Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரிந்துணர்வு உடன்படிக்கையை கிழித்தெறிந்தார் ருக்மன்

Featured Replies

P1-L.jpg

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சி செய்துகொண்ட நல்லாட்சிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை காலாவதியாகிவிட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த ஐ.தே.கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ருக்மன் சேனாநாயக்க உடன்படிக்கையின் நகலை கிழித்தெறிந்ததோடு இனிமேல் அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான எதுவிதமான ஒத்துழைப்பையும் தமது கட்சி வழங்காதென்றும் அறிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே ருக்மன் சேனாநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்,

கட்சி எதுவிதமான அறிவித்தலையும் வழங்காது, செயற்குழுவின் அனுமதியின்றி அரசாங்கத்துடன் இணைந்து பதவிகளை பெற்றுள்ளோருக்கு எதிராக கட்சியின் யாப்பு பிரகாரம் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கட்சியிலிருந்து வெளியேற்றமென்பது ஒன்றும் புதியதல்ல. அந்தக் காலத்திலிருந்து இடம்பெறும் நிகழ்வுகளாகும்.

எமது கட்சி ஆலமரத்தைப் போன்ற பலமுள்ள கட்சி. அது ஒரு சிலரில் தங்கியிருக்கவில்லை. எனவே, ஒரு சில குழுவினரின் வெளியேற்றம் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அரசாங்கத்துடனான எமது உறவு முறிந்தபோதும் தேசிய பிரச்சினை தொடர்பாக ஆதரவை நாம் வழங்குவோம். அதற்காகத் தான் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டோம். ஆனால், ஜனாதிபதி புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளவில்லை. எனவே, நாம் தொடர்ந்தும் புரிந்துணர்வை கடைப்பிடிப்பதில் அர்த்தமில்லையென்றும் ருக்மன் சேனாநாயக தெரிவித்தார்.

திஸ்ஸ அத்தநாயக்க

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் தனிப்பட்ட அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும், அரசாங்கத்தின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவே எமது கட்சி உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு அமைச்சுப் பதவிகளை வழங்கியுள்ளாரென குற்றம் சாட்டும் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, எனவே 97 நாட்கள் பாதுகாத்து வந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி புதியதொரு அரசியல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளோமென்றும் தெரிவித்தார்.

2003 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எமது தலைவர் வெளிநாடு சென்றிருந்தபோது அமைச்சுப் பதவிகளை பறித்தது போன்று இன்றைய ஜனாதிபதியும் தலைவருடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்துகொண்டு அவர் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டபோது அதனை மீறி செயற்பட்டு அரசியல் நாகரிகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

நாட்டில் நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரித்து பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு நெருக்கடி நிலையிலிருக்கும் போது ஐ.தே.கட்சி உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு 100க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அமைச்சர், பிரதியமைச்சர் பதவிகளை வழங்குவதன் மூலம் அரசாங்கம் நாட்டை மேலும் அதலபாதாளத்திற்குள் தள்ளியுள்ளது. இவர்களின் இணைப்பால் நாட்டுக்கு எதுவிதமான நன்மையும் கிட்டப்போவதில்லையென்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கயந்த கருணாதிலக எம்.பி.

ஐ.தே.கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக் கொண்டதன் மூலம் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் `ஆபத்தை' எதிர்நோக்கியுள்ளது. அதற்கான சமிக்ஞையை அமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளாரென இங்கு உரையாற்றிய ஐ.தே.கட்சியின் பேச்சாளரும் எம்.பி.யுமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் ஐ.தே.கட்சி உறுப்பினர்களை இணைத்துக் கொண்டதன் மூலம் சுதந்திரக் கட்சியின் பலரது எதிர்ப்புக்குள்ளாகியிருக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.