­கி­யுள்­ள­தா­கவும் அதனை புலம் பெயர் வாழ் முன்னாள் புலி உருப்­பி­னர்­களின் ஆலோ­சனை மற்றும் நிதிப் பங்­க­ளிப்­புடன் அவர்கள் முன்­னெ­டுத்து வரு­வ­த­கவும் சான்­றுகள் இருப்­ப­தா­கவும் பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரிவின் குறித்த அதி­காரி குறிப்­பிட்டார். இத­னை­ய­டுத்து அந்த சாட்­சி­­களை மன்றில் சமர்­பிக்க உத்­தரவிட்ட நீதிவான், சந்­தேக நபர்கள் 11 பேரை எதிர்­வரும் 30 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­தரவிட்டார். 

 பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் எம்.ஏ. நவாஸின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக பொலிஸார் நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் அருணி ஆட்­டி­கல முன்­னி­லையில் இது­வரை ஆவா குழு விவ­காரம் தொடர்பில் கைதான 13 சந்­தேக நபர்­களை ஆஜர் செய்­தனர்.. இதன் போது சிறப்பு விசா­ரணை அறிக்கை ஒன்­றினை மன்­றுக்கு பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரி­வினர் சமர்­பித்­தனர். குறித்த 13 சந்­தேக நபர்­க­ளிடம் முன்­னெ­டுக்­க­பட்ட விசா­ர­ணை­க­ளுக்கு அமை­வாக வாள், கூரிய கத்தி, இரு பக்­கமும் வெட்டும் விஷே­ட­மாக தயா­ரிக்­கப்பட்ட கத்தி உள்ளிட்ட பெரும் தொகை­யான கூரிய ஆயு­தங்­களை கைப்பற்றியுள்ளதாக மன்றில் ஆஜ­ரான பயங்­க­ர­வாத புல­ன­ய வுப் பிரிவின் அதி­காரி நீதி­வா­னுக்கு தெரி­வித்தார்.

கே.கே.எஸ். வீதி, கொக்­குவில் மேற்கு, யாழ்ப்­பாணம் பகு­தியைச் சேர்ந்த குட்டி எனப்­படும் சிவ­லிங்கம் கம­லநாத், யாழ். பண்டத் தரிப்பு பகு­தியைச் சேர்ந்த அரவிந் எனப்­படும் அன்டன் தாய்சஸ் அரவிந் எலக்ஸ், தெந்­தா­தரன் பிருந்­தவன்,இரா­ணுவ வீர­ரான டச் வீதி மானிப்பாய் மேற்கு, மானிப்பாய் எனும் முக­வ­ரியைச் சேர்ந்த இந்­தி­ர­குமார் கபி­லோஷன், அவ­ரது சகோ­த­ர­ரான இந்­தி­ர­குமார் நிரோஷன் மற்றும் சுன்­னாகம், இனுவில், யாழ்ப்­பாணம் எனும் முக­வ­ரியைச் சேர்ந்த திருச்­செல்வம் பிர­பூஷன், நல்­ல­லிங்கம் ஷர்­மிரன், ரவீந்திரன் நிதர்ஷன், லோக­நாதன் தர்­ஷிகன், மகா­தேவன் கந்­தகன், ரவீந்ரன் நிலூஷன், பதுமன் மற்றும் சாரங்கன் ஆகிய 13 சந்­தேக நபர்­களே பயங்­க­ர­வாத புல­னா­ய்வுப் பிரி­வி­னரால் கைதுச் செய்­யப்பட்­ட­வர்­க­ளாவர். இவர்கள் நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் முன்­னி­லையில் சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளினால் ஆஜர் செய்­யப்பட்­டி­ருந்த நிலையில், அவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பிரதீப் கமகே மன்றில் பிர­சன்­ன­மா­கினார்.

இதன்­போது பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் நவாஸின் கையெ­ழுத்­துடன் மன்­றுக்கு மேல­திக விசா­ரணை அறிக்கை ஒன்றும் சமர்­பிக்­கப்பட்­டி­ருந்­தது.

அந்த அறிக்­கையின் பிர­காரம்,

 12 ஆம் மற்றும் 13 ஆம் சந்­தேக நபர்கள் கடந்த 10 ஆம் திகதி பயங்­க­ர­வாத புல­னா­ய்வுப் பிரி­னினரால் கைது செய்­யப்­பட்­டனர். பதுமன் மல்­லாவி பகு­தியை சேர்ந்­த­வ­ராவார். மற்­றை­யவர் மானிப்பாய் பகு­தியை சேர்ந்­தவர். இவ்­வி­ரு­வரும் தற்­போது ஆவா குழுவை வழி நடத்­து­பவர் என நம்­பப்­படும் சன்னா எனும் சந்­தேக நப­ருடன் சமூக வலைத் தள­மான பேஸ் புக் ஊடாக ''சட் செய்­துள்­ளனர். அதன் பிர­காரம் ஏற்­பட்ட சந்­தே­கத்தின் அடிப்­ப­டை­யி­லேயே அவர்கள் கைது செய்­யப்பட்­டனர்.

 குறிப்­பாக சன்னா என்­பவர் குறித்து நாம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் அவர் முன்னாள் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தை சேர்ந்த உறுப்­பினர் என்­பது தெரி­ய­வந்­தது.

தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்க உறுப்­பி­னர்­க­ளுடன் இணைந்து அவர்­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணி அவர்­களின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வாக விடு­தலைப் புலிகள் அமைப்பை மீள உரு­வாக்­கு­வ­தற்கு உதவி ஒத்­தாசை புரியும் முக­மாக ஆவா எனும் பெயரில் ஆயுதக் குழு உரு­வாக்­கப்பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இந்த குழு­வா­னது வடக்கில் கட­மையில் ஈடு­பட்­டுள்ள உளவுத் துறை­யினர் உள்­ளிட்ட பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள், அரச உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் பொது மக்­களை அச்­சு­றுத்தும் வண்ணம் செயற்­ப­டு­கின்­றனர். கூர்­மை­யான ஆயு­தங்­களால் வெட்டி காயம் ஏற்­ப­டுத்தும் இந்த குழு அச்­செ­யற்­பாடு ஊடாக மக்­களை பய­மு­றுத்தி அவர்­க­ளது சொத்­துக்­களைக் கொள்­ளை­யி­டுதல் உள்­ளிட்ட சட்ட விரோத செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்­துள்­ள­தாக புல­ன­யவுப் பிரி­வினர் கண்­ட­றிந்­துள்­ளனர். இது தொடர்பில் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 6(1) ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக விசேட விசா­ர­ணைகள் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அந்த விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமை­வாக

முன்னாள் உறுப்­பி­னர்­க­ளுடன் தொடர்­பினை பேணி அவர்­களின் ஆலோ­சனை மற்றும் பங்­க­ளிப்­புக்கு அமை­வாக வடக்கில் ஆவா எனும் பெயரில் அமைப்­பொன்றை உரு­வாக்கி, அந்த அமைப்பின் உறுப்­பின்ர்­க­ளாக செயற்­பட்டு, வாள், கத்தி உள்­ளிட்ட அபா­ய­க­ர­மான கூரிய ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி அர­சாங்­கத்தை அசெ­ள­க­ரி­யத்­துக்கு உள்­ளாக்கும் வித­மாக செயற்­பட்­டுள்­ளனர் என குறிப்­பி­டப்பட்­டி­ருந்­தது.

சட்டத்தரணி வாதம்  இத­னை­ய­டுத்து சந்­தேக நபர்கள் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பிரதீப் கமகே, பின் வரு­மாறு வாதிட்டார். 

 பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் கூறு­வதைப் போன்று புனர்­வாழ்­வளிக்­கப்பட்ட ஒரு­வரோ பலரோ இந்த குழு­வுடன் இணைந்து செயற்­பட்­டி­ருப்­பினும் கூட எப்­படி இந்த குழு தொடர்­பி­லான விசா­ர­ணைகள் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் முன்­னெ­டுக்க முடியும். புனர்­வாழ்­வளிக்­கப்பட்ட ஒருவர் தண்­டனை சட்டக் கோவையின் கீழ் கூறப்­பட்­டுள்ள குற்றம் ஒன்­றினை புரிந்தால் அது தண்­டனை சட்டக் கோவையின் கீழேயே விசா­ரணை செய்­யப்­படல் வேண்டும். வாளால் வெட்டி காயப்­ப­டுத்­து­கின்­றமை மற்றும் அச்­சு­றுத்­து­கின்­றமை ஆகி­யன தண்­டனை சட்டக் கோவையின் கீழ் உள்ள குற்­றங்கள். அவை தொடர்பில் எப்­படி பயங்­க­ர­வாத தடை சட்டம் அமுல் செய்­யப்­பட முடியும். பயங்­க­ர­வாத குழு வொன்றை வாள்­களை வைத்­துக்­கொண்டு உரு­வாக்க முடி­யாது என்­பது எல்­லோ­ருக்கும் தெரிந்த வெளிச்­ச­மான உண்மை.

அப்­படி இருக்­கையில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் அடிப்­ப­டை­யற்ற விதத்தில் இவ்­வி­ளை­ஞர்­களைக் கைது செய்­துள்­ளனர்.

 குறிப்­பாக 10 ஆவது சந்­தேக நபர், தனது நண்பர் ஒருவர் வங்­கிக்­க­ணக்கில் வைப்­பி­லிட தந்த பணத்தை வைப்­பி­லிட்­டமை, தமிழ் சினிமா படங்­களைப் பார்த்து அதன் படி பயிற்சி எடுத்­தமை ஆகி­ய­வற்றை சான்­றாகக் கொண்டு கைது செய்­யப்பட்­டுள்ளார். பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் இந்த விட­யங்­க­ளுக்­கா­கவா கைது செய்ய முடியும்? என அவர் கேள்வி எழுப்­பிய போது நீதிவான் அருணி ஆட்­டி­கல தலை­யிட்டார்.

  ஆவா குழு­வினர் தென்­னிந்­திய தமிழ் சினிமா படங்­களைப் பார்த்தே தமது நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பயிற்­சி­களைப் பெற்­றுக்­கொள்­வது விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. அத­னா­லேயே பொலிசார் அதனை ஒரு சந்­தே­க­மாக கொண்­டி­ருக்­கலாம். என கூறி­ய­வாறு பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரி­வினர் எந்த அடிப்­ப­டையில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் விசா­ர­ணைகளை மேற்கொண்டனர் என கேள்வி எழுப்பினார்.

அத்­துடன் பயங்­க­ர­வாத செயற்­பாடு தொடர்பில் அவர்­க­ளது நோக்கம் எவ்­வாறு இருந்­தது எனவும் கேள்வி எழுப்­பினார். இதற்கு பதி­ல­ளித்த பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரி­வினர்,

 கனம் நீதிவான் அவர்­களே சந்­தேக நபர்­களின் நோக்­கங்கள் உறு­தி­யா­னவை. அவர்­களின் நோக்கம் அரசை அகௌ­க­ரி­யத்­துக்கு உட்­ப­டுத்­து­வ­தாகும். இதற்­காக அவர்­க­ளுக்கு புலம் பெயர் முன்னாள் புலி உறுப்­பி­னர்­களால் நிதி உதவி கூட அளிக்­கப்ப்ட்­டுள்­ளது. அதன் படியே பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் விசா­ரணை செய்­கின்றோம். நபர்­களை மையப்­ப­டுத்தி அல்ல. என பதி­ல­ளித்­தனர்.

இதன்போது மீளவும் குறுக்கிட்ட நீதிவான், அதற்கான ஆதாரங்கள் உள்ளதா என கேட்ட போது, ஆம் என பதிலளித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் இளம் வயதினை உடையவர்கள் என்பதனை அவதானித்த நீதிவான் அதனை கருத்தில் கொண்டு அவசரமாக விசாரணைகளை நிறைவு செய்ய பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் ஆஜர் செய்யப்பட்டோரில் முதல் 11 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 12, 13 ஆவது சந்தேக நபர்களை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் செல்லவும் நீதிவான் அனுமதித்தார். இது தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

இதனிடையே சந்தேக நபர்களில் உள்ள இம்முறை க.பொ. த. சாதரண தரப்பரீட்சைக்கு தேற்றும் மாணவருக்கு கடந்த தவணை விசாரணையில் கொடுக்கப்பட்ட சலுகையினை அமுல் செய்யுமாறும் நீதிவான் ஆலோசனை வழங்கினார்,

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.