Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிதானத்துடனும் அதேநேரம் அவதானமாகவும் செயற்படவேண்டியது அவசியமாகும்

Featured Replies

நிதா­னத்­து­டனும் அதே­நேரம் அவ­தா­ன­மா­கவும் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்

 

நாட்டின் அர­சியல் சூழலில் தற்­போ­தைய நிலை­மையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் மற்றும் அத­னூ­டாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள தமிழ் பேசும் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு திட்டம் என்­பன தொடர்­பி­லேயே பாரிய வாதப் பிர­தி­வா­தங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. விசே­ட­மாக அர­சி­ய­ல­மைப்பு வரைபில் வடக்கு, கிழக்குப் பிரச்­சி­னைக்கு தீர்வைக் காணும் நோக்கில் எவ்­வா­றான திட்­டங்கள் முன்­வைக்­கப்­படும் என்­பதில் அனைத்துத் தரப்­பி­னரும் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர்.

இந்த அர­சியல் தீர்வு என்று வரும்­போது அது மிகவும் ஒரு உணர்வு­பூர்­வ­மான விட­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. அதனால் இந்த விட­யத்தை மிகவும் அவ­தா­னத்­து­டனும் கவ­ன­மா­கவும் பொறுப்­பு­டனும் முன்­கொண்­டு­செல்ல வேண்­டி­யுள்­ளது. குறிப்­பாக தென்­னி­லங்கை மக்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மக்கள் என அனைத்துத் தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகை­யி­லான தீர்­வுத்­திட்­ட­மொன்றை அடை­ய ­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இந்த விட­யத்தில் அனைத்துத் தரப்­புக்­களும் ஏற்­றுக்­கொள்ளும் வகை­யி­லான ஒரு தீர்­வுத்­திட்­டத்­திற்கு செல்­ல­வேண்­டி­யது தற்­போ­தைய நிலை­மையில் ஒரு சவா­லான விட­ய­மா­கவே பார்க்­கப்­படு­கின்­றது. காரணம் அர­சியல் தீர்­வுத்­திட்டம் என்று வரும்­போது கடந்­த­காலம் முழு­வதும் தமிழ் பேசும் மக்கள் ஏமாற்­றப்­பட்டு வந்த வர­லாறே காணப்­ப­டு­கின்­றது. சில சந்­தர்ப்­பங்­களில் தமிழர் தரப்­பினர் மிகவும் நம்­பிக்­கை­யி­லி­ருந்த கால­கட்­டங்­க­ளிலும் இறு­தியில் ஏமாற்­றமே கிடைத்­தது. அந்­த­வ­கையில் எதிர்­வரும் காலங்­களில் அவ்­வா­றான ஒரு ஏமாற்ற நிலை­மைக்கு தமிழர் சமூகம் மீண்டும் சென்­று­வி­டக்­கூ­டாது. இந்த இடத்தில் அர­சியல் தீர்வு விட­யத்தில் நம்­பிக்கைத் தன்­மை­யுடன் செயற்­ப­ட­வேண்­டி­யது எந்­த­ள­வு­தூரம் அவ­சி­யமோ, அதே­போன்று பொறுப்­பு­டனும் கவ­ன­மா­கவும் செயற்­பட­வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும்.

அந்­த­வ­கையில் யாழில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் அர­சியல் தீர்வை நோக்கி செயற்­ப­டும்­போது நம்­பிக்­கை­யுடன் செயற்­படு­வது எந்­த­ளவு தூரம் அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்­தி­யுள்ளார். அதா­வது நாங்கள் ஏமாற்­றப்­பட்டோம். இனியும் ஏமாற்­றப்­ப­டுவோம் என்ற சிந்­த­னைகளுடன் எப்­போதும் செயற்­பட முடி­யாது. அர­சியல் தீர்வு என்­பது தமிழ் மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல. இந்த நாடு பொரு­ளா­தார ரீதியில் முன்­னேறி செல்­வது சிங்­கள மக்­க­ளுக்கும் அவ­சி­ய­மா­ன­தாகும்.

இந்த விட­யத்தில் எமக்­குள்ளே கருத்து வேறு­பா­டுகள் இருக்­கலாம். ஆனால் மக்­க­ளு­டைய விட­யங்­களில் நாங்கள் அனை­வரும் ஒற்­று­மை­யாக இருந்து செயற்­ப­ட­வேண்டும். இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு கிடைத்­துள்ள தற்­போ­தைய அரிய சந்­தர்ப்­பத்தை சரி­வர பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்டும் என்று தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அதே­வேளை, இன்று நாம் முக்­கி­ய­மான கால­கட்­டத்தில் இருக்­கின்றோம். நீண்­ட­கா­ல­மாக கிடைக்­கப்­பெ­ற­மு­டி­யாத எமது பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தற்­போது கிடைக்கும் சூழல் உரு­வா­கி­யுள்­ளது. அந்தத் தீர்வை அடை­வ­தற்கு நாங்கள் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கிறோம். சுதந்­தி­ரத்­திற்கு முன்­னரும் பின்­னரும் நாம் பல சந்­தர்ப்­பங்­களை இழந்­தி­ருக்­கின்றோம் எனவும் சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

தற்­போது எல்லாம் நடை­பெற்­று­விட்­டது என்று கூறி­வி­ட­மு­டி­யாது. அதே­போன்று ஒன்றும் நடக்­க­வில்லை என்றும் கூற முடி­யாது. தீர்வு விட­யத்தில் ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் உறு­தி­யுடன் செயற்­பட்டு வரு­கின்­றார்கள். இதில் நாங்கள் வெற்­றி­பெ­ற­வேண்­டு­மானால் நம்­பிக்­கை­யு­டனும் நிதா­ன­மா­கவும் செயற்­ப­ட­வேண்டும். நாங்கள் ஏமாற்­றப்­பட்­டு­விட்டோம் என்றும் ஏமாற்றப்படுவோம் என்ற சிந்­த­னை­யிலும் தொடர்ந்தும் செயற்­பட முடி­யாது எனவும் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் மிகவும் தெட்டத் தெளி­வாக எடுத்­து­ரைத்­தி­ருக்­கின்றார்.

உண்­மையில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் கூறு­வது போன்று தீர்வு விட­யத்தில் அனைத்துத் தரப்­பி­னரும் நம்­பிக்­கை­யு­டனும் புரிந்­து­ணர்­வு­டனும் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். விசே­ட­மாக வடக்கு, கிழக்குப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும் போது அந்தத் தீர்­வுத்­திட்ட விட­யத்தில் தென்­னி­லங்கை மக்கள் சந்­தேகம் கொள்­ளாத வகை­யிலும் இன­வா­திகள் அதனை குழப்­பி­வி­டாத வகை­யிலும் நகர்­வு­களை முன்­னெ­டுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். மாறாக இன­வா­திகள் இந்த விட­யத்தை குழப்­பு­வ­தற்கு ஆரம்­பித்து விட்டால் தீர்­வுத்­திட்­டத்தை நோக்கி பய­ணிக்கும் நிலை­மை­யா­னது மோச­ம­டைந்­து­விடும்.

எனவே, இந்த இடத்தில் சாமர்த்­தி­ய­மாகவும் நிதா­ன­மா­கவும் செயற்­ப­ட­வேண்டும் என்ற தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனின் கூற்று ஆக்­க­பூர்­வ­மா­ன­தா­கவும் தீர்க்­க­மா­ன­தா­கவும் காணப்­ப­டு­கின்­றது. ஆனால் இந்த விட­யத்தில் மிகவும் சாது­ரி­ய­மா­கவும் நடந்­து­கொள்­ள­வேண்­டிய தேவை தமிழர் தரப்­பிற்கு காணப்­ப­டு­கின்­றது. ஏமாற்­றப்­ப­ட­மாட்டோம் என்ற எடு­கோளில் தீர்­வுத்­திட்­டத்தில் தமிழர் தரப்பு பய­ணிக்க முடி­யாது. காரணம் கடந்த காலங்­களில் நாம் பெற்­றுள்ள அனு­ப­வங்­க­ளையும் பாட­மாகக் கொண்டே செயற்­ப­ட­வேண்­டிய தேவை இங்கு காணப்­ப­டு­கின்­றது. காரணம் தமிழர் தரப்பு எந்­த­ளவு தூரம் நம்­பிக்­கை­யுடன் செயற்­பட்­டாலும் தென்­னி­லங்­கையில் ஏற்­ப­டு­கின்ற அர­சியல் கள­நி­லை­வ­ரங்கள், சூழல் என்­பன நிலை­மையை தலை­கீ­ழாக மாற்­றி­விடும் தன்­மையைக் கொண்­டன என்­பதை எப்­போதும் தமிழர் தரப்பு மனதில் வைத்­துக்­கொண்டு செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

கடந்த காலங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்கம் தீர்வு விட­யத்தில் மிகவும் ஆரோக்­கி­ய­மான பாதையில் பய­ணிக்­கின்­றது என்­பதை நாம் ஏற்­றுக்­கொண்­டாக வேண்டும். விசே­ட­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் இந்தத் தீர்வு விட­யத்தில் அர்ப்­ப­ணிப்­பு­டனும் நம்­பிக்கை தரும் வகை­யிலும் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

இது தமிழர் தரப்பு மத்­தியில் நம்­பிக்­கையை மேலோங்கச் செய்­கின்­றது. ஆனால், தென்­னி­லங்­கையில் அவ்­வப்­போது வெளிக்­காட்­டப்­ப­டு­கின்ற இன­வாத சக்­தி­களின் செயற்­பா­டுகள் தீர்வு விட­யத்தில் தமிழர் தரப்பில் ஒரு வித அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்­து­கின்­றது என்­ப­தையும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். ஆகவே, இந்தத் தீர்வு விட­யத்தில் தமிழர் தரப்பு எந்­த­ளவு தூரம் நம்­பிக்­கை­யுடன் செயற்­ப­டு­கின்­றதோ அதே­ய­ளவு அவ­தா­னத்­து­டனும் காய்­களை நகர்த்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

2016 ஆம் ஆண்டின் இறு­திக்குள் அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூடிய ஒரு தீர்­வுத்­திட்­டத்தை நோக்கி பய­ணிக்க முடியும் என எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் கடந்த வருடம் கூறி­யி­ருந்தார். அந்­த­வ­கையில் தற்­போது 2016 ஆம் ஆண்டு நிறை­வ­டையும் தறு­வாயில் நாம் இருக்­கின்றோம். அப்­படி பார்க்­கும்­போது தீர்வு விட­யத்தில் என்ன அடைவு மட்­டத்தை கண்­டு­விட்டோம் என்ற கேள்வி அனைவர் மத்­தி­யிலும் எழலாம். ஆனால், இக்­கா­லப்­ப­கு­தியில் எதுவும் நடை­பெ­ற­வில்­லை­யென்று கூற­மு­டி­யாது. தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யும் வகை­யி­லான தீர்­வுத்­திட்­ட­மொன்றை பெற்­றுக்­கொள்ளும் நோக்கில் அர­சியல் மட்­டத்தில் பல நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பிர­தான பணியை முன்­னெ­டுக்கும் அர­சியல் நிர்­ண­ய­சபை பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது மூன்று முக்­கிய விட­யங்கள் குறித்து ஆராய்ந்து வரு­கி­றது.

தேர்தல் முறை மாற்றம், நிறை­வேற்று அதி­காரம் கொண்ட முறை மாற்றம் மற்றும் அதி­கா­ரப்­ப­கிர்வு ஆகிய மூன்று விட­யங்­களே பிர­தான வழி­ந­டத்தல் குழு­வினால் ஆராயப்­பட்டு வரு­கின்­றன. அந்த வகையில் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது தற்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு குறித்து ஆராய்ந்து வரு­கி­றது. அது தொடர்­பான அறிக்­கையும் எதிர்­வரும் டிசம்பர் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­ப­டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு பார்க்கும்போது தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. எவ்வாறெனினும் இந்த விடயங்கள் மிகவும் ஆரோக்கியமான முறையில் இடம்பெறவேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது போன்று தீர்க்கமான இந்த கட்டத்தில் அனைத்து தரப்பினரும் நிதானமான முறையில் செயற்படவேண்டும். அதேநேரம் கவனமாகவும், பொறுப்புடனும் செயற்படவேண்டிய தேவையும் காணப்படுகின்றது. எக்காரணம் கொண்டும் தமிழர் தரப்பினர் மீண்டும் ஏமாற்றமடையும் நிலைக்கு அரசாங்கம் செயற்படக்கூடாது. அத்துடன் தமிழர் தரப்பும் நிலைமையை புரிந்து சாணக்கியமாக செயற்படவேண்டும். கிடைத்திருக்கின்ற தற்போதைய தீர்க்கமான மற்றும் அருமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வுத்திட்டமொன்றை பெற்றுக் கொள்ள வேண்டியது அனைத்துத் தரப்பினரதும் பாரிய பொறுப்பு என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-22#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.