Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா வீடு திரும்புவதில் தாமதம் ஏன்?- அப்போலோ அப்டேட்ஸ்!

Featured Replies

ஜெயலலிதா வீடு திரும்புவதில் தாமதம் ஏன்?- அப்போலோ அப்டேட்ஸ்!

 

அப்போலோவில் ஜெயலலிதா

முதல்வர் ஜெயலலிதா அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 55 நாட்கள் கடந்து விட்டன. அக்டோபர் 29-ம் தேதி தீபாவளி தினத்தன்றே ஜெயலலிதா  மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விடுவார். தீபாவளியை போயஸ் கார்டன் வீட்டில் கொண்டாடுவார் என்றெல்லாம் ஊடகங்களிலும் பரவலாக தகவல்கள் வெளியாகின.

ஜெயலலிதா வீடு திரும்ப ஏதுவாக, அவரது வீட்டில் சிறப்பு மருத்துவ வசதிகளுடன் கூடிய அறை உருவாக்கப்பட்டுள்ளது.  லிப்ட் வசதி அதற்கேற்ப செய்யப்பட்டுள்ளது போன்ற தகவல்களும் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன.

தொடக்கத்தில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டாலும், இங்கிலாந்து டாக்டர் அப்போலோவுக்கு வருகை தந்தது, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் வருகை, சிங்கப்பூர் டாக்டர்கள் வந்துபோனது என அனைத்துமே ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பின.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 55 நாட்களான நிலையிலும், அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது வெளியிடப்படாத மர்மமாகவே உள்ளது. இரவு நேரம் தவிர, வென்டிலேட்டர் இல்லாமல், பெரும்பாலான நேரங்களில் இயற்கையாக சுவாசிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. முதல்வர் எப்போது வீடு திரும்புவார் என்பதை, அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என அப்போலா மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறினார். என்றாலும் ஜெயலலிதா வீடு திரும்புவது  குறித்த எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.முக்கியமாக இங்கிலாந்து மருத்துவர்கள், டெல்லி மருத்துவர்கள் என அனைவருமே தங்களது முழு உழைப்பையும் அவரது சிகிச்சைக்காக அர்ப்பணித்திருக்கிறார்கள். அவருக்கு அளித்து வரும் மொத்த சிகிச்சை முறையிலும் மிக முக்கியமான சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக முடிந்துள்ளது.

தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருவதால், ஜெயலலிதா உடல் எடை குறைந்து, மிகுந்த சோர்வுடன் காணப்படுவதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்போலோ மருத்துவமனைதவிர, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பெய்ல், கடந்த மாத இறுதியில் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துச் சென்றார். அதன் பின்னர் அவர் சென்னை வரவில்லை. அப்போலோ மருத்துவமனை சிறப்பு சிகிச்சை மருத்துவர்களும், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும் தொடர்ந்து, ஜெயலலிதாவின் உடல் நிலையை கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடியே, முதல்முறையாக அ.தி.மு.க தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை ஜெயலலிதா, சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். அதில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளில், அ.தி.மு.க-வின் வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுஒருபுறமிருக்க, முதல்வர் ஜெயலலிதா, இப்போதைக்கு டிஸ்சார்ஜ் ஆவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அவருக்கு, சிங்கப்பூர் மருத்துவமனை பிஸியோதெரபிஸ்ட் நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், மருத்துவமனையில் அதிகநாட்கள் இருந்து வருவதால், இயற்கையான உடல்சோர்வும், உடல் எடை குறைவும் முதல்வருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே, உடல் தேறுவதுடன், ஓரளவு நடைபயிற்சி அளிக்கப்பட்டு, சாதாரண உணவுகளை அவர் உட்கொள்ளும் அளவுக்கு நலம் பெற்ற பின்னரே, ஜெயலலிதா வீடு திரும்புவார். அதற்கான உடற்பயிற்சிகள் தற்போது அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியானாலும், முதல்வர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப, குறைந்தது ஒரு மாதமாவது ஆகலாம் என்பதே இப்போதைய  தகவலாக உள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/72656-when-will-jaya-discharge-from-apollo-hospital-update.art

  • கருத்துக்கள உறவுகள்

மறுபிறவி எடுத்துள்ளதாக ஜெயலலிதா அறிக்கை: தொண்டர்களைத் திசைதிருப்பும் முயற்சி என ஸ்டாலின் தெரிவிப்பு

மறுபிறவி எடுத்துள்ளதாக ஜெயலலிதா அறிக்கை: தொண்டர்களைத் திசைதிருப்பும் முயற்சி என ஸ்டாலின் தெரிவிப்பு

மறுபிறவி எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தமது மகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.

அனைவரது பிரார்த்தனைகளாலும் தான் மறுபிறவி எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தமது ஏகோபித்த மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, அதிமுக அமைப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்த மூத்த தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் நேற்று காலமானார்.

தனது தாயாரின் மறைவுக்கு ஜெயலலிதா தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்ததாக விசாலாட்சி நெடுஞ்செழியனின் மகன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விரைவில் வீடு திரும்பி ஆட்சி, நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் காலம் அண்மித்துள்ளதாக அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அதிமுக அமைப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழக முதல்வர் இறையாசியால் குணமடைந்து ஆட்சியில் அமர வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஏனையவர்களைப் போல வைத்தியசாலையில் சென்று சந்திக்காமல் முதல்வரை வீட்டில் சென்று சந்திக்கவுள்ளதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

எனினும், அதிமுக தொண்டர்களைத் திசைதிருப்ப ஜெயலலிதா பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கலாம் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் ஸ்டாலின் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

http://newsfirst.lk/tamil/2016/11/92196/

  • கருத்துக்கள உறவுகள்

500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவிச்ச பிறகு, அப்பல்லோ வாசலில் நேர்த்தி வைக்கிறது நின்றுபோச்சாமே.. உண்மையா?! :D:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.